Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடம் என்பது அறிவியலா?-
+3
ராஜா
சிவனாசான்
T.N.Balasubramanian
7 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ஜோதிடம் என்பது அறிவியலா?-
First topic message reminder :
ஜோதிடம் என்பது அறிவியலா?
ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம்.
பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை கண்ட முன்னோர்கள். இவ்வாறு நிகழ என்ன காரணம் என ஆராய ஆரம்பித்தனர். இதுவே வானிவியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டது.
வானவியலே கிரகங்களின் பருமன் முதற்கொண்டு இயக்கத்தையும், பால்வெளியில் இருக்கும் நட்சத்திர கூட்டத்தையும் மற்றும் கிரகங்களின் கட்டமைப்பையும், நிறத்தையும் மேலும் பல முக்கிய பண்புகளை மிக துல்லியமாக அளவிட உதவியது. இப்படியாக வானவியலில் இருந்து அறியப்பட்ட கிரக இயக்கங்கள் பூமியில் இருக்கும் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கும் என்ற ஆராய்ச்சி தொடங்கப்பட்டது அதன் பெயரே ஜோதிஷம் எனும் ஜோதிடம்.
ஜோதிஷம் என்னும் சமஸ்கிருத வார்த்தையின் பொருள் கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளி மூலம் மனித வாழ்வியலை ஆராய்ந்து அறிவது என்பதாகும். மனித வாழ்வியலின் வழிகாட்டி என்பதாலேயே ஜோதிடம் 'வேதத்தின் கண்' என்று அழைக்கப்படுகிறது.
சூரியன் மற்றும் சந்திரன் நகர்வுகளை கண்ணால் கண்டு ஆராய்ச்சி செய்து, கிரகங்களின் இயக்கம் நட்சத்திரங்கள் கொண்டு அளவிடப்பட்டு பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம் மற்றும் யோகம் என்ற ஐந்து காரணிகள் ஆகும்.
புவி மைய கொள்கையை (Geo-Centric) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது ஜோதிடக் கலையாகும். அதாவது பூமியை மையமாக வைத்து அதனைச் சுற்றி இருக்கும் கிரகங்களின் இயக்கம் எவ்வாறு உயிரினங்களின் இயக்கத்தையும் வாழ்வியலையும் பாதிக்கிறது என்பதை கூறுவதே இக்கலையின் நோக்கமாகும்.
கிரகமும் ராசியும்
கிரகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் பற்றுதல் அல்லது பற்றி இழுத்தல் என்பதாகும். பிரபஞ்சத்தில் பல நட்சத்திர கூட்டங்கள் இருந்தாலும், சூரியன் எனும் நட்சத்திரம் மட்டுமே நமது பூமியின் இயக்கத்தையும் மற்றம் ஒன்பது கிரகங்களையும் பெருமளவில் பாதிக்கிறது. அது போலவே நமது பூமியின் துணைக் கோளான சந்திரனின் இயக்கம் பூமியை மிக அதிக அளவில் பாதிப்பதால்தான் பூமியை சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் சந்திரன் முக்கிய கிரகமாக எடுத்து கொள்ளப்பட்டு இருக்கிறது.
நமது பூமி 23°1/2 பாகை சாய்ந்து, தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி கொண்டு இருக்கிறது என்பதை வானியல் கணிதம் மூலம் உணர்ந்தனர். இந்த பூமியின் சுழற்சி மூலம் தட்பவெப்பநிலை மாற்றங்கள் உண்டாவதையும் உணர்ந்தனர். இத்தகைய புவியின் இயக்கம் சூரியனின் ஈர்ப்பு விசையாலும் மேலும் அதை சுற்றி இருக்கும் கோள்களின் பாதிப்பாலும் ஏற்படுகிறது.
தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் என்பவை நீர் நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களில் மூலமே பூமியில் நிகழ்கிறது. இந்த பஞ்சபூதங்கள் மூலமே கிரகங்கள் மனிதர்களை இயங்குகின்றன. இரவு பகலாக கண்விழித்து பூமி சுற்றி வரும் பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கூறுகளாக்கி ராசி என்று பெயர் வைத்தனர்.மேலும் ராசிகளின் வடிவமைப்பைக் கொண்டு அதற்கு தகுந்த பெயரிட்டனர்.
ஜோதிடம் ஒரு அறிவியலா?
இவ்வாறாக வானவியலில் இருந்து ஜோதிடம் தோன்றியது. கிரக இயக்கங்களைப் பஞ்சாங்கம் கொண்டு கணித்து, மேலும் பல கணித சூத்திரங்கள் கொண்டு மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை சொல்வதால் ஜோதிடம் ஒரு அறிவியலே என்று கூறுகிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை? மேலும் ஆராய்வோம்.
நன்றி மணிகண்டன் பாரதிதாசன் தமிழ் ஹிந்து
தொடரும்
ரமணியன்
ஜோதிடம் என்பது அறிவியலா?
ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம்.
பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை கண்ட முன்னோர்கள். இவ்வாறு நிகழ என்ன காரணம் என ஆராய ஆரம்பித்தனர். இதுவே வானிவியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டது.
வானவியலே கிரகங்களின் பருமன் முதற்கொண்டு இயக்கத்தையும், பால்வெளியில் இருக்கும் நட்சத்திர கூட்டத்தையும் மற்றும் கிரகங்களின் கட்டமைப்பையும், நிறத்தையும் மேலும் பல முக்கிய பண்புகளை மிக துல்லியமாக அளவிட உதவியது. இப்படியாக வானவியலில் இருந்து அறியப்பட்ட கிரக இயக்கங்கள் பூமியில் இருக்கும் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கும் என்ற ஆராய்ச்சி தொடங்கப்பட்டது அதன் பெயரே ஜோதிஷம் எனும் ஜோதிடம்.
ஜோதிஷம் என்னும் சமஸ்கிருத வார்த்தையின் பொருள் கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளி மூலம் மனித வாழ்வியலை ஆராய்ந்து அறிவது என்பதாகும். மனித வாழ்வியலின் வழிகாட்டி என்பதாலேயே ஜோதிடம் 'வேதத்தின் கண்' என்று அழைக்கப்படுகிறது.
சூரியன் மற்றும் சந்திரன் நகர்வுகளை கண்ணால் கண்டு ஆராய்ச்சி செய்து, கிரகங்களின் இயக்கம் நட்சத்திரங்கள் கொண்டு அளவிடப்பட்டு பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம் மற்றும் யோகம் என்ற ஐந்து காரணிகள் ஆகும்.
புவி மைய கொள்கையை (Geo-Centric) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது ஜோதிடக் கலையாகும். அதாவது பூமியை மையமாக வைத்து அதனைச் சுற்றி இருக்கும் கிரகங்களின் இயக்கம் எவ்வாறு உயிரினங்களின் இயக்கத்தையும் வாழ்வியலையும் பாதிக்கிறது என்பதை கூறுவதே இக்கலையின் நோக்கமாகும்.
கிரகமும் ராசியும்
கிரகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் பற்றுதல் அல்லது பற்றி இழுத்தல் என்பதாகும். பிரபஞ்சத்தில் பல நட்சத்திர கூட்டங்கள் இருந்தாலும், சூரியன் எனும் நட்சத்திரம் மட்டுமே நமது பூமியின் இயக்கத்தையும் மற்றம் ஒன்பது கிரகங்களையும் பெருமளவில் பாதிக்கிறது. அது போலவே நமது பூமியின் துணைக் கோளான சந்திரனின் இயக்கம் பூமியை மிக அதிக அளவில் பாதிப்பதால்தான் பூமியை சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் சந்திரன் முக்கிய கிரகமாக எடுத்து கொள்ளப்பட்டு இருக்கிறது.
நமது பூமி 23°1/2 பாகை சாய்ந்து, தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி கொண்டு இருக்கிறது என்பதை வானியல் கணிதம் மூலம் உணர்ந்தனர். இந்த பூமியின் சுழற்சி மூலம் தட்பவெப்பநிலை மாற்றங்கள் உண்டாவதையும் உணர்ந்தனர். இத்தகைய புவியின் இயக்கம் சூரியனின் ஈர்ப்பு விசையாலும் மேலும் அதை சுற்றி இருக்கும் கோள்களின் பாதிப்பாலும் ஏற்படுகிறது.
தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் என்பவை நீர் நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களில் மூலமே பூமியில் நிகழ்கிறது. இந்த பஞ்சபூதங்கள் மூலமே கிரகங்கள் மனிதர்களை இயங்குகின்றன. இரவு பகலாக கண்விழித்து பூமி சுற்றி வரும் பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கூறுகளாக்கி ராசி என்று பெயர் வைத்தனர்.மேலும் ராசிகளின் வடிவமைப்பைக் கொண்டு அதற்கு தகுந்த பெயரிட்டனர்.
ஜோதிடம் ஒரு அறிவியலா?
இவ்வாறாக வானவியலில் இருந்து ஜோதிடம் தோன்றியது. கிரக இயக்கங்களைப் பஞ்சாங்கம் கொண்டு கணித்து, மேலும் பல கணித சூத்திரங்கள் கொண்டு மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை சொல்வதால் ஜோதிடம் ஒரு அறிவியலே என்று கூறுகிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை? மேலும் ஆராய்வோம்.
நன்றி மணிகண்டன் பாரதிதாசன் தமிழ் ஹிந்து
தொடரும்
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sun Jun 25, 2017 9:14 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
8: கிரக பார்வை என்றால் என்ன?
8: கிரக பார்வை என்றால் என்ன?
கிரகப் பார்வை
ஒளியின் ஆதி மூலம் என்று கூறப்படும் சூரியனைச் சுற்றி வரும் ஏழு கிரகங்களும் சரிவிகித கால அளவில் சுற்றி வருகின்றன. சூரியன் மூலம் கிரகிக்கும் ஒளியை பூமிக்கு பிரதிபலிக்கிறது என்பதை தற்கால அறிவியலும் ஒத்துக்கொள்கிறது.
ஜோதிடத்தில் கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளியைக் கொண்டே அதன் பார்வைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஜோதிடத்தில் எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை அல்லது சம சப்த பார்வை இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கூறப்படும் சம சப்த பார்வை என்பது என்ன என்பதை சற்று விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடம் என்பது புவி மாயா கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்பது அடிப்படை விஷயம். அதாவது பூமியில் இருந்தே கிரகங்களின் நிலைகள் கணிக்கப்பட்டு பின்னர் அதனைக் கொண்டு ஜோதிட விதிகள் உருவாக்கப்பட்டன. அது போல பார்வைகள் என்பதும் புவியை மையமாக கொண்டே உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு கிரகத்திற்கும் இருக்கும் பார்வை என்பது அந்த கிரகமே கண்கள் கொண்டு பார்க்கிறது என்று தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம். ஜோதிடம் சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்ததே. சமஸ்கிருதத்தில் கிரக பார்வை என்பதை 'கிரக திருஷ்டி' என்று சொல்வார்கள். எந்த கிரகத்திற்கும் கண்கள் கிடையாது. சூரிய ஒளியை எந்த அளவில் பூமிக்கு செலுத்துகிறது என்பதே பார்வை.
ஒரு பொருள் அல்லது மனிதன் நம்மை பார்க்கிறான் என்பதன் பொருள் நாமும் அதை பார்க்கிறோம் என்றே பொருள்படும். இதை வேறு விதமாக சொல்வதென்றால், ஒரு பொருளை எப்போது நம் கண்களால் பார்க்க முடியும்? அந்த பொருள் ஒளியை பிரதிபலித்தால் மட்டுமே அந்த பொருளை காண முடியும் என்கிறது இயற்பியல். அது போலவே ஒரு கிரகம் பிரதிபலிக்கும் ஒளியானது பூமிக்கு கிடைகிறது என்றால், அந்த கிரகத்தை நம் கண் கொண்டு அல்லது தொலைநோக்கி கொண்டு எளிதில் காண முடியும் என்பது தானே அர்த்தம்.
ஏழாம் பார்வை
7 ம் பார்வை என்பது எல்லா கிரகங்களுக்கும் இருக்கிறது என்கிறது ஜோதிடம். இதன் அர்த்தம், நம் கண் கொண்டு அல்லது தொலைநோக்கி துணை கொண்டு. அதாவது 180 பாகை அல்லது நேர் கோட்டில் அந்த கிரகத்தை எளிதில் பார்க்க முடியும் என்பதுதான். இதில் சூட்சுமம் என்னவெனில் நமது கண்கள் 180 பாகை அல்லது நேர்கோட்டில் மட்டுமே பார்வை செலுத்தும் என்பதே.
மேலும் தெளிவாக சொன்னால், இந்த ராசியில் இருந்து இந்த பாகை அளவில் பார்க்கும் போது, குறிப்பிட்ட கிரகம் தெரியும் என்பதே கிரக பார்வை.
ஆனால் சிலர் கிரகங்களுக்கு கண்கள் உள்ளன. அவைகள் தம் கண்கள் கொண்டு பார்க்கிறது என்கிறார்கள். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதே அதற்குக் காரணம்
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
கிரகப் பார்வை
ஒளியின் ஆதி மூலம் என்று கூறப்படும் சூரியனைச் சுற்றி வரும் ஏழு கிரகங்களும் சரிவிகித கால அளவில் சுற்றி வருகின்றன. சூரியன் மூலம் கிரகிக்கும் ஒளியை பூமிக்கு பிரதிபலிக்கிறது என்பதை தற்கால அறிவியலும் ஒத்துக்கொள்கிறது.
ஜோதிடத்தில் கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளியைக் கொண்டே அதன் பார்வைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஜோதிடத்தில் எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை அல்லது சம சப்த பார்வை இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கூறப்படும் சம சப்த பார்வை என்பது என்ன என்பதை சற்று விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடம் என்பது புவி மாயா கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்பது அடிப்படை விஷயம். அதாவது பூமியில் இருந்தே கிரகங்களின் நிலைகள் கணிக்கப்பட்டு பின்னர் அதனைக் கொண்டு ஜோதிட விதிகள் உருவாக்கப்பட்டன. அது போல பார்வைகள் என்பதும் புவியை மையமாக கொண்டே உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு கிரகத்திற்கும் இருக்கும் பார்வை என்பது அந்த கிரகமே கண்கள் கொண்டு பார்க்கிறது என்று தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம். ஜோதிடம் சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்ததே. சமஸ்கிருதத்தில் கிரக பார்வை என்பதை 'கிரக திருஷ்டி' என்று சொல்வார்கள். எந்த கிரகத்திற்கும் கண்கள் கிடையாது. சூரிய ஒளியை எந்த அளவில் பூமிக்கு செலுத்துகிறது என்பதே பார்வை.
ஒரு பொருள் அல்லது மனிதன் நம்மை பார்க்கிறான் என்பதன் பொருள் நாமும் அதை பார்க்கிறோம் என்றே பொருள்படும். இதை வேறு விதமாக சொல்வதென்றால், ஒரு பொருளை எப்போது நம் கண்களால் பார்க்க முடியும்? அந்த பொருள் ஒளியை பிரதிபலித்தால் மட்டுமே அந்த பொருளை காண முடியும் என்கிறது இயற்பியல். அது போலவே ஒரு கிரகம் பிரதிபலிக்கும் ஒளியானது பூமிக்கு கிடைகிறது என்றால், அந்த கிரகத்தை நம் கண் கொண்டு அல்லது தொலைநோக்கி கொண்டு எளிதில் காண முடியும் என்பது தானே அர்த்தம்.
ஏழாம் பார்வை
7 ம் பார்வை என்பது எல்லா கிரகங்களுக்கும் இருக்கிறது என்கிறது ஜோதிடம். இதன் அர்த்தம், நம் கண் கொண்டு அல்லது தொலைநோக்கி துணை கொண்டு. அதாவது 180 பாகை அல்லது நேர் கோட்டில் அந்த கிரகத்தை எளிதில் பார்க்க முடியும் என்பதுதான். இதில் சூட்சுமம் என்னவெனில் நமது கண்கள் 180 பாகை அல்லது நேர்கோட்டில் மட்டுமே பார்வை செலுத்தும் என்பதே.
மேலும் தெளிவாக சொன்னால், இந்த ராசியில் இருந்து இந்த பாகை அளவில் பார்க்கும் போது, குறிப்பிட்ட கிரகம் தெரியும் என்பதே கிரக பார்வை.
ஆனால் சிலர் கிரகங்களுக்கு கண்கள் உள்ளன. அவைகள் தம் கண்கள் கொண்டு பார்க்கிறது என்கிறார்கள். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதே அதற்குக் காரணம்
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜோதிடம் என்பது அறிவியலா?- 9: சந்திரனை ஏன் திங்கள் என்று அழைக்கிறோம்?
ஜோதிடம் என்பது அறிவியலா?-
9: சந்திரனை ஏன் திங்கள் என்று அழைக்கிறோம்?
நட்சத்திர கூட்டங்கள் 30 பாகை (Degree) அளவில் பிரிக்கப்பட்டு அவைகள் நட்சத்திர மண்டலங்கள் என்று அழைக்கப்பட்டது. அந்த நட்சத்திரக் கூட்டத்தின் தோற்றத்தின்படி அவைகள் பெயர்கள் அமைந்தன.
அவை முறையே,
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சந்திரன் எந்த வீட்டிலும் பகை பெற மாட்டார். இந்து மதப் புராணப்படி 27 நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவிகள் என்று அழைக்கப்படுகின்றன. எனவே, மனைவி வீட்டில் கணவன் பகை பெறுவதில்லை என்று கற்பனையுடன் புராணக் கதை சொல்லப்பட்டு இருக்கிறது. கால புருஷ சக்கரத்தில் 8 ஆவது இடமான விருச்சிகத்தில் நீச்சம் பெறுவதால், நமது ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் செல்லும் இடத்தை கொண்டு சந்திர அஷ்டமம் என்ற நிலை கூறப்படுகிறது. அந்த நேரத்தில் நமது மனமானது ஏதேனும் ஒரு விதத்தில் பாதிக்கப்படுகிறது
ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டத்திலும் (ராசியிலும்) சூரியன் இருக்க, உருவாகும் பௌர்ணமியை வைத்து தமிழ் மாதங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் திங்கள் எனும் பெயர் சந்திரனுக்கு வந்தது. திங்கள் என்றால் மாதம் என்று தமிழில் பொருள்படும். சந்திரன் மாதங்களை குறிகாட்டும் கிரகமாகும்.
ஒவ்வொரு மாதத்திலும் சந்திரன் எந்த நட்சத்திரம் மீது நின்று பௌர்ணமி உருவாகிறதோ அந்த நட்சத்திரப் பெயரிலே மாதங்கள் பெயரிடப்பட்டன.
இதில் சித்திரா பௌர்ணமி என்பது மிகப் பிரகாசமான சந்திரன் தோன்றும் மாதமென்பதால், சித்திரையிலிருந்து தமிழ் மாதம் தொடங்கியது. மேலும் மேஷத்தில் சூரியன் உச்சம் பெறும் காரணத்தாலே நிலவின் ஒளி அடர்த்தி சித்திரை மாதத்தில் அதிகம்.
உதாரணமாக மேஷத்தில் சூரியன் நின்று அதற்கு நேர் எதிரான துலாமில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் நிற்க உருவாகும் பௌர்ணமியைக் கொண்டு அந்த மாதத்திற்கு சித்திரை என பெயரிடப்பட்டது. அது போலவே ரிஷபத்தில் சூரியன் நின்று அதற்கு நேர் எதிரான ராசியான விருச்சிகத்தில் சந்திரன் விசாகத்தில் நிற்க உருவாகும் பௌர்ணமி வைசாக அல்லது வைகாசி என பெயரிடப்பட்டது.
நன்றி தி ஹிந்து
ரமணியன்
9: சந்திரனை ஏன் திங்கள் என்று அழைக்கிறோம்?
நட்சத்திர கூட்டங்கள் 30 பாகை (Degree) அளவில் பிரிக்கப்பட்டு அவைகள் நட்சத்திர மண்டலங்கள் என்று அழைக்கப்பட்டது. அந்த நட்சத்திரக் கூட்டத்தின் தோற்றத்தின்படி அவைகள் பெயர்கள் அமைந்தன.
அவை முறையே,
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சந்திரன் எந்த வீட்டிலும் பகை பெற மாட்டார். இந்து மதப் புராணப்படி 27 நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவிகள் என்று அழைக்கப்படுகின்றன. எனவே, மனைவி வீட்டில் கணவன் பகை பெறுவதில்லை என்று கற்பனையுடன் புராணக் கதை சொல்லப்பட்டு இருக்கிறது. கால புருஷ சக்கரத்தில் 8 ஆவது இடமான விருச்சிகத்தில் நீச்சம் பெறுவதால், நமது ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் செல்லும் இடத்தை கொண்டு சந்திர அஷ்டமம் என்ற நிலை கூறப்படுகிறது. அந்த நேரத்தில் நமது மனமானது ஏதேனும் ஒரு விதத்தில் பாதிக்கப்படுகிறது
ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டத்திலும் (ராசியிலும்) சூரியன் இருக்க, உருவாகும் பௌர்ணமியை வைத்து தமிழ் மாதங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் திங்கள் எனும் பெயர் சந்திரனுக்கு வந்தது. திங்கள் என்றால் மாதம் என்று தமிழில் பொருள்படும். சந்திரன் மாதங்களை குறிகாட்டும் கிரகமாகும்.
ஒவ்வொரு மாதத்திலும் சந்திரன் எந்த நட்சத்திரம் மீது நின்று பௌர்ணமி உருவாகிறதோ அந்த நட்சத்திரப் பெயரிலே மாதங்கள் பெயரிடப்பட்டன.
இதில் சித்திரா பௌர்ணமி என்பது மிகப் பிரகாசமான சந்திரன் தோன்றும் மாதமென்பதால், சித்திரையிலிருந்து தமிழ் மாதம் தொடங்கியது. மேலும் மேஷத்தில் சூரியன் உச்சம் பெறும் காரணத்தாலே நிலவின் ஒளி அடர்த்தி சித்திரை மாதத்தில் அதிகம்.
உதாரணமாக மேஷத்தில் சூரியன் நின்று அதற்கு நேர் எதிரான துலாமில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் நிற்க உருவாகும் பௌர்ணமியைக் கொண்டு அந்த மாதத்திற்கு சித்திரை என பெயரிடப்பட்டது. அது போலவே ரிஷபத்தில் சூரியன் நின்று அதற்கு நேர் எதிரான ராசியான விருச்சிகத்தில் சந்திரன் விசாகத்தில் நிற்க உருவாகும் பௌர்ணமி வைசாக அல்லது வைகாசி என பெயரிடப்பட்டது.
நன்றி தி ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
ஜோதிடம் என்பது அறிவியலா?- 10: பரிகாரங்கள் எதற்காக?
ஜோதிடம் என்பது அறிவியலா?- 10: பரிகாரங்கள் எதற்காக?
கிரக தோசம் (கிரக தோஷம்)
பரிகாரம் என்றால் என்ன என்று அறிவதற்கு முன், தோசம் பற்றி அறிந்து கொள்வோம். பெரும்பாலும் ஜோதிடத்தில் சம்ஸ்கிருத வார்த்தைகளே பயன்படுத்தபடுகிறது. தோசம் (அ) தோசா என்ற சொல் கூட சமஸ்கிருத பின்னணி கொண்டது தான். தோசம் என்றால் குறைபாடு அல்லது ஒவ்வாமை என்று பொருள்.
கிரக தோசம் என்றால் அந்த கிரகத்தின் பண்புகள் (காரகத்துவம்) குறைவாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ கிடைப்பது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, அளவுக்கு அதிகமாக கிடைக்கும் அசுப மற்றும் சுப கிரக பண்புகள் எதோ ஒருவிதத்தில் மனித உடலை அல்லது மனதை பாதிக்கிறது.
பரிகாரம் பற்றிய விளக்கம்
பரிகாரம் என்பதை பரி + காரம் என்று பிரித்து பொருள் காணவேண்டும். ஏற்கெனவே சொல்லியது போல் பரிகாரம் என்பது சமஸ்கிருத வார்த்தையே. பரி - இணையான, காரம் அல்லது காரகம் - செயல் அல்லது வினை. இதன் முழு பொருள் இணையான செயல். பரிகாரம் என்பது பொய் என்ற சிலரின் கூற்றை உடைக்கவே இந்த கட்டுரை.
கிரக பண்புகளால் பாதிக்கப்படும் மனிதனின் உடலை பாதுகாக்கவே இந்த பரிகாரங்கள். பரிகாரம் என்பதன் சரியான அர்த்தம் இணையான செயல் இதனை மாற்று செயல் என்றும் கூறலாம். ஒரு வினையை சமன்படுத்தும் அதற்கு எதிரான இன்னொரு வினை அல்லது செயல். இதுவே பரிகாரம் என்பதன் எளிய அர்த்தம்.
கிரகங்கள் மிகப் பெரியவை அவற்றின் இயக்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது நிதர்சன உண்மை. ஆனால் அவற்றின் பண்புகள் பூமியில் பிரதிபலிக்கும், அந்த பிரதிபலிப்பால் உண்டாகும் பாதிப்புகளை போக்க அதற்கு இணையான செயல்களால் செய்து மாற்றலாம்.
உதாரணமாக, சூரியனின் அதிக வெப்பத்தில் இருந்து கண் கூசுவதை தவர்க்க கூலிங் கிளாஸ் அணிவது கூட ஒருவித பரிகாரமே. அது போலவே கிட்ட பார்வை அல்லது தூர பார்வை போன்ற பார்வை குறைபாடுகளை போக்க கண் கண்ணாடி அணிந்து கொள்வதும் ஒருவகை பரிகாரமே.
பழங்காலத்தில் பெரும்பாலும் கிரகங்களால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் மூலிகைகள் மற்றும் பல உடற்பயிற்சிகள் மற்றும் தியான முறைகளும் கற்று தரப்பட்டது. மேலும் இத்தகு பரிகாரங்களை சரியாக செய்ய முன்னோர்கள் அதனை ஆன்மீகத்துடன் இணைத்தனர். ஆன்மீகத்துடன் இணைக்கப்பட்ட எந்த ஒரு கலையும் உலகம் உள்ளவரை அழியாமல் பின்பற்றபடும் என்பது முன்னோர்கள் எண்ணம் . இதற்கு ஒரு சரியான உதாரணம் தான் தோப்பு கரணமும் தலையில் குட்டிக் கொள்ளும் செயல்கள்களும். இவை மனிதனின் மூளையைத் தூண்டி, அறிவுத் தேடலை அதிகரிப்பதால், அதனை ஞான காரகன் என்று அழைக்கப்படும் கேதுவின் அதிபதியான விநாயகருடன் இணைத்து, இன்று வரை அது பின்பற்றபடுகிறது.
சந்திரன் சுக்கிரன் சேர்க்கை பெற்ற பெண்களை எளிதில் வசியம் செய்ய முடியும் என்று அறிந்த முன்னோர்கள், நெற்றியில் பெண்கள் குங்குமம் வைக்கும் பழக்கம் ஏற்படுத்தி, பெண்களை வசியம் செய்வதில் இருந்து காத்தனர். சிவப்பு நிறம் என்பது அதிக அலைநீளம் கொண்டது என்பதால், வசியம் செய்வது கடினம். இதுவும் ஒருவகை பரிகாரமே.
உண்மையில் பரிகாரங்கள் மனிதனின் உடலில் பல மாற்றங்கள் அல்லது செயல்கள் செய்து கிரக காரக பாதிப்புக்களைச் சரி செய்கிறது.
எனவே பரிகாரங்கள் என்பது உண்மையே ஆனால் கிரக பண்புகளால் ஏற்படும் பாதிப்பை சரியாக ஆராய்ந்து அதற்கு இணையான செயல்கள் செய்தால், பரிகாரங்கள் பலிப்பதை உணரலாம். கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து அதற்குரிய சில விரல் முத்திரை பயிற்சிகளைக் கூட வகுத்தனர்.
செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் உடலில் செவ்வாய் பாதிப்புகள் குறைகிறது என்பதைக் கண்டறிந்து, அதை வாழ்க்கையின் நடைமுறையாக்கி வைத்தனர் நம் முன்னோர்கள்.
அன்று ஆன்மீகத்துடன் இணைக்கப்பட்ட பரிகாரங்கள், காலபோக்கில் ஆன்மீகத்தை மட்டுமே கடைப்பிடித்து, அதனுடன் இணைக்கப்பட்ட பரிகாரங்களை தவிர்த்தனர். இதனால் முழுமையான பரிகாரம் என்பது இக்காலத்தில் பின்பற்றப்படவில்லை.
எந்த கிரகம் நம் உடலை பாதிக்கிறது என்பதை அறிந்து, அல்லது நன்மை செய்யும் கிரகத்தை எந்த கிரகம் பாதிக்கிறது - அதன் மூலம் எந்த உடல் பகுதி பாதிக்கிறது என்பதை அறிந்து அதற்குரிய வழிமுறைகளை மேற்கொண்டால் அதுவே சரியான பரிகாரம். மேலும் பாதிக்கும் கிரகத்தின் அதிபதியை வணங்கி, அந்த பரிகாரத்தை அந்த அதிபதியுடன் இணைத்து நிறைவேற்ற, மன நிறைவுடன் முழு நம்பிக்கையும் மனதில் அதிகரிக்கும்
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
கிரக தோசம் (கிரக தோஷம்)
பரிகாரம் என்றால் என்ன என்று அறிவதற்கு முன், தோசம் பற்றி அறிந்து கொள்வோம். பெரும்பாலும் ஜோதிடத்தில் சம்ஸ்கிருத வார்த்தைகளே பயன்படுத்தபடுகிறது. தோசம் (அ) தோசா என்ற சொல் கூட சமஸ்கிருத பின்னணி கொண்டது தான். தோசம் என்றால் குறைபாடு அல்லது ஒவ்வாமை என்று பொருள்.
கிரக தோசம் என்றால் அந்த கிரகத்தின் பண்புகள் (காரகத்துவம்) குறைவாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ கிடைப்பது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, அளவுக்கு அதிகமாக கிடைக்கும் அசுப மற்றும் சுப கிரக பண்புகள் எதோ ஒருவிதத்தில் மனித உடலை அல்லது மனதை பாதிக்கிறது.
பரிகாரம் பற்றிய விளக்கம்
பரிகாரம் என்பதை பரி + காரம் என்று பிரித்து பொருள் காணவேண்டும். ஏற்கெனவே சொல்லியது போல் பரிகாரம் என்பது சமஸ்கிருத வார்த்தையே. பரி - இணையான, காரம் அல்லது காரகம் - செயல் அல்லது வினை. இதன் முழு பொருள் இணையான செயல். பரிகாரம் என்பது பொய் என்ற சிலரின் கூற்றை உடைக்கவே இந்த கட்டுரை.
கிரக பண்புகளால் பாதிக்கப்படும் மனிதனின் உடலை பாதுகாக்கவே இந்த பரிகாரங்கள். பரிகாரம் என்பதன் சரியான அர்த்தம் இணையான செயல் இதனை மாற்று செயல் என்றும் கூறலாம். ஒரு வினையை சமன்படுத்தும் அதற்கு எதிரான இன்னொரு வினை அல்லது செயல். இதுவே பரிகாரம் என்பதன் எளிய அர்த்தம்.
கிரகங்கள் மிகப் பெரியவை அவற்றின் இயக்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது நிதர்சன உண்மை. ஆனால் அவற்றின் பண்புகள் பூமியில் பிரதிபலிக்கும், அந்த பிரதிபலிப்பால் உண்டாகும் பாதிப்புகளை போக்க அதற்கு இணையான செயல்களால் செய்து மாற்றலாம்.
உதாரணமாக, சூரியனின் அதிக வெப்பத்தில் இருந்து கண் கூசுவதை தவர்க்க கூலிங் கிளாஸ் அணிவது கூட ஒருவித பரிகாரமே. அது போலவே கிட்ட பார்வை அல்லது தூர பார்வை போன்ற பார்வை குறைபாடுகளை போக்க கண் கண்ணாடி அணிந்து கொள்வதும் ஒருவகை பரிகாரமே.
பழங்காலத்தில் பெரும்பாலும் கிரகங்களால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் மூலிகைகள் மற்றும் பல உடற்பயிற்சிகள் மற்றும் தியான முறைகளும் கற்று தரப்பட்டது. மேலும் இத்தகு பரிகாரங்களை சரியாக செய்ய முன்னோர்கள் அதனை ஆன்மீகத்துடன் இணைத்தனர். ஆன்மீகத்துடன் இணைக்கப்பட்ட எந்த ஒரு கலையும் உலகம் உள்ளவரை அழியாமல் பின்பற்றபடும் என்பது முன்னோர்கள் எண்ணம் . இதற்கு ஒரு சரியான உதாரணம் தான் தோப்பு கரணமும் தலையில் குட்டிக் கொள்ளும் செயல்கள்களும். இவை மனிதனின் மூளையைத் தூண்டி, அறிவுத் தேடலை அதிகரிப்பதால், அதனை ஞான காரகன் என்று அழைக்கப்படும் கேதுவின் அதிபதியான விநாயகருடன் இணைத்து, இன்று வரை அது பின்பற்றபடுகிறது.
சந்திரன் சுக்கிரன் சேர்க்கை பெற்ற பெண்களை எளிதில் வசியம் செய்ய முடியும் என்று அறிந்த முன்னோர்கள், நெற்றியில் பெண்கள் குங்குமம் வைக்கும் பழக்கம் ஏற்படுத்தி, பெண்களை வசியம் செய்வதில் இருந்து காத்தனர். சிவப்பு நிறம் என்பது அதிக அலைநீளம் கொண்டது என்பதால், வசியம் செய்வது கடினம். இதுவும் ஒருவகை பரிகாரமே.
உண்மையில் பரிகாரங்கள் மனிதனின் உடலில் பல மாற்றங்கள் அல்லது செயல்கள் செய்து கிரக காரக பாதிப்புக்களைச் சரி செய்கிறது.
எனவே பரிகாரங்கள் என்பது உண்மையே ஆனால் கிரக பண்புகளால் ஏற்படும் பாதிப்பை சரியாக ஆராய்ந்து அதற்கு இணையான செயல்கள் செய்தால், பரிகாரங்கள் பலிப்பதை உணரலாம். கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து அதற்குரிய சில விரல் முத்திரை பயிற்சிகளைக் கூட வகுத்தனர்.
செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் உடலில் செவ்வாய் பாதிப்புகள் குறைகிறது என்பதைக் கண்டறிந்து, அதை வாழ்க்கையின் நடைமுறையாக்கி வைத்தனர் நம் முன்னோர்கள்.
அன்று ஆன்மீகத்துடன் இணைக்கப்பட்ட பரிகாரங்கள், காலபோக்கில் ஆன்மீகத்தை மட்டுமே கடைப்பிடித்து, அதனுடன் இணைக்கப்பட்ட பரிகாரங்களை தவிர்த்தனர். இதனால் முழுமையான பரிகாரம் என்பது இக்காலத்தில் பின்பற்றப்படவில்லை.
எந்த கிரகம் நம் உடலை பாதிக்கிறது என்பதை அறிந்து, அல்லது நன்மை செய்யும் கிரகத்தை எந்த கிரகம் பாதிக்கிறது - அதன் மூலம் எந்த உடல் பகுதி பாதிக்கிறது என்பதை அறிந்து அதற்குரிய வழிமுறைகளை மேற்கொண்டால் அதுவே சரியான பரிகாரம். மேலும் பாதிக்கும் கிரகத்தின் அதிபதியை வணங்கி, அந்த பரிகாரத்தை அந்த அதிபதியுடன் இணைத்து நிறைவேற்ற, மன நிறைவுடன் முழு நம்பிக்கையும் மனதில் அதிகரிக்கும்
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
ஜோதிடம் என்பது அறிவியலா?- 11: புதன் மற்றும் குரு தரும் அறிவுகளின் வேறுபாடு
ஜோதிடம் என்பது அறிவியலா?- 11: புதன் மற்றும் குரு தரும் அறிவுகளின் வேறுபாடு
அறிவும் நுண்ணறிவும்
புதன் தருவது புத்தி (அ) அறிவு. குரு தருவது நுண்ணறிவு (அ) பகுத்தறிவு. இதில் அறிவு (Intelligence) மற்றும் (Intellect) நுண்ணறிவு. இவற்றின் வேறுபாடு என்ன?
அறிவு (Intelligence) - நல்லவை மற்றும் கெட்டவை அனைத்தும் உணர்ந்து அறிந்து கொள்ளும் திறன்.
நுண்ணறிவு (or) பகுத்தறிவு (Intellect) - நல்லவை மற்றும் கெட்டவை பகுத்து அறிந்து, பின் அவற்றை நம் வாழ்வில் பயன்படுத்தும் திறன்.
அறிவு (அல்லது) புத்தி என்பதன் அர்த்தம் 'உணர்ந்து பின் அறிதல்' என்பதாகும். அதாவது, நம் ஐம்புலன்களால் உணர்ந்து கற்றுக்கொள்வது. எடுத்துக்காட்டாக, இனிப்பு மற்றும் துவர்ப்பு எனும் சுவைகளை எப்படி இருக்கும் என்பதை நம் புலன்களில் ஒன்றான நாக்கின் மூலமே உணர்கிறோம். இந்த சுவைகளை உணர்ந்தால் ஒழிய, நீங்கள் உணர்ந்த சுவையை வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இதனாலே, புதன் ஐம்புலன்கள் பெறும் (உணர்ந்து அறியும்) அறிவினை தரும் கிரகமாகிறார்.
குரு என்பவரும் அறிவினை தரும் கிரகம் தான். ஆனால் அவர் தருவது நுண்ணறிவு. குரு பகுத்தறிவின் காரகன். ஆதாவது, உண்மைகளை 'பகுத்து உணர்ந்து, பின் அறிதல்'. எனவே தான் நுண்ணறிவு கொண்ட மனிதர்கள் 'குரு' என்ற ஸ்தானத்திற்கு பொருத்தமானவர்களாக உள்ளனர். 'கு' என்றால் இருள். 'ரு' என்றால் பிரகாசமான ஒளி என்று பொருள். மன இருளை அகற்றி, ஞான ஒளி தருபவர் 'குரு' என்ற நிலையை அடைவார்கள்.
எனவே, புதன் - அறிவு / புத்தி தருபவர், குரு - நுண்ணறிவு / பகுத்தறிவு தருபவர்.
புதன் கேந்திரங்களில் குரு அமைந்து ஆட்சி, உச்சம், நட்பு பெறுதல் சிறப்பு. இதனால், ஜாதகன் நுண்ணறிவு கொண்டவனாகவும், தீர்க்க சிந்தனை கொண்டவனாக குரு மாற்றுவார்.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
அறிவும் நுண்ணறிவும்
புதன் தருவது புத்தி (அ) அறிவு. குரு தருவது நுண்ணறிவு (அ) பகுத்தறிவு. இதில் அறிவு (Intelligence) மற்றும் (Intellect) நுண்ணறிவு. இவற்றின் வேறுபாடு என்ன?
அறிவு (Intelligence) - நல்லவை மற்றும் கெட்டவை அனைத்தும் உணர்ந்து அறிந்து கொள்ளும் திறன்.
நுண்ணறிவு (or) பகுத்தறிவு (Intellect) - நல்லவை மற்றும் கெட்டவை பகுத்து அறிந்து, பின் அவற்றை நம் வாழ்வில் பயன்படுத்தும் திறன்.
அறிவு (அல்லது) புத்தி என்பதன் அர்த்தம் 'உணர்ந்து பின் அறிதல்' என்பதாகும். அதாவது, நம் ஐம்புலன்களால் உணர்ந்து கற்றுக்கொள்வது. எடுத்துக்காட்டாக, இனிப்பு மற்றும் துவர்ப்பு எனும் சுவைகளை எப்படி இருக்கும் என்பதை நம் புலன்களில் ஒன்றான நாக்கின் மூலமே உணர்கிறோம். இந்த சுவைகளை உணர்ந்தால் ஒழிய, நீங்கள் உணர்ந்த சுவையை வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இதனாலே, புதன் ஐம்புலன்கள் பெறும் (உணர்ந்து அறியும்) அறிவினை தரும் கிரகமாகிறார்.
குரு என்பவரும் அறிவினை தரும் கிரகம் தான். ஆனால் அவர் தருவது நுண்ணறிவு. குரு பகுத்தறிவின் காரகன். ஆதாவது, உண்மைகளை 'பகுத்து உணர்ந்து, பின் அறிதல்'. எனவே தான் நுண்ணறிவு கொண்ட மனிதர்கள் 'குரு' என்ற ஸ்தானத்திற்கு பொருத்தமானவர்களாக உள்ளனர். 'கு' என்றால் இருள். 'ரு' என்றால் பிரகாசமான ஒளி என்று பொருள். மன இருளை அகற்றி, ஞான ஒளி தருபவர் 'குரு' என்ற நிலையை அடைவார்கள்.
எனவே, புதன் - அறிவு / புத்தி தருபவர், குரு - நுண்ணறிவு / பகுத்தறிவு தருபவர்.
புதன் கேந்திரங்களில் குரு அமைந்து ஆட்சி, உச்சம், நட்பு பெறுதல் சிறப்பு. இதனால், ஜாதகன் நுண்ணறிவு கொண்டவனாகவும், தீர்க்க சிந்தனை கொண்டவனாக குரு மாற்றுவார்.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
ஜோதிடம் என்பது அறிவியலா?- 12: இயற்பியலில் ஜோதிடம்
ஜோதிடம் என்பது அறிவியலா?- 12: இயற்பியலில் ஜோதிடம்
பூமி சூரியனை சுற்றி வரும் வட்டப்பாதையும், நிலவு பூமியை சூற்றி வரும் வட்டப்பாதையும் ஒன்றை ஒன்று இரு இடங்களில் வெட்டி கொள்ளும், அதில் உள் வெட்டு பகுதி 'ராகு' எனவும். வெளி வெட்டு பகுதி 'கேது' எனவும் அறியப்படுகிறது. ஜோதிடத்தில் ராகு என்பது பாம்பின் தலையாகவும், கேது என்பது பாம்பின் வாலாகவும் உருவாக படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் ராகு மற்றும் கேது என்பவை முறையே வடதுருவம், தென் துருவம் எனவும் கூறப்படுகிறது. எனவே இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் பண்புகள் கொண்டவை என்பது புலனாகிறது.
ஜோதிடத்தில் கேதுவின் காரகத்துவம் சுருக்குபவர், கடை தருபவர் எனவும், ராகுவின் காரகத்துவம் பெருக்குபவர் அல்லது விரிவு படுத்துபவர் எனவும் கூறப்பட்டு இருக்கிறது. இதுவே இயற்பியலில் லென்ஸ் எனும் அடிகளின் மூலம் கொண்டு விளக்கலாம்
குவி ஆடி (கேது) - CONVEX LENS
ஒளியை ஓரிடத்தில் குவித்து நமது கவனத்திற்கு வழிவகை செய்யும் ஒரு சாதனம் குவி ஆடி எனும் குவி லென்ஸ். இதுவும் ஒரு கேதுவின் காரகத்துவமே ஆகும். சந்திரன் எனும் மனதினை ஓரிடத்தில் குவித்து தியானம் செய்ய உதவி செய்வது, ஆன்மீக சாதனைகளை செய்ய உதவுவது சந்திரன் + கேது.
குழி ஆடி (ராகு) - CONCAVE LENS
ஒளியை ஓரிடத்தில் குவிக்காது அதனை பெருக்கி பெரிதாக காட்டும் குழி ஆடி அல்லது குழி லென்ஸ் ஒரு ராகுவின் காரகத்துவமே ஆகும். இது உருப்பெருக்கியாகவும் உபயோகப்படுகிறது. சந்திரன் எனும் மனதினை ஓரிடத்தில் குவிக்காது, எதையும் பெரிதுபடுத்தி மனதை அலைபாயவைத்து மோகம், துரோகம், வஞ்சம், ஏமாற்றுதல் என்று பல தீய செயல்களில் மனிதனை புகுத்துவது சந்திரன் + ராகு.
கேது ஒளி குவிப்பு திறன் தந்தாலும் அது ஒரு அசுப கிரகம் என்பதால், கிட்ட பார்வை தன்மையை தந்துவிடுகிறது.
அது போல ராகு தூர பார்வை தன்மையை தந்துவிடுகிறது.
சந்திரன் அல்லது சூரியனுடன் ராகு சேர்ந்தால் தூர பார்வை நோயும் கேது சேர்ந்தால் கிட்ட பார்வை நோயும் ஏற்படுகிறது.
நன்றி தி ஹிந்து
ரமணியன்
பூமி சூரியனை சுற்றி வரும் வட்டப்பாதையும், நிலவு பூமியை சூற்றி வரும் வட்டப்பாதையும் ஒன்றை ஒன்று இரு இடங்களில் வெட்டி கொள்ளும், அதில் உள் வெட்டு பகுதி 'ராகு' எனவும். வெளி வெட்டு பகுதி 'கேது' எனவும் அறியப்படுகிறது. ஜோதிடத்தில் ராகு என்பது பாம்பின் தலையாகவும், கேது என்பது பாம்பின் வாலாகவும் உருவாக படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் ராகு மற்றும் கேது என்பவை முறையே வடதுருவம், தென் துருவம் எனவும் கூறப்படுகிறது. எனவே இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் பண்புகள் கொண்டவை என்பது புலனாகிறது.
ஜோதிடத்தில் கேதுவின் காரகத்துவம் சுருக்குபவர், கடை தருபவர் எனவும், ராகுவின் காரகத்துவம் பெருக்குபவர் அல்லது விரிவு படுத்துபவர் எனவும் கூறப்பட்டு இருக்கிறது. இதுவே இயற்பியலில் லென்ஸ் எனும் அடிகளின் மூலம் கொண்டு விளக்கலாம்
குவி ஆடி (கேது) - CONVEX LENS
ஒளியை ஓரிடத்தில் குவித்து நமது கவனத்திற்கு வழிவகை செய்யும் ஒரு சாதனம் குவி ஆடி எனும் குவி லென்ஸ். இதுவும் ஒரு கேதுவின் காரகத்துவமே ஆகும். சந்திரன் எனும் மனதினை ஓரிடத்தில் குவித்து தியானம் செய்ய உதவி செய்வது, ஆன்மீக சாதனைகளை செய்ய உதவுவது சந்திரன் + கேது.
குழி ஆடி (ராகு) - CONCAVE LENS
ஒளியை ஓரிடத்தில் குவிக்காது அதனை பெருக்கி பெரிதாக காட்டும் குழி ஆடி அல்லது குழி லென்ஸ் ஒரு ராகுவின் காரகத்துவமே ஆகும். இது உருப்பெருக்கியாகவும் உபயோகப்படுகிறது. சந்திரன் எனும் மனதினை ஓரிடத்தில் குவிக்காது, எதையும் பெரிதுபடுத்தி மனதை அலைபாயவைத்து மோகம், துரோகம், வஞ்சம், ஏமாற்றுதல் என்று பல தீய செயல்களில் மனிதனை புகுத்துவது சந்திரன் + ராகு.
கேது ஒளி குவிப்பு திறன் தந்தாலும் அது ஒரு அசுப கிரகம் என்பதால், கிட்ட பார்வை தன்மையை தந்துவிடுகிறது.
அது போல ராகு தூர பார்வை தன்மையை தந்துவிடுகிறது.
சந்திரன் அல்லது சூரியனுடன் ராகு சேர்ந்தால் தூர பார்வை நோயும் கேது சேர்ந்தால் கிட்ட பார்வை நோயும் ஏற்படுகிறது.
நன்றி தி ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: ஜோதிடம் என்பது அறிவியலா?-
தமிழர் கண்ட வான அறிவியலை ப் பலன் சொல்லிச் சொல்லியே நம் சோதிடர்கள் கெடுத்தார்கள் என்று நான் எனது பல நூற்களில் எழுதியுள்ளேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: ஜோதிடம் என்பது அறிவியலா?-
மேற்கோள் செய்த பதிவு: 1241431Dr.S.Soundarapandian wrote:தமிழர் கண்ட வான அறிவியலை ப் பலன் சொல்லிச் சொல்லியே நம் சோதிடர்கள் கெடுத்தார்கள் என்று நான் எனது பல நூற்களில் எழுதியுள்ளேன் !
ஜோதிடமும் வானியலும் ஒன்றுக்கொன்று இணைந்ததுதானே அய்யா.
ஜாதகம் கணிப்பதே ,பிறந்த நேரத்தின் கிரக அமைப்புகளைதானே காட்டுகிறது.
அந்த அமைப்புகளை மூலமாக வைத்துக்கொண்டு,தர்போதைய கிரக அமர்வுகளை
ஆராய்ந்துதானே பலன்கள் கூறப்படுகிறது.
ஏமாற்றும் சில புல்லுருவிகள் ஜோதிடத்தை வியாபாரமாக்கி.சந்தைப்
பொருளாக்கிவிட்டனர் என்பதே எந்தன் தாழ்ந்த அபிப்ராயம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
ஜோதிடம் என்பது அறிவியலா?- 13: எட்டு போடும் சூரியன்
ஜோதிடம் என்பது அறிவியலா?- 13: எட்டு போடும் சூரியன்
சூரியனின் ஒளி பூமியை அடைய கிட்டத்தட்ட 7 நிமிடங்கள் ஆகிறது. இயற்கையில் சூரியன் ஒரு நட்சத்திரமாக இருந்தாலும் ஜோதிடத்தில் சூரியன் கிரகமாவே பார்க்கப்படுகிறார். பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியன் நகர்வது போல் தெரிந்தாலும் மேலும் அதன் ஈர்ப்பு விசை தாக்கம் பூமியில் இருப்பதாலும், சூரியன் கிரகமாகவே பார்க்கப்படுகிறது.
சூரியனின் ஒளிபடும் இடங்களை வைத்து, பூமியை மூன்று மாய ரேகைகள் கொண்டு பிரிக்கப்பட்டதாக நாம் அறிவோம். அதற்கு அடிப்படையாக இருந்ததே நமது ஜோதிடம் தான் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
எட்டு போடும் சூரியன்
வானத்தில் சூரிய ஒளியானது எந்த பாதையில் பயணம் செய்கிறது என்ற ஆய்வை மேற்கண்ட போது, சூரியன் எட்டு (8) என்ற எண் வடிவிலான பயணத்தை மேற்கொள்கிறது என்ற உண்மை புரிந்தது. படத்தில் இருக்கும் மகரத்தில் இருந்து கடகம் வரை செல்லும் சூரியன், தனது அதிக வெப்பத்தை வெளிபடுத்த தொடங்கும் தருணமே உத்திராயணம் என்று அறியலாம். கடகத்தில் இருந்து மகரம் செல்லும் வரை செல்லும் சூரியன், தனது வெப்பத்தை குறைவாக பூமியின் மீது செலுத்தும் தருணமே தட்சிணாயணம் ஆகும்.
இதில் கடகத்தில் இருந்து மகரம் வரை செல்லும் சூரிய ஒளி பாதை மற்றும் மகரத்தில் இருந்து கடகம் வரை இருக்கும் சூரிய ஒளி பாதை சந்திக்கும் இடமே 'பூமத்திய ரேகை' என்று அழைக்கபடுகிறது. பூமத்திய ரேகை இடத்தில் சூரியன் உச்சமும் மற்றும் நீச்சமும் பெறுவதால், பூமத்திய ரேகை செல்லும் இடங்களில் அளவுக்கு அதிக வெப்பமும், அளவுக்கு அதிக குளிரும் நிலவுகிறது.
நன்கு கவனித்து கொண்டு வந்தால் சூரிய பாதையானது 8 என்ற எண் வடிவில் அமைவதை அறியலாம்.
இந்த சூரிய ஒளி பாதை பயணம் என்பது உலகில் நடக்கும் இயற்கை சீற்றங்களை மற்றும் பருவ மழை பற்றி அறிய உதவும் ஒரு காரணி ஆகும்.
இந்த பயணப் பாதை காண்பதற்கு சிவபெருமான் நெற்றிகண் போன்ற தோற்றம் தரும்.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
சூரியனின் ஒளி பூமியை அடைய கிட்டத்தட்ட 7 நிமிடங்கள் ஆகிறது. இயற்கையில் சூரியன் ஒரு நட்சத்திரமாக இருந்தாலும் ஜோதிடத்தில் சூரியன் கிரகமாவே பார்க்கப்படுகிறார். பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியன் நகர்வது போல் தெரிந்தாலும் மேலும் அதன் ஈர்ப்பு விசை தாக்கம் பூமியில் இருப்பதாலும், சூரியன் கிரகமாகவே பார்க்கப்படுகிறது.
சூரியனின் ஒளிபடும் இடங்களை வைத்து, பூமியை மூன்று மாய ரேகைகள் கொண்டு பிரிக்கப்பட்டதாக நாம் அறிவோம். அதற்கு அடிப்படையாக இருந்ததே நமது ஜோதிடம் தான் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
எட்டு போடும் சூரியன்
வானத்தில் சூரிய ஒளியானது எந்த பாதையில் பயணம் செய்கிறது என்ற ஆய்வை மேற்கண்ட போது, சூரியன் எட்டு (8) என்ற எண் வடிவிலான பயணத்தை மேற்கொள்கிறது என்ற உண்மை புரிந்தது. படத்தில் இருக்கும் மகரத்தில் இருந்து கடகம் வரை செல்லும் சூரியன், தனது அதிக வெப்பத்தை வெளிபடுத்த தொடங்கும் தருணமே உத்திராயணம் என்று அறியலாம். கடகத்தில் இருந்து மகரம் செல்லும் வரை செல்லும் சூரியன், தனது வெப்பத்தை குறைவாக பூமியின் மீது செலுத்தும் தருணமே தட்சிணாயணம் ஆகும்.
இதில் கடகத்தில் இருந்து மகரம் வரை செல்லும் சூரிய ஒளி பாதை மற்றும் மகரத்தில் இருந்து கடகம் வரை இருக்கும் சூரிய ஒளி பாதை சந்திக்கும் இடமே 'பூமத்திய ரேகை' என்று அழைக்கபடுகிறது. பூமத்திய ரேகை இடத்தில் சூரியன் உச்சமும் மற்றும் நீச்சமும் பெறுவதால், பூமத்திய ரேகை செல்லும் இடங்களில் அளவுக்கு அதிக வெப்பமும், அளவுக்கு அதிக குளிரும் நிலவுகிறது.
நன்கு கவனித்து கொண்டு வந்தால் சூரிய பாதையானது 8 என்ற எண் வடிவில் அமைவதை அறியலாம்.
இந்த சூரிய ஒளி பாதை பயணம் என்பது உலகில் நடக்கும் இயற்கை சீற்றங்களை மற்றும் பருவ மழை பற்றி அறிய உதவும் ஒரு காரணி ஆகும்.
இந்த பயணப் பாதை காண்பதற்கு சிவபெருமான் நெற்றிகண் போன்ற தோற்றம் தரும்.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம் உலக நாடுகளின் ராசிகளை கண்டறிதல்
ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம் உலக நாடுகளின் ராசிகளை கண்டறிதல்
நாம் வாழும் பூமி சூரியனின் ஈர்ப்புவிசையால், நீள் வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருகிறது. இந்த நிகழ்வு இரவு பகல் மற்றும் பூமியின் தட்பவெப்ப நிலைகளுக்கு காரணமாகிறது.
பூமி சூரியனை மேற்கில் இருந்து கிழக்காக சுற்றி வருகிறது. இதனால் சூரியன் கிழக்கில் இருந்து மேற்காக நகருவது போன்றதோற்றம் உண்டானது.
நம் முன்னோர்கள் சூரியனின் ஒளிபடும் மாதங்களை குறிக்க, சூரியனின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகரும் தன்மைகளை கணித்து சூரியனின் பயணத்தை, 'தட்சினாயணம்' மற்றும் 'உத்திராயணம்' எனப் பிரித்தனர். சூரியன் உச்சம் பெற்று இருக்கும் சித்திரை மாதத்தில் இருந்து கணக்கிட்டனர்.
தட்சினாயணம் (தட்சிணம் + அயணம்) = தட்சிணம் - தெற்கு, அயணம் - பயணம். சூரியன் தெற்கு திசையை தேர்ந்தெடுத்து, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் பயணம். உத்திராயணம் (உத்திரம் + அயணம்) = உத்திரம் - அடுத்த, அயணம் - பயணம், ஆதாவது தட்சினாயணம் முடிந்து, சூரியன் மேற்கொள்ளும் அடுத்த பயணம் என்பதே இதன் பொருள். உத்திராயணம் என்பது சூரியன் வடக்கு திசையை தேர்ந்தெடுத்து, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் பயணம். ஜோதிடத்தில் சூரியன் உச்சம் பெற்ற மேஷத்தில் இருந்து, ஒவ்வொரு ராசியாக நகர, அதன் உச்ச பலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, மிதுனத்தை அடைந்தவுடன், உச்ச பலம் தீர்ந்து ஆட்சி பலம் பெறுகிறார்.
இதில் உச்சம் பெற்ற நிலையை ஆரோகணம் என்றும், அதன் உச்சபலம் குறைந்து வரும் நிலையை அவரோகணம் என்றும் உரைக்கின்றன்ர். இந்த வார்த்தைகள் சங்கீத ஸ்வரங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது என்பது உப சங்கதி.
அதாவது, சித்திரையில் (மேஷம்) இருந்து ஆனி மாதம் (கடகம்) வரை இந்த நிலை கோடைகாலம் ஆகும். இதில் மேஷத்தில் ஆரோகணம், மிதுனத்தில் அவரோகணம். ஆடியில் (கடகம்) இருந்து புரட்டாசி மாதம் (கன்னி) வரை சூரியன் இருக்கும் நிலை இலையுதிர் காலம் ஆகும். இதில் மிதுனத்தில் சூரியன் அவரோகணத்தில் இருந்து மீண்டும் கன்னியில் ஆரோகணம். ஐப்பசி (துலாம்) மாதம் இருந்து மார்கழி தனுசு) வரை சூரியன் இருக்கும் நிலை குளிர்காலம் காலம் ஆகும். இதில் ஐப்பசியில் சூரியன் ஆரோகணத்தில் இருந்து மீண்டும் தனுசில் அவரோகணம் அடைகிறார்.இதுவரை, சூரியன் பயணம் செய்தது தட்சிணாயணம் ஆகும்.
பிறகு, சூரியன் மகரத்தில் இருக்கும் காலம், பொங்கல் என்றும் மகர சங்கராந்தி கொண்டாடப்படும், இளவேனில் காலம் தொடங்குகிறது. சூரியன் தை மாசத்தில் இருந்து (மகரத்தில்) மீனம் செல்லும் வரை இருக்கும் நிலை "இளவேனில்". இள - இதமான வேனில் - தென்றல் தரும் காலம். இங்கே சூரியன் மகரத்தில் அவரோகணம் மீனத்தில் ஆரோகணம். இது போல மகரத்தில் இருந்து மிதுனம் வரை சூரியன் செல்லும் காலம், உத்திராயணம் ஆகும். இங்கே உற்று கவனித்தால், கடகத்தில் தட்சிணாயனம் தொடங்கி, மகரத்தில் உத்திராயணம் ஏற்படுகிறது. அதாவது கடகத்தில் சூரியன் இருக்கும் காலம், பூமி மகரத்திலும், மகரத்தில் சூரியன் இருக்கும் காலம் பூமி கடக ராசியிலும் இருப்பதாக கொள்ளலாம். இங்கே தட்சிணாயனம் இரண்டு பருவ காலங்களையும் (இலையுதிர் காலம், குளிர்காலம்) மற்றும் உத்திராயணம் (இளவேனிற்காலம், கோடைகாலம்).
இவ்வாறு சூரியன் பயணிக்கும் பாதையை வைத்து, சூரிய ஒளி பூமியில் படும் நிலையை கணித்து, கோடைகாலம், இலையுதிர் காலம், குளிர்காலம், இளவேனில் காலம் என முன்னோர்கள் வகுத்தனர்.
பூமி மூன்று மாய கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. அவை 1. கடக ரேகை 2. பூமத்திய ரேகை 3. மகர ரேகை கடக ரேகை.
கடக ரேகை
பூமியின் தட்சிணாயன பயணம் கொண்டு சூரிய ஒளிபடும் இடங்களில், இலையுர்திர் காலம் மற்றும் குளிர் காலம் சம அளவிலும் கோடைகாலம் மற்றும் இளவேனிற்காலம் குறைவாகவும் இருப்பதை காணலாம்.
மகர ரேகை
மகர ரேகை என்பது பூமியின் உத்திராயண பயணம் கொண்டு சூரிய ஒளிபடும் இடங்களில், இளவேனிற் காலம் மற்றும் கோடை காலம் காலம் சம அளவிலும், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம் குறைவாகவும் இருப்பதை காணலாம்.
பூமத்திய ரேகை
மகரம் மற்றும் கடகத்தில் இடைப்பட்ட ராசியான மேஷத்தை அடிப்படையாக எடுத்து, அங்கே சூரியன் உச்சம் பெறுவதை கொண்டு, பூமத்திய ரேகை பகுதியில், சூரியனின் அதீத வெப்பம் படர்வதை காண முடிகிறது. இது கோடை காலம் மற்றும் இளவேனிர்காலத்தின் இடைப்பட்ட பகுதியாக கொண்டு அதிக பாலைவனங்கள் இருப்பதை பார்க்கமுடிகிறது.
இதில் இருந்து பூமியில் வரையப்பட கடக, மகர மற்றும் பூமத்திய ரேகைகள் ஜோதிடத்தை மையமாக கொண்டே வரையப்பட்டன. இந்த ஆய்வை அடிப்படையாக கொண்டு, ஜோதிட காலசக்கரத்தில் நாடுகளை குறிக்கும் ராசிகளை கண்டறியலாம். அதாவது பூமத்திய ரேகை படரும் நாடுகள், மேஷத்தை மையமாகவைத்து, அதன் திரிகோணத்தில் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு வருபவை நெருப்பு ராசிகள், பூமத்திய ரேகை பகுதி அதிக வெப்பம் கொண்டதால் அவற்றை நெருப்பு ராசி என்பதே சான்று.
அது போல, மகர ரேகை படரும் நாடுகளை, மிதமான வெப்பம் பரவும் ரிஷபம், கன்னி மற்றும் மகரம் கொண்டு வகுக்கலாம்.
அது போல, கடக ரேகை படரும் நாடுகளை, சம அளவு வெப்பம் பரவும் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் என கொண்டு வகுக்கலாம்.
நெருப்பு ராசிகள் - பூமத்திய ரேகை படரும் பாலைவனம், அதிக வெப்பம் தகிக்கும் நாடுகள். பீடபூமிகள்.
நில ராசிகள் - விவசாயம் தழைக்கும் நாடுகள், சதுப்பு நில நாடுகள், அடர்ந்த காடுகளை கொண்ட நாடுகள்.
காற்று ராசி - பனி படர்ந்த சூரிய ஒளி மிகவும் குறைவாக படும் நாடுகள்.
நீர் ராசிகள் - தீவுகள், தீபகற்பம், நீரால் சூழப்பட்ட நாடுகள் என பிரிக்கலாம்.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
நாம் வாழும் பூமி சூரியனின் ஈர்ப்புவிசையால், நீள் வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருகிறது. இந்த நிகழ்வு இரவு பகல் மற்றும் பூமியின் தட்பவெப்ப நிலைகளுக்கு காரணமாகிறது.
பூமி சூரியனை மேற்கில் இருந்து கிழக்காக சுற்றி வருகிறது. இதனால் சூரியன் கிழக்கில் இருந்து மேற்காக நகருவது போன்றதோற்றம் உண்டானது.
நம் முன்னோர்கள் சூரியனின் ஒளிபடும் மாதங்களை குறிக்க, சூரியனின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகரும் தன்மைகளை கணித்து சூரியனின் பயணத்தை, 'தட்சினாயணம்' மற்றும் 'உத்திராயணம்' எனப் பிரித்தனர். சூரியன் உச்சம் பெற்று இருக்கும் சித்திரை மாதத்தில் இருந்து கணக்கிட்டனர்.
தட்சினாயணம் (தட்சிணம் + அயணம்) = தட்சிணம் - தெற்கு, அயணம் - பயணம். சூரியன் தெற்கு திசையை தேர்ந்தெடுத்து, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் பயணம். உத்திராயணம் (உத்திரம் + அயணம்) = உத்திரம் - அடுத்த, அயணம் - பயணம், ஆதாவது தட்சினாயணம் முடிந்து, சூரியன் மேற்கொள்ளும் அடுத்த பயணம் என்பதே இதன் பொருள். உத்திராயணம் என்பது சூரியன் வடக்கு திசையை தேர்ந்தெடுத்து, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் பயணம். ஜோதிடத்தில் சூரியன் உச்சம் பெற்ற மேஷத்தில் இருந்து, ஒவ்வொரு ராசியாக நகர, அதன் உச்ச பலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, மிதுனத்தை அடைந்தவுடன், உச்ச பலம் தீர்ந்து ஆட்சி பலம் பெறுகிறார்.
இதில் உச்சம் பெற்ற நிலையை ஆரோகணம் என்றும், அதன் உச்சபலம் குறைந்து வரும் நிலையை அவரோகணம் என்றும் உரைக்கின்றன்ர். இந்த வார்த்தைகள் சங்கீத ஸ்வரங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது என்பது உப சங்கதி.
அதாவது, சித்திரையில் (மேஷம்) இருந்து ஆனி மாதம் (கடகம்) வரை இந்த நிலை கோடைகாலம் ஆகும். இதில் மேஷத்தில் ஆரோகணம், மிதுனத்தில் அவரோகணம். ஆடியில் (கடகம்) இருந்து புரட்டாசி மாதம் (கன்னி) வரை சூரியன் இருக்கும் நிலை இலையுதிர் காலம் ஆகும். இதில் மிதுனத்தில் சூரியன் அவரோகணத்தில் இருந்து மீண்டும் கன்னியில் ஆரோகணம். ஐப்பசி (துலாம்) மாதம் இருந்து மார்கழி தனுசு) வரை சூரியன் இருக்கும் நிலை குளிர்காலம் காலம் ஆகும். இதில் ஐப்பசியில் சூரியன் ஆரோகணத்தில் இருந்து மீண்டும் தனுசில் அவரோகணம் அடைகிறார்.இதுவரை, சூரியன் பயணம் செய்தது தட்சிணாயணம் ஆகும்.
பிறகு, சூரியன் மகரத்தில் இருக்கும் காலம், பொங்கல் என்றும் மகர சங்கராந்தி கொண்டாடப்படும், இளவேனில் காலம் தொடங்குகிறது. சூரியன் தை மாசத்தில் இருந்து (மகரத்தில்) மீனம் செல்லும் வரை இருக்கும் நிலை "இளவேனில்". இள - இதமான வேனில் - தென்றல் தரும் காலம். இங்கே சூரியன் மகரத்தில் அவரோகணம் மீனத்தில் ஆரோகணம். இது போல மகரத்தில் இருந்து மிதுனம் வரை சூரியன் செல்லும் காலம், உத்திராயணம் ஆகும். இங்கே உற்று கவனித்தால், கடகத்தில் தட்சிணாயனம் தொடங்கி, மகரத்தில் உத்திராயணம் ஏற்படுகிறது. அதாவது கடகத்தில் சூரியன் இருக்கும் காலம், பூமி மகரத்திலும், மகரத்தில் சூரியன் இருக்கும் காலம் பூமி கடக ராசியிலும் இருப்பதாக கொள்ளலாம். இங்கே தட்சிணாயனம் இரண்டு பருவ காலங்களையும் (இலையுதிர் காலம், குளிர்காலம்) மற்றும் உத்திராயணம் (இளவேனிற்காலம், கோடைகாலம்).
இவ்வாறு சூரியன் பயணிக்கும் பாதையை வைத்து, சூரிய ஒளி பூமியில் படும் நிலையை கணித்து, கோடைகாலம், இலையுதிர் காலம், குளிர்காலம், இளவேனில் காலம் என முன்னோர்கள் வகுத்தனர்.
பூமி மூன்று மாய கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. அவை 1. கடக ரேகை 2. பூமத்திய ரேகை 3. மகர ரேகை கடக ரேகை.
கடக ரேகை
பூமியின் தட்சிணாயன பயணம் கொண்டு சூரிய ஒளிபடும் இடங்களில், இலையுர்திர் காலம் மற்றும் குளிர் காலம் சம அளவிலும் கோடைகாலம் மற்றும் இளவேனிற்காலம் குறைவாகவும் இருப்பதை காணலாம்.
மகர ரேகை
மகர ரேகை என்பது பூமியின் உத்திராயண பயணம் கொண்டு சூரிய ஒளிபடும் இடங்களில், இளவேனிற் காலம் மற்றும் கோடை காலம் காலம் சம அளவிலும், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம் குறைவாகவும் இருப்பதை காணலாம்.
பூமத்திய ரேகை
மகரம் மற்றும் கடகத்தில் இடைப்பட்ட ராசியான மேஷத்தை அடிப்படையாக எடுத்து, அங்கே சூரியன் உச்சம் பெறுவதை கொண்டு, பூமத்திய ரேகை பகுதியில், சூரியனின் அதீத வெப்பம் படர்வதை காண முடிகிறது. இது கோடை காலம் மற்றும் இளவேனிர்காலத்தின் இடைப்பட்ட பகுதியாக கொண்டு அதிக பாலைவனங்கள் இருப்பதை பார்க்கமுடிகிறது.
இதில் இருந்து பூமியில் வரையப்பட கடக, மகர மற்றும் பூமத்திய ரேகைகள் ஜோதிடத்தை மையமாக கொண்டே வரையப்பட்டன. இந்த ஆய்வை அடிப்படையாக கொண்டு, ஜோதிட காலசக்கரத்தில் நாடுகளை குறிக்கும் ராசிகளை கண்டறியலாம். அதாவது பூமத்திய ரேகை படரும் நாடுகள், மேஷத்தை மையமாகவைத்து, அதன் திரிகோணத்தில் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு வருபவை நெருப்பு ராசிகள், பூமத்திய ரேகை பகுதி அதிக வெப்பம் கொண்டதால் அவற்றை நெருப்பு ராசி என்பதே சான்று.
அது போல, மகர ரேகை படரும் நாடுகளை, மிதமான வெப்பம் பரவும் ரிஷபம், கன்னி மற்றும் மகரம் கொண்டு வகுக்கலாம்.
அது போல, கடக ரேகை படரும் நாடுகளை, சம அளவு வெப்பம் பரவும் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் என கொண்டு வகுக்கலாம்.
நெருப்பு ராசிகள் - பூமத்திய ரேகை படரும் பாலைவனம், அதிக வெப்பம் தகிக்கும் நாடுகள். பீடபூமிகள்.
நில ராசிகள் - விவசாயம் தழைக்கும் நாடுகள், சதுப்பு நில நாடுகள், அடர்ந்த காடுகளை கொண்ட நாடுகள்.
காற்று ராசி - பனி படர்ந்த சூரிய ஒளி மிகவும் குறைவாக படும் நாடுகள்.
நீர் ராசிகள் - தீவுகள், தீபகற்பம், நீரால் சூழப்பட்ட நாடுகள் என பிரிக்கலாம்.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
» பேச்சு என்பது சில்வர் என்றால், மவுனம் என்பது தங்கம்’
» தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.
» ஜோதிடம்
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
» பேச்சு என்பது சில்வர் என்றால், மவுனம் என்பது தங்கம்’
» தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.
» ஜோதிடம்
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|