Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடம் என்பது அறிவியலா?-
+3
ராஜா
சிவனாசான்
T.N.Balasubramanian
7 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஜோதிடம் என்பது அறிவியலா?-
First topic message reminder :
ஜோதிடம் என்பது அறிவியலா?
ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம்.
பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை கண்ட முன்னோர்கள். இவ்வாறு நிகழ என்ன காரணம் என ஆராய ஆரம்பித்தனர். இதுவே வானிவியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டது.
வானவியலே கிரகங்களின் பருமன் முதற்கொண்டு இயக்கத்தையும், பால்வெளியில் இருக்கும் நட்சத்திர கூட்டத்தையும் மற்றும் கிரகங்களின் கட்டமைப்பையும், நிறத்தையும் மேலும் பல முக்கிய பண்புகளை மிக துல்லியமாக அளவிட உதவியது. இப்படியாக வானவியலில் இருந்து அறியப்பட்ட கிரக இயக்கங்கள் பூமியில் இருக்கும் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கும் என்ற ஆராய்ச்சி தொடங்கப்பட்டது அதன் பெயரே ஜோதிஷம் எனும் ஜோதிடம்.
ஜோதிஷம் என்னும் சமஸ்கிருத வார்த்தையின் பொருள் கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளி மூலம் மனித வாழ்வியலை ஆராய்ந்து அறிவது என்பதாகும். மனித வாழ்வியலின் வழிகாட்டி என்பதாலேயே ஜோதிடம் 'வேதத்தின் கண்' என்று அழைக்கப்படுகிறது.
சூரியன் மற்றும் சந்திரன் நகர்வுகளை கண்ணால் கண்டு ஆராய்ச்சி செய்து, கிரகங்களின் இயக்கம் நட்சத்திரங்கள் கொண்டு அளவிடப்பட்டு பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம் மற்றும் யோகம் என்ற ஐந்து காரணிகள் ஆகும்.
புவி மைய கொள்கையை (Geo-Centric) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது ஜோதிடக் கலையாகும். அதாவது பூமியை மையமாக வைத்து அதனைச் சுற்றி இருக்கும் கிரகங்களின் இயக்கம் எவ்வாறு உயிரினங்களின் இயக்கத்தையும் வாழ்வியலையும் பாதிக்கிறது என்பதை கூறுவதே இக்கலையின் நோக்கமாகும்.
கிரகமும் ராசியும்
கிரகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் பற்றுதல் அல்லது பற்றி இழுத்தல் என்பதாகும். பிரபஞ்சத்தில் பல நட்சத்திர கூட்டங்கள் இருந்தாலும், சூரியன் எனும் நட்சத்திரம் மட்டுமே நமது பூமியின் இயக்கத்தையும் மற்றம் ஒன்பது கிரகங்களையும் பெருமளவில் பாதிக்கிறது. அது போலவே நமது பூமியின் துணைக் கோளான சந்திரனின் இயக்கம் பூமியை மிக அதிக அளவில் பாதிப்பதால்தான் பூமியை சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் சந்திரன் முக்கிய கிரகமாக எடுத்து கொள்ளப்பட்டு இருக்கிறது.
நமது பூமி 23°1/2 பாகை சாய்ந்து, தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி கொண்டு இருக்கிறது என்பதை வானியல் கணிதம் மூலம் உணர்ந்தனர். இந்த பூமியின் சுழற்சி மூலம் தட்பவெப்பநிலை மாற்றங்கள் உண்டாவதையும் உணர்ந்தனர். இத்தகைய புவியின் இயக்கம் சூரியனின் ஈர்ப்பு விசையாலும் மேலும் அதை சுற்றி இருக்கும் கோள்களின் பாதிப்பாலும் ஏற்படுகிறது.
தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் என்பவை நீர் நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களில் மூலமே பூமியில் நிகழ்கிறது. இந்த பஞ்சபூதங்கள் மூலமே கிரகங்கள் மனிதர்களை இயங்குகின்றன. இரவு பகலாக கண்விழித்து பூமி சுற்றி வரும் பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கூறுகளாக்கி ராசி என்று பெயர் வைத்தனர்.மேலும் ராசிகளின் வடிவமைப்பைக் கொண்டு அதற்கு தகுந்த பெயரிட்டனர்.
ஜோதிடம் ஒரு அறிவியலா?
இவ்வாறாக வானவியலில் இருந்து ஜோதிடம் தோன்றியது. கிரக இயக்கங்களைப் பஞ்சாங்கம் கொண்டு கணித்து, மேலும் பல கணித சூத்திரங்கள் கொண்டு மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை சொல்வதால் ஜோதிடம் ஒரு அறிவியலே என்று கூறுகிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை? மேலும் ஆராய்வோம்.
நன்றி மணிகண்டன் பாரதிதாசன் தமிழ் ஹிந்து
தொடரும்
ரமணியன்
ஜோதிடம் என்பது அறிவியலா?
ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம்.
பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை கண்ட முன்னோர்கள். இவ்வாறு நிகழ என்ன காரணம் என ஆராய ஆரம்பித்தனர். இதுவே வானிவியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டது.
வானவியலே கிரகங்களின் பருமன் முதற்கொண்டு இயக்கத்தையும், பால்வெளியில் இருக்கும் நட்சத்திர கூட்டத்தையும் மற்றும் கிரகங்களின் கட்டமைப்பையும், நிறத்தையும் மேலும் பல முக்கிய பண்புகளை மிக துல்லியமாக அளவிட உதவியது. இப்படியாக வானவியலில் இருந்து அறியப்பட்ட கிரக இயக்கங்கள் பூமியில் இருக்கும் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கும் என்ற ஆராய்ச்சி தொடங்கப்பட்டது அதன் பெயரே ஜோதிஷம் எனும் ஜோதிடம்.
ஜோதிஷம் என்னும் சமஸ்கிருத வார்த்தையின் பொருள் கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளி மூலம் மனித வாழ்வியலை ஆராய்ந்து அறிவது என்பதாகும். மனித வாழ்வியலின் வழிகாட்டி என்பதாலேயே ஜோதிடம் 'வேதத்தின் கண்' என்று அழைக்கப்படுகிறது.
சூரியன் மற்றும் சந்திரன் நகர்வுகளை கண்ணால் கண்டு ஆராய்ச்சி செய்து, கிரகங்களின் இயக்கம் நட்சத்திரங்கள் கொண்டு அளவிடப்பட்டு பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம் மற்றும் யோகம் என்ற ஐந்து காரணிகள் ஆகும்.
புவி மைய கொள்கையை (Geo-Centric) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது ஜோதிடக் கலையாகும். அதாவது பூமியை மையமாக வைத்து அதனைச் சுற்றி இருக்கும் கிரகங்களின் இயக்கம் எவ்வாறு உயிரினங்களின் இயக்கத்தையும் வாழ்வியலையும் பாதிக்கிறது என்பதை கூறுவதே இக்கலையின் நோக்கமாகும்.
கிரகமும் ராசியும்
கிரகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் பற்றுதல் அல்லது பற்றி இழுத்தல் என்பதாகும். பிரபஞ்சத்தில் பல நட்சத்திர கூட்டங்கள் இருந்தாலும், சூரியன் எனும் நட்சத்திரம் மட்டுமே நமது பூமியின் இயக்கத்தையும் மற்றம் ஒன்பது கிரகங்களையும் பெருமளவில் பாதிக்கிறது. அது போலவே நமது பூமியின் துணைக் கோளான சந்திரனின் இயக்கம் பூமியை மிக அதிக அளவில் பாதிப்பதால்தான் பூமியை சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் சந்திரன் முக்கிய கிரகமாக எடுத்து கொள்ளப்பட்டு இருக்கிறது.
நமது பூமி 23°1/2 பாகை சாய்ந்து, தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி கொண்டு இருக்கிறது என்பதை வானியல் கணிதம் மூலம் உணர்ந்தனர். இந்த பூமியின் சுழற்சி மூலம் தட்பவெப்பநிலை மாற்றங்கள் உண்டாவதையும் உணர்ந்தனர். இத்தகைய புவியின் இயக்கம் சூரியனின் ஈர்ப்பு விசையாலும் மேலும் அதை சுற்றி இருக்கும் கோள்களின் பாதிப்பாலும் ஏற்படுகிறது.
தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் என்பவை நீர் நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களில் மூலமே பூமியில் நிகழ்கிறது. இந்த பஞ்சபூதங்கள் மூலமே கிரகங்கள் மனிதர்களை இயங்குகின்றன. இரவு பகலாக கண்விழித்து பூமி சுற்றி வரும் பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கூறுகளாக்கி ராசி என்று பெயர் வைத்தனர்.மேலும் ராசிகளின் வடிவமைப்பைக் கொண்டு அதற்கு தகுந்த பெயரிட்டனர்.
ஜோதிடம் ஒரு அறிவியலா?
இவ்வாறாக வானவியலில் இருந்து ஜோதிடம் தோன்றியது. கிரக இயக்கங்களைப் பஞ்சாங்கம் கொண்டு கணித்து, மேலும் பல கணித சூத்திரங்கள் கொண்டு மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை சொல்வதால் ஜோதிடம் ஒரு அறிவியலே என்று கூறுகிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை? மேலும் ஆராய்வோம்.
நன்றி மணிகண்டன் பாரதிதாசன் தமிழ் ஹிந்து
தொடரும்
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sun Jun 25, 2017 9:14 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
4: ஜோதிடத்தில் சூரியனின் பங்கு
பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. அவ்வாறு இருக்க, சூரியனுக்கு அருகில் சில சமயமும், தொலைவில் சில சமயமும் பூமியானது சஞ்சாரம் செய்யும்.
மேலும் சூரிய ஒளியை பூமியானது நேர்கோட்டில் பெறுவதால், பூமிக்கு நேர்கோட்டில் சூரியன் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அதாவது, ஜாதக கட்டத்தில் சூரியன் இருக்கும் ராசியில் இருந்து ஏழு கட்டங்கள் தள்ளி, பூமியானது இருக்கிறது எனலாம். அதனால் ஒரு நாளுக்கு ஒரு பாகை வீதம் பூமி நகர்கிறது என்பதால், ஜோதிடத்தில் சூரியனை ஒரு பாகை நகர்த்தி பூமி சுழற்சிக்கு ஏற்றவாறு சூரிய ஒளி பூமியில் விழுந்து தட்பவெப்ப மாற்றங்கள் தருகிறது என்கிறது ஜோதிடம். இதில் இருந்து ஜோதிடம் ஒரு விஞ்ஞான அறிவியல் கலந்த கலை என்பதை அறியலாம்.
சூரியனின் நகர்வை வைத்தே அறிவியல் முறைப்படியே தமிழ் மாதங்கள் வகுக்கப்பட்டது.
சூரியனும் சந்திரனும்
ஜோதிடத்தில் சூரியன் தந்தை என்றும் அல்லது அரசன் என்றும் அழைக்கப்படுகிறார். சூரியனே அனைத்து கிரகங்களுக்கும் சூரியனில் இருந்தே அனைத்து கிரகங்களும் உருவானது என்பதை குறிக்கவே சூரியன் தந்தை என்று அழைக்கப்படுகிறார். மேலும் தனது ஈர்[ப்பு விசையால் அனைத்து கிரகங்களையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதால் சூரியன் அரசன் என்று ஜோதிடம் கூறுகிறது. இதன் காரணமாகவே சூரியனை மிக முக்கிய கடவுளாக வழிபடும் பழக்கம் கொண்டு இருந்தனர்.
ஜோதிடத்தில் நட்சத்திரங்களின் பங்கு மிக முக்கியமானது. பூமி சுற்றிவரும் பாதையில் பூமியைச் சுற்றி இருக்கும் நட்சத்திர கூட்டங்களை சந்திரனின் இயக்கத்தை கொண்டு அறிந்தனர் நமது முன்னோர்கள். அந்த நட்சத்திர கூட்டங்களுக்கு அதன் வடிவத்தை கொண்டு பெயரிட்டனர். இந்த நட்சத்திர கூட்டங்களை இரவில் மட்டுமே காண முடியும் என்பதால் சந்திரனின் செயல்பாடுகளை கொண்டே நட்சத்திர பண்புகளை ஆராய்ந்தனர்.
மொத்தம் 27 நட்சத்திர கூட்டங்களை வரையறுத்தனர். இதைக் கொண்டே பஞ்சாங்க காரணிகளை வகுத்தனர். இதன் காரணமாகவே பல இந்து பண்டிகைகள் திதிகளில் பெயர்கள் கொண்டும் மற்றும் நட்சத்திரங்களின் பெயர்களை கொண்டும் அமைவதை அறியலாம்.
கால புருஷ சக்கரம்
பூமி 360 சுழற்சி பாகையில் தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனைச் சுற்றி வருவதால், ஜோதிடம் பற்றிய அனைத்து முக்கிய விதிகளும் பூமியின் சுழற்சியால் உருவாகும் 'கால புருஷ சக்கரம்' என்ற தத்துவம் கொண்டு வரையறுக்கப்பட்டது. இந்த கால புருஷ சக்கரம் என்பது பூமி சுற்றி வரும் வட்டப்பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டது. நட்சத்திர கூட்டங்களை 12 ராசி மண்டலங்களாக பிரித்து அதில் சஞ்சரிக்கும் கிரகங்களை கொண்டு ஜோதிட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
மேலும் சூரிய ஒளியை பூமியானது நேர்கோட்டில் பெறுவதால், பூமிக்கு நேர்கோட்டில் சூரியன் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அதாவது, ஜாதக கட்டத்தில் சூரியன் இருக்கும் ராசியில் இருந்து ஏழு கட்டங்கள் தள்ளி, பூமியானது இருக்கிறது எனலாம். அதனால் ஒரு நாளுக்கு ஒரு பாகை வீதம் பூமி நகர்கிறது என்பதால், ஜோதிடத்தில் சூரியனை ஒரு பாகை நகர்த்தி பூமி சுழற்சிக்கு ஏற்றவாறு சூரிய ஒளி பூமியில் விழுந்து தட்பவெப்ப மாற்றங்கள் தருகிறது என்கிறது ஜோதிடம். இதில் இருந்து ஜோதிடம் ஒரு விஞ்ஞான அறிவியல் கலந்த கலை என்பதை அறியலாம்.
சூரியனின் நகர்வை வைத்தே அறிவியல் முறைப்படியே தமிழ் மாதங்கள் வகுக்கப்பட்டது.
சூரியனும் சந்திரனும்
ஜோதிடத்தில் சூரியன் தந்தை என்றும் அல்லது அரசன் என்றும் அழைக்கப்படுகிறார். சூரியனே அனைத்து கிரகங்களுக்கும் சூரியனில் இருந்தே அனைத்து கிரகங்களும் உருவானது என்பதை குறிக்கவே சூரியன் தந்தை என்று அழைக்கப்படுகிறார். மேலும் தனது ஈர்[ப்பு விசையால் அனைத்து கிரகங்களையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதால் சூரியன் அரசன் என்று ஜோதிடம் கூறுகிறது. இதன் காரணமாகவே சூரியனை மிக முக்கிய கடவுளாக வழிபடும் பழக்கம் கொண்டு இருந்தனர்.
ஜோதிடத்தில் நட்சத்திரங்களின் பங்கு மிக முக்கியமானது. பூமி சுற்றிவரும் பாதையில் பூமியைச் சுற்றி இருக்கும் நட்சத்திர கூட்டங்களை சந்திரனின் இயக்கத்தை கொண்டு அறிந்தனர் நமது முன்னோர்கள். அந்த நட்சத்திர கூட்டங்களுக்கு அதன் வடிவத்தை கொண்டு பெயரிட்டனர். இந்த நட்சத்திர கூட்டங்களை இரவில் மட்டுமே காண முடியும் என்பதால் சந்திரனின் செயல்பாடுகளை கொண்டே நட்சத்திர பண்புகளை ஆராய்ந்தனர்.
மொத்தம் 27 நட்சத்திர கூட்டங்களை வரையறுத்தனர். இதைக் கொண்டே பஞ்சாங்க காரணிகளை வகுத்தனர். இதன் காரணமாகவே பல இந்து பண்டிகைகள் திதிகளில் பெயர்கள் கொண்டும் மற்றும் நட்சத்திரங்களின் பெயர்களை கொண்டும் அமைவதை அறியலாம்.
கால புருஷ சக்கரம்
பூமி 360 சுழற்சி பாகையில் தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனைச் சுற்றி வருவதால், ஜோதிடம் பற்றிய அனைத்து முக்கிய விதிகளும் பூமியின் சுழற்சியால் உருவாகும் 'கால புருஷ சக்கரம்' என்ற தத்துவம் கொண்டு வரையறுக்கப்பட்டது. இந்த கால புருஷ சக்கரம் என்பது பூமி சுற்றி வரும் வட்டப்பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டது. நட்சத்திர கூட்டங்களை 12 ராசி மண்டலங்களாக பிரித்து அதில் சஞ்சரிக்கும் கிரகங்களை கொண்டு ஜோதிட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
5: ஜாதக கட்டத்தில் பூமி எங்கே இருக்கிறது?
5: ஜாதக கட்டத்தில் பூமி எங்கே இருக்கிறது?
ஜோதிடத்தில் நவகிரகங்கள் பன்னிரண்டு ராசிகளில் மற்றும் 27 நட்சத்திரங்களில் இருக்கும் நிலையைக் கொண்டே மனித வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படுகிறது. என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம்.
ஜாதகக் கட்டத்தில் பூமி எங்கே இருக்கிறது?
தன்னை பகுத்தறிவாளர்கள் என சொல்லிக்கொள்ளும் பலர் கேட்கும் வினாக்களில் மிக முக்கிய வினா ஒன்று "ஜாதகத்தில் பல கிரகங்கள் குறிக்கும் ஜோதிடர்கள் ஏன் பூமியை விட்டுவிடுகின்றனர்?". இதற்கு பதிலுண்டு.
ஜோதிடம் வானவியல் சார்ந்த கலை என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம். இப்போது அதற்குரிய இன்னொரு விளக்கம். ஒளியின் பயணம் எப்போதும் நேர்கோட்டில் அமையும் என்று அறிவியலின் ஒரு பகுதியான இயற்பியல் கூறுகிறது. இதுவே ராமன் விளைவில் மூலமாக கொண்டு விளக்கப்பட்டிருக்கும். அறிவியலின் கூற்றுப்படி சூரிய ஒளியானது பூமியை சென்றடைய 7 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆதாவது பிரபஞ்சத்தில் சூரிய ஒளி பயணித்து பூமியை அடைய 7 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இந்த நிகழ்வானது நேர்க்கோட்டில் அமையும்.
இந்த அறிவியல் கூற்றுப்படி ஜாதக கட்டத்தில் சூரியனுக்கு ஏழாமிடத்தில் பூமி இருக்கிறது. உதாரணமாக சூரியன் மேஷத்தில் இருக்கும் சமயம் பூமியானது துலாமில் இருக்கும். சூரியன் மேஷத்தில் இருப்பதை சித்திரை மாதம் என்கிறது ஜோதிடம். அங்கே சூரியன் உச்ச நிலை பெறும் எனவும் கூறப்படுகிறது. சித்திரை மாதத்தில் சூரியன் தனது பலமான வெப்ப கதிர்களை பூமியில் செலுத்தும் எனவும் அதே சமயம் பூமி சுற்றி வரும் நீள்வட்டப்பாதையில் குறுகளான ஆரம் கொண்ட பாதையில் சித்திரை மாதத்தில் பயணிக்கும் என்பதே இதில் இருக்கும் அறிவியல் விளக்கம்.
இதை அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று இருக்கும் கிரகநிலை தெளிவாகக் கூறும். ஜாதக கட்டத்தில் அமாவாசை அன்று சூரியன் சந்திரன் ஒரே நட்சத்திரத்தில் இருக்கும். ஆதாவது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் இருக்கும். அதுபோல பௌர்ணமி அன்று சூரியன் சந்திரன் இருவரும் எதிரெதிர் நட்சத்திரத்தில் இருக்கும். ஆதாவது சூரியன் சந்திரன் ஒன்றுக்கொன்று எதிர்திசையில் இருக்கும். இதன் விளக்கமாக கூற சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும்.
எனவே ஜாதக கட்டத்தில் சூரியனுக்கு ஏழாமிடத்தில் பூமி இருக்கிறது எனலாம்.
(மேலும் அறிவோம்)
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
ஜோதிடத்தில் நவகிரகங்கள் பன்னிரண்டு ராசிகளில் மற்றும் 27 நட்சத்திரங்களில் இருக்கும் நிலையைக் கொண்டே மனித வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படுகிறது. என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம்.
ஜாதகக் கட்டத்தில் பூமி எங்கே இருக்கிறது?
தன்னை பகுத்தறிவாளர்கள் என சொல்லிக்கொள்ளும் பலர் கேட்கும் வினாக்களில் மிக முக்கிய வினா ஒன்று "ஜாதகத்தில் பல கிரகங்கள் குறிக்கும் ஜோதிடர்கள் ஏன் பூமியை விட்டுவிடுகின்றனர்?". இதற்கு பதிலுண்டு.
ஜோதிடம் வானவியல் சார்ந்த கலை என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம். இப்போது அதற்குரிய இன்னொரு விளக்கம். ஒளியின் பயணம் எப்போதும் நேர்கோட்டில் அமையும் என்று அறிவியலின் ஒரு பகுதியான இயற்பியல் கூறுகிறது. இதுவே ராமன் விளைவில் மூலமாக கொண்டு விளக்கப்பட்டிருக்கும். அறிவியலின் கூற்றுப்படி சூரிய ஒளியானது பூமியை சென்றடைய 7 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆதாவது பிரபஞ்சத்தில் சூரிய ஒளி பயணித்து பூமியை அடைய 7 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இந்த நிகழ்வானது நேர்க்கோட்டில் அமையும்.
இந்த அறிவியல் கூற்றுப்படி ஜாதக கட்டத்தில் சூரியனுக்கு ஏழாமிடத்தில் பூமி இருக்கிறது. உதாரணமாக சூரியன் மேஷத்தில் இருக்கும் சமயம் பூமியானது துலாமில் இருக்கும். சூரியன் மேஷத்தில் இருப்பதை சித்திரை மாதம் என்கிறது ஜோதிடம். அங்கே சூரியன் உச்ச நிலை பெறும் எனவும் கூறப்படுகிறது. சித்திரை மாதத்தில் சூரியன் தனது பலமான வெப்ப கதிர்களை பூமியில் செலுத்தும் எனவும் அதே சமயம் பூமி சுற்றி வரும் நீள்வட்டப்பாதையில் குறுகளான ஆரம் கொண்ட பாதையில் சித்திரை மாதத்தில் பயணிக்கும் என்பதே இதில் இருக்கும் அறிவியல் விளக்கம்.
இதை அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று இருக்கும் கிரகநிலை தெளிவாகக் கூறும். ஜாதக கட்டத்தில் அமாவாசை அன்று சூரியன் சந்திரன் ஒரே நட்சத்திரத்தில் இருக்கும். ஆதாவது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் இருக்கும். அதுபோல பௌர்ணமி அன்று சூரியன் சந்திரன் இருவரும் எதிரெதிர் நட்சத்திரத்தில் இருக்கும். ஆதாவது சூரியன் சந்திரன் ஒன்றுக்கொன்று எதிர்திசையில் இருக்கும். இதன் விளக்கமாக கூற சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும்.
எனவே ஜாதக கட்டத்தில் சூரியனுக்கு ஏழாமிடத்தில் பூமி இருக்கிறது எனலாம்.
(மேலும் அறிவோம்)
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: ஜோதிடம் என்பது அறிவியலா?-
நல்ல, அறிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள். பிறகு வந்து நிதானமாக படிக்கிறேன்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஜோதிடம் என்பது அறிவியலா?-
எனக்கும் ராஜா அவர்களுக்கும், ஏன் எல்லோருக்குமே இந்த வக்கிர கதி சந்தேகம் இருந்திருக்கும்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
#6 வக்கிரம்----'பின்னோக்கி நகர்த்தல்'
மேற்கோள் செய்த பதிவு: 1233500T.N.Balasubramanian wrote:வக்கிரம் என்ற சொல் சம்ஸ்கிருத மொழியில் இருந்து வந்தது. இதன் பொருள் 'பின்னோக்கி நகர்த்தல்' என்றே அர்த்தம். தன் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் கிரகம் எப்படி பின்னோக்கி செல்லும் என்ற கேள்விக்கான விடையை இந்த பதிவு கூறும்.
சூரிய ஈர்ப்பு விசையால், பூமி சுற்றுகிறது. பூமியின் ஈர்ப்பு விசையால், சந்திரன் சுற்றுகிறது. பூமி சுழற்சி வேகம், சுக்கிரன் புதனை விட குறைவு, என்னெனில் சுக்கிரன், புதன் சூரியனுக்கு அருகிலும், அவற்றின் சுற்று வட்டபதையின் ஆரம் குறைவாகவும், சூரிய ஈர்ப்பு விசை அதிகமாகவும் இருப்பதே காரணம். எனவே சுக்கிரன் மற்றும் புதன் வக்கிரம். பூமியின் சுற்று வட்ட பாதையில், வளைவுகளில் பூமி முன்னோக்கி குரு மற்றும் சனியை கடந்து செல்லும் போது, மெதுவாக நகரும், பெரிய சுற்று வட்ட பாதை ஆரமும் கொண்ட, சூரிய ஈர்ப்பு விசை குறைவாகவும் இருக்கும், குரு மற்றும் சனி கிரகங்கள், பூமியில் இருந்து பார்க்கும் போது பின்னோக்கி செல்வது போல் தெரியும் மாய தோற்றமே. வக்கிரம் என்ற நிகழ்வு தோன்ற காரணம். கிரகங்களின் சுழற்சி வேக வேறுபாடுகளை அறிந்தால் இதனை நன்கு அறியலாம்.
மாயத் தோற்றம்
இரு வேறு பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஒரு நீள்வட்ட பாதையில் செல்லும் போது, அதிக வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள் குறைவான வேகம் கொண்ட மோட்டார் சைக்கிளை, நீள் வட்ட பாதை வளைவில் தாண்டி செல்லும் போது, குறைவான வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள் பின்னோக்கி செல்லும் மாய தோற்றம் ஏற்படும். இதுவே பிரபஞ்ச கிரக வக்கிரத்தின் வக்கிரத்தின் உதாரணம்.
பெரும்பாலும் வக்கிரம் பெற்ற கிரகங்கள் பூமிக்கு அருகில் இருக்கும். இதன் காரணம் ஜாதக சக்கரத்தில் சூரியனுக்கு எதிர் திசையில் இந்த கிரகங்கள் வருவதே காரணம். ஏற்கனவே கூறியபடி சூரியனுக்கு 7 இடத்தில் பூமி இருக்கும் என்ற கோட்பாட்டின்படி, வக்கிரம் பெற்ற கிரகங்கள் பூமிக்கு அருகில் இருக்கும்.
கிரக வக்கிரமும், வக்கிர நிவர்த்தியும்
ஒரு கிரகம் இருக்கும் நட்சத்திரத்தில் இருந்து 10 நட்சத்திரத்தில் சூரியன் செல்லும் போது, அந்த கிரகம் வக்கிரம் பெறும். அது போல சூரியன் 21 நட்சத்திரத்தில் பயணிக்கும் போது அந்த கிரகம் வக்கிர நிவர்த்தி அடையும்.
குறிப்பு: சூரியனில் இருந்து முன்னோக்கி செல்ல செல்ல இருக்கும் கிரகங்களின் வக்கிர நாட்கள் அதிகரிக்கும்.
புதன் 24 நாட்கள் வக்கிரமாகவும்,
சுக்கிரன் 42 நாட்கள் வக்கிரமாகவும்,
செவ்வாய் 80 நாட்கள் வக்கிரமாகவும்,
குரு 120 நாட்கள் வக்கிரமாகவும்,
சனி 140 நாட்கள் வக்கிரமாகவும் இருப்பார்கள்.
(மேலும் அறிவோம்)
நன்றி
தமிழ் ஹிந்து
ரமணியன்
வக்கிரகதி # 6 என்ற தலைப்பு பெயருக்கேற்ப , எண் வரிசை 2 கும் எண் வரிசை 3 கும் நடுவில் போய் விட்டதால் , வரிசை கிரமம் கருதி மீண்டும் கொண்டுவந்துள்ளேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
ஜோதிடம் என்பது அறிவியலா?- 7: ஜாதக கட்டத்தில் சூரியன் நகர்கிறதா?
ஜோதிடம் என்பது அறிவியலா?- 7: ஜாதக கட்டத்தில் சூரியன் நகர்கிறதா?
சூரியன் ஒரு வெப்பம் தகிக்கும் நட்சத்திரம். இதை இக்கால அறிவியல் உறுதிபடுத்துகிறது. ஆனால் ஜோதிடத்தில் சூரியன் கிரகமாக கருதப்பட்டு நகருவதாக கூறப்படுகிறது. அது எவ்வாறு என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நிலவின் சுழற்சி ரகசியம்
பூமி என்னும் நாம் வாழும் கோள், சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியன் தன்னை தானே சுற்றிக்கொண்டு நிலையாக நிற்கிறது. தன்னை தானே சுற்றிக் கொண்டிருக்கும் பொருளின் மீது காந்தம் உருவாகும் என்ற அறிவியல் விதிப்படி. சூரிய காந்த புலம் உருவாக்கி, ஈர்ப்பு சக்தியை வெளிவிட்டு, மற்ற கிரகங்களை தன் கட்டுபாட்டில் வைத்திருகிறது.
அது போல பூமியும் சுற்றி வருகிறது. நிலவு பூமியில் இருதே உருவானது என்பது அறிவியல் கூறும் முன் நம் ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் கூறுகிறது. அந்த வரலாறை சுருக்கமாக காண்போம்.
அமிர்தம் அடைய பாற்கடலைக் கடைந்தனர் தேவர்களும் அசுரர்களும். இதில் பாற்கடல் என்பது பால்வெளி என்றும், சூரியன் ஒளி படும் இடம் தேவர்கள் என்றும் சூரிய ஒளி படாதபக்கம் அசுரர்கள் என்றும், நிர்ணயம் செய்து, மேரு என்ற புனித மலையை நிலை நிறுத்தி அமிர்தம் கடையபட்டது. அப்பொழுது நிலவு வெளிப்பட்டான் என்கிறது புராணம்.
அறிவியலும், அதிவேக சுழற்சியால், பூமியின் ஒரு பகுதி நிலவாக மாறியது என்கிறது. இப்பொழுதும் பூமியின் ஈர்ப்பு விசையாலேயே நிலவு பூமியைச் சுற்றிவருகிறது. இதை அறிவியலும் ஒத்துக்கொள்கிறது
முன்னோர்களின் கணக்கின் படி நிலவு 27.32 நாட்கள் பூமியை வலம் வர எடுத்துகொள்கிறது. அதுவே, ஜோதிடத்தில் 27 நட்சத்திர பெண்களுடன் சந்திரன் இருக்கிறான் என குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள் நிலவின் சுழற்சியை வைத்தே பூமி சுழலும் விதத்தை கணக்கிட்டனர்.
சூரியன் ராசிகளை வலம் வருகிறதா
ஒரு மாதத்திற்கு ஒரு முறை பூமி மட்டுமே நகர்கிறது சூரியன் நகர்வதில்லை. பிரபஞ்சத்தில் சூரியன் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகர்கிறது என்கிறது அறிவியல். பூமியில் இருந்து பார்க்கும் போது, சூரியன் எந்த ராசியில் இருப்பார் என்ற நிலையை கொண்டே, முன்னோர்கள் மாதம் ஒருமுறை சூரியனை நகர்த்தி ஜோதிடம் பார்க்கும் முறை கணக்கிடபடுகிறது. ஆனால் உண்மையில் சூரியன் ஜாதக கட்டத்தில் நகர்வதில்லை. மாறாக பூமியின் சுழற்சிக்கு தக்கவாறு சூரியனை நகர்த்தி மாதங்கள் கணக்கிடும் முறையை வரையறுத்தனர் முன்னோர்கள்
இது போலவே, பூமி நகரும் நிலை பொருத்தே சனி, குரு, செவ்வாய், புதன், சுக்கிரன் நகருதல் குறிப்பிட படுகிறது. பூமியின் கால அளவு கணக்கான வருடம் (365 நாட்கள் ) வைத்தே, குரு ராசி விட்டு ராசி நகரும் பயணம், ஒரு வருடம் என்றும், சனி நகரும் கால அளவை இரண்டு அரை வருடங்கள் என்று வருட கணக்கில் மட்டுமே குறிப்பிடுகிறோம். இதன் அர்த்தம் அனைத்து கிரகங்களின் சுழற்சி அளவீடு, பூமியின் சுழற்சி நிலை வைத்தே அளக்கப்படுகிறது என்பதே உண்மை. இவ்வாறு அழைக்கப்படும் கிரக சுழற்சி கொண்டு, பூமியில் நடைபெறும் மாற்றத்தை அறிந்து ஜோதிடம் மூலம் வெளிப்படுத்துகின்றனர் ஜோதிடர்கள்
இவ்வாறு கிரகங்களின் நகர்வை கோள்சாரம் என்று கூறுகின்றனர். கோள் + சாரம் = கோள்களின் நகர்வு என்று அர்த்தம். பூமியில் இருந்து பார்க்கையில் கிரகங்கள் கீழ்க்கண்ட கால அளவில் சூரியனை சுற்றி வருகிறது.
சூரியன் - 1 மாதம்
சந்திரன் - 2 1 /4 நாட்கள்
செவ்வாய் - 49 நாட்கள்
புதன் - 1 மாதம்
குரு - 1 வருடம்
சுக்கிரன் - 1 மாதம்
சனி - 2 1 /2 வருடங்கள்
ராகு - 18 மாதங்கள்
கேது - 18 மாதங்கள்
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
சூரியன் ஒரு வெப்பம் தகிக்கும் நட்சத்திரம். இதை இக்கால அறிவியல் உறுதிபடுத்துகிறது. ஆனால் ஜோதிடத்தில் சூரியன் கிரகமாக கருதப்பட்டு நகருவதாக கூறப்படுகிறது. அது எவ்வாறு என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நிலவின் சுழற்சி ரகசியம்
பூமி என்னும் நாம் வாழும் கோள், சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியன் தன்னை தானே சுற்றிக்கொண்டு நிலையாக நிற்கிறது. தன்னை தானே சுற்றிக் கொண்டிருக்கும் பொருளின் மீது காந்தம் உருவாகும் என்ற அறிவியல் விதிப்படி. சூரிய காந்த புலம் உருவாக்கி, ஈர்ப்பு சக்தியை வெளிவிட்டு, மற்ற கிரகங்களை தன் கட்டுபாட்டில் வைத்திருகிறது.
அது போல பூமியும் சுற்றி வருகிறது. நிலவு பூமியில் இருதே உருவானது என்பது அறிவியல் கூறும் முன் நம் ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் கூறுகிறது. அந்த வரலாறை சுருக்கமாக காண்போம்.
அமிர்தம் அடைய பாற்கடலைக் கடைந்தனர் தேவர்களும் அசுரர்களும். இதில் பாற்கடல் என்பது பால்வெளி என்றும், சூரியன் ஒளி படும் இடம் தேவர்கள் என்றும் சூரிய ஒளி படாதபக்கம் அசுரர்கள் என்றும், நிர்ணயம் செய்து, மேரு என்ற புனித மலையை நிலை நிறுத்தி அமிர்தம் கடையபட்டது. அப்பொழுது நிலவு வெளிப்பட்டான் என்கிறது புராணம்.
அறிவியலும், அதிவேக சுழற்சியால், பூமியின் ஒரு பகுதி நிலவாக மாறியது என்கிறது. இப்பொழுதும் பூமியின் ஈர்ப்பு விசையாலேயே நிலவு பூமியைச் சுற்றிவருகிறது. இதை அறிவியலும் ஒத்துக்கொள்கிறது
முன்னோர்களின் கணக்கின் படி நிலவு 27.32 நாட்கள் பூமியை வலம் வர எடுத்துகொள்கிறது. அதுவே, ஜோதிடத்தில் 27 நட்சத்திர பெண்களுடன் சந்திரன் இருக்கிறான் என குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள் நிலவின் சுழற்சியை வைத்தே பூமி சுழலும் விதத்தை கணக்கிட்டனர்.
சூரியன் ராசிகளை வலம் வருகிறதா
ஒரு மாதத்திற்கு ஒரு முறை பூமி மட்டுமே நகர்கிறது சூரியன் நகர்வதில்லை. பிரபஞ்சத்தில் சூரியன் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகர்கிறது என்கிறது அறிவியல். பூமியில் இருந்து பார்க்கும் போது, சூரியன் எந்த ராசியில் இருப்பார் என்ற நிலையை கொண்டே, முன்னோர்கள் மாதம் ஒருமுறை சூரியனை நகர்த்தி ஜோதிடம் பார்க்கும் முறை கணக்கிடபடுகிறது. ஆனால் உண்மையில் சூரியன் ஜாதக கட்டத்தில் நகர்வதில்லை. மாறாக பூமியின் சுழற்சிக்கு தக்கவாறு சூரியனை நகர்த்தி மாதங்கள் கணக்கிடும் முறையை வரையறுத்தனர் முன்னோர்கள்
இது போலவே, பூமி நகரும் நிலை பொருத்தே சனி, குரு, செவ்வாய், புதன், சுக்கிரன் நகருதல் குறிப்பிட படுகிறது. பூமியின் கால அளவு கணக்கான வருடம் (365 நாட்கள் ) வைத்தே, குரு ராசி விட்டு ராசி நகரும் பயணம், ஒரு வருடம் என்றும், சனி நகரும் கால அளவை இரண்டு அரை வருடங்கள் என்று வருட கணக்கில் மட்டுமே குறிப்பிடுகிறோம். இதன் அர்த்தம் அனைத்து கிரகங்களின் சுழற்சி அளவீடு, பூமியின் சுழற்சி நிலை வைத்தே அளக்கப்படுகிறது என்பதே உண்மை. இவ்வாறு அழைக்கப்படும் கிரக சுழற்சி கொண்டு, பூமியில் நடைபெறும் மாற்றத்தை அறிந்து ஜோதிடம் மூலம் வெளிப்படுத்துகின்றனர் ஜோதிடர்கள்
இவ்வாறு கிரகங்களின் நகர்வை கோள்சாரம் என்று கூறுகின்றனர். கோள் + சாரம் = கோள்களின் நகர்வு என்று அர்த்தம். பூமியில் இருந்து பார்க்கையில் கிரகங்கள் கீழ்க்கண்ட கால அளவில் சூரியனை சுற்றி வருகிறது.
சூரியன் - 1 மாதம்
சந்திரன் - 2 1 /4 நாட்கள்
செவ்வாய் - 49 நாட்கள்
புதன் - 1 மாதம்
குரு - 1 வருடம்
சுக்கிரன் - 1 மாதம்
சனி - 2 1 /2 வருடங்கள்
ராகு - 18 மாதங்கள்
கேது - 18 மாதங்கள்
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: ஜோதிடம் என்பது அறிவியலா?-
மிக அருமையாக செல்கிறது கட்டுரை....சுவாரஸ்யமான தகவல்கள்...தொடருங்கள் ஐயா..............தொடர்கிறேன் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
» பேச்சு என்பது சில்வர் என்றால், மவுனம் என்பது தங்கம்’
» தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.
» ஜோதிடம்
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
» பேச்சு என்பது சில்வர் என்றால், மவுனம் என்பது தங்கம்’
» தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.
» ஜோதிடம்
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|