Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா?
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா?
ஒருவர் பிறந்த நேரத்திற்கும்... கோள்களின் இயக்கத்திற்கும்... அவர் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் அது போன்ற ஒரு நம்பிக்கை ஒருவரிடம் வேர் ஊன்றிப் போய் விட்டால் அதை மாற்றுவது என்பது கடினம் என்கிறார்,சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.2009-ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றவர். ரைபோசோம் (Ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது பற்றி ஆய்வுகளைச் செய்தார்.
படித்த சில ஆதாரங்கள் இவை.....
Pisces -மீனம்- Hubble Space Telescope மூலம் அவதானித்த விஞ்ஞானிகள்Pisces A+B இரண்டும் மிகப் பெரிய கூட்டத்தால் ஈர்ப்புவிசை காரணமாக வழக்கமான இடத்தில் இருந்து கடந்த ஆயிரம் ஆண்டுகளில், 19 மில்லியன் ஒளி ஆண்டுகள்/ 30 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு விட்டன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இப்படியே அனேகமாக அனைத்துமே இடம் மாறி வேறிடத்திற்குப் போய் விட்ட நிலையில்,சோதிடம் எப்படி சரியாக முடியும்?
நட்சத்திரங்கள் எவையும் தற்போது சோதிடம் கணிக்கும் இராசிகளில் இல்லாமல் எங்கோ போய் விட்டன.(100 ஒளியாண்டுகள் தொலைவிற்கு நகர்ந்து போய் விட்டன.) உதாரணமாக ஒரியன் விண்மீன் கூட்டத்தில்(constellation) உள்ள திருவாதிரை(Betelgeuse ) என்ற நட்சத்திரம், 640 ஒளியாண்டுகள் தூரத்திற்கு நகர்ந்து போய் விட்டது.
சூரியன் கோள் அல்ல,சந்திரன் துணைக்கோள்,ராகு கேது என கிரகங்கள்-கோள்கள்-எதுவும் கிடையாது. (பாம்பு என்ற ஒரு ஜீவனைக் கொண்டு வந்து... அதன் தலையைத் தனியாக்கி தலைக்கும் பாம்புக்கும் தனித் தனியாக ராகு கேது என்று பெயரைச் சூட்டி இருக்கிறார்கள்) ,யுரேனஸ், நெப்டியூன் பற்றி சொல்லப்படவில்லை.
அதே சமயம் 12 ராசிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.13 வது ராசியை (Ophiuchus) சோதிடம் குறிப்பிடவில்லை.Ophiuchus (ஆங்கில முறையில் நொவெம்பர் 29 முதல் டிசெம்பர் 17 வரை) என்ற விண்மீன் கூட்டத்தை-ராசியை - ராகு கேது என்ற கிரகமாக்கி இருக்கிறது.
இது 13 வது ராசி.
யுரேனஸ் (Uranus) கிரகம் 1781ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. வில்லியம் ஹெர்சல் (Sir William Herschel) என்பவர் கண்டுபிடித்தார். நெப்டியூன் (Neptune) கிரகம் 1846ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. புளுட்டோ (Pluto) கிரகம் 1930ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் ஒரு கிரகம் இருக்கிறது. அதன் பெயர் செரிஸ் (Ceres). இது ஒரு குறுங்கோள் (dwarf planet) ஆகும். இந்தக் கிரகம் 1801ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
சூரியன் கோள்களையும் துணைக்கோள்களையும் இழுத்துக் கொண்டு நமது அண்டத்தின் (Galaxy) மையத்தைச் சுற்றி வருகிறது.இப்படி நகரும் போது நட்சத்திரங்கள்,இராசிகள் எல்லாம் எங்கோ போய் விடுகின்றன. கலக்சியில் உள்ள 10 ஆயிரம் கோடிக்கு மேலான நட்சத்திரங்களில் சூரியனும் ஒரு நட்சத்திரமாகும். அண்டத்தின் மையப் பகுதியில் இருந்து வெகு தொலைவில் வெளிப் பகுதியின் ஒரு ஓரத்தில் சூரியன் இருக்கிறது. நாம் பார்க்கும் இந்தச் சூரியன் தன்னைச் சுற்றும் கோள்களுடன் அண்டத்தின் மையைத்தை சுற்றி வருகிறது.
சூரியக் குடும்பம் மையத்தை சுற்றும் வேகம் 220 km/s. கலக்சியில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் அவை மையத்தில்-galactic center - இருந்து அமைந்திருக்கும் தூரத்தைப் பொறுத்து வெவ்வேறு வேகத்தில் மையத்தை சுற்றுகின்றன.
சூரியன் மையத்திலிருந்து 30,000 ஒளிவருடங்கள் தூரத்தில் இருப்பதால்,பால்வழியின் -Milky Way- மையத்தை சுற்றிவர 225-250 மில்லியன் வருடங்கள் எடுக்கிறது.இப்படிச் சுற்றி வரும் காலம் Cosmic Year (Galactic Year) எனப்படுகிறது. சூரியன் தோன்றி 5 மில்லியன் வருடங்கள் என்று சொல்லப்படும் நிலையில்,அது 20 முறை மையத்தை சுற்றி வந்துள்ளது.
நன்றி -நாசா.
Guest- Guest
Re: சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா?
ஜோதிடத்தை நம்புபவன்
1 . பணத்தை இழக்கிறான்.
2 . நேரத்தை இழக்கிறான் .
3 . தன்னம்பிக்கையை இழக்கிறான் .
1 . பணத்தை இழக்கிறான்.
2 . நேரத்தை இழக்கிறான் .
3 . தன்னம்பிக்கையை இழக்கிறான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா?
எல்லா கோள்களின் இடமாற்றம் எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டு சரியான விகிதத்தில் மாற்றம் அடைந்து உள்ளன .
வியாபார ரீதியாக இல்லாமல், நன்கு ஜோதிடம் அறிந்தவர்கள், கூறுகின்ற,கூறியவை யாவும் பலிக்கவே செய்கின்றன.துல்லியமாகவே கணிக்கமுடியும் .......
என்பது எந்தன் அசையாத நம்பிக்கை.
ரமணியன்
வியாபார ரீதியாக இல்லாமல், நன்கு ஜோதிடம் அறிந்தவர்கள், கூறுகின்ற,கூறியவை யாவும் பலிக்கவே செய்கின்றன.துல்லியமாகவே கணிக்கமுடியும் .......
என்பது எந்தன் அசையாத நம்பிக்கை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா?
ஐயா !
ஜோதிடத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையைப் பாராட்டுகிறேன்.
"ஜோதிடம்தனை இகழ் "
என்பது பாரதியாரின் கூற்று .
ஜோதிடத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையைப் பாராட்டுகிறேன்.
"ஜோதிடம்தனை இகழ் "
என்பது பாரதியாரின் கூற்று .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா?
"ஜோதிடம்தனை இகழ் "
என்பது பாரதியாரின் கூற்று .
அப்பிடியா தெரியாது!
பல புரட்சிகள் செய்த முதல் கவிஞர் அவர்தான்.
ஜோதிடம்தனை இகழ் என்றது அவரது கூற்று
எல்லோரும் இகழவேண்டும் என்று அவர் கூறவில்லை.
அவர் கூறியது எல்லாம் வேதவாக்கு இல்லை.
ஜோதிடம்தனை இகழ் என்று கூறியதற்கு எவ்வளவு அவருக்கு உரிமை இருந்ததோ,
அதே உரிமை ,ஜோதிடம்தனை மதி, என்று கூற நம்பிக்கைவாதிகளுக்கு உண்டு.
பாரதியார் கூறிய வார்த்தைகளை மதித்து நடப்பவர்கள் எவ்வளவு பேர்?
[பட்டிமன்றத்தில் அவர் புகழப்பாடும் பலரும் இதில் சேர்ந்தவர்களே.]
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா?
இது போல சொல்லுபவர்கள் (உங்களை சொல்லல) பெரும்பாலும் போலிகளிடம் ஏமாந்த உஷார் பேர்வழிகளாக தான் இருப்பார்கள்M.Jagadeesan wrote:ஜோதிடத்தை நம்புபவன்
1 . பணத்தை இழக்கிறான்.
2 . நேரத்தை இழக்கிறான் .
3 . தன்னம்பிக்கையை இழக்கிறான் .
Re: சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா?
இது போல விஞ்ஞான ரீதியாக விளக்கம் அறிவாளிகளின் கட்டுரைகளை படிக்கும் பொது சிரிப்பு தன வரும்.
எனக்கு தெரிந்தும் ஒரு சில சிறந்த ஜோதிடர்கள் இருந்தனர் , இப்ப ஒருவர் இருக்கிறார். ஏதோ கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்து சொல்வதை போல சொல்லுவார் ... மிக ஆச்சரியமாக இருக்கும்
போலிகளிடமும் , இதற்கென்றே தெருவோர கடைகளில் விற்கும் புத்தகங்களை படித்து விட்டதால் ஜோதிடராகி விட்டோம் என்று நினைத்துக்கொண்டு அப்பாவிகளை ஏமாற்றும் நபர்களிடமும் ஏமாறும் கூட்டத்தின் இயலாமை தான் மாற்றுக்கருத்துக்கள் பெருக காரணம் ,T.N.Balasubramanian wrote:எல்லா கோள்களின் இடமாற்றம் எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டு சரியான விகிதத்தில் மாற்றம் அடைந்து உள்ளன .
வியாபார ரீதியாக இல்லாமல், நன்கு ஜோதிடம் அறிந்தவர்கள், கூறுகின்ற,கூறியவை யாவும் பலிக்கவே செய்கின்றன.துல்லியமாகவே கணிக்கமுடியும் .......
என்பது எந்தன் அசையாத நம்பிக்கை. ரமணியன்
எனக்கு தெரிந்தும் ஒரு சில சிறந்த ஜோதிடர்கள் இருந்தனர் , இப்ப ஒருவர் இருக்கிறார். ஏதோ கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்து சொல்வதை போல சொல்லுவார் ... மிக ஆச்சரியமாக இருக்கும்
Re: சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா?
ராஜா அவர்களே! நாசா வெளியிட்டுள்ள கட்டுரையில், விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்தில், நாங்கள் சொல்வது கணிதம் சோதிடம் சொல்வது நம்பிக்கை என முடித்துள்ளார்கள். அவர்கள் சோதிட நம்பிக்கை உள்ளவர்களை பொய்யாக்கவோ கேலி செய்யவோ முயற்சிக்கவில்லை.
நம்பிக்கை இல்லாதவர்களை பார்த்து சிரிப்பது அநாகரீகமான செயல்.
அதே போல் நம்பிக்கை உள்ளவர்களை பார்த்து கேலி செய்வதோ அவர்களின் நம்பிக்கையை கொச்சைப் படுத்துவதோ நாகரீகமான செயலாக இருக்க முடியாது. இப்படியான நம்பிக்கைகள் ஆழ்மனதில் பதிந்துவிட்ட ஒன்றாகும்.மாற்ற முடியாதது.
அரசியல் தலைவர்கள் பணத்திற்கும்,பதவிக்கும் தங்களை மாற்றிக் கொள்வார்கள். தொண்டர்கள் தீக் குளிப்பார்கள். நடிகர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.இரசிகர்களோ பாலாபிசேகம் செய்து கடவுளாக்குவார்கள்.அப்படியே சாமியார்களும்.சோதிடம் சொல்பவர்கள் கூட அப்படித்தான்.
இவை எல்லாம் நம்பிக்கை சார்ந்த விசயம். சிரிப்பதும் கொச்சைப்படுத்துவதும்,கேலி செய்வதும் அநாகரீகமான செயல் என்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
நம்பிக்கை இல்லாதவர்களை பார்த்து சிரிப்பது அநாகரீகமான செயல்.
அதே போல் நம்பிக்கை உள்ளவர்களை பார்த்து கேலி செய்வதோ அவர்களின் நம்பிக்கையை கொச்சைப் படுத்துவதோ நாகரீகமான செயலாக இருக்க முடியாது. இப்படியான நம்பிக்கைகள் ஆழ்மனதில் பதிந்துவிட்ட ஒன்றாகும்.மாற்ற முடியாதது.
அரசியல் தலைவர்கள் பணத்திற்கும்,பதவிக்கும் தங்களை மாற்றிக் கொள்வார்கள். தொண்டர்கள் தீக் குளிப்பார்கள். நடிகர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.இரசிகர்களோ பாலாபிசேகம் செய்து கடவுளாக்குவார்கள்.அப்படியே சாமியார்களும்.சோதிடம் சொல்பவர்கள் கூட அப்படித்தான்.
இவை எல்லாம் நம்பிக்கை சார்ந்த விசயம். சிரிப்பதும் கொச்சைப்படுத்துவதும்,கேலி செய்வதும் அநாகரீகமான செயல் என்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
Guest- Guest
Re: சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா?
ஏற்கனவே பிறிதொரு பதிவில் இது விஷயம் எழுதியுள்ளேன் என்று நினைக்கிறேன் .
தூத்துக்குடி பக்கத்தில் ஒரு கிராமத்தில் குயவன் ஒருவர்.
ஜாதகம் கொடுத்தால் பார்ப்பார் . காசெல்லாம் கேட்கமாட்டார் . பார்ப்பவர்கள் விருப்பப்பட்டு
அங்குள்ள ஒரு மண்பானையில் ரூபாய் போட்டு விட்டு வரலாம்.
உறவினரின் நண்பரொருவர் தன ஜாதகத்தை காண்பித்தார்
பலாபலன்கள் சொல்லிவந்தார்.
மூன்று விஷயங்களில் நண்பர் ஒத்துக்கொள்ள முடியாதபடி இருப்பதாக உறவினரிடம் கூறினார்.
1 வேலை விஷயமாக இடமாறுதல் உண்டு
2 இரு சக்கர வண்டியால் விபத்து
3 மூன்றாவது குழந்தை ஜனித்தல்
அதற்கு காரணங்கள்
a )இவர் கம்பெனிக்கு கிளைகள் கிடையாது
b )இவருக்கு வண்டியும் கிடையாது /ஒட்டவும் தெரியாது
c )சமீபத்தில் தான் Vas ஆபரேஷன் பண்ணிக்கொண்டுள்ளார்.
உறவினரோ , அவர் கூறியதெல்லாம் எங்களுக்கு பலித்து இருக்கு, என்று சொல்லி சமாளித்தார் .
ஆனால் நடந்தது இதுதான் .
a ) இவர் கம்பெனி நெல்லையில் புது பிராஞ்சு ஆரம்பித்து அங்கே இவர் குறைந்தது 6 மாதமாவது வேலை செய்து , மற்றவர்களை (நெல்லை ஊழியர்களை) ட்ரெயின் பண்ணவேண்டுமென கூறிவிட்டார்கள் .
b )கம்பெனி கொடுத்த ஹாஸ்டலில் இருந்து தினமும்காலையில் வேலைக்கு வந்து இரவு ரூமுக்கு திரும்பனம். சைக்கிள் கூட ஓட்டத்தெரியாத( 1972 --73 வருடங்களை நினைவு கொள்க ) அவர், கம்பெனி கொடுத்த சைக்கிளில் திக்குமுக்காடி ஓட்டக்கற்றுக்கொண்டு காலம் தள்ளினார். ஒரு நாள் இரவு ரூமுக்கு போகும் போது பள்ளத்தில் சைக்கிள் விழுந்து ஆசுபத்திரியில் ஒருவாரம் சிகிச்சை .
c ) Vas ஆபரேஷன் செய்துகொண்டாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகுதான் உடல் உறவு கொள்ளவேண்டும். (45 நாட்கள் என்று நினைக்கிறேன். sperms virile ஆக இருக்குமாம் ) மனைவி கர்ப்பம் தரிக்க இவருக்கு ஒரே குழப்பம். மனைவிக்கு அபார்ஷன் ஆகி , பிறகு இவரும் உடல் நலம் பெற்று ,தூத்துக்குடி பக்கம் வேலை மாறி வந்து .....சுபம் .
இவருக்கு இருந்த ஒரு சந்தேகம் மூன்று குழந்தை என்று சொன்னாரே , என்று மறுபடியும் ஜாதகத்துடன் ,உறவினருடன் ,ஜோதிடரை பார்க்க சென்றார் .பேசும் போது எல்லாம் சொன்ன படியே நடந்தது மூன்றாவது குழந்தையை தவிர என்றார் .ஜோதிடர் மறுமுறையும் ஜாதகத்தை பார்த்துவிட்டு
தான் கூறியது என்ன என்று கேட்டார்? நண்பரும் மூன்றாவது குழந்தை ஜனிக்கும் என்று கூறினீர் ,
குறை பிரசவம் ஆகிவிட்டதே என்றார். அதற்கு ஜோதிடர் , குழந்தை பிறக்கும் என்று நான் சொல்லவில்லையே , கூறியபடி , கரு ஜனித்தது. குழந்தையாக உருவாகவில்லை என்றார் .
மறுக்கமுடியா வாதம் .
சிலர் வியாபார நோக்கின்றி கூறும் பலன்கள் ஜாதக பலன்கள் அப்பிடியே நடக்கின்றன. கோள்களின் தூரம் மாறுபட்டாலும்.
நம்புவதும் நம்பாததும் அவரவர் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களை பொறுத்தது.
ரமணியன்
தூத்துக்குடி பக்கத்தில் ஒரு கிராமத்தில் குயவன் ஒருவர்.
ஜாதகம் கொடுத்தால் பார்ப்பார் . காசெல்லாம் கேட்கமாட்டார் . பார்ப்பவர்கள் விருப்பப்பட்டு
அங்குள்ள ஒரு மண்பானையில் ரூபாய் போட்டு விட்டு வரலாம்.
உறவினரின் நண்பரொருவர் தன ஜாதகத்தை காண்பித்தார்
பலாபலன்கள் சொல்லிவந்தார்.
மூன்று விஷயங்களில் நண்பர் ஒத்துக்கொள்ள முடியாதபடி இருப்பதாக உறவினரிடம் கூறினார்.
1 வேலை விஷயமாக இடமாறுதல் உண்டு
2 இரு சக்கர வண்டியால் விபத்து
3 மூன்றாவது குழந்தை ஜனித்தல்
அதற்கு காரணங்கள்
a )இவர் கம்பெனிக்கு கிளைகள் கிடையாது
b )இவருக்கு வண்டியும் கிடையாது /ஒட்டவும் தெரியாது
c )சமீபத்தில் தான் Vas ஆபரேஷன் பண்ணிக்கொண்டுள்ளார்.
உறவினரோ , அவர் கூறியதெல்லாம் எங்களுக்கு பலித்து இருக்கு, என்று சொல்லி சமாளித்தார் .
ஆனால் நடந்தது இதுதான் .
a ) இவர் கம்பெனி நெல்லையில் புது பிராஞ்சு ஆரம்பித்து அங்கே இவர் குறைந்தது 6 மாதமாவது வேலை செய்து , மற்றவர்களை (நெல்லை ஊழியர்களை) ட்ரெயின் பண்ணவேண்டுமென கூறிவிட்டார்கள் .
b )கம்பெனி கொடுத்த ஹாஸ்டலில் இருந்து தினமும்காலையில் வேலைக்கு வந்து இரவு ரூமுக்கு திரும்பனம். சைக்கிள் கூட ஓட்டத்தெரியாத( 1972 --73 வருடங்களை நினைவு கொள்க ) அவர், கம்பெனி கொடுத்த சைக்கிளில் திக்குமுக்காடி ஓட்டக்கற்றுக்கொண்டு காலம் தள்ளினார். ஒரு நாள் இரவு ரூமுக்கு போகும் போது பள்ளத்தில் சைக்கிள் விழுந்து ஆசுபத்திரியில் ஒருவாரம் சிகிச்சை .
c ) Vas ஆபரேஷன் செய்துகொண்டாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகுதான் உடல் உறவு கொள்ளவேண்டும். (45 நாட்கள் என்று நினைக்கிறேன். sperms virile ஆக இருக்குமாம் ) மனைவி கர்ப்பம் தரிக்க இவருக்கு ஒரே குழப்பம். மனைவிக்கு அபார்ஷன் ஆகி , பிறகு இவரும் உடல் நலம் பெற்று ,தூத்துக்குடி பக்கம் வேலை மாறி வந்து .....சுபம் .
இவருக்கு இருந்த ஒரு சந்தேகம் மூன்று குழந்தை என்று சொன்னாரே , என்று மறுபடியும் ஜாதகத்துடன் ,உறவினருடன் ,ஜோதிடரை பார்க்க சென்றார் .பேசும் போது எல்லாம் சொன்ன படியே நடந்தது மூன்றாவது குழந்தையை தவிர என்றார் .ஜோதிடர் மறுமுறையும் ஜாதகத்தை பார்த்துவிட்டு
தான் கூறியது என்ன என்று கேட்டார்? நண்பரும் மூன்றாவது குழந்தை ஜனிக்கும் என்று கூறினீர் ,
குறை பிரசவம் ஆகிவிட்டதே என்றார். அதற்கு ஜோதிடர் , குழந்தை பிறக்கும் என்று நான் சொல்லவில்லையே , கூறியபடி , கரு ஜனித்தது. குழந்தையாக உருவாகவில்லை என்றார் .
மறுக்கமுடியா வாதம் .
சிலர் வியாபார நோக்கின்றி கூறும் பலன்கள் ஜாதக பலன்கள் அப்பிடியே நடக்கின்றன. கோள்களின் தூரம் மாறுபட்டாலும்.
நம்புவதும் நம்பாததும் அவரவர் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களை பொறுத்தது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா?
காழியூர் நாராயணன் எப்படி ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா?
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» மூழ்கும் கப்பலாக தே.மு.தி.க.,; இறுதி நம்பிக்கையா தி.மு.க.,?
» எண்கணித சோதிடம்
» சோதிடம் என்றால் என்ன?
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» மூழ்கும் கப்பலாக தே.மு.தி.க.,; இறுதி நம்பிக்கையா தி.மு.க.,?
» எண்கணித சோதிடம்
» சோதிடம் என்றால் என்ன?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|