Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்!
2 posters
Page 1 of 1
கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்!
பாட்னா- இந்தூர் ரயில் விபத்தில் 133 க்கும் மேற்பட்டோர்
பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து
வருகின்றன.
ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள்
ஈடுபட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் கான்பூர் அருகே பொக்ரியான் என்ற இடத்தில்
நடந்த இந்த விபத்தில் பத்து பெட்டிகள் தடம் புரண்டன.விபத்து
நடந்த இடத்தில் பயணிகளின் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்
கிடந்தன. பயணிகளின் பெட்டிகளில் இருந்து ஏராளமான
பொருட்கள் வெளியே கொட்டிய நிலையில் பார்க்க முடிந்தது.
திருடர்களும் கைவரிசைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள ரசூல்பாத்
நகர தாசில்தார் ராம்தயாள் இரு போலீஸ்காரர்களுடன் களத்தில்
குதித்தார். ஆங்காங்கே சிதறிக்கிடந்த பயணிகளின் உடைமைகளில்
இருந்து விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் சேகரித்தனர்.
ஒரு பெட்டியில் இருந்து ரூ. 3 லட்சம் தொகை அப்படியே வெளியே
கிடந்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் 40 மோதிரங்கள்,
67 தங்க வளையல்கள், தங்க நகைகள் அடங்கிய இருப் பெட்டிகள்,
80 கடிகாரங்கள், 600 பேக்குகளை சேகரித்தனர். மீட்புப்
பணிக்கிடையே தாசில்தாரும் போலீசாரும் சுமார் 20 மணி நேரம்
பயணிகளின் உடைமைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அவற்றை விபத்து நடந்த இடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள மாதி அகர்பூல் ஆயுதப்படை நிலையத்துக்கு
கொண்டு சென்றனர்.
தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினர்,
உறவினர்களுக்கும் சேகரிக்கப்பட்ட தொகை, தங்க நகைகள்,
உடைமகள் விபரம் அனைத்தும் தெரிவிக்கப்பட்டது.
உடைமகளுக்கு உரியவர்கள் உரிய அடையாளங்களைக் காட்டி
பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. விபத்தில்
உடைமைகளை பறிகொடுத்தவர்கள், உரிய அடையாளங்களைக்
காட்டி பொருட்களை பெற்று சென்றனர்.
இன்னும் பயணிகளின் உடைமைகள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
பயணிகளின் உடைமைகளை கண்டால், அதனை என்னிடம் வந்து
ஒப்படைத்து விடுமாறும் தயாள் அக்கம் பக்கத்து கிராம மக்களுக்கு
வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று ஏராளமான கிராம மக்கள் தாங்கள்
கண்டெடுத்த பொருட்களை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து தாசில்தார் ராம்தயாள் கூறுகையில்,'' விபத்து நடந்த
இடத்தில் ஏராளமானோர் காயத்துடன் கிடந்தனர். எங்களால்
முடிந்த வரை அவர்களுக்கு உதவினோம்.
விபத்து சம்பவத்தைக் கேள்விபட்ட உறவினர்கள் விபத்தில்
சிக்கியவர்களுக்கு போன் செய்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே
தரையில் கிடந்த மொபைல் போன்களை எல்லாம் அட்டென்ட் செய்து
எங்களால் முடிந்த வரை எதிர்முனையில் இருப்பவர்களை
சாந்தப்படுத்த முயன்றோம்.
ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த ராகேஷ் சோனியின் திருமண
அழைப்பிதழ் ரத்தம் தேய்ந்த நிலையில் சிதறிக் கிடந்தது.
இதனைப் பார்த்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 34 பேர் விபத்து நடந்த
இடத்திலேயே தங்கள் உடைமைகளை வாங்கிக் கொண்டனர்.
புது மணப் பெண் ரூபி குப்தா, விபத்தில் தந்தையை இழந்தார்.
அவரது உடலை தேடினோம். ஆனால், விபத்து நடந்த இடத்தில்
அவரது உடல் கிடைக்கவில்லை. பின்னர் அவரது உடல்
மார்ச்சுவாரியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தந்தையின்
உடலை பார்க்க அவர் அங்கே ஓடினார்.
ரூபியின் திருமணத்திற்காக அவரது தந்தை வாங்கிய நகைப் பெட்டி
உள்ளிட்ட உடைமைகளை அவரிடம் ஒப்படைத்த போது, கதறலுடன்
பெற்றுக் கொண்டார்.
ரூபியின் உடைமைகளில் ஒன்று கூடத் தவறவிடாமல் சேகரித்து
அவரிடம ஒப்படைத்தோம்.
அதுபோல், பக்கத்து கிராம மக்களிடமும் பயணிகளின் பொருட்களை
கண்டெடுத்தால், அதனை என்னிடம் வந்து ஒப்படைக்குமாறு
வேண்டுகோள் விடுத்திருந்தேன். கிராம மக்களும் எங்களுக்கு
உதவியாக இருந்தனர். அதனால்தான் இவ்வளவு பொருட்களை
சேகரித்து, உரியவர்களிடம் ஒப்படைக்க முடிந்தது.
பொருட்களைத் தவறவிட்டவர்கள் அதனைப் பெற்றுக் கொண்ட போது,
அவர்களது முகத்தில் வேதனைக்கிடையே கொஞ்சம் சந்தோஷம்
தெரிந்தது'' என்றார்.
ராம்தயாள், போலீசாரின் செயலை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
-
-----------------------------------------
-எம்.குமரேசன்
விகடன்
பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து
வருகின்றன.
ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள்
ஈடுபட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் கான்பூர் அருகே பொக்ரியான் என்ற இடத்தில்
நடந்த இந்த விபத்தில் பத்து பெட்டிகள் தடம் புரண்டன.விபத்து
நடந்த இடத்தில் பயணிகளின் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்
கிடந்தன. பயணிகளின் பெட்டிகளில் இருந்து ஏராளமான
பொருட்கள் வெளியே கொட்டிய நிலையில் பார்க்க முடிந்தது.
திருடர்களும் கைவரிசைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள ரசூல்பாத்
நகர தாசில்தார் ராம்தயாள் இரு போலீஸ்காரர்களுடன் களத்தில்
குதித்தார். ஆங்காங்கே சிதறிக்கிடந்த பயணிகளின் உடைமைகளில்
இருந்து விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் சேகரித்தனர்.
ஒரு பெட்டியில் இருந்து ரூ. 3 லட்சம் தொகை அப்படியே வெளியே
கிடந்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் 40 மோதிரங்கள்,
67 தங்க வளையல்கள், தங்க நகைகள் அடங்கிய இருப் பெட்டிகள்,
80 கடிகாரங்கள், 600 பேக்குகளை சேகரித்தனர். மீட்புப்
பணிக்கிடையே தாசில்தாரும் போலீசாரும் சுமார் 20 மணி நேரம்
பயணிகளின் உடைமைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அவற்றை விபத்து நடந்த இடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள மாதி அகர்பூல் ஆயுதப்படை நிலையத்துக்கு
கொண்டு சென்றனர்.
தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினர்,
உறவினர்களுக்கும் சேகரிக்கப்பட்ட தொகை, தங்க நகைகள்,
உடைமகள் விபரம் அனைத்தும் தெரிவிக்கப்பட்டது.
உடைமகளுக்கு உரியவர்கள் உரிய அடையாளங்களைக் காட்டி
பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. விபத்தில்
உடைமைகளை பறிகொடுத்தவர்கள், உரிய அடையாளங்களைக்
காட்டி பொருட்களை பெற்று சென்றனர்.
இன்னும் பயணிகளின் உடைமைகள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
பயணிகளின் உடைமைகளை கண்டால், அதனை என்னிடம் வந்து
ஒப்படைத்து விடுமாறும் தயாள் அக்கம் பக்கத்து கிராம மக்களுக்கு
வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று ஏராளமான கிராம மக்கள் தாங்கள்
கண்டெடுத்த பொருட்களை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து தாசில்தார் ராம்தயாள் கூறுகையில்,'' விபத்து நடந்த
இடத்தில் ஏராளமானோர் காயத்துடன் கிடந்தனர். எங்களால்
முடிந்த வரை அவர்களுக்கு உதவினோம்.
விபத்து சம்பவத்தைக் கேள்விபட்ட உறவினர்கள் விபத்தில்
சிக்கியவர்களுக்கு போன் செய்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே
தரையில் கிடந்த மொபைல் போன்களை எல்லாம் அட்டென்ட் செய்து
எங்களால் முடிந்த வரை எதிர்முனையில் இருப்பவர்களை
சாந்தப்படுத்த முயன்றோம்.
ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த ராகேஷ் சோனியின் திருமண
அழைப்பிதழ் ரத்தம் தேய்ந்த நிலையில் சிதறிக் கிடந்தது.
இதனைப் பார்த்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 34 பேர் விபத்து நடந்த
இடத்திலேயே தங்கள் உடைமைகளை வாங்கிக் கொண்டனர்.
புது மணப் பெண் ரூபி குப்தா, விபத்தில் தந்தையை இழந்தார்.
அவரது உடலை தேடினோம். ஆனால், விபத்து நடந்த இடத்தில்
அவரது உடல் கிடைக்கவில்லை. பின்னர் அவரது உடல்
மார்ச்சுவாரியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தந்தையின்
உடலை பார்க்க அவர் அங்கே ஓடினார்.
ரூபியின் திருமணத்திற்காக அவரது தந்தை வாங்கிய நகைப் பெட்டி
உள்ளிட்ட உடைமைகளை அவரிடம் ஒப்படைத்த போது, கதறலுடன்
பெற்றுக் கொண்டார்.
ரூபியின் உடைமைகளில் ஒன்று கூடத் தவறவிடாமல் சேகரித்து
அவரிடம ஒப்படைத்தோம்.
அதுபோல், பக்கத்து கிராம மக்களிடமும் பயணிகளின் பொருட்களை
கண்டெடுத்தால், அதனை என்னிடம் வந்து ஒப்படைக்குமாறு
வேண்டுகோள் விடுத்திருந்தேன். கிராம மக்களும் எங்களுக்கு
உதவியாக இருந்தனர். அதனால்தான் இவ்வளவு பொருட்களை
சேகரித்து, உரியவர்களிடம் ஒப்படைக்க முடிந்தது.
பொருட்களைத் தவறவிட்டவர்கள் அதனைப் பெற்றுக் கொண்ட போது,
அவர்களது முகத்தில் வேதனைக்கிடையே கொஞ்சம் சந்தோஷம்
தெரிந்தது'' என்றார்.
ராம்தயாள், போலீசாரின் செயலை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
-
-----------------------------------------
-எம்.குமரேசன்
விகடன்
Re: கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்!
பெயருக்கு ஏற்ப தயாள குணம் கொண்டவர் போலும் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
Similar topics
» அரியலூர் தீ விபத்து: ரூ.35 லட்சம் பணம், 120 பவுன் தங்க நகைகள் நாசம்
» ஓட்ட பந்தயத்திலே ஜெயிச்ச தங்க மோதிரம்..!!
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
» பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்
» அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்!
» ஓட்ட பந்தயத்திலே ஜெயிச்ச தங்க மோதிரம்..!!
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
» பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்
» அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|