ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

+2
உமா
Pranav Jain
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! Empty பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by Pranav Jain Tue Nov 15, 2016 2:45 pm

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், புதிய ரூபாய் நோட்டிற்கு தடை விதிக்க முடியாது என்றும் மறுத்துள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என்றும், சமீபத்திய அனைத்து நடவடிக்கைகளுக்கும் வரும் 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு பொதுமக்களுக்கு ஆதரவளிப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இனிமேலாவது மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் தாயார் குஜராத்தில் உள்ள வங்கியில் வந்து தன்னிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி ரூபாய் 4,500 பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by உமா Tue Nov 15, 2016 2:50 pm

பிரதமர் மோடியின் தாயார் குஜராத்தில் உள்ள வங்கியில் வந்து தன்னிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி ரூபாய் 4,500 பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by T.N.Balasubramanian Tue Nov 15, 2016 2:55 pm

பிரதமரின் தாயார் மற்றும் குடும்பத்தினர் யாவரும் எளிமையின் எடுத்துக்காட்டு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by Pranav Jain Tue Nov 15, 2016 9:03 pm

இது பிரதமர் மோடியின் எளிமையைக் காட்டவில்லை. பழைய 500 , 1000 ரூபாய்கள் செல்லாது என்று அறிவித்த இந்த அதிரடி நடவடிக்கையை பெற்ற தாய்க்குக்கூட தெரிவிக்கவில்லை என்பதை காட்டுவதற்கான நாடகமாகத்தான் இந்திய மக்கள் பார்க்கிறார்கள்!

வியாதியை பரப்பிவிட்டு அதற்கான மருந்தை விற்பனை செய்ய காத்திருந்து சில நாட்களுக்குப் பிறகு மார்க்கெட் செய்வதைப்போல மோடி அரசும் சூட்டோடு சூடாக முதலில் புதிய 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டார்கள், ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று புதிய 500 ரூபாய் நோட்டு வந்திருக்கிறது. அடுத்த மாதம் புதிய 1000 ரூபாய் நோட்டும் வரும். ரூபாய் நோட்டுக்களை உடனுக்குடன் வடிவமைத்து அச்சடிக்கிறார்களா என்ன? என்னங்க கலர் காலரா ரூபாய் நோட்டுகளா வெளியிடுறாங்க?

மோடி அரசின் திட்டமிடப்படாத, தெளிவில்லாத அறிவிப்பை கண்டிக்கவேண்டும் என்று விரும்பிய என்னைப்போன்ற மக்களுக்கு உச்சநீதி மன்றத்தின் உத்தரவு ஆறுதலளிக்கிறது. வெற்றி நமக்குத்தான்!!
இது மக்களாட்சி என்பதை யாரும் மறக்காமல் இருந்தால் நல்லதுதான்! எனவே எந்த அறிவிப்பாக இருந்தாலும் மக்களிடம் அல்லது மக்களின் பிரதிநிதிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்பதுதான் நல்லது. இதைத்தான் உச்சநீதி மன்றமும் வலியுறுத்தியுள்ளது. இது மகிழ்ச்சியே!
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by T.N.Balasubramanian Tue Nov 15, 2016 9:37 pm

வெளி ஆளாக இருந்து பார்ப்பதற்கும் யதார்த்தமாக இருப்பதற்கு அதிக வித்தியாசங்கள் உண்டு .
நீங்கள், கருப்பு பணத்தை வெளி கொணர /கள்ளப் பணத்தை கட்டுப்படுத்த நினைக்கும் அதிகாரியாக செயல்படவேண்டிய அவசியம் வந்தால் உங்கள் தாயார் /மனைவிக்கு சொல்லிவிட்டு தான் செய்வீர்களா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by Pranav Jain Tue Nov 15, 2016 11:53 pm

கட்டிய மனைவியையும், பெற்ற தாயையும் நம்பவில்லையென்றால் பிறகு யாரைத்தான் நம்புவது? எப்படித்தான் வாழ்வது?

யாருக்கும் சொல்லாம செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், இந்த அதிரடியான அறிவிப்பு எதற்கு? என்பதை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டுமல்லவா? வீட்டில் பதுக்கி வைத்திருப்பது மட்டும்தான் கறுப்புப் பணமா? அரசுக்கு வரி கட்டாமல் இருப்பது மட்டும்தான் கறுப்புப் பணமா? அரசியல்வாதிகளிடம் இருப்பது மட்டும்தான் கருப்புப் பணமா? தொழிலதிபர்களிடம் இருப்பது மட்டும்தான் கறுப்புப் பணமா?

நமது தெருக்களில், நமது வீட்டிற்கே வந்து 10 ரூபாய்க்கு தள்ளு வண்டிகளில் விற்பனை செய்யும் ஒரு சாதாரண வியாபாரியின் பிளாஸ்டிக் தோடு மற்றும் அலுமினிய கம்மலின் விலை வெறும் 2 ரூபாய்தான். இரண்டு ரூபாய்க்கு வாங்கி 4 மடங்குகள் லாபம் வைத்து 10 ரூபாய்க்கு விற்கிறார்கள். இது கறுப்புப் பணம் இல்லையா? இது ஊழல் இல்லையா?

இந்த பிளாஸ்டிக் கம்மலையும், அலுமினிய தோட்டையும் நான் வாங்குகிறேனா? நீங்கள் வாங்குகிறீர்களா? அல்லது கோடி கோடியாக கொள்ளையடிக்கும் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் வாங்குகிறீர்களா? ஏழைகள்தான் வாங்குகிறார்கள். தங்கத்தை தொட்டுப்பார்க்க முடியாத அப்பாவி மக்களின் அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை குறிவைத்து வியாபாரம் செய்வது ஊழல் இல்லையா? தங்கத்தை வாங்கினால் பிற்காலத்தில் அதிக விலைக்கோ, குறைந்த விலைக்கோ அல்லது வாங்கிய விலைக்கோ விற்க முடியும். ஆனால் எந்த உத்திரவாதமும், எந்த மதிப்பும் இல்லாத ஒரு பிளாஸ்டிக் அணிகலனில் 8 ரூபாய் இழக்கிறார்கள் அப்பாவி ஏழை மக்கள். இந்தியாவில் பணக்காரர்களை விட ஏழைகள்தான் அதிகம். எட்டு, எட்டா கனக்குப் பண்ணிப்பாருங்கள் எத்தனை எட்டு வரும் என்பது புரியும். இதை தடுப்பது யதார்த்தமா? அல்லது அரசை ஏமாற்றினால் மட்டும்தான் நடவடிக்கை எடுப்போம் என்பது யதார்த்தமா? சிந்தித்துப் பாருங்கள்.

மாற்றம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமல்லவா?
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by T.N.Balasubramanian Wed Nov 16, 2016 7:16 am

பொக்ரான் அணுகுண்டு சோதனை .
அதில் மிகவும் நெருக்கமாக சம்பந்தப்பட்ட உறவினரின் நண்பர் .
ஓருயிர் ஈருடல் போன்றவர்கள் . ஒரே தட்டில் உணவுண்டு ,ஒரே  கட்டிலில் படுத்து உறங்கியவர்கள் சகலவிதமான விஷயங்கள் ஷேர் கொள்ளுவார்கள் .அவ்வளவு அன்னியோன்னியம் .
பொக்ரான் அணு சோதனைக்கு பிறகு இருவரும் சந்தித்த போது, அணு சோதனை பற்றிய பேச்சு வந்தது . உறவினரின் நண்பர், சோதனையில் அவரும் மிக முக்கியமான அங்கமாக இருந்து , ஆவன செய்ததை, அதில் அவர் அனுபவித்த இடர்களை எல்லாம் விவரிக்க, உறவினருக்கு கோபம் சிறிதே வருத்தம். தனக்கு கூட சொல்லவில்லையே என்ற போது ,அவர் வீட்டினருக்கே தெரியாது என்றும் ஒரு ரகசிய காப்பு பிரமாணத்தில்நாட்டிற்காக கடமையை செய்ததாக கூறினார். உறவினரும் புரிந்துகொண்டார் .

சில விஷயங்கள் ரகசியம் காக்கப்படவேண்டும் . ஒவ்வொரு தனிமனிதனிடமும் வெளியே கூறவிரும்பாத ரகசியங்கள் உண்டு.தவிர்க்கமுடியாதது.
நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by ChitraGanesan Wed Nov 16, 2016 10:35 am

நன்றி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by உமா Wed Nov 16, 2016 1:10 pm

அவர்கள் வீட்டில் வேலை ஆட்களே இல்லையா....இதெல்லாம் நாங்களும் சாதாரணமானவர்கள் என்று சொல்லாமல் சொல்லும் நாடகம் என்பதே என் கருத்து....

மோடியின் தாயாரே நிற்கும்போது மற்றவர்கள் நிற்க கூடாதா என்ன????????? என்று கேட்காத கேள்விக்கு அவர் விளக்கம் அளிக்கிறார்.....

அவர் செய்த நடவடிக்கை நல்லதே. சூப்பருங்க அருமையிருக்கு ..ஆனா இதெல்லாம் ஓவர் சிரி சிரி சிரி சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by Pranav Jain Wed Nov 16, 2016 1:24 pm

T.N.Balasubramanian அவர்களே, நீங்கள் சொல்லும் ரகசிய பாதுகாப்பு என்பது இந்த விஷயத்திற்கு பொருந்தாது என்று கருதுகிறேன். ரகசியம் காக்கப்படுவது எப்படியென்றால்? ஒரு திட்டம் நிறைவேறும் வரை அது யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டும். ஆனால், தற்போதைய புதிய ரூபாய் நோட்டு பிரச்சினை கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக ரகசிய திட்டம் என்றால், இந்த ரகசியத்தை ஏன் இப்போது பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்? இப்போது கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டு விட்டதா என்ன?

ஒருவேளை, இப்படி அறிவித்தால் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் மாட்டிக்கொள்வார்கள் என்பது திட்டமாக இருந்தால், இது சரியான திட்டம் இல்லை என்பதுதான் எனது கருத்து. ஏனென்றால்?
@ திடீரென்று புதிய நோட்டை வெளியிட்டு பழைய நோட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.
@ உடனே ஏழைகள் முதல் எல்லோரும் மாற்ற முன் வருகிறார்கள்.
@ இது தவறு என்று மக்கள் சொன்னவுடன், 2,50,000 ரூபாய்க்கு மேல் மாற்றினால் 200% வரி வசூலிக்கப்பட்டு என்று அறிவிக்கிறார்கள்.
@ உடனே பினாமிகள் பெயரை டெப்பாசிட் செய்கிறார்கள்.
@ அதையும் மக்கள் கேள்வி கேட்ட பிறகு புள்ளி வைக்கிறேன், கோலம் போடுறேன்னு என்று சொல்வதுபோல பல முறை டெப்பாசிட் செய்தால் "மை" வைக்கப்படும் என்று அறிவிக்கிறார்கள்.
இதை எப்படிங்க ரகசிய திட்டம் என்று கருதுவது?

பிரதமர் மோடிக்கோ அல்லது மத்திய அரசுக்கோ ஆதரவு தருவதற்கான நேரம் இதுவல்ல. இதை தேர்தலின் போது செய்யுங்கள். மத்திய அரசுக்கு நமது உதவிகள்தான் இப்போது தேவை என்பதை அனைத்து இந்திய மக்களும் புரிந்து செயல்படுங்கள். சரியான நோக்கத்திற்காக தவறாக போடப்பட்டுள்ள திட்டத்தை தொடர்ந்து எப்படி செயல்படுத்துவது என்பதற்கான தங்களுடைய பங்களிப்பை செய்யுங்கள். இதுதான் இப்போதைய தேவை.

அனைவரது புரிதலுக்கும் நன்றி.
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» டோனிக்கு ஆதரவளிக்கும் கவாஸ்கர், அசாருதீன்!
» சமச்சீர் கல்வி - உச்சநீதி மன்றம் உத்தரவு
» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும்
»  தமிழ்நாடு மின்சார வாரியம் - பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum