Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
இன்று (நவம்பர்-14) கரண்ட் பில் கட்டுவதற்கு கடைசி நாள். என்னிடம் 3 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. கடந்த மூன்று நாட்களாக கரண்ட் பில் கட்டுவதற்காக சென்றபோது பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க முடியாது என்று திருப்பியனுப்பிவிட்டனர். அதனால் ATM ல் டெபாசிட் செய்ய முயன்றபோது கூட்டம் அலைமோதியதால் ஒரு நாள் காலதாமதமானது. அதன் பிறகு வங்கியில் மாற்றலாம் என்று வங்கிக்கு சென்றபோது அங்கும் அதே நிலைதான்.
மறுநாள் மீண்டும் ஈ.பி ஆபீஸிற்கு சென்று நிலைமையை எடுத்து சொன்னேன். ஆனால், அவர்கள் என்னிடம் உள்ள 1000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து விட்டனர். இதனால் கோபப்பட்டு நவம்பர் 30 ஆம் தேதி வரையில் அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்களிலும் பழைய 500, 100 ரூபாய் நோட்டுக்களை வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதே நீங்கள் மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்? எனது ஈபி பில்லை வாங்கவில்லை என்றால் வேறு யாரும் பணம் கட்ட முடியாது என்று தடுத்து நியாயம் கேட்டபோது, அரசு அலுவலகத்தில் பணியாளர்களை வேலை செய்ய விடாமல் கலாட்டா செய்வதாக பிரச்சினையை கிளப்பினார்கள். மேலும் என்னிடம் உள்ள 1000 ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டு என்று அவர்களிடம் உள்ள பணம் என்னும் இயந்திரம் சொல்வதாக சொல்லி என்னை முட்டாளாக்க முயற்சித்தார்கள். நான் மேலும் மேலும் எனது பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து சொல்லியும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. என் மீதே குற்றம் சுமத்துகிறார்கள். சில பொதுமக்களும் நான் செய்வதுதான் தவறு என்று இதற்கு வக்காலத்தும் வாங்குகிறார்கள். எனவே அவர்களோடு போராடுவது தவறு என்பதை உணர்ந்து ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, மீண்டும் வங்கிக்கு சென்று வரிசையில் நின்றேன்...
வங்கியில் போதுமான பணம் இல்லை. எனவே பணத்தை மாற்ற முடியாது, டெப்பாசிட் மட்டும் செய்யலாம் நாளைக்கு பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். வேறு வழியில்லாமல் டெப்பாசிட் செய்துவிட்டு ஒவ்வொரு ATM ஆக தேடி அலைந்தேன். பல இடங்களில் உள்ள ATM ல் பணம் இல்லை. பல இடங்களில் உள்ள ATM பூட்டிக்கிடந்தது. பல இடங்களில் கூட்டம் நிறைந்து வழிந்தது...
ஒரு வழியாக இன்று காலையில் வங்கியில் இருந்து பணத்தை எடுத்தபோது புதிய 2000 ரூபாய் நோட்டை கொடுத்தார்கள். உடனே ஈபி ஆபீஸிற்கு சென்று எனது ஈபி பில்லை கட்டினேன். அப்போது எனக்கு சில்லறை மீதம் கொடுக்கும்போது பழைய 500 ரூபாய் நோட்டை சர்வ சாதாரணமாக கொடுத்தார்கள். அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் இப்போது வெளிவரத் தயாராக இருந்தது.... ஆனாலும் அடக்கிக்கொண்டு, எனக்கு இந்த 500 ரூபாய் வேண்டாம் 100 ரூபாயாக கொடுங்கள் எண்டு கேட்டபோது, நீங்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதற்காகவே வந்துள்ளீர்களா? என்று என்னை குற்றவாளியாக்கினார்கள். அப்போது நான் சொன்னேன், நான் 1000 ரூபாய் நோட்டை கொடுத்தபோது நீங்கள் வாங்கவில்லையே, இப்போது நான் மட்டும் எப்படி இந்த 500 ரூபாய் நோட்டை வாங்க முடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொல்கிறார்கள், டிசம்பர் 30ஆம் தேதி வரையில் பழைய நோட்டுக்களை வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதாக நீங்கள்தானே சொன்னீர்கள், அதனால்தான் கொடுக்கிறோம். என்று கேலி செய்வதுபோல பேசினார்கள்.
அடேய் அதி புத்திசாலிகளே..., டிசம்பர் 30 வரை பொதுமக்களிடமிருந்துதான் பழைய 500. 1000 ரூபாய் நோட்டுக்களை நீங்கள் வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதே தவிர, எங்களை உங்களிடமிருந்து வாங்கிக்கொள்ள சொல்லவில்லை. மரியாதையாக நடந்துகொள்ளவில்லை என்றால் ஈபி அலுவலகத்தை அடித்து நொறுக்கி விடுவேன் என்று சொன்னவுடன், சில நண்பர்கள் எனக்கு ஆதரவு கொடுத்து என் பக்கமுள்ள நியாயத்தை புரிந்துகொண்டு எனக்காக பேசினார்கள். அதன்பிறகு அலுவலகத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் அடங்கினார்கள். ஆனாலும், எனக்கு 500 ரூபாய் நோட்டிற்கு பதில் 100 ரூபாய் நோட்டுக்களை தர மறுத்துவிட்டார்கள். பொது மக்கள் சிலர் இதற்கு காரணம் கேட்டார்கள். அதற்கு, நாங்கள் எல்லோரிடமும் வாங்க மறுக்கவில்லை, இவரிடம் இருந்த நோட்டுக்களை சோதித்தபோது கள்ள நோட்டு என்று "பீப்" சத்தம் வந்தது அதனால்தான் வாங்க மறுத்தோம் என்று என்மீது பொய் குற்றம் சுமத்தினார்கள். ஆனால், கள்ள நோட்டாக இருந்தால் வங்கியில் மட்டும் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்? என்று கேட்டவுடன் பதில் சொல்ல முடியாமல் பெப்பெப்பே... பெப்பெப்பே... என்று முழிக்கிறார்கள். ஆனால், கடைசியில் எங்களிடம் 100 ரூபாய் நோட்டுக்கள் இல்லை. நாங்கள் என்ன இங்கே பணமா அச்சடிக்கிறோம்? எல்லோரும் 1000, 500 நோட்டுக்கள் என்று கொடுத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? இதற்கு மேல் நீங்கள் சட்டம் பேசினால் நாங்கள் யாரிடமும் ஈபி பில்லை வாங்க மாட்டோம். எல்லோரும் நாளைக்கு வந்து கட்டிக்கொள்ளுங்கள். ஆனால் நாளைக்கு ஃபைனுடன்தான் வசூலிப்போம், இல்லேன்னா எல்லோரும் "மோடி"கிட்ட போய் சொல்லி இங்கே கூட்டிகிட்டு வாருங்கள் என்று சொன்னவுடன் எனக்காக பேசிய கொஞ்சபேரும் காணாமல் போய்விட்டார்கள்...
இதுதான் அரசு அலுவலக ஊழியர்களின் பலம்! இவ்வளோதான் பொதுமக்களின் பவர்!!
ஆனால், நான் என்ன பண்ணப் போறேன்னா?... அடுத்த ஈபி பில் கட்டும்போது இந்த 500 ரூபாய் நோட்டை இதே அலுவலகத்திற்கு மீண்டும் கொண்டுவரப்போகிறேன். அதாவது இரண்டு மாதங்களுக்குப் பிறகு!
அவங்க வாங்க மாட்டேன்னு சொல்லுவாங்க...
நான் ஈபி பில்லே கட்டமாட்டேன்னு சொல்லுவேன்...
அவங்க என் வீட்டோட ஈபி லைனை கட் பண்ணுவாங்க....
நான் திருட்டு கரண்ட் எடுத்து யூஸ் பண்ணுவேன்...
ங்கொய்யால நீங்க கூட்டிகிட்டு வாங்கப்பா மோடியை!!
இப்படி செய்வது சரியா தவறா என்று தெரியவில்லை. நண்பர்கள் தங்களுடைய ஆலோசனைகளை வழங்குங்கள்.
மறுநாள் மீண்டும் ஈ.பி ஆபீஸிற்கு சென்று நிலைமையை எடுத்து சொன்னேன். ஆனால், அவர்கள் என்னிடம் உள்ள 1000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து விட்டனர். இதனால் கோபப்பட்டு நவம்பர் 30 ஆம் தேதி வரையில் அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்களிலும் பழைய 500, 100 ரூபாய் நோட்டுக்களை வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதே நீங்கள் மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்? எனது ஈபி பில்லை வாங்கவில்லை என்றால் வேறு யாரும் பணம் கட்ட முடியாது என்று தடுத்து நியாயம் கேட்டபோது, அரசு அலுவலகத்தில் பணியாளர்களை வேலை செய்ய விடாமல் கலாட்டா செய்வதாக பிரச்சினையை கிளப்பினார்கள். மேலும் என்னிடம் உள்ள 1000 ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டு என்று அவர்களிடம் உள்ள பணம் என்னும் இயந்திரம் சொல்வதாக சொல்லி என்னை முட்டாளாக்க முயற்சித்தார்கள். நான் மேலும் மேலும் எனது பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து சொல்லியும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. என் மீதே குற்றம் சுமத்துகிறார்கள். சில பொதுமக்களும் நான் செய்வதுதான் தவறு என்று இதற்கு வக்காலத்தும் வாங்குகிறார்கள். எனவே அவர்களோடு போராடுவது தவறு என்பதை உணர்ந்து ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, மீண்டும் வங்கிக்கு சென்று வரிசையில் நின்றேன்...
வங்கியில் போதுமான பணம் இல்லை. எனவே பணத்தை மாற்ற முடியாது, டெப்பாசிட் மட்டும் செய்யலாம் நாளைக்கு பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். வேறு வழியில்லாமல் டெப்பாசிட் செய்துவிட்டு ஒவ்வொரு ATM ஆக தேடி அலைந்தேன். பல இடங்களில் உள்ள ATM ல் பணம் இல்லை. பல இடங்களில் உள்ள ATM பூட்டிக்கிடந்தது. பல இடங்களில் கூட்டம் நிறைந்து வழிந்தது...
ஒரு வழியாக இன்று காலையில் வங்கியில் இருந்து பணத்தை எடுத்தபோது புதிய 2000 ரூபாய் நோட்டை கொடுத்தார்கள். உடனே ஈபி ஆபீஸிற்கு சென்று எனது ஈபி பில்லை கட்டினேன். அப்போது எனக்கு சில்லறை மீதம் கொடுக்கும்போது பழைய 500 ரூபாய் நோட்டை சர்வ சாதாரணமாக கொடுத்தார்கள். அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் இப்போது வெளிவரத் தயாராக இருந்தது.... ஆனாலும் அடக்கிக்கொண்டு, எனக்கு இந்த 500 ரூபாய் வேண்டாம் 100 ரூபாயாக கொடுங்கள் எண்டு கேட்டபோது, நீங்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதற்காகவே வந்துள்ளீர்களா? என்று என்னை குற்றவாளியாக்கினார்கள். அப்போது நான் சொன்னேன், நான் 1000 ரூபாய் நோட்டை கொடுத்தபோது நீங்கள் வாங்கவில்லையே, இப்போது நான் மட்டும் எப்படி இந்த 500 ரூபாய் நோட்டை வாங்க முடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொல்கிறார்கள், டிசம்பர் 30ஆம் தேதி வரையில் பழைய நோட்டுக்களை வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதாக நீங்கள்தானே சொன்னீர்கள், அதனால்தான் கொடுக்கிறோம். என்று கேலி செய்வதுபோல பேசினார்கள்.
அடேய் அதி புத்திசாலிகளே..., டிசம்பர் 30 வரை பொதுமக்களிடமிருந்துதான் பழைய 500. 1000 ரூபாய் நோட்டுக்களை நீங்கள் வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதே தவிர, எங்களை உங்களிடமிருந்து வாங்கிக்கொள்ள சொல்லவில்லை. மரியாதையாக நடந்துகொள்ளவில்லை என்றால் ஈபி அலுவலகத்தை அடித்து நொறுக்கி விடுவேன் என்று சொன்னவுடன், சில நண்பர்கள் எனக்கு ஆதரவு கொடுத்து என் பக்கமுள்ள நியாயத்தை புரிந்துகொண்டு எனக்காக பேசினார்கள். அதன்பிறகு அலுவலகத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் அடங்கினார்கள். ஆனாலும், எனக்கு 500 ரூபாய் நோட்டிற்கு பதில் 100 ரூபாய் நோட்டுக்களை தர மறுத்துவிட்டார்கள். பொது மக்கள் சிலர் இதற்கு காரணம் கேட்டார்கள். அதற்கு, நாங்கள் எல்லோரிடமும் வாங்க மறுக்கவில்லை, இவரிடம் இருந்த நோட்டுக்களை சோதித்தபோது கள்ள நோட்டு என்று "பீப்" சத்தம் வந்தது அதனால்தான் வாங்க மறுத்தோம் என்று என்மீது பொய் குற்றம் சுமத்தினார்கள். ஆனால், கள்ள நோட்டாக இருந்தால் வங்கியில் மட்டும் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்? என்று கேட்டவுடன் பதில் சொல்ல முடியாமல் பெப்பெப்பே... பெப்பெப்பே... என்று முழிக்கிறார்கள். ஆனால், கடைசியில் எங்களிடம் 100 ரூபாய் நோட்டுக்கள் இல்லை. நாங்கள் என்ன இங்கே பணமா அச்சடிக்கிறோம்? எல்லோரும் 1000, 500 நோட்டுக்கள் என்று கொடுத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? இதற்கு மேல் நீங்கள் சட்டம் பேசினால் நாங்கள் யாரிடமும் ஈபி பில்லை வாங்க மாட்டோம். எல்லோரும் நாளைக்கு வந்து கட்டிக்கொள்ளுங்கள். ஆனால் நாளைக்கு ஃபைனுடன்தான் வசூலிப்போம், இல்லேன்னா எல்லோரும் "மோடி"கிட்ட போய் சொல்லி இங்கே கூட்டிகிட்டு வாருங்கள் என்று சொன்னவுடன் எனக்காக பேசிய கொஞ்சபேரும் காணாமல் போய்விட்டார்கள்...
இதுதான் அரசு அலுவலக ஊழியர்களின் பலம்! இவ்வளோதான் பொதுமக்களின் பவர்!!
ஆனால், நான் என்ன பண்ணப் போறேன்னா?... அடுத்த ஈபி பில் கட்டும்போது இந்த 500 ரூபாய் நோட்டை இதே அலுவலகத்திற்கு மீண்டும் கொண்டுவரப்போகிறேன். அதாவது இரண்டு மாதங்களுக்குப் பிறகு!
அவங்க வாங்க மாட்டேன்னு சொல்லுவாங்க...
நான் ஈபி பில்லே கட்டமாட்டேன்னு சொல்லுவேன்...
அவங்க என் வீட்டோட ஈபி லைனை கட் பண்ணுவாங்க....
நான் திருட்டு கரண்ட் எடுத்து யூஸ் பண்ணுவேன்...
ங்கொய்யால நீங்க கூட்டிகிட்டு வாங்கப்பா மோடியை!!
இப்படி செய்வது சரியா தவறா என்று தெரியவில்லை. நண்பர்கள் தங்களுடைய ஆலோசனைகளை வழங்குங்கள்.
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
தங்களை அன்புடன் வரவேற்கிறேன் ஈகரைக்கு.
உறுப்பினர் பகுதியில் ஒரு அறிமுகம் செய்து கொள்ளலாமே தங்களை,
உறுப்பினர் பகுதியில் ஒரு அறிமுகம் செய்து கொள்ளலாமே தங்களை,
Last edited by உமா on Mon Nov 14, 2016 3:56 pm; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
மிகவும் வேதையான விஷயம் தான்....சில பல நேரங்களில் இது போன்ற இடங்களில் அமைதியாக சென்றுவிடுவது நல்லது... ஏனெனில் அந்த இரண்டு மாதம் பிறகு அந்த நோட்டு செல்லாது என்று அறிக்கை வந்து விட்டால் இழப்பு உங்களுக்கு தானே....
இது சாத்தியமா????????? சொல்லுங்கள் நண்பரே,,,,,...
Pranav Jain wrote:நான் ஈபி பில்லே கட்டமாட்டேன்னு சொல்லுவேன்...
அவங்க என் வீட்டோட ஈபி லைனை கட் பண்ணுவாங்க....
நான் திருட்டு கரண்ட் எடுத்து யூஸ் பண்ணுவேன்...
ங்கொய்யால நீங்க கூட்டிகிட்டு வாங்கப்பா மோடியை!!
இது சாத்தியமா????????? சொல்லுங்கள் நண்பரே,,,,,...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
Pranav Jain அவர்களே ,
நவம்பர் 14 . கடைசி தினம் அல்ல . இந்த மாதம் 30 தேதி வரை கட்டலாம் . அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.
ஒரு EB பில் கட்டவே இவ்வளவு கஷ்டம் என அலுத்துக்கொள்கிறீர்களே, அதை அறிமுகப்படுத்தி ,
அமுலாக்குவதில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கும் . நாம் எப்போதும் ,நமக்கு கஷ்டங்கள் வரக்கூடாது என்றே எதிர்பார்க்கிறோம் . மற்றவர்கள் நிலையில் இருந்து நாம் ப்ராப்லங்களை அணுகுவது இல்லை .
ரமணியன்
நவம்பர் 14 . கடைசி தினம் அல்ல . இந்த மாதம் 30 தேதி வரை கட்டலாம் . அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.
ஒரு EB பில் கட்டவே இவ்வளவு கஷ்டம் என அலுத்துக்கொள்கிறீர்களே, அதை அறிமுகப்படுத்தி ,
அமுலாக்குவதில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கும் . நாம் எப்போதும் ,நமக்கு கஷ்டங்கள் வரக்கூடாது என்றே எதிர்பார்க்கிறோம் . மற்றவர்கள் நிலையில் இருந்து நாம் ப்ராப்லங்களை அணுகுவது இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
500 ரூபாய் செல்லாமல் போவதால் பெரிதாக ஒன்றும் இழப்பு ஏற்படப்போவதில்லை சகோதரி. ஆனால், அரசு ஊழியன் என்ற பெயரில் திமிராக நடந்து கொள்வது எந்தவிதத்தில் நியாயம்?. இரண்டு நாட்களாக 1000 ரூபாய் நோட்டை வாங்காமல் அலையவிட்டோமே அதே நபரிடம் 500 ரூபாய் நோட்டை கொடுக்கக் கூடாது என்ற இயல்பான மனிதாபிமானம் இல்லாமல் வேண்டுமென்றே கொடுத்துவிட்டு நீதானே அரசு வாங்கிக்கொள்ள சொன்னதாக சொன்னாய் அதனால்தான் கொடுக்கிறேன் என்று சொல்லும்போது அந்தத் திமிரை அடக்கினால்தானே நம்முடைய திமிர் அவர்களுக்குத் தெரியும்.
அதுமட்டுமல்லாமல், இன்று பணம் வசூலிக்கமாட்டேன் நாளைக்கு அபராதத்துடன் வசூலிப்பேன் என்று சொல்வதற்கு அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஒரு நாட்டின் பிரதம மந்திரியின் உத்தரவை மீறியது மட்டுமல்லாமல், பொதுமக்கள் கேள்வி கேட்டவுடன் பிரதமரிடம் முறையிட்டு அழைத்து வா என்று சொல்கிறான் என்றால் யாரும் செய்ய மாட்டார்கள் என்ற திமிர்தானே? அவனுடைய முட்டாள்தனமான திமிரை அடக்கித்தானே ஆக வேண்டும். செல்லாத நோட்டை வைத்துக்கொண்டு பிரச்சினை செய்தால் அவன் புகார் கொடுத்துத்தான் ஆக வேண்டும்? திருட்டு கரண்ட் எடுத்து பயன்படுத்தினாலும் அவன் நடவடிக்கை எடுத்துத்தான் ஆக வேண்டும்?
500 ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னால் இதில் கவர்னருடைய கையெழுத்து இருக்கிறது. இது செல்லாது என்று சொன்னால் செல்லாத நோட்டில் கவர்னர் ஏன் கையெழுத்து போட்டார்? நீ கவர்னரை அழைத்து வா என்று நான் சொல்லலாம் அல்லவா? திமிர்தானே எல்லா அதிரடியான முடிவுகளுக்கும் காரணமாக இருக்கிறது? அரசு ஊழியர்களும், ஆட்சியில் இருப்பவர்களும் மட்டும்தான் திமிர் காட்ட முடியுமா? நாமும் திமிர் காட்டினால் என்ன?
எல்லா ATM மையங்களிலும் சாதாரண பொதுமக்கள்தான் வரிசையில் நிற்கிறார்கள் தவிர எந்த அரசியல்வாதியும், எந்த தொழிலதிபர்களும் நிற்கவில்லையே?... 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று சொன்னால் ஊழலை ஒழிக்கலாம் என்று சொன்னால் 2000 ரூபாய் நோட்டை யாரும் பதுக்கி வைக்க முடியாத அளவிற்கு அது என்ன அவ்வளவு பெரியதாகவா இருக்கிறது? 1000 ரூபாய் நோட்டுக்களாக 10 பெட்டியில் அடுக்கவேண்டிய கறுப்புப் பணத்தை இப்போது 5 பெட்டியில் அடக்கி விடலாமே. மீதம் 5 பேட்டிகள் இருக்குமே.... இது ஊழலை ஒழிப்பதா? அல்லது மீதமுள்ள பெட்டிகளையும் நிரப்பவேண்டும் என்பதா?
சிந்தித்துப் பாருங்கள். என்னுடைய ஆதங்கம் ஈபி ஆபீஸ் ஊழியன் இல்லை. அவன்தான் ஆரம்பம்.....
அதுமட்டுமல்லாமல், இன்று பணம் வசூலிக்கமாட்டேன் நாளைக்கு அபராதத்துடன் வசூலிப்பேன் என்று சொல்வதற்கு அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஒரு நாட்டின் பிரதம மந்திரியின் உத்தரவை மீறியது மட்டுமல்லாமல், பொதுமக்கள் கேள்வி கேட்டவுடன் பிரதமரிடம் முறையிட்டு அழைத்து வா என்று சொல்கிறான் என்றால் யாரும் செய்ய மாட்டார்கள் என்ற திமிர்தானே? அவனுடைய முட்டாள்தனமான திமிரை அடக்கித்தானே ஆக வேண்டும். செல்லாத நோட்டை வைத்துக்கொண்டு பிரச்சினை செய்தால் அவன் புகார் கொடுத்துத்தான் ஆக வேண்டும்? திருட்டு கரண்ட் எடுத்து பயன்படுத்தினாலும் அவன் நடவடிக்கை எடுத்துத்தான் ஆக வேண்டும்?
500 ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னால் இதில் கவர்னருடைய கையெழுத்து இருக்கிறது. இது செல்லாது என்று சொன்னால் செல்லாத நோட்டில் கவர்னர் ஏன் கையெழுத்து போட்டார்? நீ கவர்னரை அழைத்து வா என்று நான் சொல்லலாம் அல்லவா? திமிர்தானே எல்லா அதிரடியான முடிவுகளுக்கும் காரணமாக இருக்கிறது? அரசு ஊழியர்களும், ஆட்சியில் இருப்பவர்களும் மட்டும்தான் திமிர் காட்ட முடியுமா? நாமும் திமிர் காட்டினால் என்ன?
எல்லா ATM மையங்களிலும் சாதாரண பொதுமக்கள்தான் வரிசையில் நிற்கிறார்கள் தவிர எந்த அரசியல்வாதியும், எந்த தொழிலதிபர்களும் நிற்கவில்லையே?... 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று சொன்னால் ஊழலை ஒழிக்கலாம் என்று சொன்னால் 2000 ரூபாய் நோட்டை யாரும் பதுக்கி வைக்க முடியாத அளவிற்கு அது என்ன அவ்வளவு பெரியதாகவா இருக்கிறது? 1000 ரூபாய் நோட்டுக்களாக 10 பெட்டியில் அடுக்கவேண்டிய கறுப்புப் பணத்தை இப்போது 5 பெட்டியில் அடக்கி விடலாமே. மீதம் 5 பேட்டிகள் இருக்குமே.... இது ஊழலை ஒழிப்பதா? அல்லது மீதமுள்ள பெட்டிகளையும் நிரப்பவேண்டும் என்பதா?
சிந்தித்துப் பாருங்கள். என்னுடைய ஆதங்கம் ஈபி ஆபீஸ் ஊழியன் இல்லை. அவன்தான் ஆரம்பம்.....
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
T.N.பாலசுப்ரமணியன் அவர்களே, 30 ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது என்பதை சொன்னதால்தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நான் ஈபி பில் கட்டுவதற்கு அலுத்துக்கொள்ளவில்லை. என்னால் ஆன்லைனில் ஈபி பில் கட்ட முடியும். ஆனாலும் நடைமுறை என்ன இருக்கிறது என்பதற்காகத்தான் மக்களோடு மக்களாக செயல்படுகிறேன்...
உங்கள் கருத்திற்கு நன்றி.
உங்கள் கருத்திற்கு நன்றி.
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
பிரணவ் ஜெயின்.
அறிமுகப் பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.
தொடர்ந்து இணைந்து இருங்கள்.
ரமணியன்
அறிமுகப் பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.
தொடர்ந்து இணைந்து இருங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
இதில் சரியா தவறா என்று கேட்பதற்கு ஒன்றுமே இல்லை. நியாயப்படி பார்த்தால் அந்த மின்சார ஊழியர் உங்களை அலைகழிக்க செய்தது மிகத்தவறு தான். அதனை மறுப்பதற்கு இல்லை. ஆனால், அதற்காக அவரைப்போலவே நாளை நானும் "மோடியை கூட்டி வா என்பேன்.." என்பதெல்லாம் பொறுப்பான வார்த்தைகள் அல்ல என்பது என் கருத்து. பிறகு அந்த ஊழியருக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போகுமே....
பண பரிவர்த்தனையில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் தான் சமீப நாட்களாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
மேலும், இந்த பிரச்சனையை நீங்கள் AE கவனத்திற்க்கோ அல்லது AEE கவனத்திற்க்கோ கொண்டு சென்றிருந்தால் உடனடியாக உங்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும். அதை விட்டு வீண் காலவிரயம் செய்திருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.
நாட்டின் நலன் கருதி ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கும் போது அதில் சில அசௌகர்யங்கள் ஏற்படத்தான் செய்யும். அதுவும் தற்காலிகமாக..... இச்சமயத்தில் மட்டுமே நாட்டின் பிரஜைகளான நமக்கும் சமூகப்பொறுப்பு உள்ளது என்பதை காட்டமுடியும்.
அதனால் சின்ன சின்ன அசௌகரியங்களை பொறுத்துக்கொள்ளலாம் அல்லது தவிர்க்க முடியுமானால் தவிர்க்க பார்க்கலாம்.
பண பரிவர்த்தனையில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் தான் சமீப நாட்களாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
மேலும், இந்த பிரச்சனையை நீங்கள் AE கவனத்திற்க்கோ அல்லது AEE கவனத்திற்க்கோ கொண்டு சென்றிருந்தால் உடனடியாக உங்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும். அதை விட்டு வீண் காலவிரயம் செய்திருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.
நாட்டின் நலன் கருதி ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கும் போது அதில் சில அசௌகர்யங்கள் ஏற்படத்தான் செய்யும். அதுவும் தற்காலிகமாக..... இச்சமயத்தில் மட்டுமே நாட்டின் பிரஜைகளான நமக்கும் சமூகப்பொறுப்பு உள்ளது என்பதை காட்டமுடியும்.
அதனால் சின்ன சின்ன அசௌகரியங்களை பொறுத்துக்கொள்ளலாம் அல்லது தவிர்க்க முடியுமானால் தவிர்க்க பார்க்கலாம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
500 / 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது
# இந்த அறிவிப்பால் நாடு திருந்துமா என்று தெரியாது.
# இந்த அறிவிப்பால் நாட்டில் கருப்பு பணம் ஒழியுமா என்று தெரியாது.
# இந்த அறிவிப்பால் நாடு வளமான பாதைக்கு வருமா என்று தெரியாது.
# இந்த அறிவிப்பால் நாட்டில் ஊழல் முற்றிலும் ஒழியுமா என்று தெரியாது.
"ஆனால்"
# என் உழைப்பின் பலனை நோகாமல் அனுபவித்தவனை உலுக்கியெடுத்த உருட்டுக்கட்டை இந்த அறிவிப்பு.
# 1,76,000/ கோடியை அடித்த கொள்ளையர்களை அனுபவிக்க விடாமல் செய்தது இந்த அறிவிப்பு.
# கண்டெய்னரில் கடத்திய பணத்தை கசக்கி போடவைத்தது இந்த அறிவிப்பு.
# கரைவேட்டி கவுன்சிலர்களின் அக்கிரமத்தை அம்மணமாக்கியது இந்த அறிவிப்பு.
# லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளை முதன் முதலாக துங்கவிடாமல் செய்தது இந்த அறிவிப்பு.
# நம்மை எவனாலும் ஒன்றுமே செய்யமுடியாது என்று நினைத்த அரசியல் தலைவர்கள், லஞ்சத்தில் கொழித்த அரசு அதிகாரிகளை நொடிப்பொழுதில் நொறுக்கியது இந்த அறிவிப்பு.
# கல்லூரிகளில் சேருவதற்கு நல்ல மதிப்பெண்கள் இருந்தும் லட்ச லட்ச்சமாக டொனேஷன் வாங்கி அப்பாவி மாணவர்கள படிக்கும் பருவத்திலேயே கடனாளிகளாக மாற்றிய கல்வி வியாபாரிகளுக்கு நொடியில் பாடம் புகட்டியது இந்த "படிக்காத மேதையின் "அறிவிப்பு.
# கலக்கத்துடன் வரும் நோயாளிகளை மேலும் கலங்க வைத்து பணத்தை ஈவு இரக்கம் பார்க்காமல் பிடுங்குகின்ற பல் நோக்கு சிறப்பு மருத்துவமனைகளின் மருத்துவ முதலாளிகளை நொடிப்பொழுதில் பைத்தியகாரனாக்கியது இந்த அறிவிப்பு...
# கூட்டணி என்ற பெயரில் மூட்டை மூட்டையாக ஆட்சியாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மக்களை முட்டாளாக நினைத்த அரசியல் மேதாவிகளை நொடியில் கூமுட்டையாக்கிய அறிவிப்பு.
# வாழ்நாளில் இவர்களுக்கு தண்டனையே கிடையாதா ஒரு "இந்தியன் "தாத்தா வரமாட்டாரா ஒரு "சிவாஜி த பாஸ் " வரமாட்டாரா என்று நினைத்த என்னைப்போன்ற சாதாரண மனிதனுக்கு நானே இந்த பணபிசாசுகளை குமுற குமுற கதற கதற அடித்து நொறுக்கியது போல ஒரு உணர்வை ஏற்படுத்தியது இந்த அறிவிப்பு ( ஆப்பு) .
நன்றி: வாட்ஸ் அப்.
# இந்த அறிவிப்பால் நாடு திருந்துமா என்று தெரியாது.
# இந்த அறிவிப்பால் நாட்டில் கருப்பு பணம் ஒழியுமா என்று தெரியாது.
# இந்த அறிவிப்பால் நாடு வளமான பாதைக்கு வருமா என்று தெரியாது.
# இந்த அறிவிப்பால் நாட்டில் ஊழல் முற்றிலும் ஒழியுமா என்று தெரியாது.
"ஆனால்"
# என் உழைப்பின் பலனை நோகாமல் அனுபவித்தவனை உலுக்கியெடுத்த உருட்டுக்கட்டை இந்த அறிவிப்பு.
# 1,76,000/ கோடியை அடித்த கொள்ளையர்களை அனுபவிக்க விடாமல் செய்தது இந்த அறிவிப்பு.
# கண்டெய்னரில் கடத்திய பணத்தை கசக்கி போடவைத்தது இந்த அறிவிப்பு.
# கரைவேட்டி கவுன்சிலர்களின் அக்கிரமத்தை அம்மணமாக்கியது இந்த அறிவிப்பு.
# லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளை முதன் முதலாக துங்கவிடாமல் செய்தது இந்த அறிவிப்பு.
# நம்மை எவனாலும் ஒன்றுமே செய்யமுடியாது என்று நினைத்த அரசியல் தலைவர்கள், லஞ்சத்தில் கொழித்த அரசு அதிகாரிகளை நொடிப்பொழுதில் நொறுக்கியது இந்த அறிவிப்பு.
# கல்லூரிகளில் சேருவதற்கு நல்ல மதிப்பெண்கள் இருந்தும் லட்ச லட்ச்சமாக டொனேஷன் வாங்கி அப்பாவி மாணவர்கள படிக்கும் பருவத்திலேயே கடனாளிகளாக மாற்றிய கல்வி வியாபாரிகளுக்கு நொடியில் பாடம் புகட்டியது இந்த "படிக்காத மேதையின் "அறிவிப்பு.
# கலக்கத்துடன் வரும் நோயாளிகளை மேலும் கலங்க வைத்து பணத்தை ஈவு இரக்கம் பார்க்காமல் பிடுங்குகின்ற பல் நோக்கு சிறப்பு மருத்துவமனைகளின் மருத்துவ முதலாளிகளை நொடிப்பொழுதில் பைத்தியகாரனாக்கியது இந்த அறிவிப்பு...
# கூட்டணி என்ற பெயரில் மூட்டை மூட்டையாக ஆட்சியாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மக்களை முட்டாளாக நினைத்த அரசியல் மேதாவிகளை நொடியில் கூமுட்டையாக்கிய அறிவிப்பு.
# வாழ்நாளில் இவர்களுக்கு தண்டனையே கிடையாதா ஒரு "இந்தியன் "தாத்தா வரமாட்டாரா ஒரு "சிவாஜி த பாஸ் " வரமாட்டாரா என்று நினைத்த என்னைப்போன்ற சாதாரண மனிதனுக்கு நானே இந்த பணபிசாசுகளை குமுற குமுற கதற கதற அடித்து நொறுக்கியது போல ஒரு உணர்வை ஏற்படுத்தியது இந்த அறிவிப்பு ( ஆப்பு) .
நன்றி: வாட்ஸ் அப்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
சாதாரண நாட்களில் இப்படி நடந்திருந்தால் நான் AE அல்லது AEE இடம் முறையிருப்பேன். ஆனால், நாடு முழுவது இதுவே பிரச்சினையாக இருந்ததால் AE அவர்களிடம் முறையிடவேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. அடுத்த முறை ஏதேனும் பிரச்சினை என்றால் கண்டிப்பாக AE இடம் முறையிடுகிறேன்.
உங்கள் கருத்திற்கும் ஆலோசனைக்கும் நன்றி சகோதரி விமந்தினி.
உங்கள் கருத்திற்கும் ஆலோசனைக்கும் நன்றி சகோதரி விமந்தினி.
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !
» 20 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டு வெளியாகிறது
» மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு: வங்கியில் புழக்கம் துவக்கம்
» பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
» 108 ஆம்புலன்ஸ் அலைகழிப்பு செய்தவர்இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிக்கினார்
» 20 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டு வெளியாகிறது
» மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு: வங்கியில் புழக்கம் துவக்கம்
» பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
» 108 ஆம்புலன்ஸ் அலைகழிப்பு செய்தவர்இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிக்கினார்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|