ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்!

2 posters

Go down

இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்! Empty இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்!

Post by ayyasamy ram Thu Nov 10, 2016 8:34 am

இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்! KifwVXcwTB8kQMQPGThA+tessy_thomas
-
நவீன போர்க்களத்தின் அத்தியாவசிய ஆயுதமாகிவிட்ட ஏவுகணைகளுக்கு பிற நாடுகளைச் சார்ந்திராமல், நமக்கு நாமே சுயசார்புடன் இருப்பதற்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (Defence Research and Development Organization- DRDO) மேற்கொண்டுள்ள ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தின் (IGMDP) சூத்திரதாரி, இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்படும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

அதேபோன்று, அப்துல் கலாமினால் அடையாளம் காணப்பட்டு, இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி என்று பெயரெடுத்தவர், கேரளத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான டெஸ்ஸி தாமஸ்.

கேரள மாநிலம், ஆலப்புழாவில், 1963, ஏப்ரலில் டெஸ்ஸி தாமஸ் பிறந்தார். தந்தை வனத்துறை அதிகாரி. இளம் வயதில் தும்பா ஏவுதளத்தின் அருகே அவர்களது குடும்பம் குடியிருந்தது. அப்போது அங்கிருந்து ஏவப்பட்ட ராக்கெட்களைக் கண்டு, டெஸ்ஸிக்கு அதன்மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

திருச்சூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்த அவர், அடுத்து புனேவிலுள்ள ஆயுதத் தளவாட தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து, ஏவுகணைக் கல்வியில் எம்.டெக். பட்டம் பெற்றார். கல்லூரிப் படிப்பின்போது சிறந்த பாட்மின்டன் வீராங்கனையாகவும் அவர் விளங்கினார்.

அடுத்து குடிமையியல் தேர்வு எழுதினார். அதற்கான மற்றொரு தேர்வுக்கு அழைப்பு வந்த அதே நாளில், டிஆர்டிஓ அமைப்பிடமிருந்து பணி நேர்காணலுக்கும் அழைப்பு வந்தது. ராக்கெட்கள் மீதான ஆர்வத்தால், ஐஏஎஸ் கனவைத் துறந்து டிஆர்டிஓ சென்றார். ஹைதராபாத் மையத்தில் (Advanced System Laboratory- ASL) 1985-இல் இளநிலை விஞ்ஞானியாக இணைந்தார்.

அங்கு ராக்கெட் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த அப்துல் கலாம் டெஸ்ஸியின் திறமையை உணர்ந்து, அவரை ஏவுகணை திட்டக்குழுவில் (1988) சேர்த்தார்.
ஆரம்பத்தில் அக்னி-3 ஏவுகணைத் திட்டத்தின் உதவி திட்ட இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார். அதன் ஆரம்பகட்டத் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து சரிப்படுத்தியதில் டெஸ்ஸியின் பங்களிப்பு முக்கியமானது. 3,000கி.மீ. தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்ட அக்னி-3, மே 2008}இல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அதையடுத்து, 4,000 கி.மீ. தொலைவுக்கு பாயும் அக்னி- 4 ஏவுகணைத் திட்டம் துவங்கியது. அதன் திட்ட இயக்குநராக டெஸ்ஸி நியமிக்கப்பட்டார்.

இத்துறையில் முதல்முறையாக ஒரு பெண்ணாக அதனை டெஸ்ஸி சாதித்தார். அதற்கு அவரது தொழில்நுட்பத் திறனும், எடுத்த பணியை முடிக்கும் ஈடுபாடும் காரணமாகின. 2011-இல் அக்னி-4 வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

இதனிடையே 5,000 கி.மீ. தொலைவுக்கு கண்டம் விட்டு கண்டம் தாண்டும் அக்னி-5 ஏவுகணைத் திட்டம் 2009-இல் துவங்கப்பட்டது. அதன் திட்ட இயக்குநராகவும் டெஸ்ஸி தாமஸ் பொறுப்பேற்றார். அக்னி-5 ஏவுகணை 2012, ஏப்ரல் 19-இல் வெற்றி இலக்கை எட்டியது.

இதில் டெஸ்ஸியின் குறிப்பிடத்தக்க பணியாகக் கருதப்படுவது, வளிமண்டலத்தில் அதீத திசைவேகத்தில் செல்லும் ஏவுகணையின் வெளிப்புறம் உருவாகும் உச்சபட்ச ( சுமார் 3,000 டிகிரி செல்சியஸ்) வெப்பத்தைச் சமாளிக்கும் தொழில்நுட்பமாகும். வளிமண்டல ஏவுகலன் நுழைவு முறை என்று அழைக்கப்படும்(Re entry Vehicle System- RVS) அந்தத் தொழில்நுட்பம் டெஸ்ஸி தாமஸின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியது.

அதுமட்டுமல்ல, ஏவுகணையின் தாக்குதல் இலக்கில் ஏற்படும் உத்தேசப் பிழையின் அளவு (Circular error probable- CEP) 40 மீட்டருக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது, உலக அளவில் மிகத் துல்லியமானவையாக அக்னி ஏவுகணைகள் மதிக்கப்படுகின்றன.

விஞ்ஞானி என்பதால் தனது குடும்பக் கடமைகளை டெஸ்ஸி தாமஸ் கைவிட்டுவிடவில்லை. அவர் புனே கல்லூரியில் படித்தபோது சக மாணவர் சரோஜ்குமார் படேலைக் காதலித்து, மதம் கடந்த மணம் புரிந்தார்.

சரோஜ்குமார் கப்பற்படையில் கமாண்டராக உள்ளார். அவர்களுக்கு தேஜாஸ் என்ற மகன் உள்ளார். ஒரு சிறந்த குடும்பத் தலைவியாகவும், அதேசமயம் திறமையான விஞ்ஞானியாகவும் டெஸ்ஸி தாமஸ் விளங்குவதாக ஊடகங்கள் பாராட்டுகின்றன.

டெஸ்ஸி தாமஸின் சாதனைகளுக்காக அவருக்கு லால்பகதூர் சாஸ்திரி விருது, மதிப்புறு முனைவர் பட்டம் உள்ளிட்ட கௌரவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அக்னிபுத்ரி என்று பாராட்டப்படும் அவரது ஏவுகணை திட்டப் பணிகள் இன்றும் தொடர்கின்றன.
– வ.மு.முரளி.

லைஃப் ஸ்டைல் ஸ்பெஷல் – தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்! Empty Re: இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்!

Post by ராஜா Thu Nov 10, 2016 11:50 am

இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்! 3838410834 நன்றி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum