புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_m10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10 
284 Posts - 45%
heezulia
மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_m10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_m10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_m10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_m10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10 
19 Posts - 3%
prajai
மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_m10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_m10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_m10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_m10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_m10மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 01, 2016 7:34 am

மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு 0o9I9ZMTXKwcD2n4jZLf+building
-
சென்னை மௌலிவாக்கத்தில் பாதுகாப்பற்ற நிலையில்
உள்ள 11 அடுக்குமாடி கட்டடம் புதன்கிழமை (நவ.2)
இடிக்கப்பட உள்ளது என சென்னை பெருநகர வளர்ச்சிக்
குழமத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் சி.விஜயராஜ்குமார்
அறிவித்துள்ளார்.

இந்தக் கட்டடம் அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி
வரை இடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பெயரில் தமிழக
அரசின் சார்பில் திங்கள்கிழமை வெளியான அறிக்கை விவரம்:

பாதுகாப்பாக உள் வெடிப்பு முறையில்...: இந்த 11 அடுக்குமாடி
கட்டடத்தை இடிக்க நவீன உள் வெடிப்பு தொழில்நுட்ப முறை
("இன்ப்ளோஷன்' பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது, வெடி
மருந்துகள் பயன்படுத்தி, பாதுகாப்பான முறையில் வெடிக்கச்
செய்து, அதே இடத்தில் கட்டடம் உள்நோக்கி விழும் வகையில்
இடிக்கப்பட உள்ளது.

பாதுகாப்புக்கு..: இடிக்கப்பட உள்ள இந்த கட்டடத்தைச் சுற்றி
100 மீ சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து கட்டடங்களின் நிலை,
பொதுப்பணித் துறை, சிஎம்டிஏ உள்ளிட்டவை மூலம் ஆய்வு
செய்யப்பட்டன. மேலும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில்
கொண்டு விரிவான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்
கொள்ளப்பட்டுள்ளன.

தாற்காலிக தங்குமிடம்-ஆம்புலன்ஸ் வசதி: பொதுமக்கள்
தாற்காலிகமாக தங்குவதற்கு மதனந்தபுரம் பிரதான சாலையிலுள்ள
ஸ்ரீ எஸ்.ஏ.கே. ஜெய் மாருதி மஹால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தங்குமிடத்துக்குச் செல்ல கட்டணமில்லா பேருந்து வசதியும்,
இரண்டு தீயணைப்பு வாகனங்கள், நான்கு அவசர கால ஆம்புலன்ஸ்
வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

அதேபோல், 100 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும்
கட்டடம் இடிப்பது குறித்தும், மாற்று இடத்துக்குச் செல்வது குறித்தும்
தனித்தனியாக அறிவிப்பு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் வழங்கப்பட
உள்ளன.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே...: மேலும் கட்டடம்
இடிக்கப்படுவதற்கு முன்பு காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும்
இணைந்து அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வெளியேறி
விட்டார்களா என்பதை உறுதி செய்த பின்புதான் இடிக்கும் பணி
மேற்கொள்ளப்பட உள்ளது.

பீதி வேண்டாம்:
கட்டடம் இடிக்கப்படுவது குறித்து அப்பகுதி பொதுமக்கள் எவ்வித
அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை. கட்டடம் இடிக்கப்படும்
பணி முடிவடைந்தவுடன் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு
செல்வதற்கு உரிய அறிவிப்பு வழங்கப்படும். எனவே அப்பகுதியில்
உள்ள அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பினை வழங்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அரசின் செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------------
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 01, 2016 10:35 am

முதல் முறையாக நவீன முறையில் இடிக்கப்பட உள்ள பலமாடி கட்டிடம் .

போதிய பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது நல்லதே .

இடிபடுவதை பார்க்க ஏராளமான கூட்டம் சேரும் .

ஏற்கனவே இந்த அடுக்கக குடியிருப்பில் குடிபுக பணம் கட்டியவர்கள் கதி என்ன ?
பணம் கிடைக்குமா ?????

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Nov 01, 2016 12:45 pm

கொடுத்த பணம் எள்ளுதான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 02, 2016 8:48 pm

மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு JR3t8CcQKaDuxCHGUNwA+moulli_3066040f

மவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில் இருந்த 11 மாடி கட்டிடம் இன்று (புதன்கிழமை) இரவு 6.50 மணிக்கு இம்ப்ளோசன் என்ற நவீன தொழில்நுட்பத்தில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

கட்டிடத்தின் தூண்கள் அனைத்திலும் துளையிடப்பட்டு வெடிமருந்து நிரப்பப்பட்டது. ரிமோட்டை இயக்கிய 3 வினாடியில் மவுலிவாக்கம் கட்டிடம் தரைமட்டம் ஆனது.

கட்டிடம் இடிந்ததும் மவுலிவாக்கம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. கட்டிடம் இடிக்கப்பட்டதை அடுத்து மணலில் கட்டிய சிற்பம் போல சரிந்து விழுந்தது.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவனம், தலா 11 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வந்தது. இதில், 'பிளாக் பி' என்ற 11 மாடி கட்டிடம், கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி திடீரென இடிந்து தரைமட்டமானது.

இந்த விபத்தில் 61 பேர் இறந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். அதன் அருகில் உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, அந்தக் கட்டிடம் இன்று பகல் 2 மணி முதல் 4 மணிக்குள் கட்டிடம் முழுமையாக இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மழையின் காரணமாக இரவு 6.50 மணிக்கு கட்டிடம் இடிக்கப்பட்டது.

பாதுகாப்பு நடவடிக்கையாக, 100 மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டிடங்கள், வீடுகளில் வசிப்பவர்கள் வெளி யேற்றப்பட்டனர்.

தமிழகத்தில் 11 மாடி கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது இதுவே முதல்முறை.

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 03, 2016 1:12 pm

T.N.Balasubramanian wrote:முதல் முறையாக  நவீன முறையில் இடிக்கப்பட உள்ள பலமாடி கட்டிடம் .

போதிய பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது நல்லதே .

இடிபடுவதை பார்க்க ஏராளமான கூட்டம் சேரும் .

ஏற்கனவே இந்த அடுக்கக குடியிருப்பில் குடிபுக பணம் கட்டியவர்கள் கதி என்ன ?
பணம் கிடைக்குமா ?????

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1225851

போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டிருந்த 11 அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டது அதில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பான சாட்சியங்களை அழிப்பதற்காகவே என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ''சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு இடிந்து விழுந்த 11 மாடிக்கட்டடம் தவிர எஞ்சியிருந்த மற்றொரு 11 மாடிக்கட்டடமும் வெடி வைத்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் விலகிவிட்டாலும் அதிலுள்ள வீடுகளை வாங்கியவர்களுக்குத்தான் இன்னும் விடிவு பிறக்கவில்லை.

மவுலிவாக்கத்தில் பிரைம் டிரஸ்ட் ஹெயிட்ஸ் என்ற பெயரில் அடுக்குமாடி கட்டடத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தலா 11 மாடிகளை கொண்ட இரு உயர் அடுக்கு கட்டடங்களில் மொத்தம் 88 வீடுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

ஒரு கட்டடத்துக்கு the Faith என்றும் இன்னொரு கட்டடத்துக்கு The Belief என்றும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இவ்வாறு ஒட்டுமொத்த பெயரில் தொடங்கி தனித்தனி பெயர் வரை அனைத்திலும் 'நம்பிக்கை' இருந்த போதிலும், அதை நம்பி வாங்கிய மக்களின் நம்பிக்கைத்தான் காப்பாற்றப்படவில்லை. தரமற்ற வகையில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி கட்டடங்களில் ஒன்று கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம்28ஆம் தேதி விபத்துக்குள்ளாகி தரை மட்டமானது. இவ்விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்றிருந்த இன்னொரு கட்டடம் தான் நேற்று தகர்க்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்த கட்டடம் குறித்த பாதுகாப்பு அச்சங்கள் முற்றிலுமாக முடிவுக்கு வந்திருக்கின்றன. ஆனால், இக்கட்டடத்தில் வீடுகளை வாங்க் பணம் கட்டியவர்களின் நிலை தான் மேலும், மேலும் பரிதாபத்துக்குரியதாக மாறி வருகிறது. இந்தக் கட்டடத்தில் மொத்தம் 88 வீடுகள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு 60 கோடி என்று கூறப்படுகிறது. அவற்றில் 48வீடுகளை மக்கள் வாங்கியிருந்தனர். அந்த வீடுகளுக்காக அவர்கள் மொத்தம் ரூ.20.28 கோடி பணம் செலுத்தியிருந்தனர். 2014ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்துக்குப் பிறகு வீடுகள் இல்லாமல் போன நிலையில் அதற்காக அவர்கள் செலுத்திய பணத்தை திருப்பித்தர பிரைம் சிருஷ்டி மறுத்து விட்டது.

இந்தத் தொகையை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்து விட்டது. இதனால் தங்களின் சொத்தை விற்றும், வங்கிக் கடன் வாங்கியும் வீட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் கடன்காரர்கள் ஆனது தான் மிச்சம்.

சென்னையில் வாழும் நடுத்தர மக்களின் முதன்மைக் கனவு என்பது சொந்த வீடு வாங்குவதுதான். அதன்படி தான் அவர்கள் மவுலிவாக்கம் கட்டடத்தில் வீடுகளை வாங்கினார்கள். கட்டடம் இடிந்து விழுந்ததற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணமில்லை. ஏரிக் கால்வாய் என பத்திரப்பதிவுத்துறை ஆவணங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தில் சட்டவிரோதமாக கட்டடம் கட்டிய கட்டுமான நிறுவனமும், கையூட்டு வாங்கிக்கொண்டு அதற்கு அனுமதி அளித்த அரசும் தான் கட்டடம் இடிந்ததற்கு காரணமாகும். சட்டவிரோத செயல்களால் பயனடைந்த கட்டுமான நிறுவனமும் அதற்குத் துணை நின்ற ஆட்சியாளர்களும் கிடைத்தவரை சுருட்டிக்கொண்டு ஒதுங்கி விட, எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் ஒட்டுமொத்த இழப்பையும் தாங்க வேண்டும் என்பது என்ன வகை நீதி?

மவுலிவாக்கம் கட்டடத்தை கட்டிய நிறுவனம் அதிமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அதிகாரித்தின் உச்சத்தை தற்காலிகமாக தொட்டுப்பார்க்கும் அமைச்சரின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகிறது.
இந்நிறுவனத்துக்கு அடுத்தடுத்து விதிகளை தளர்த்தி அனுமதி வழங்கியது முந்தைய ஆட்சியில் ஆதிக்கம் செலுத்திய நால்வரணியின் அங்கமாக இருந்தவர். இந்த கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியவர் முன்னாள் பெண் அமைச்சர். ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தான், முறைகேடுகளின் சாட்சியங்களையெல்லாம் அழிக்கும் நோக்குடன் இக்கட்டடமும் இடிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்களுக்கும் ஆட்சியாளர்கள் துணை போனதால், வீடுகளை வாங்க பணம் செலுத்தி விட்டு நடுத்தெருவில் நிற்கும் மக்களுக்கு அரசு தான் இழப்பீடு வழங்க வேண்டும். சேமித்து வைத்திருந்த பணத்தை வீட்டுக்காக முதலீடு செய்துவிட்டு, வங்கிக்கடன் தவனைக்காக மாத ஊதியத்தில் பெரும்பகுதியை செலுத்திவிட்டு வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கும் மக்களின் துயரங்களை அரசு உணர வேண்டும். மவுலிவாக்கம் வீட்டுக்காக அவர்கள் செலுத்திய பணத்தை அரசு திருப்பி வழங்க வேண்டும் அல்லது போரூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகளில் அவர்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும்'' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 03, 2016 8:55 pm

பாவம் அவைகளை வாங்கிய மக்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக