ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்!

Go down

விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Empty விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்!

Post by ayyasamy ram Wed Nov 02, 2016 11:00 am

விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! GfAZPqXTlitwfYuod1Pw+E_1477633202
-
இந்தோனேஷியக் காடுகளில் ஒன்றில் தங்களது
பெண் குழந்தையை தொலைத்தது ஒரு குடும்பம்.
கடைசி வரை குழந்தையை கண்டு பிடிக்க முடியாமல்,
‘நரிகளுக்கு, என் மகள் இரையாகியிருக்க கூடும்…’
என்று பேட்டி கொடுத்து, தலைமுழுகி விட்டார்,
அக்குழந்தையின் தந்தை.

அக்குழந்தை, நரிக்கூட்டம் ஒன்றில் சிக்கிக் கொண்டது
உண்மை தான் என்றாலும், குழந்தையை, நரிகள் கடித்துக்
குதறவில்லை; பேணி வளர்த்தன. நம்ப முடியவில்லை
அல்லவா… ஆனால், இது உண்மைச் சம்பவம்.

பருவ வயதில் மனிதர்களின் பார்வையில் தென்பட்டாள்,
அப்பெண். குடும்பமே புறப்பட்டுப் போய், நரிகளிடமிருந்து மீட்டு,
அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

ஆனால், பரிதாபம், அவளது பழக்க வழக்கங்கள் அனைத்தும்,
நரித்தனமாகவே இருந்தன. பேசத் தெரியவில்லை; எப்போதும்
வெறித்த பார்வையோடு, ஊளை இடுவதுமாக இருந்தாள்;
பச்சை மாமிசம் மட்டுமே உண்டாள். மனிதர்களை வெறுத்தாள்;
சிறிது கூட, சிநேக பாவமே காட்டவில்லை.

சில வேளைகளில் முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டாள்.
அவளை, திருத்த முடியவில்லை என்று, பெற்றோர் மனம்
வெறுத்துப் பேசிய செய்தி, அப்பெண்ணின் புகைப்படத்துடன்,
இந்தோனேஷிய செய்தித்தாள்களில் வெளியானதை நான்
பார்த்தேன்.

விலங்குகள் மத்தியில் வளர்ந்த இப்பெண்ணிடம் மட்டுமல்ல,
நமக்குள்ளேயும் விலங்கு குணங்கள், எப்படியோ ஊறிப்
போயியுள்ளன.

யானை புகுந்த சோளக் காட்டை, கரும்புக் கொல்லையை,
வாழைத் தோப்பை பார்த்திருக்கிறீர்களா… தின்றது கால்;
அழித்தது முக்கால்!

அநியாயமாய் ஒன்றை அடைய வேண்டும் என்கிற எண்ணம்,
நமக்குள் வளர்கிற போது, அதை, கட்டுக்குள் கொண்டு வர
வேண்டும்; இல்லாவிட்டால், கால் பகுதியை அடைய, முக்கால்
பகுதியை, அழித்து விடுகிற யானை குணம், நமக்குள் வந்து
விடும்.


Last edited by ayyasamy ram on Wed Nov 02, 2016 11:00 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Empty Re: விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்!

Post by ayyasamy ram Wed Nov 02, 2016 11:00 am

சிங்கத்தின் வயிறு நிரம்பி விட்டால், அது மற்ற உயிர்களுக்கு,
தீங்கு செய்யாது. புலி அப்படி அல்ல; அதற்கு தேவையோ,
இல்லையோ கண்ணில் படுகிற எல்லா உயிரினங்களையும்
கடித்துக் குதறி, கொன்று விட்டுத் தான், மறு வேலை
பார்க்கும்.

‘போனால் போறான் விடு…’ என்கிற குணம், எப்படி புலிக்கு
இல்லையோ, அப்படியே மனிதர்களுள் பலரும், தங்களுக்கு
இடையூறு செய்யாதவர்களையும் அழித்து, ஒழிக்கிற குணத்தை
கொண்டுள்ளனர்.

நம் வழியில் குறுக்கிட்டாலும், நம்மை அசைக்க முடியாது
என்கிற நம்பிக்கையோடு, அவர்களை பார்த்து, மந்தகாசப்
புன்னகை சிந்த முடியும்; ஆனால், இது நிகழ்வது இல்லை.

திருடியே தின்பது பூனையின் குணம்; பிறர் பொருளை
கவர்வதற்கு, நாம் ஆயிரம் நியாயங்களை சொல்லலாம்;
ஆனால், அது அவசியமில்லை. அவை அவமானங்களை
சேர்க்கும் என்பதுடன், அதல பாதாளத்தில் தள்ளி விடக்
கூடியது.
எனவே, பூனை குணம் புறக்கணிக்கப்பட வேண்டிய
ஒன்று!

நாயை, நன்றியுள்ள பிராணி என்கிறோம்;
கடந்த சில மாதங்களுக்கு முன், தினசரி நாளிதழ்களில்,
வேலூரை அடுத்த சோளிங்கரில், தன் எஜமானையே
கடித்துக் குதறி, கொன்று விட்டது ஒரு நாய் என்ற செய்தி
வெளியாகி இருந்தது.

இவர், அந்த நாய்க்கு எந்த தவறும் செய்யவில்லை;
உணவு சார்ந்த பிரச்னை தான், இது!

எக்கட்டத்திலும், நம் நன்றிக்குரியவர்களிடம் அடங்கிப் போக
வேண்டுமே தவிர, ஏதோ ஒரு தவறை அவர்கள் செய்தனர்
என்பதற்காக, அவர்கள் செய்த முக்கிய நன்மையையோ,
பல நன்மைகளையோ மறந்து, சொல்லால், செயலால்,
அவர்களை காயப்படுத்தி விடக்கூடாது.

பாம்பு, பழி வாங்காமல் விடாது என்கின்றனர் சிலர்.
விலங்கின மருத்துவர்கள், இக்கருத்தை ஏற்கின்றனரா என்று
தெரியாது. ஆனாலும், வழி வழி நம்பிக்கையை எடுத்துக்
கொள்வோம்…

பழி வாங்கும் உணர்ச்சி நல்லதல்ல; பழி வாங்கும் செயல்
என்பது, ஒரு தொடர்கதையின் ஆரம்பமே தவிர, முற்றுப்புள்ளி
அல்ல.

பெரிய பெரிய தொடர் கொலைகளிலிருந்து, குடும்ப உறவுச்
சிக்கல்கள் வரை, பழி வாங்கல் எண்ணத்திற்கு, முற்றுப்புள்ளி
வைப்பவர்களே புத்திசாலிகள்!

வல்லவனோடு வம்பு வேண்டாம், துஷ்டனைக் கண்டால் தூர
விலகு என்று மனதைச் சமாதானப்படுத்தியபடி விலகி நின்றால்,
ஒரு துன்பத்தோடு முடித்து விடலாம். தொடர்ந்த துன்பங்கள்
வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கே, பழி வாங்கல்கள்
பொருந்தும்!

ஓரிடத்தில் இருப்புக் கொள்ளாதது, குரங்கு; ‘மனித மனம்
ஒரு குரங்கு…’ என்று பாடினார் கண்ணதாசன். இலக்கின்றி
அலையும் மனதை கட்டுப்படுத்தி, ஒருமுகப்படுத்த, ஆன்மிகம்
நிறைய வழிகளை சொல்லித் தருகிறது.

தியானமும் இதற்கு உதவும். ஏன்… ஒரு விளையாட்டில்
ஈடுபடுதல்; யோகா போன்றவையும், லேசர் கதிராய்,
ஒரு நுணுக்கப் புள்ளியில் நம் எண்ணங்களைக் குவிக்குமாம்.
இதில் வெற்றி பெற்றால், மற்ற விஷயத்திலும் இலக்கு தைக்கிற
பார்வை சாத்தியம்.

விலங்கின குணங்களை வெளியேற்ற முடியாவிட்டாலும்,
விலங்கிட்டு, அவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்
சாமர்த்தியம், நமக்குத் தேவை; இல்லாவிடில் வம்பு தான்!

————————————-

லேனா தமிழ்வாணன்
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum