Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்!
Page 1 of 1
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்!
-
இந்தோனேஷியக் காடுகளில் ஒன்றில் தங்களது
பெண் குழந்தையை தொலைத்தது ஒரு குடும்பம்.
கடைசி வரை குழந்தையை கண்டு பிடிக்க முடியாமல்,
‘நரிகளுக்கு, என் மகள் இரையாகியிருக்க கூடும்…’
என்று பேட்டி கொடுத்து, தலைமுழுகி விட்டார்,
அக்குழந்தையின் தந்தை.
அக்குழந்தை, நரிக்கூட்டம் ஒன்றில் சிக்கிக் கொண்டது
உண்மை தான் என்றாலும், குழந்தையை, நரிகள் கடித்துக்
குதறவில்லை; பேணி வளர்த்தன. நம்ப முடியவில்லை
அல்லவா… ஆனால், இது உண்மைச் சம்பவம்.
பருவ வயதில் மனிதர்களின் பார்வையில் தென்பட்டாள்,
அப்பெண். குடும்பமே புறப்பட்டுப் போய், நரிகளிடமிருந்து மீட்டு,
அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
ஆனால், பரிதாபம், அவளது பழக்க வழக்கங்கள் அனைத்தும்,
நரித்தனமாகவே இருந்தன. பேசத் தெரியவில்லை; எப்போதும்
வெறித்த பார்வையோடு, ஊளை இடுவதுமாக இருந்தாள்;
பச்சை மாமிசம் மட்டுமே உண்டாள். மனிதர்களை வெறுத்தாள்;
சிறிது கூட, சிநேக பாவமே காட்டவில்லை.
சில வேளைகளில் முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டாள்.
அவளை, திருத்த முடியவில்லை என்று, பெற்றோர் மனம்
வெறுத்துப் பேசிய செய்தி, அப்பெண்ணின் புகைப்படத்துடன்,
இந்தோனேஷிய செய்தித்தாள்களில் வெளியானதை நான்
பார்த்தேன்.
விலங்குகள் மத்தியில் வளர்ந்த இப்பெண்ணிடம் மட்டுமல்ல,
நமக்குள்ளேயும் விலங்கு குணங்கள், எப்படியோ ஊறிப்
போயியுள்ளன.
யானை புகுந்த சோளக் காட்டை, கரும்புக் கொல்லையை,
வாழைத் தோப்பை பார்த்திருக்கிறீர்களா… தின்றது கால்;
அழித்தது முக்கால்!
அநியாயமாய் ஒன்றை அடைய வேண்டும் என்கிற எண்ணம்,
நமக்குள் வளர்கிற போது, அதை, கட்டுக்குள் கொண்டு வர
வேண்டும்; இல்லாவிட்டால், கால் பகுதியை அடைய, முக்கால்
பகுதியை, அழித்து விடுகிற யானை குணம், நமக்குள் வந்து
விடும்.
Last edited by ayyasamy ram on Wed Nov 02, 2016 11:00 am; edited 1 time in total
Re: விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்!
சிங்கத்தின் வயிறு நிரம்பி விட்டால், அது மற்ற உயிர்களுக்கு,
தீங்கு செய்யாது. புலி அப்படி அல்ல; அதற்கு தேவையோ,
இல்லையோ கண்ணில் படுகிற எல்லா உயிரினங்களையும்
கடித்துக் குதறி, கொன்று விட்டுத் தான், மறு வேலை
பார்க்கும்.
‘போனால் போறான் விடு…’ என்கிற குணம், எப்படி புலிக்கு
இல்லையோ, அப்படியே மனிதர்களுள் பலரும், தங்களுக்கு
இடையூறு செய்யாதவர்களையும் அழித்து, ஒழிக்கிற குணத்தை
கொண்டுள்ளனர்.
நம் வழியில் குறுக்கிட்டாலும், நம்மை அசைக்க முடியாது
என்கிற நம்பிக்கையோடு, அவர்களை பார்த்து, மந்தகாசப்
புன்னகை சிந்த முடியும்; ஆனால், இது நிகழ்வது இல்லை.
திருடியே தின்பது பூனையின் குணம்; பிறர் பொருளை
கவர்வதற்கு, நாம் ஆயிரம் நியாயங்களை சொல்லலாம்;
ஆனால், அது அவசியமில்லை. அவை அவமானங்களை
சேர்க்கும் என்பதுடன், அதல பாதாளத்தில் தள்ளி விடக்
கூடியது.
எனவே, பூனை குணம் புறக்கணிக்கப்பட வேண்டிய
ஒன்று!
நாயை, நன்றியுள்ள பிராணி என்கிறோம்;
கடந்த சில மாதங்களுக்கு முன், தினசரி நாளிதழ்களில்,
வேலூரை அடுத்த சோளிங்கரில், தன் எஜமானையே
கடித்துக் குதறி, கொன்று விட்டது ஒரு நாய் என்ற செய்தி
வெளியாகி இருந்தது.
இவர், அந்த நாய்க்கு எந்த தவறும் செய்யவில்லை;
உணவு சார்ந்த பிரச்னை தான், இது!
எக்கட்டத்திலும், நம் நன்றிக்குரியவர்களிடம் அடங்கிப் போக
வேண்டுமே தவிர, ஏதோ ஒரு தவறை அவர்கள் செய்தனர்
என்பதற்காக, அவர்கள் செய்த முக்கிய நன்மையையோ,
பல நன்மைகளையோ மறந்து, சொல்லால், செயலால்,
அவர்களை காயப்படுத்தி விடக்கூடாது.
பாம்பு, பழி வாங்காமல் விடாது என்கின்றனர் சிலர்.
விலங்கின மருத்துவர்கள், இக்கருத்தை ஏற்கின்றனரா என்று
தெரியாது. ஆனாலும், வழி வழி நம்பிக்கையை எடுத்துக்
கொள்வோம்…
பழி வாங்கும் உணர்ச்சி நல்லதல்ல; பழி வாங்கும் செயல்
என்பது, ஒரு தொடர்கதையின் ஆரம்பமே தவிர, முற்றுப்புள்ளி
அல்ல.
பெரிய பெரிய தொடர் கொலைகளிலிருந்து, குடும்ப உறவுச்
சிக்கல்கள் வரை, பழி வாங்கல் எண்ணத்திற்கு, முற்றுப்புள்ளி
வைப்பவர்களே புத்திசாலிகள்!
வல்லவனோடு வம்பு வேண்டாம், துஷ்டனைக் கண்டால் தூர
விலகு என்று மனதைச் சமாதானப்படுத்தியபடி விலகி நின்றால்,
ஒரு துன்பத்தோடு முடித்து விடலாம். தொடர்ந்த துன்பங்கள்
வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கே, பழி வாங்கல்கள்
பொருந்தும்!
ஓரிடத்தில் இருப்புக் கொள்ளாதது, குரங்கு; ‘மனித மனம்
ஒரு குரங்கு…’ என்று பாடினார் கண்ணதாசன். இலக்கின்றி
அலையும் மனதை கட்டுப்படுத்தி, ஒருமுகப்படுத்த, ஆன்மிகம்
நிறைய வழிகளை சொல்லித் தருகிறது.
தியானமும் இதற்கு உதவும். ஏன்… ஒரு விளையாட்டில்
ஈடுபடுதல்; யோகா போன்றவையும், லேசர் கதிராய்,
ஒரு நுணுக்கப் புள்ளியில் நம் எண்ணங்களைக் குவிக்குமாம்.
இதில் வெற்றி பெற்றால், மற்ற விஷயத்திலும் இலக்கு தைக்கிற
பார்வை சாத்தியம்.
விலங்கின குணங்களை வெளியேற்ற முடியாவிட்டாலும்,
விலங்கிட்டு, அவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்
சாமர்த்தியம், நமக்குத் தேவை; இல்லாவிடில் வம்பு தான்!
–
————————————-
லேனா தமிழ்வாணன்
வாரமலர்
தீங்கு செய்யாது. புலி அப்படி அல்ல; அதற்கு தேவையோ,
இல்லையோ கண்ணில் படுகிற எல்லா உயிரினங்களையும்
கடித்துக் குதறி, கொன்று விட்டுத் தான், மறு வேலை
பார்க்கும்.
‘போனால் போறான் விடு…’ என்கிற குணம், எப்படி புலிக்கு
இல்லையோ, அப்படியே மனிதர்களுள் பலரும், தங்களுக்கு
இடையூறு செய்யாதவர்களையும் அழித்து, ஒழிக்கிற குணத்தை
கொண்டுள்ளனர்.
நம் வழியில் குறுக்கிட்டாலும், நம்மை அசைக்க முடியாது
என்கிற நம்பிக்கையோடு, அவர்களை பார்த்து, மந்தகாசப்
புன்னகை சிந்த முடியும்; ஆனால், இது நிகழ்வது இல்லை.
திருடியே தின்பது பூனையின் குணம்; பிறர் பொருளை
கவர்வதற்கு, நாம் ஆயிரம் நியாயங்களை சொல்லலாம்;
ஆனால், அது அவசியமில்லை. அவை அவமானங்களை
சேர்க்கும் என்பதுடன், அதல பாதாளத்தில் தள்ளி விடக்
கூடியது.
எனவே, பூனை குணம் புறக்கணிக்கப்பட வேண்டிய
ஒன்று!
நாயை, நன்றியுள்ள பிராணி என்கிறோம்;
கடந்த சில மாதங்களுக்கு முன், தினசரி நாளிதழ்களில்,
வேலூரை அடுத்த சோளிங்கரில், தன் எஜமானையே
கடித்துக் குதறி, கொன்று விட்டது ஒரு நாய் என்ற செய்தி
வெளியாகி இருந்தது.
இவர், அந்த நாய்க்கு எந்த தவறும் செய்யவில்லை;
உணவு சார்ந்த பிரச்னை தான், இது!
எக்கட்டத்திலும், நம் நன்றிக்குரியவர்களிடம் அடங்கிப் போக
வேண்டுமே தவிர, ஏதோ ஒரு தவறை அவர்கள் செய்தனர்
என்பதற்காக, அவர்கள் செய்த முக்கிய நன்மையையோ,
பல நன்மைகளையோ மறந்து, சொல்லால், செயலால்,
அவர்களை காயப்படுத்தி விடக்கூடாது.
பாம்பு, பழி வாங்காமல் விடாது என்கின்றனர் சிலர்.
விலங்கின மருத்துவர்கள், இக்கருத்தை ஏற்கின்றனரா என்று
தெரியாது. ஆனாலும், வழி வழி நம்பிக்கையை எடுத்துக்
கொள்வோம்…
பழி வாங்கும் உணர்ச்சி நல்லதல்ல; பழி வாங்கும் செயல்
என்பது, ஒரு தொடர்கதையின் ஆரம்பமே தவிர, முற்றுப்புள்ளி
அல்ல.
பெரிய பெரிய தொடர் கொலைகளிலிருந்து, குடும்ப உறவுச்
சிக்கல்கள் வரை, பழி வாங்கல் எண்ணத்திற்கு, முற்றுப்புள்ளி
வைப்பவர்களே புத்திசாலிகள்!
வல்லவனோடு வம்பு வேண்டாம், துஷ்டனைக் கண்டால் தூர
விலகு என்று மனதைச் சமாதானப்படுத்தியபடி விலகி நின்றால்,
ஒரு துன்பத்தோடு முடித்து விடலாம். தொடர்ந்த துன்பங்கள்
வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கே, பழி வாங்கல்கள்
பொருந்தும்!
ஓரிடத்தில் இருப்புக் கொள்ளாதது, குரங்கு; ‘மனித மனம்
ஒரு குரங்கு…’ என்று பாடினார் கண்ணதாசன். இலக்கின்றி
அலையும் மனதை கட்டுப்படுத்தி, ஒருமுகப்படுத்த, ஆன்மிகம்
நிறைய வழிகளை சொல்லித் தருகிறது.
தியானமும் இதற்கு உதவும். ஏன்… ஒரு விளையாட்டில்
ஈடுபடுதல்; யோகா போன்றவையும், லேசர் கதிராய்,
ஒரு நுணுக்கப் புள்ளியில் நம் எண்ணங்களைக் குவிக்குமாம்.
இதில் வெற்றி பெற்றால், மற்ற விஷயத்திலும் இலக்கு தைக்கிற
பார்வை சாத்தியம்.
விலங்கின குணங்களை வெளியேற்ற முடியாவிட்டாலும்,
விலங்கிட்டு, அவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்
சாமர்த்தியம், நமக்குத் தேவை; இல்லாவிடில் வம்பு தான்!
–
————————————-
லேனா தமிழ்வாணன்
வாரமலர்
Similar topics
» கொளுத்தி போடுவோம்!
» சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்!
» அத்தனை ஆதீனங்கள் மீதும் வழக்குப் போடுவோம்... நித்தியானந்தா மிரட்டல்!
» விலங்கு
» உலக விலங்கு நாள் (அக்.4)
» சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்!
» அத்தனை ஆதீனங்கள் மீதும் வழக்குப் போடுவோம்... நித்தியானந்தா மிரட்டல்!
» விலங்கு
» உலக விலங்கு நாள் (அக்.4)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|