ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா

Go down

திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா Empty திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா

Post by ayyasamy ram Mon Oct 31, 2016 11:29 am

திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா P3Ug53tsRiu1BOlmOgOp+Tamil-Daily-News-Paper_8351513147355
-
கந்தசஷ்டி ஆரம்பம் - 31.10.2016

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை
சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே
கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி
விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?


சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்
படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக
மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன்
வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத
அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர்.

யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு
வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன.

அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான்
அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என
மகாபாரதம் கூறுகிறது.

கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை
எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி
மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை
எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர்.

முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும்
விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி
கொண்டாடப்படுகிறது என்கிறார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா Empty Re: திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா

Post by ayyasamy ram Mon Oct 31, 2016 11:35 am

கண்ணாடிக்கு அபிஷேகம்

ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள
மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின்
எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில்
தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார்.

இதை சாயாபிஷேகம் என்பர். 'சாயா' என்றால் 'நிழல்' எனப்பொருள்.
போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த
அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில்
கண்டு மகிழ்வதாக ஐதீகம்.

இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார்.
குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

தெய்வயானை திருமணம்


சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன்,
தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி
பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம்
செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார்.

இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில்
நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில்
கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம்
நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று,
முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள்.

மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்),
முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம்
சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து
கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு
எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும்.


Last edited by ayyasamy ram on Mon Oct 31, 2016 11:40 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா Empty Re: திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா

Post by ayyasamy ram Mon Oct 31, 2016 11:39 am


மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார்.


அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில்
ஊஞ்சலில் காட்சி தருவார்.

முருகனுக்கு மஞ்சள் நீராட்டு


கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்களது
முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும்
இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும்.
கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன்
வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம்
செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில்
வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது
மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

மும்மூர்த்தி முருகன்


முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர்.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக
இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத
பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து,
பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான
மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்.

இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக
இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில்
முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு,
பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம்
சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம் நாள்) அ
திகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக
அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள்
அம்சத்தில் காட்சியளிக்கிறார்.
-
-----------------------------------------------
தினகரன் - ஆன்மீகம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா Empty Re: திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum