Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
4 posters
Page 1 of 1
காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
---
குருஷேத்ரா,
காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு, சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் நடந்தது. இந்த சம்பவத்துக்கு, சரியான பதிலடி தரப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வீரரை கொன்றனர்
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதுங்கி முகாம்கள் அமைத்து, இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த சதிசெய்து கொண்டிருந்த பயங்கரவாதிகள் மீது கடந்த மாதம் 28-ந்தேதி நள்ளிரவு, இந்திய ராணுவம் துல்லியமான அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதால் பாகிஸ்தான் ஆத்திரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக எல்லையில் அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தியநாள் (28-ந்தேதி) இரவு, காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை பாகிஸ்தான் படையினர் உதவியுடன் பயங்கரவாதிகள் தாண்டி வந்து, தாக்குதல் நடத்தி இந்திய வீரர் மன்தீப் சிங்கை (வயது 30) சுட்டுக்கொன்றனர். அத்துடன் அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி சிதைத்து, குப்வாரா மாவட்டத்தின் மாசீல் செக்டாரில் வீசினர். இது நாடு முழுவதும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு கண்டனம்
இந்த செயலுக்கு மத்திய அரசின் சார்பில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர், “இத்தகைய கோழைத்தனமான செயல்களால் நாம் அடிபணிந்து விடமாட்டோம். நமது படையினர் சரியான பதிலடி தந்து வருகின்றனர். நமது தேசம் என்றைக்கும் தலைநிமிர்ந்து நிற்கும்” என கூறினார்.
தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “பாகிஸ்தான் என்ன செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறதோ, அதெல்லாம் அந்த நாட்டுக்கு எதிராக அப்படியே திரும்பும்” என எச்சரித்தார்.
உள்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், “மன்தீப் சிங் உடலை சிதைத்து வீசியது கொடூரமான செயல்” என கூறி கண்டனம் தெரிவித்தார். முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிஷ் திவாரி, “இது வக்கிரமான செயல்” என வேதனை வெளியிட்டார்.
வீரர் மன்தீப் சிங்கின் பின்னணி
எல்லையில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ள வீரர் மன்தீப் சிங், அரியானா மாநிலம், குருஷேத்ரா பகுதியில் உள்ள அந்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பலரும் ராணுவத்தில் சேர்ந்து, நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்தீப் சிங், 2008-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து, 17-வது சீக்கிய படைப்பிரிவில் இணைந்து பணியாற்றி வந்தார். 2014-ம் ஆண்டு அவருக்கு திருமணம் ஆனது. அவரது மனைவி பிரேர்ணா, அங்குள்ள ஷாபாத் மார்கண்டா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.
பதிலடி தர தந்தை வேண்டுகோள்
மன்தீப் சிங் கொல்லப்பட்ட தகவல், நேற்று அதிகாலை ஒரு மணிக்கு ராணுவ வீரர் ஒருவர் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காட்டுத்தீ போல அந்த தகவல், ஊர் முழுக்க பரவியது. உறவினர்களும், நண்பர்களும் மன்தீப் சிங்கின் வீட்டில் குவிந்தனர்.
மகனைப் பறிகொடுத்துள்ள தந்தை பூல்சிங், “என் மகன் தன் கடமையை செய்திருக்கிறார். அவர் தனது வாழ்வை தியாகம் செய்திருக்கிறார். நாம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியை தர வேண்டும்” என கூறினார்.
மனைவி கண்ணீர்
மன்தீப் சிங்கின் மனைவி பிரேர்ணா, “பயங்கரவாதிகளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் இத்தகைய துயரத்தை மற்றொரு வீரரின் குடும்பம் அனுபவிக்காத நிலை உருவாகும்” என கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும் அவர்கூறும்போது, “என் கணவர் 6 மாதங்களுக்கு முன் விடுமுறையில் வந்தார். தீபாவளிக்கு விடுமுறையில் வருவதாக இருந்தார். ஆனால் எல்லையில் மாசீல் பகுதியில் பதற்றம் நிலவிவந்ததைத் தொடர்ந்து அவரது விடுமுறை ரத்து செய்யப்பட்டதால் வர முடியாமல் போய்விட்டது” என வேதனையுடன் கூறினார்.
மன்தீப் சிங்கின் சகோதரர் சந்தீப், “நமது வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக நான் ராணுவத்தில் சேர விரும்புகிறேன்” என கூறினார்.
இறுதிச்சடங்கில் முதல்-மந்திரி பங்கேற்பு
நாட்டுக்காக உயிர்நீத்த வீரர் மன்தீப் சிங்கின் உடல், மூவர்ணக்கொடியில் சுற்றி அவரது வீட்டுக்கு, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் நேற்று எடுத்து வரப்பட்டது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது, சுற்று வட்டார மக்கள் ஏராளமான பேர் திரண்டு வந்து, மறைந்த வீரருக்கு தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். பின்னர் அவரது உடல், சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இறுதிச்சடங்கில் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், மூத்த ராணுவ அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினர்.
முழு அரசு மரியாதை
பின்னர் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது தந்தை பூல்சிங் தீ மூட்டினார். மறைந்த வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அந்தேரி கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடவில்லை.
அதே நேரத்தில் வீடுகள் தோறும் அகல் விளக்கேற்றி, மறைந்த வீரருக்கு தங்களது மரியாதையை செலுத்தினர்.
மறைந்த ராணுவ வீரர் மன்தீப் சிங்கின் குடும்பத்தாருக்கு முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் ஆறுதல் கூறினார்.
அப்போது அவர், அவர்களிடம், “நாம் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம். பழிக்குப் பழி வாங்குவோம். நாட்டுக்காக இந்த வீரர் உயிர் நீத்திருக்கிறார். இந்த துயரமான தருணத்தில், உங்களுடன் இணைந்து நிற்கிறோம். உங்களுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ, அத்தனையும் செய்வோம்” என உறுதி அளித்தார்.
-
------------------------
தினத்தந்தி
Re: காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
பின்னர் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது தந்தை பூல்சிங் தீ மூட்டினார்.மகனைப் பறிகொடுத்துள்ள தந்தை பூல்சிங், “என் மகன் தன் கடமையை செய்திருக்கிறார். அவர் தனது வாழ்வை தியாகம் செய்திருக்கிறார். நாம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியை தர வேண்டும்” என கூறினார்.
மன்தீப் சிங்கின் மனைவி பிரேர்ணா, “பயங்கரவாதிகளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் இத்தகைய துயரத்தை மற்றொரு வீரரின் குடும்பம் அனுபவிக்காத நிலை உருவாகும்” என கண்ணீருடன் தெரிவித்தார்.
மன்தீப் சிங்கின் சகோதரர் சந்தீப், “நமது வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக நான் ராணுவத்தில் சேர விரும்புகிறேன்” என கூறினார்.
மறைந்த வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அந்தேரி கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடவில்லை,அதே நேரத்தில் வீடுகள் தோறும் அகல் விளக்கேற்றி, மறைந்த வீரருக்கு தங்களது மரியாதையை செலுத்தினர்.
எழுதுவதற்கு வார்த்தைகள் வரவில்லை , எப்படி இந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வது .... RIP சகோதரா
Re: காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
மிக மோசமான நிகழ்வு .....
வீரவணக்கம்
வீரவணக்கம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
குணசேகரன் S அவர்களின் பதிவு #4
முழுதும் ஆங்கிலத்தில் இருப்பதால் நீக்கப்படுகிறது .
ஈகரை தமிழ்க்களஞ்சியத்தில் தமிழில் பதிவிடவும் .
செந்நிற பதிவுகளை தவிர்க்கவும் .
ரமணியன்
முழுதும் ஆங்கிலத்தில் இருப்பதால் நீக்கப்படுகிறது .
ஈகரை தமிழ்க்களஞ்சியத்தில் தமிழில் பதிவிடவும் .
செந்நிற பதிவுகளை தவிர்க்கவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
T.N.Balasubramanian wrote:குணசேகரன் S அவர்களின் பதிவு #4
முழுதும் ஆங்கிலத்தில் இருப்பதால் நீக்கப்படுகிறது .
ஈகரை தமிழ்க்களஞ்சியத்தில் தமிழில் பதிவிடவும் .
செந்நிற பதிவுகளை தவிர்க்கவும் .
ரமணியன்
Similar topics
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல் - இந்திய வீரர் மரணம்
» காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை
» இந்தியாவுக்குள் ஊடுருவ காஷ்மீர் எல்லையில் 386 தீவிரவாதிகள் பதுங்கல்: ராணுவம் அதிர்ச்சி தகவல்
» சீன எல்லையில் இந்திய போர் விமானம் தரையிறக்கம்
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல் - இந்திய வீரர் மரணம்
» காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை
» இந்தியாவுக்குள் ஊடுருவ காஷ்மீர் எல்லையில் 386 தீவிரவாதிகள் பதுங்கல்: ராணுவம் அதிர்ச்சி தகவல்
» சீன எல்லையில் இந்திய போர் விமானம் தரையிறக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|