ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது - எல்.கே.அத்வானி

Go down

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது - எல்.கே.அத்வானி Empty இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது - எல்.கே.அத்வானி

Post by சிவா Mon Mar 09, 2009 1:40 pm

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது - எல்.கே.அத்வானி 610xஇலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது என்று நாகர்கோவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் அத்வானி பேசினார்.

பா.ஜனதா கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நேற்று தொடங்கியது.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி, தேர்தல்

பிரசாரத்தை தொடங்கி வைத்தும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ள அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்தும் பேசினார். அவர் பேசியதாவது:-

1969-ம் ஆண்டும், 1979-ம் ஆண்டும் நாகர்கோவில் தொகுதியில் காமராஜ் நாடார் வெற்றி பெற்றுள்ளார். இந்த பகுதி இவ்வளவு வளர்ச்சி பெறுவதற்கு நாடார் சமுதாயம் எவ்வளவு அரும்பணி ஆற்றியுள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். அதுபோல் தாணுலிங்க நாடார் இந்து முன்னணியின் தலைவராகவும், சமுதாய தலைவராகவும் இருந்து சமுதாய பாதுகாப்புக்காக செயலாற்றி உள்ளார்.

அதனால்தான் இந்த தொகுதியின் வேட்பாளராக, முதல் வேட்பாளராக நான் பொன்.ராதாகிருஷ்ணனை அறிவித்திருக்கிறேன்.

கல்வி கற்பவர்களுக்கு சாதி, மதம் எதுவும் கிடையாது. ஆனால் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு மதத்தின் அடிப்படையில் மாணவ- மாணவிகளுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது.

இதுதொடர்பாக நான் பாராளுமன்ற அவையில் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஏழை, எளியவர்கள் என்ற முறையில்தான் சலுகைகள் இருக்க வேண்டும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்ற முறையில் சலுகைகள் இருக்கக்கூடாது என்று வாதிட்டுள்ளேன்.

இலங்கையில் வாழும் தமிழர்கள், மலேசியாவில் வாழும் தமிழர்களைப் பற்றி கவலைப்படும் தமிழக மக்களை நான் பாராட்டுகிறேன். இலங்கையில் உள்ள தமிழர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம். அவர்களை பாதுகாக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே தமிழகத்தில் உள்ள மக்கள் இலங்கையில் கொல்லப்படும் தங்கள் சகோதரர்களுக்காக படும் வேதனைகளை, கவலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

கடந்த 5 ஆண்டு காலம் செயல்பட்டு வந்த காங்கிரஸ் அரசையும், அதற்கு முன்பிருந்த பா.ஜனதா அரசையும் ஒப்பிட்டு பாருங்கள். காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங்கிடம் பிரதமர் பதவி இருக்கிறது. ஆனால் அதிகாரம் கிடையாது. சோனியாவிடம் அதிகாரம் உள்ளது. ஆனால் அவரிடம் பொறுப்பு இல்லை. எனவே இந்த தேர்தலில் தற்போதுள்ள காங்கிரஸ் ஆட்சியையும், அதற்கு முன்பிருந்த பா.ஜனதா ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்து வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பாகிஸ்தானில் இருந்து வருகிற பயங்கரவாதமானாலும் சரி, வங்காளதேசத்தில் இருந்து வரும் தீவிரவாதமாக இருந்தாலும் சரி, அவற்றை கட்டுப்படுத்துவதிலும், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படும் பிரச்சினையாக இருந்தாலும் சரி இவை அனைத்திலும் காங்கிரஸ் அரசு நிர்வாகம் தோற்றுப்போய்விட்டது.

எனவே முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமர் கையில் இருக்க வேண்டும் என்று நீங்கள் வருகிற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 3 செயல்திட்டங்களை மக்கள் முன் வைக்க உள்ளது. ஒன்று நல்லாட்சி. 2-வது மேம்பாடு. 3-வது பாதுகாப்பு. நல்லாட்சி என்றால் ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மே மாதம் தேர்தல் முடிந்தபிறகு அரசியல் வானில் மிகப்பெரும் புரட்சியும், மாற்றமும் ஏற்பட்டிருக்கும் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அத்வானி பேசினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர் பிரச்சினையில் கருணாநிதிக்கு உறுதியான நிலைப்பாடு இல்லை: சிவத்தம்பி
»  இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது
» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
» சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்!
» லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum