ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் சந்தேகம்.

3 posters

Go down

தமிழில் சந்தேகம்.  Empty தமிழில் சந்தேகம்.

Post by Guest Sat Oct 22, 2016 12:44 am

கவிஞன், கஞ்சன், உழவன், புலவன், அமைச்சன், ஒற்றன், தச்சன், வணிகன், மெய்காப்பாளன், வீரன், கொல்லன் இவற்றுக்கு பெண்பால் என்ன?

இல்லாள் என்பதற்கு ஆண்பால் என்ன? அல்லது இன்று வழக்கத்தில் உள்ளது போல் இல்லத்தரசி,இல்லத்தரசன் என்பதா?

avatar
Guest
Guest


Back to top Go down

தமிழில் சந்தேகம்.  Empty Re: தமிழில் சந்தேகம்.

Post by Ramalingam K Sat Oct 22, 2016 8:08 am

மூர்த்தி wrote:கவிஞன், கஞ்சன், உழவன், புலவன், அமைச்சன், ஒற்றன், தச்சன், வணிகன், மெய்காப்பாளன், வீரன், கொல்லன்  இவற்றுக்கு பெண்பால் என்ன?

இல்லாள்  என்பதற்கு ஆண்பால் என்ன? அல்லது இன்று வழக்கத்தில் உள்ளது போல் இல்லத்தரசி,இல்லத்தரசன் என்பதா?

மேற்கோள் செய்த பதிவு: 1225139


கவிஞனுக்குக் கவிதாயினி என்பது புதுச்சொல்லாகிறது.

ஒருவன் என்பதற்கு ஒருத்திபோய் இப்போதெல்லாம் ஒருவள் என்பது பரவலாக ஏற்கப்படுகிறது.
புதுக் கவிதையைப் போல் -  உடைக்கப்பட்ட உரைநடைதானே புதுக் கவிதை.

அதுபோலவே   இச்சொற்களுக்கும்  பெண்பால்  சொற்களைக்  கொள்ளலாம்.  அல்லது வழக்கம்போல் சொல்லின் இறுதியில் அர்  என்னும் பலர்பால் விகுதி சேர்த்து  கூடவே பெண்பால் என்ற முன்பதத்தையும் வைத்து அழைக்கலாம்.

கவிஞன் -கவிஞள் ; பெண்பால்கவிஞர்..
கஞ்சன் -கஞ்சள் ; பெண்பால் கஞ்சர்..
உழவன் - உழவள்;  உழவர் ( உழத்தியை இப்போதெல்லாம் யாரும் ஏற்பதில்லை); பெண்பால் உழவர்
புலவன் -புலவள் ;  பெண்பால்புலவர்
அமைச்சன் - அமைச்சள்  ; பெண்பால்அமைச்சர்
ஒற்றன் - ஒற்றள்;  பெண்பால்ஒற்றர்
தச்சன் - தச்சள் ;  பெண்பால்தச்சர்
வணிகன் - வணிகள்;  பெண்பால் வணிகர்
மெய்காப்பாளன் - மெய்காப்பாளள் ; பெண்பால்மெய்காப்பாளர்
வீரன் -  வீராங்கனை ; பெண்பால்வீரர்
கொல்லன் - கொல்லள்; பெண்பால்கொல்லர்

இல்லத்தரசி என்பது புதுச்சொல் .  வாழ்க்கைத் துணைவி ஏற்கத்தக்கது.
இல்லத்தரசி என்றால் இல்லத்தரசன்  என்பதில் பிழை இருக்க  வாய்ப்பில்லை !

தந்தை பெரியாரின் எழுத்துச் சீர் திருத்தம்போல் - சொல் சீர்திருத்தமும் கொண்டுவருதல் முறையே.

மாற்றம் ஒன்றே மாறாதது- மாற்றத்தை ஏற்று மகிழ்வுடன் வாழ்வோம்.

சும்மா . . . . . . ஒரு  கருத்துதான்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

தமிழில் சந்தேகம்.  Empty Re: தமிழில் சந்தேகம்.

Post by M.Jagadeesan Sat Oct 22, 2016 9:04 am

இல்லாள் என்றால் இல்லத்தை ஆள்பவள் என்று பொருள்படும் . அதற்கு ஆண்பால் இல்லை ." இல்லான் " என்றால் ஒன்றும் இல்லாதவன் என்று பொருள்படும் .

" இல்லத்தரசி " என்னும் சொல் ஏற்புடைத்து.  ஆனால் " இல்லத்தரசன் "சொல்  என்னும் வழக்கில் இல்லை . இல்லத்தை ஆளும் உரிமை பெண்களுக்கு மட்டுமே உண்டு .
வேலைக்குச் செல்லாமல் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பெண்ணை  " House wife " என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம் . " இல்லாள் " என்னும் சொல்லுக்கு நேரான ஆங்கிலச்சொல் இது.
"இல்லாள் " ,  "வாழ்க்கைத்துணை "  ஆகிய சொற்கள் , ஐயன் வள்ளுவரின் புதிய சொல்லாக்கங்கள்

கலைஞரை முன்னாள் முதலமைச்சர் என்றும் , ஜெயலலிதா அம்மையாரை இந்நாள் முதலமைச்சர் என்று அழைக்கிறோம் . பெண்பால் என்பதற்காக " முதலமைச்சள் " என்று நாம் அழைப்பதில்லை ; அதற்கு தமிழ் இலக்கணம் இடம் கொடுப்பதில்லை . " Madam Chief Minister " என்று அழைக்கும் ஆங்கில மரபு , தமிழில் இல்லை .

தமிழில் இருபால் பொதுச் சொற்கள் என்று சில உண்டு .
கவிஞர் , புலவர் , அமைச்சர் , வணிகர் , ஆசிரியர் , மருத்துவர் போன்ற சொற்கள் இருபாலரையும் குறிக்கும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழில் சந்தேகம்.  Empty Re: தமிழில் சந்தேகம்.

Post by T.N.Balasubramanian Sat Oct 22, 2016 2:58 pm

தமிழில் இருபால் பொதுச் சொற்கள் என்று சில உண்டு .
கவிஞர் , புலவர் , அமைச்சர் , வணிகர் , ஆசிரியர் , மருத்துவர் போன்ற சொற்கள் இருபாலரையும் குறிக்கும் .

ஆம் ,பொது சொற்கள் பல இருக்கின்றன .

ஆங்கிலத்தில் கூட இருக்கிறதே . cousin ,actor , proprietor . ஆனால் சமீப காலமாக actress , proprietrix என்றெல்லாம் கூட கேள்வி படுகிறோம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழில் சந்தேகம்.  Empty Re: தமிழில் சந்தேகம்.

Post by Ramalingam K Sat Oct 22, 2016 8:18 pm

மாற்றத்தை ஏற்று மகிழ்வோடு வாழலாம்.

அதுபோலவே ஜ, ஸ, ஷ, ஹ போன்ற எழுத்துக்களையும் நம் மொழியின் கூடுதல் எழுத்துக்களாக ஏற்பதில் தவறு கிடையாது என்பது அடியனின் கருத்து. இந்த எழுத்துருக்கள் எந்த மொழியிலும் இல்லாத அநாதைகளாகக் காட்சி அளிக்கின்றன.

நம் தமிழில் இந்த எழுத்துக்களின் ஒலி வடிவங்களுக்கு நாம் படாதபாடு படுகிறோம். தமிழறிஞர்கள் கவனிப்பார்களா. வாழ்வது கொஞ்ச நாள். அவைகளையும் நம்மோடு அரவணைத்து வாழ்ந்து இன்புறுவோமே.

இது ஒரு ஆவல்தான்- ஏக்கமும் கூட.
அடியன் சுத்தத்தமிழன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

தமிழில் சந்தேகம்.  Empty Re: தமிழில் சந்தேகம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum