ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை

2 posters

Go down

கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Empty கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை

Post by prajai Tue Oct 18, 2016 6:30 pm

நாமக்கல் மாவட்டப் பார்வையிழப்பு தடுப்பு சங்கத் திட்ட மேலாளர் டாக்டர் பெ. ரங்கநாதன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை

இந்தியாவில் கருவிழி பாதிப்பால் முழுவதும் பார்வையிழந்தவர்கள் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர். இதில் 20,000 பேர் ஒவ்வோர் ஆண்டும் புதிதாகச் சேருகின்றனர்.

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் அரசு, அரசுசாராக் கண் வங்கிகள் மூலம் 50,000 முதல் 55,000 கண்கள் தானமாகப் பெறப்படுகின்றன. தேவையில் ஐம்பது சதவீதக் கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. கண் தானம் பற்றிய விழிப்புணர்வு கிராமப்புற மக்களிடையே மட்டுமின்றி, நகர்ப்புற மக்களிடையேயும் குறைவாக உள்ளதே இதற்குக் காரணம்.

கண் தானம் என்றால் என்ன?

இறந்தவரின் குடும்பத்தினருடைய விருப்பத்தின் பேரிலோ அல்லது ஒருவர் வாழும் காலத்தில் விருப்பம் தெரிவித்திருந்தாலோ இறந்த ஒருவரின் கண்களை எடுத்துப் பார்வையற்றவருக்குப் பொருத்த அனுமதிப்பதே கண் தானம்.

கருவிழி (Cornea) என்றால் என்ன?

கண்ணின் மையப் பகுதியில் கறுப்பாகத் தெரியும் கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவக் கூடிய கண்ணின் மேல் படலமே கருவிழி.

எப்படிக் கருவிழி பாதிப்பு ஏற்பட்டுப் பார்வையிழப்பு (Corneal blindness) ஏற்படுகிறது?

கருவிழியில் அடிபடுவது, பிறவிக் குறைபாடு, கிருமி பாதிப்பு, கருவிழிப் புண் மற்றும் குழந்தைப் பருவத்தில் சத்து குறைபாடு (வைட்டமின் ஏ சத்து குறைபாடு) போன்ற காரணங்களால் கருவிழி தழும்பு (Corneal scar) உண்டாகிக் கருவிழியின் ஒளி ஊடுருவும் தன்மை பாதிக்கப்பட்டால் பார்வையிழப்பு ஏற்படும்.

கருவிழி பாதிப்பால் பார்வையிழந்த வர்களுக்குப் பார்வையை எப்படித் திரும்பக் கொடுப்பது?

கண் தானம் பெறப்படும் கருவிழியை, கருவிழி பாதிப்பால் பார்வையிழந்தவர்களுக்குக் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை (Corneal Transplantation) மூலம் பார்வையைத் திரும்பக் கொடுக்கலாம்.

யார் கண் தானம் செய்யலாம்?

ஒரு வயதுக்கு மேல் உள்ள யாரும் கண் தானம் செய்யலாம். நாம் வாழும்போதே கண்களைத் தானம் செய்ய விருப்பப் படிவம், உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

நம்முடைய விருப்பத்தை உறவினர்களிடம் கூறி நம் வாழ்நாளுக்குப் பிறகு கண்களைத் தானமாகக் கொடுக்கலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் தானம் செய்யலாமா?

நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு நோய், இதய நோய் உள்ளவர்கள் கண்களைத் தானமாகக் கொடுக்கலாம்.

கண்களில் நரம்பு பாதிப்பு (Optic nerve disease), விழித்திரை பாதிப்பு (Retinal disease) உள்ளவர்கள்கூடக் கண் தானம் செய்யலாம்.

கண்புரை அறுவை சிகிச்சை (Cataract surgery) செய்துகொண்டவர்களும், கிட்டப்பார்வை, தூரப்பார்வை கண்ணாடி அணிந்திருப்பவர்களும் கண் தானம் செய்யலாம்.

யாரால் கண்களைத் தானம் செய்ய இயலாது?

காரணம் தெரியாத இறப்பு, கண்ணில் கிருமி பாதிப்பு உள்ளவர்கள், கருவிழி பாதிப்பு உள்ளவர்கள் (Corneal disease), கருவிழி அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், வெறி நாய்க் கிருமி நோய் (Rabies), எய்ட்ஸ் நோய், சிபிலிஸ் நோய், மஞ்சள்காமாலை கிருமி நோய் உள்ளவர்கள் (Hepatitis), புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், நச்சுக்குருதி நோய் (Septicemia) தாக்கியவர்கள் கண்களைத் தானம் செய்ய இயலாது .

இறந்தவர்களின் கண்களைத் தானமாக எடுக்கும்போது அவர்கள் ரத்த மாதிரிச் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு எச்.ஐ.வி., மஞ்சள்காமாலை கிருமி, மற்றக் கிருமிகள் உள்ளனவா எனப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும்.

இறந்த பிறகு எத்தனை மணி நேரத்துக்குள் கண்களை எடுக்க வேண்டும்?

ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்துக்குள் கண்கள் எடுத்துப் பாதுகாக்கப்படவேண்டும்.

கண் தானம் செய்ய, நாம் செய்ய வேண்டியவை என்ன?

கண்களைத் தானம் செய்ய விருப்பம் இருந்தால், அதற்கான விருப்பப் படிவத்தை அருகில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கண் வங்கியில் பெற்றுப் பதிவு செய்துகொள்ள வேண்டும். நம் பதிவு செய்த விவரத்தை, நம் விருப்பத்தைக் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும். அந்தக் கண் வங்கியின் தொலைபேசி எண் நமக்கும், நம் குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். நாம் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்கள் உடனடியாகக் கண் தான வங்கிக்குத் தொடர்புகொண்டால், அவர்கள் நம் கண்களைத் தானமாகப் பெற்றுக்கொள்வார்கள்.

மருத்துவமனை கருவிழி வேட்டை (Hospital Corneal Retrieval) என்றால் என்ன?

மருத்துவ மனைகளில் விபத்து, அவசரச் சிகிச்சைப் பிரிவு, இதய அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் ஆபத்தான தறுவாயில் உள்ள நோயாளிகள் இறக்க நேரிட்டால், அங்குள்ள கண் தான ஆலோசகர்கள் இறந்தவரின் குடும்பத்தினரிடம் கண் தானம் பற்றி விளக்கிக் கருவிழியைத் தனமாகப் பெறும் செயலே மருத்துவமனை கருவிழி வேட்டை (Hospital Corneal Retrieval). மருத்துவமனைகளில் மூளை சாவு ஏற்பட்டு உடல் தானம் செய்யும்போதும் கண்களைத் தானமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

கண் தானம் எடுப்பதற்கு முன் நாம் செய்ய வேண்டியது என்ன?

கண் தானம் பெறுவதற்கான அரசு, அரசு உதவி பெறும் கண் வங்கியிலிருந்து மருத்துவக் குழு வருவதற்கு முன் இறந்தவர்களின் கண்களின் இமைகளை மூடி இருக்கும்படி வைக்க வேண்டும்.

கண்களின் மீது ஈரமான பஞ்சை வைத்து மூடி வைக்க வேண்டும்.

இறந்தவர்கள் அருகில் இருக்கும் மின்விசிறியை அணைக்க வேண்டும்.

தலைப் பகுதியை அரையடி உயர்த்தி வைக்க வேண்டும்.

கண்களை எடுத்த பிறகு எப்படிப் பாதுகாக்கிறார்கள்?

எடுக்கப்பட்ட கண்களைக் கண் தான மையம் (Eye donation centre) அல்லது கண் வங்கியில் (Eye Bank) கிருமி தொற்று இல்லாத அறையில் கண்களின் கருவிழியை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து, பாதுகாக்கக் கூடிய திரவத்தில் வைத்துக் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறார்கள். கருவிழியை ஒரு வருடம்வரை கண் வங்கியில் பாதுகாத்து வைக்க முடியும்.

கண் தானம் மூலம் கிடைத்த கண்களை எப்படி அறுவைசிகிச்சைக்குப் பயன் படுத்துகிறார்கள்?

தானம் பெற்ற கண்ணின் கருவிழி, கண்ணின் வெளிப்புற வெண்படலம் (sclera) மட்டுமே பயன்படுத்தக் கூடியவை.

கருவிழியால் ஏற்படும் பார்வையிழப்பை மட்டுமே கருவிழி மாற்று அறுவைசிகிச்சையால் சரிசெய்ய இயலும்.

கண்ணின் வெளிப்புற வெண்படலம் (sclera) செயற்கை கண் பொருத்தும் அறுவைசிகிச்சையில் பயன்படுத்தப்படும்.

கருவிழியைத் தவிரக் கண்ணின் மற்ற பகுதிகள் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கருவிழி மாற்று அறுவைசிகிச்சை மூலம் ஒருவருக்கு நிச்சயம் பார்வை கிடைக்குமா?

இந்தியாவில் கருவிழி மாற்று அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. அவர்களில் 90 சதவீதம் பேருக்குப் பார்வை திரும்பக் கிடைக்கிறது. ஒருவர் தானம் செய்யும் ஒரு ஜோடிக் கண்கள் மூலம், பார்வையற்ற இருவருக்குப் பார்வை கிடைக்கிறது.

தற்போது தமிழகத்தில் கண் தானம் செய்வதற்கு 104 என்ற எண்ணை அழைக்கலாம்.
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Empty Re: கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை

Post by T.N.Balasubramanian Thu Oct 20, 2016 7:12 pm

நல்ல தகவல்கள் .
நாம் அறிந்துகொள்வதைவிட நம் குடும்பத்தினர் இதை அறிந்து கொண்டால் , நமக்கு ஏதாவது ஆகும் தருணத்தில் அவர்கள் விழித்துக்கொண்டு , நம் கண்களை மற்றவர்களுக்கு தானமாக தந்து உதவலாம்.
நாமும் அதற்கான கண்தான உரிமையை எழுத்துமூலம் தெரியப்படுத்தலாம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum