ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி?

3 posters

Go down

மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Empty மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி?

Post by பாலாஜி Mon 17 Oct 2016 - 18:51

கடந்த டிசம்பரில் சென்னை புறநகர் பகுதிகளில் வந்த வெள்ளத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம். இதோ கூடிய சீக்கிரத்திலேயோ டிசம்பர் வரவிருக்கிறது. இந்த ஆண்டும் பெருமழை பெய்தால், அதிலிருந்து நம்மையும் நம் வீட்டையும் காப்பாற்றிக் கொள்ள என்ன வழி..?  சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்த யுனிக் ஃப்ளாட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொறியாளர் ஆத்மா விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.

‘‘முதலில், புதிதாக வீடு கட்டுபவர்கள் வெள்ளத்தில் சிக்காதபடி தங்கள் வீடுகளை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை சொல்கிறேன்’’ என்று ஆரம்பித்தார் அவர்.

மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? P56a

புதிதாக வீடு கட்டுகிறவர்களுக்கு :

‘‘ஒரு புதிய வீடு என்றால் குறைந்தபட்சம் 40 வருடங்கள் வரை தாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்கிறேன்.

1. அடித்தள (Basement) உயரம்!

பொதுவாக, புது வீடு கட்டும்போது, அடித்தளத்தை சற்றே உயரமாக வைத்துக் கட்டுங்கள். தார் அல்லது சிமென்ட் சாலை இருந்தால், 3 அடி வரை அடித்தளத்தை உயர்த்திக் கட்டுங்கள். அதுவே மண் சாலைகள் என்றால் 5 அடி வரை உயர்த்திக் கட்டிக்கொள்ளுங்கள். அடித்தளத்தை எவ்வளவுக்கு எவ்வளவு உயர்த்திக் கட்டுகிறோமோ, அந்த அளவுக்கு மழை மற்றும் வெள்ளம் போன்ற சமயங்களில் பாதுகாப்பாக இருக்கும்.

2. கிரவுண்ட் ஃப்ளோர் பார்க்கிங்!

பொதுவாக, வீட்டின் கிரவுண்ட் ஃப்ளோரில் பார்க்கிங் அமைக்கப்பட்டு இருந்தால், வீடு சற்று வலுவிழந்து இருக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அப்படி பயப்படத் தேவையில்லை. அபார்ட்மென்ட்டுகளின் தரைத்தளம் பார்க்கிங்காக இருந்தால், மழை மற்றும் வெள்ள காலங்களில் தரை தளத்தை மட்டுமே பாதிக்கும். (ஆனால், கார் பார்க்கிங்கில் நிறுத்தி இருக்கும் கார் பாதிப்படையும் என்பதால், அதற்கு வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும்!) மற்ற தளங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். எனவே, வீடுகளை வாங்கும்போது தரைதளம் பார்க்கிங் இருக்கும் அபார்ட்மென்ட் களாக வாங்கலாம். அப்படியும் சந்தேகம் வந்தால் முதல் தளத்தையும் தவிர்த்துவிட்டு, இரண்டாவது தளத்தில் இருந்து வாங்கலாம்.

3. சர்வே எண் பாருங்கள்!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அலுவலகத்தில் நாம் வீடு வாங்க இருக்கும் பகுதிகள் நீர் பிடிப்பு பகுதிகளா என்பதைக் கேட்டு அறிந்துகொள்ளவேண்டும். இதற்கு சர்வே எண் இருந்தால் போதும். தேவைப் பட்டால், பொறியாளர்களின் உதவியோடு இடத்தைப் பார்வையிட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.

மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? P57a

4. மண் அரிப்பை தடுத்திடுங்கள்!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில்தான் வீடு கட்ட இருக்கிறோம் எனில், வீட்டின் பேஸ்மென்டை அமைக்கும்போது அதில், நீரால் பாதிப்புக்கு உள்ளாகாத மேட் கான்க்ரீட் மற்றும் வாட்டர் புரூஃப் சிமென்டைக் கொண்டு அமைக்கவும். இதனால் பேஸ்மென்ட் தண்ணீரால் அரிக்கப்படாமல் இருக்கும். இதுவே மணலைக் கொண்டு பேஸ்மென்டை அமைத்தால் எளிதாக அரிக்கப் பட்டு, வீட்டின் உறுதியானது கேள்விக்குறியாகி விடும். 100 சதுர அடிக்கு மேட் கான்க்ரீட் மற்றும் வாட்டர் புரூஃப் சிமென்டைக் கொண்டு கட்ட வேண்டுமானால் தோராயமாக 25,000 ரூபாய் வரை செலவாகலாம்.

பழைய வீடுகளை பாதுகாக்க :

இனி ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளை வெள்ளத்திலிருந்து எப்படிக் காப்பாற்றலாம் என்பதைப் பார்ப்போம்.

1. அஸ்திவாரத்தை உயர்த்துங்கள்!

பெரும் வெள்ளத்தில் வீட்டுக்குள் தண்ணீர் வந்த தாம்பரம் - முடிச்சூர் பகுதிகளில் வீட்டின் அஸ்திவாரத்தை அதிகபட்சமாக 8 அடி வரைகூட உயர்த்தி இருக்கிறார்கள். இந்த அஸ்திவாரத்தை உயர்த்துவது என்பது அதிகபட்சம் 20 வருடத்துக்கு உள்ளான பழைய வீட்டை மட்டுமே செய்ய முடியும். அதற்கு மேல் பழைய வீடு எனில், வீட்டின் வாழ்நாட்களைக் கேள்விக்குறியாக்கிவிடும். இப்படி அஸ்திவாரத்தை உயர்த்துவதால், வீடுகளின் உறுதிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது இதுநாள் வரை அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட வில்லை என்றாலும், இந்த முறையில் கட்டும் வீடுகள் எந்த விரிசலும் இல்லாமல் உறுதியாக நிற்கத்தான் செய்கின்றன.

தார் அல்லது சிமென்ட் சாலை எனில், சாலையைவிட 3 அடியும்,  மண் சாலை எனில், 5 அடியும் உயர்த்தலாம். சுற்றிலும் பெல்ட் கான்கிரீட் போட்டுக் கட்டப்பட்ட வீடுகளை மட்டுமே இப்படி உயரப்படுத்த முடியும். அதேபோல் ஒரு முறை அஸ்திவாரத்தை உயர்த்தினால், மீண்டும் அதே வீட்டின் அஸ்திவாரத்தை உயரப்படுத்த முடியாது.

மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? P58a

2. ஃப்ரிகாஸ்ட் ஃபேப்ரிகேஷன்!

மழையினால் அதிகம் பாதிக்கப்படும் நிலையில் தரை தளத்தையும் பயன்படுத்தவேண்டும்; ஆனால், பெரிய பாதிப்புகள் எதுவும்  வரக்கூடாது என்றால் ப்ரிகாஸ்ட் ஃபேப்ரிகேஷன் முறையில் தயாரித்திருக்கும் ரெடிமேட் கான்கிரீட் சுவர்களை தரைதளத்தில் பொருத்திக்கொள்ளலாம்.

இந்த சுவர் சாதாரண சுவர் எழுப்புவதைவிட விலை குறைவானது. எனவே, உங்களுக்கு இன்ஸ்டென்டாக தேவையான வடிவத்தில், தேவையான கோணங்களில் உங்கள் தரைதளத்தை அமைத்துக்கொள்ளலாம். தரை தளத்தில் மட்டும் இந்த ப்ரிகேஸ்ட் ஃபேப்ரிகேஷன் சுவர்களை பயன்படுத்திக் கொண்டு முதல் தளத்திலிருந்து சாதாரண சுவர்களையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

3.கழிவறை ஜாக்கிரதை!

கழிவறை மற்றும் குளியலறைகளில் நீர் வெளியேறும் ட்ரைனேஜ் பகுதிகளில் நீர்ப் போக்குவரத்து சரியாக அமைக்கப்படாமல் இருந்தால், மொத்த கழிவறையும் நாற்றமெடுத்து, கழிவுகள் கழிவறையிலேயே தங்க ஆரம்பித்து விடும். எனவே, வீடு அமைந்திருக்கும் பகுதி மேடாக இருக்கிறதா அல்லது சரிவில் இருக்கிறதா என்பதைக் கவனித்து ஸ்லோப் (சரிவு) அமைக்க வேண்டும். பள்ளமான பகுதிகளில் இருக்கிறது என்றால் ஸ்லோப் கூடுதல் உயரமாக வைக்க வேண்டும். மேடாக இருக்கிறது என்றால் சாதாரண உயரத்தில் கழிவுகள் பயணிக்கும் குழாய்களின் சரிவை நிர்ணயிக்கலாம்” என்று முடித்தார் ஆத்மா.

கடந்த ஆண்டு வெள்ளத்தில் சிக்கியவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் கவனித்து உஷாராக இருக்கலாமே!
ந. விகடன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Empty Re: மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி?

Post by ஜாஹீதாபானு Tue 18 Oct 2016 - 17:20

பயனுள்ள தகவல் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Empty Re: மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி?

Post by விமந்தனி Wed 19 Oct 2016 - 0:25

தகவல் பகிர்வுக்கு நன்றி. வரப்போகும் மழையை நினைத்தால் தான் பீதி கிளம்புகிறது. இதில் ஆற்காடு பஞ்சாங்கம் வேறு... பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. என்னாகப்போகிறதோ தெரியவில்லை. ஒன்னும் புரியல


மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Empty Re: மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
» அபரிமிதமாக தண்ணீர் வருகை-காவிரி கரையோரங்களில் வெள்ள அபாயம்
» 1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
» திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை. பாஜக மீண்டும் வெற்றி பெற காரணம் என்ன?
» தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum