Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமத்துவம் பயில்வோம்: ஞாயிற்றுக்கிழமையும் நங்கைக்கு இல்லை
2 posters
Page 1 of 1
சமத்துவம் பயில்வோம்: ஞாயிற்றுக்கிழமையும் நங்கைக்கு இல்லை
-
shutterstock
————————–
‘பெண் பிறப்பு ஆணுக்கானது’என்பது எழுதப்படாத சமூகச் சட்டம். அதனால், பெண்ணின் பிறப்பு திருமணத்தில்தான் நிறைவு பெறுகிறது என இந்தச் சமூகம் நம்புகிறது. ‘ஒருவன் கையில் பிடித்துக் கொடுப்பது’, ‘இன்னொரு வீட்டுக்குப் போகப் போகிறவள்தானே’, ‘வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறேன்’, ‘எப்படா கட்டிக் கொடுத்துச் சுமையை இறக்கப் போறேனோ’போன்ற சொல்லாடல்கள், பெண்ணை அடுத்த வீட்டுக்குரிய வளாகவே வளர்க்கும் பெற்றோர்களின் மனப் பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
குழந்தை வளர்ப்பில் உணவு, உடை, வாய்ப்பு, அந்தஸ்து, அதிகாரம் என அனைத்து நிலைகளிலும் ஆணுக்கு முதலிடம், பெண்ணுக்கு இரண்டாம் இடம். ஆண், பெண் என இரு குழந்தைகள் இருக்கும் வீட்டில், பொருளாதார நலிவு இருக்கும்பட்சத்தில், ஒப்பீட்டளவில் ஆண் குழந்தைக்கு உணவு, உடை, கல்வி ஆகியவை தரத்திலும் அளவிலும் கூடுதலாகத் தரப்படுகின்றன. அதன் காரணமாக அவன் உரிய பருவத்தில் அந்தஸ்து உடையவனாகவும் அதிகாரம் உடையவனாகவும் உருவாகிறான். பெண் குழந்தை இந்த வாய்ப்பு கிடைக்கப் பெறாததால், எல்லா விதத்திலும் பின்தங்கிவிடுகிறாள்.
மேலும், குடும்பத் தளத்தில் பெண்ணுக்குச் சமையல், குழந்தைப் பராமரிப்பு, வீட்டுப் பராமரிப்பு போன்றவை விதிக்கப்பட்ட பொறுப்புகள். ஆணின் மீது இந்தப் பொறுப்புகள் சுமத்தப்படுவதில்லை. காலம் காலமாக, தலைமுறை தலைமுறைகளாகப் பெண்களுக்கான பணிகளாக இவை பாவிக்கப் படுவதால்,பெண்ணுக்கு இல்லம் சுமையாகிப் போய்விடுகிறது. இதனால், குழந்தையை மட்டுமல்ல, குடும்பத்தையும் சுமக்கிறாள் பெண்.
ஆணுக்கு வீட்டு வேலைகளிலிருந்து முழுமையான விடுதலை என்பதால் அவன் பொருளாதார ரீதியாகக் குடும்பத்தைப் பராமரிக்க விதிக்கப்பட்டான். ஆனால், இன்று பெண்கள் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைத் தாங்களும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர் என்றாலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட வீட்டுப் பராமரிப்புப் பணிகளிலிருந்து விடுதலை இல்லை. அதனால் பெண்கள் இன்று இரட்டைச் சுமைகளில் அல்லாடுகிறார்கள்.
வீட்டு வேலை என்பது குறிப்பிட்ட நேரத்தோடு முடிந்துவிடுவதல்ல. விடுமுறை இல்லாத வேலையும்கூட. இதைத்தான் தமிழ்க் கவிஞர் ஒருவர்,
நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
ஞாயிற்றுக்கிழமையும் நங்கைக்கு இல்லை
என்று குறிப்பிட்டுள்ளார்.
Re: சமத்துவம் பயில்வோம்: ஞாயிற்றுக்கிழமையும் நங்கைக்கு இல்லை
ஒரே மாதிரியான வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது அலுப்பும் சலிப்பும் ஏற்படுவது உண்டு. தலைமுறை தலைமுறையாக பெண்கள் வீட்டு வேலை செய்துவருவதால் எந்தப் பெண்ணும் அதை மறுப்பதில்லை, ஏன் என்று கேள்வி கேட்பதும் இல்லை.
பாட்டிக்குப் பிறந்த அம்மாவும்
அம்மாவுக்குப் பிறந்த தங்கையும்
பாட்டியைப் போலவும்
அம்மாவைப் போலவும்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
போலவே வாழாமல்
புதிதாக வாழ வேண்டும்
என்று ஒரு கவிஞர், பாலினப் பாகுபாடுகள் எந்தவொரு கேள்விக்கும் உட்படுத்தப்படுத்தப்படாது தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுவருகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளார். சமூக மதிப்பில்லாத வீட்டு வேலைக்கு ஒவ்வொரு பெண்ணும் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம்வரை செலவிடுகிறார். பெண்ணின் பெரும்பாலான பொழுதுகள் குடும்பப் பொறுப்பிலும் வீட்டுப் பராமரிப்பிலும் கழிந்து விடுவதால் பெண்கள் சமூகக் கடமையாற்றுவதும், சமூகப் பணி செய்வதும் இயலாமல் போய்விடுகிறது. இனிவரும் தலைமுறைகளாவது வீட்டு வேலை என்ற இடைவிடாத பணியிலிருந்து விடுபட்டுச் சிறக்க வேண்டும். ஆண், பெண் சமத்துவத்தில், மனிதாபிமானமும் இணைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.
– கட்டுரையாளர், பேராசிரியர்
premakarthikeyyan
பாட்டிக்குப் பிறந்த அம்மாவும்
அம்மாவுக்குப் பிறந்த தங்கையும்
பாட்டியைப் போலவும்
அம்மாவைப் போலவும்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
போலவே வாழாமல்
புதிதாக வாழ வேண்டும்
என்று ஒரு கவிஞர், பாலினப் பாகுபாடுகள் எந்தவொரு கேள்விக்கும் உட்படுத்தப்படுத்தப்படாது தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுவருகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளார். சமூக மதிப்பில்லாத வீட்டு வேலைக்கு ஒவ்வொரு பெண்ணும் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம்வரை செலவிடுகிறார். பெண்ணின் பெரும்பாலான பொழுதுகள் குடும்பப் பொறுப்பிலும் வீட்டுப் பராமரிப்பிலும் கழிந்து விடுவதால் பெண்கள் சமூகக் கடமையாற்றுவதும், சமூகப் பணி செய்வதும் இயலாமல் போய்விடுகிறது. இனிவரும் தலைமுறைகளாவது வீட்டு வேலை என்ற இடைவிடாத பணியிலிருந்து விடுபட்டுச் சிறக்க வேண்டும். ஆண், பெண் சமத்துவத்தில், மனிதாபிமானமும் இணைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.
– கட்டுரையாளர், பேராசிரியர்
premakarthikeyyan
Re: சமத்துவம் பயில்வோம்: ஞாயிற்றுக்கிழமையும் நங்கைக்கு இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1224611ayyasamy ram wrote:ஒரே மாதிரியான வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது அலுப்பும் சலிப்பும் ஏற்படுவது உண்டு.
[b][color=#00FF00][color=#FF0000]
premakarthikeyyan
ஒரே மாதிரியான வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது கிடைக்கும் அனுபவத்தால் விரைவில் வேலையை முடிக்கும் ஆற்றலும், அவ்வேலையைச் செம்மையாகச் செய்ய்யும் திறனும் கூடுகிறது - அவற்றை விரும்பிச்செய்தால் என்பது இன்னுமொடு அற்புத உண்மை.
ஐயா ! இதுபோன்ற கவிஞர்களின் கவிதைகள் குடும்ப உறுதித்தன்மைக்கு ஊறு விளையவும் காரணமாகின்றன. கண்களால் கண்டு இந்த கவலை ஏற்படுகிறது குடும்பத்தின் அலங்கோலம் இருப்பால்.
Similar topics
» >>>சரித்திரம் பயில்வோம்! - வெ.இறையன்பு இ.ஆ.ப
» சரித்திரம் பயில்வோம் ! - வெ.இறையன்பு
» சமத்துவம்.
» சமத்துவம்
» “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை
» சரித்திரம் பயில்வோம் ! - வெ.இறையன்பு
» சமத்துவம்.
» சமத்துவம்
» “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|