ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
மொபைல் அறிவோம்! Poll_c10மொபைல் அறிவோம்! Poll_m10மொபைல் அறிவோம்! Poll_c10 
Dr.S.Soundarapandian
மொபைல் அறிவோம்! Poll_c10மொபைல் அறிவோம்! Poll_m10மொபைல் அறிவோம்! Poll_c10 
heezulia
மொபைல் அறிவோம்! Poll_c10மொபைல் அறிவோம்! Poll_m10மொபைல் அறிவோம்! Poll_c10 
i6appar
மொபைல் அறிவோம்! Poll_c10மொபைல் அறிவோம்! Poll_m10மொபைல் அறிவோம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் அறிவோம்!

+2
Ramalingam K
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மொபைல் அறிவோம்! Empty மொபைல் அறிவோம்!

Post by ayyasamy ram Fri Oct 07, 2016 5:48 am

எப்போதும் மொபைல் போனை நோண்டிக்
கொண்டிருப்பவரா நீங்கள்?

அந்த மொபைல் போனை சரி வர உபயோகிக்கவும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் மொபைல் போனில் உள்ள எண்களில் 0 மற்றும் 1 ஆகிய எண்களின் இடத்தில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. அதனால் 0 மற்றும் 1 ஆகிய எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.

எனவேதான் இந்த 0, 1 ஆகிய எண்களைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் என்று பயன்படுவதும் இதில் ஒன்று. நீங்கள் மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி உங்கள் மொபைலுக்கான அதன் தனி அடையாள எண்ணை (IMEI – International Mobile Equipment Identity) கண்டிப்பாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த 13 இலக்க IMEI எண்ணை எங்காவது பத்திரமாகக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகத்தான் வழங்கப்படும். அது மட்டுமின்றி உங்கள் மொபைல் தொலைந்து போனால், எடுத்தவர்கள் உங்கள் சிம் கார்டை அழித்து விட்டாலும் கூட இந்த எண்ணைக் கொண்டு எளிதாக போனைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம்.

அனைத்து மொபைல் போன்களிலும் மொபைல் போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இண்டிகேட்டர் இருக்கும். இது அளவு குறைவாக இருக்கும்போது உங்கள் மொபைலின் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும்போது மிதமாக இருக்கும். மலிவான சீன தயாரிப்பு போன்களில் இன்னமும் அதிகமாக கட்டுப்பாடின்றி இருக்கும்.

மேலும் அந்த சிக்னல் இண்டிகேட்டர் அளவு குறைவாக இருக்கையில் மொபைல் பேட்டரி மின் சக்தி அதிகம் செலவாகும். எனவே உங்களால் முடிந்த அளவு சிக்னல் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதைத் தடுக்கவும். அதனால் உங்கள் மொபைல் பேட்டரி மின்சக்தி இழப்பது தடுக்கப்படுவது மட்டுமின்றி, உங்களுக்கு கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும்.

திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது மிக அழுத்தத்தைப் பயன்படுத்தினால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. முடிந்த அளவு மெதுவாக அழுத்தத்தைப் பிரயோகியுங்கள்.உங்கள் சட்டைப் பையில் போனை வைக்கும்போது, சட்டைப் பையில் உள்ள ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள், மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். மொபைல் திரைக்குக் கீறல்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு கொடுக்கலாம்.

இதற்கென தனி ‘ஸ்க்ரீன் கார்டு’ பேப்பர் விற்கப்படுகிறது; ‘டெம்பர்டு கிளாஸ்’ எனப்படும் கண்ணாடியும் ஒட்டிக்கொள்ளலாம். இதுதவிர மொபைல் போனுக்கு ஒரு கவர் போட்டால், கீழே விழுந்தால் உடையாமல் தடுக்கலாம்.

உங்கள் நெட்வொர்க் பரப்பைத் தாண்டி சிக்னல் இல்லாத ஏரியாவுக்கு வந்துவிட்டீர்களா? உங்கள் மொபைல் போன் இணைப்பை நிறுத்துவதுதான் நல்லது. இல்லை என்றால் மொபைல் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தி இணைய இணைப்பைத் தேடும். அதற்கு மொபைலின் பேட்டரி சக்தி வீணாகிக்கொண்டிருக்கும்.

– சீ.சுப்பிரமணியன், தூத்துக்குடி.
முத்தாரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மொபைல் அறிவோம்! Empty Re: மொபைல் அறிவோம்!

Post by Ramalingam K Fri Oct 07, 2016 7:03 am

ஒன்று பரம்பொருள் - இரண்டதன் இன்னருள்.

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -

இந்த அலைபேசிக்கு அற்புதமாகப் பொருந்துவது.
இன்பம் வரும்போதெல்லாம் அது துன்பத்தையும் தூக்கிக் கொண்டே வருகிறது என்பதே உண்மை.

என்செய்வது தெரிந்தே வீணாகும் மானுடச் செயல்பாடுகளில் இந்த அலைபேசியும் ஒன்று.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

மொபைல் அறிவோம்! Empty Re: மொபைல் அறிவோம்!

Post by T.N.Balasubramanian Fri Oct 07, 2016 7:08 am

மொபைல் அறிவோம்! 103459460 மொபைல் அறிவோம்! 3838410834 மொபைல் அறிவோம்! 1571444738 ayyasami ram

வி பொ உ

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொபைல் அறிவோம்! Empty Re: மொபைல் அறிவோம்!

Post by M.Jagadeesan Fri Oct 07, 2016 7:37 am

Ramalingam K wrote:ஒன்று பரம்பொருள் - இரண்டதன் இன்னருள்.

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -

இந்த அலைபேசிக்கு அற்புதமாகப் பொருந்துவது.
இன்பம் வரும்போதெல்லாம் அது துன்பத்தையும் தூக்கிக் கொண்டே வருகிறது என்பதே உண்மை.

என்செய்வது தெரிந்தே வீணாகும் மானுடச் செயல்பாடுகளில் இந்த அலைபேசியும் ஒன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1223708

" யாதெனின் " அல்ல " யாதனின் " என்று இருக்கவேண்டும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மொபைல் அறிவோம்! Empty Re: மொபைல் அறிவோம்!

Post by Ramalingam K Fri Oct 07, 2016 7:44 am

அப்படியே ஆகட்டும் ஐயா.

நன்றி உடையவனாகிறேன். வணக்கம்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

மொபைல் அறிவோம்! Empty Re: மொபைல் அறிவோம்!

Post by M.Jagadeesan Fri Oct 07, 2016 7:52 am

பல்லில்லாப் பாட்டிகளும் பாலகரும் காளையரும்
எல்லோரும் எப்போதும் நோண்டுகிறார் - நல்லாய்கேள் !
யாண்டும் உலகத்து உண்டோ மொபைல்போனை
நோண்டும் சுகத்திற்கு ஈடு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மொபைல் அறிவோம்! Empty Re: மொபைல் அறிவோம்!

Post by ChitraGanesan Fri Oct 07, 2016 10:29 am

சுகம் சுகம் சுகம் கேடு அதை தேடு போனில்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

மொபைல் அறிவோம்! Empty Re: மொபைல் அறிவோம்!

Post by T.N.Balasubramanian Fri Oct 07, 2016 11:49 am

M.Jagadeesan wrote:பல்லில்லாப் பாட்டிகளும் பாலகரும் காளையரும்
எல்லோரும் எப்போதும் நோண்டுகிறார் - நல்லாய்கேள் !
யாண்டும் உலகத்து உண்டோ மொபைல்போனை
நோண்டும் சுகத்திற்கு ஈடு .
மேற்கோள் செய்த பதிவு: 1223723

அப்பிடி என்றால் மேற்கண்ட விஷயங்கள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொபைல் அறிவோம்! Empty Re: மொபைல் அறிவோம்!

Post by Guest Fri Oct 07, 2016 11:02 pm

நோண்டியதன் விளைவு? ஸ்பானிய நாட்டு ஜோஸ் சேவியர் என்ற 12 வயது சிறுவன்,You Tube இல் பிரபலமாகி பெரிய பணக்காரனாக வரவேண்டும் என்று விரும்பினான்.கூகிளில் சென்று அட்வேட்டில் கணக்குத் திறந்தான். பெற்றோர்கள் கொடுத்த ஊக்கம் காரணமாக அவர்களே தங்கள் வங்கிக் கணக்கு இலக்கத்தை கொடுத்து உற்சாகப்படுத்தினர். முடிவு?

பெற்றோர்கள் கணக்கில் இருந்த 2000  காலி அது மட்டுமல்ல,120,000  யூரோக்கள்  கூகுளுக்கு
கடனாயிற்று.அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கைபேசி,கணினி பாவிக்க தடை விதித்தனர். கணினி அறிவுள்ள ஒருவரை அழைத்தனர்.வழக்கறிஞரை அணுகினர்,நீதிமன்றம் செல்ல தயாராகினர்.

நடந்தவற்றை ஆராய்ந்தனர் கூகிள் தரப்பு.சில தினங்களுக்கு முன் , நீதிமன்றம் செல்லு முன்னர் கூகிள் வழக்கை திரும்பப் பெற்றது. கடனை தள்ளுபடி செய்தது.சிறுவனின் பெயரில் இருந்த கணக்கையும் நீக்கியது.  வயதுக் கட்டுப்பாடு, Parental Control  போன்றவற்றில் கவனம் செலுத்தும்படி கூகிள் அறிவுரை வழங்கியது.

நடந்தது என்ன தெரியுமா? Adsense  ற்குப் பதிலாக சிறுவன் Adwords  இல் கணக்கை திறந்து விட்டான்.

எதையும் சரிவர தெரிந்து கொள்ளாமல்   நோண்டாதீர்கள்.

avatar
Guest
Guest


Back to top Go down

மொபைல் அறிவோம்! Empty Re: மொபைல் அறிவோம்!

Post by T.N.Balasubramanian Sat Oct 08, 2016 11:01 am

adword , adsense இரெண்டை பற்றியும் google ,மேலும் விக்கி யிலும் பார்த்தேன் .
புரிந்து கொள்ள முடியவில்லை .
வீடியோ வில் பேசுபவரும் , புரியாத பாஷையில் பேசுகிறார் . spanish ஓ French ஓ ,
நம்மை பொறுத்தவரையில் Greek & Latin ஆகவே தெரிகிறது .

மேல் விவரங்கள் அறிய ஆவலாக உள்ளேன் ,மூர்த்தி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொபைல் அறிவோம்! Empty Re: மொபைல் அறிவோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum