ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

4 posters

Go down

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Empty உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

Post by geetham Mon Oct 03, 2016 7:48 pm

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

நான் பிறந்தது பக்கத்து மாநிலம் ஆனால் வளர்ந்தது ...என்னை வாழவைத்தது....தமிழ்நாட்டின் தலைநகரம் தான்.நான் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் ஒரு குளம் உண்டு அதில் மழைக்காலத்தில் நீர்நிரம்பி அருகில் உள்ள குட்டையில் நிறையும்..நாங்கள் எங்கள் வீட்டின் வழியாகச்செல்லும் நீரில் குதித்து விளையாடுவோம். என்னை வாழவைத்த சென்னையை மிகவும் நேசிக்கிறேன்...
இன்று என் வீட்டின் அருகே உள்ள குளத்தின் மீது உயர்ந்து நிற்கிறது ஒரு குடியிருப்பு பகுதி ...சென்ற வருட வெள்ளத்தில் நீர் தனது பகுதியை ஆக்ரமித்ததைக்கண்டேன்...

நாங்கள் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் இருந்த போது ஒருவர் ஏதோ மந்திரம் சொல்லி மாலை, பூ...என இன்னும் பல பொருட்களை அதில் கொட்டிச்சென்றார்,
அதிர்ந்து நீங்க எந்த ஊருன்னு கேட்டேன் ..திருநெல்வேலின்னு சொன்னார்...அங்க உள்ள நீர்நிலையில் இப்படித்தான் கொட்டுவீர்களா என்றேன்...அய்யோ அது சுத்தமான தண்ணி அதை அசுத்தப்படுத்த யாரையும் விடமாட்டோம் என அவசரமா சொன்னார்..அப்படின்னா எங்க சென்னையை மட்டும் இப்படி அசுத்தப்படுத்தலாமான்னு கேட்டேன்.

இப்படித்தான் ஒவ்வொருவரும் சென்னையை நம்மை வாழவைக்கும் இடமாகக் கருதாமல் அசுத்தப்படுத்தி அதிலேயே வாழ்கின்றோம்...
நான் மிகவும் வேதனைப்படுகின்றேன்...என் காலத்திலேயே இப்படி என்றால் இனி வருங்கால குழந்தைகள்...வாழ்வதற்கு வழி என்ன?

வாழ்வதற்கு தூய்மையான இடமின்றி, நீர் இன்றி ,கழிப்பறைகள் இன்றி தவித்துக்கொண்டு இருக்கும் போது, இந்தியா வளர்கிறது என்றால் எது வளர்ச்சி என எனக்கு புரியவில்லை

ஆசிரியர்களாகிய உங்களைக் கெஞ்சிக்கேட்கின்றேன்....உங்களுக்குப்பின்னால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கின்றனர் என்பதாலேயே நான் இங்கு வந்தேன்...தயவு செய்து உங்கள் ஊரிலுள்ள ஏரிகளை,குளங்களை ,தூய்மைப்படுத்தி நீர்நிலைகளை பாதுக்காப்பு செய்யுங்கள்...

கைதட்டி என்னை வருத்தப்படுத்தாதீர்கள்...இது என்கடமை.
என்கடமையை நான் செய்வதற்கு பாராட்டுதல் தேவையில்லை....

ஏதாவது செய்து இந்த பூமியைப்பாதுகாக்க வேண்டும்..அதற்கு இன்னும் இருநூறு வருடங்களாகலாம்.நாம் அழித்த இந்த அழகான இந்தியத்திருநாட்டை.....மீட்க...

என்னால் அதைப்பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை...நான் அன்பு செய்கின்ற,நேசிக்கின்ற எனது நாட்டின் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளேன்...

உங்களின் கைகளை என்னுடன் இணைத்துக்கொண்டு நம் நாட்டினை சுத்தமாக,நீர்நிலைகளை மீட்டெடுக்க வாருங்கள்.

ஒரு 26 வயது இளைஞனிடமிருந்து இத்தகைய அக்கறையான ,நேசமிக்க ,அன்புநிறைந்த பேச்சை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை ..

கரூரில் நடந்த கல்வியாளர்கள் சங்கமத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தனது ஆதங்கத்தை மனதை வருடும் வார்த்தைகளால் கூறியபோது மனம் நெகிழ்ந்து கரைந்து நின்றோம்...

இவர்கள் தான் நம் நாட்டின் சொத்து....
கரம் கொடுப்போம் அருண்கிருஷ்ணமூர்த்தி என்னும் இந்த சுற்றுச்சூழலின் மகனுக்கு...

தான் பணிபுரிந்த கூகுள் நிறுவனப்பணியை விட்டுவிட்டு சென்னையை தூய்மையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்..

சினிமாவை நோக்கி ஓடும் இளைஞர்கள் மத்தியில்...
பதவிகளையும் ,சொத்துக்களையும் சேர்த்துக்கொள்ளத்துடிக்கின்ற அரசியல்வாதிகள் வாழ்கின்ற இந்தியாவில்..

இவர் ஒரு விதை...இவர் உருவாக்கி செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஈ.எஃப்.ஐ என்ற அமைப்பில் இயற்கை மீது ஆர்முள்ள மாணவர்கள்,இளைஞர்கள் ஒன்றிணைந்து நாம் அசுத்தப்படுத்திய நீர்நிலைகளை சுத்தம் செய்கின்றார்கள்..

எதற்காக வாழ்கிறோம் என்று அறியாமல் வாழ்ந்து மறைகின்ற மனிதநேயமற்ற மனிதர்களின் மத்தியில்..

இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை காண்கையில் மனதில் நம்பிக்கை துளிர்விடுகின்றது...

வாழ்த்துகள் அருண்...உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... K1JiQj1XTICXjuYayGbQ+WP_20161002_17_56_44_Pro(1)உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... IRkpXmRSSWKmlEIuGoZK+arun1உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... OL0IOPB9SHWLdlMir9iL+arun
geetham
geetham
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015

http://velunatchiyar.blogspot.com/

Back to top Go down

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Empty Re: உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

Post by T.N.Balasubramanian Mon Oct 03, 2016 8:17 pm

வாழ்த்துகள் அருண்.
ஒவ்வொருவரும் தன் வீட்டையும் , வீட்டின் முன் பக்கத்தையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் போதும் .
கெடுப்பவர்கள் யாவரும் ஹோட்டல் /மெஸ் / வீதியோர கையேந்தி பவன்கள். அவர்கள் தூக்கி எறியும்
லஞ்ச பைசாவிற்கு விலைப் போகும் மாநகர / போலீஸ் அலுவலர்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Empty Re: உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

Post by krissrini Mon Oct 03, 2016 8:24 pm

வாழ்த்துக்கள்


ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Empty Re: உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

Post by Ramalingam K Mon Oct 03, 2016 9:51 pm

ஒரு கைதட்டினால் ஓசை எழும்பாது - கை கொடுப்போம்.

ஆனால் சிறு துளிகள் பெரு வெள்ளமாகலாம் - நாமும் ஒரு துளியாவோம் அருணால் வரப்போகும் புதிய தூய்மை வெள்ளப் பெருக்கிற்கு.

வாழ்த்துத் தெரிவித்து வாழ்த்திக் கொள்கிறேன் என்னையும்தான்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Empty Re: உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum