Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவரை நாம் பெறவே என்ன என்ன தவம் செய்தோமோ?
Page 1 of 1
இவரை நாம் பெறவே என்ன என்ன தவம் செய்தோமோ?
![இவரை நாம் பெறவே என்ன என்ன தவம் செய்தோமோ? J2D63Un3RKC3RyJishHJ+E_1475123600](https://www.filepicker.io/api/file/J2D63Un3RKC3RyJishHJ+E_1475123600.jpeg)
-
எனக்கு ஏழு வயது இருக்கும். ராஜஸ்தானிக மன்றத்தில்
உறுப்பினராவதற்காக என் தந்தையார் போர் பந்தரிலிருந்து
ராஜ்கோட்டுக்குச் சென்றார். அங்கே என்னை ஒரு ஆரம்பப்
பாடசாலையில் சேர்த்தனர்.
அந்த நாட்களில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த
ஆசிரியர்களின் பெயர் உட்பட எல்லா விவரங்களுமே எனக்கு
நன்றாக ஞாபகம் இருக்கிறது. போர்பந்தரில் இருந்ததை
போன்றே, இங்கும் என்னுடைய படிப்பைப் பற்றி முக்கியமாகக்
குறிப்பிடக்கூடியது எதுவுமில்லை.
சாதாரண நடுத்தர மாணவனாகவே நான் இருந்தேன்.
இந்தப் பள்ளிக்கு என்னை அனுப்பினர். பன்னிரெண்டு வயதாகி
விடவே, பிறகு உயர் தரப் பள்ளியில் சேர்த்தனர். இந்தக் குறுகிய
காலத்தில் என் ஆசிரியர்களிடத்திலோ, என் பள்ளித்
தோழர்களிடத்திலோ ஒரு பொய்யேனும் எப்போதும் நான்
சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை.
-
எனக்கு கூச்சம் அதிகம்; யாருடனும் சேரமாட்டேன்.
என் புத்தகங்களும், என் பாடங்களுமே எனக்கு உற்ற தோழர்கள்.
சரியான நேரத்தில் பள்ளிக்கூடத்துக்குப் போய்விடுவது,
என் அன்றாடப் பழக்கம். யாருடனும் பேசவே பிடிக்காததால்
பள்ளி விட்டதும் ஒரே ஓட்டமாக வீடு வந்து சேருவேன்.
-
Re: இவரை நாம் பெறவே என்ன என்ன தவம் செய்தோமோ?
காப்பி கூடவே கூடாது!
-
உயர்தரப் பள்ளியில் நான் படித்த முதல் ஆண்டில் பரீட்சையின்
போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு... அது இங்கே குறிப்பிடத்
தக்கது... கல்வி இலாகா இன்ஸ்பெக்டர், ஸ்ரீகைல்ஸ்
அப்பள்ளிக்கூடச் சோதனைக்காக வந்திருந்தார். எழுத்துக் கூட்டி
எழுதும் பயிற்சிக்காக அவர் எங்களுக்கு ஐந்து சொற்களைக் கூறி,
அவற்றை எழுதச் சொன்னார். அதில் ஒரு சொல், 'கெட்டில்!'
-
அதை நான் தவறாக எழுதிவிட்டேன். ஆசிரியர் தன் கால் பூட்ஸ்
முனையால் என் காலைச் சீண்டி தூண்டினார். நான் புரிந்து
கொள்ளவில்லை. நாங்கள் பக்கத்து பையனைப் பார்த்து, 'காப்பி'
அடிக்காமல் பார்த்துக் கொள்ளுவதற்காகவே ஆசிரியர் அங்கே
இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
ஆனால், என் பக்கத்துப் பையனின் சிலேட்டைப் பார்த்து
அப்பதத்தின் எழுத்துக்களைக் காப்பியடிக்க அவர் என்னைத்
தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை.
இதன் பலன் என்னவெனில், என்னைத் தவிர மற்ற எல்லாப்
பிள்ளைகளும் அச்சொல்லை சரியாக எழுதியிருந்தனர். நான்
ஒருவேளை முட்டாளாக இருந்துவிட்டேன். இந்த முட்டாள் தனத்தை
நான் உணரும்படி செய்வதற்கு ஆசிரியர் பிறகும் முயற்சி செய்தார்;
ஆனால், அதனாலும் பயனில்லை. காப்பி அடிக்கும் வித்தையை
நான் என்றுமே கற்றுக் கொள்ள முடியவில்லை.
என்றாலும் என் ஆசிரியரிடம் நான் கொண்டிருந்த மதிப்பை
இச்சம்பவம் கொஞ்சமும் குறைத்துவிடவில்லை.
பெரியவர்களிடம் இருக்கும் குறைகளைக் காண்பதில் குருடனாவே
இருந்து விடுவது என் சுபாவம். இதே ஆசிரியரின் வேறு பல
குறைபாடுகளையும் பின்னர் அறிந்தேன். என்றாலும், அவரிடம்
நான் வைத்திருந்த மதிப்பு மாத்திரம் குறையவே இல்லை.
ஏனெனில், பெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு
அவர்களுடைய செய்கைகளைக் கவனிக்காமல் இருந்து விட
நான் கற்றுக் கொண்டிருந்தேன்.
Re: இவரை நாம் பெறவே என்ன என்ன தவம் செய்தோமோ?
பாதையை வகுத்து தந்த நாடக கதை!
அதே காலத்தில் நடந்த மற்றும் இரு சம்பவங்கள் என் நினைவில்
என்றும் அப்படியே இருந்து வருகிறது. என் பாடப் புத்தகங்களைத்
தவிர வேறு எதையும் படிப்பதில் எனக்குப் பொதுவாக விருப்பம்
இருந்ததில்லை.
அன்றாடம் பாடங்களைச் சரிவரப் படித்து விட வேண்டும்;
ஏனெனில், சரியாகப் படிக்காததற்காக ஆசிரியரின்
தண்டனைகளுக்கு ஆளாவது எனக்கு பிடிக்காது; அவரை ஏமாற்றவும்
நான் விரும்பவில்லை. ஆகையால், பாடங்களைக் கட்டாயம் படித்து
விடுவேன். ஆனால், அவற்றில் அடிக்கடி என் புத்தி செல்லாது.
இவ்வாறு பாடங்களையே சரியாகப் படிக்காமல் இருக்கும்போது,
மேற்கொண்டு வேறு புத்தகங்களைப் படிப்பது என்பதற்கே
இடமில்லை. ஆனால், என் தந்தையார் வாங்கியிருந்த, சிரவண பித்ரு
பக்தி நாடகம் என்ற புத்தகம் என் கண்ணில் எப்படியோ பட்டது.
தீவிரமான சிரத்தையுடன் அப்புத்தகத்தைப் படித்தேன். அதில்,
கண்ணிழந்த தன்னுடைய தாய் தந்தையரை கூடையில் வைத்து,
காவடியாக சிரவணன் தோளில் சுமந்து சென்றது, என் மனதில்
அழியாத முத்திரை போட்டுவிட்டது.
'நீ பின்பற்றுவதற்கு இது ஒரு சரியான உதாரணம்' என்று எனக்கு
நானே சொல்லிக் கொண்டேன். சிரவணன் இறந்ததால், புத்திர
சோகத்தோடு பெற்றோர் வருந்திப் பிரலாபித்தது என் நினைவில்
இன்னும் அப்படியே இருந்தது. சோகம் மிகுந்த அந்தக் கீதம் என்
உள்ளத்தை உருக்கிவிட்டது. என் தந்தை, எனக்காக வாங்கியிருந்த
வாத்தியத்தில் அந்தக் கீதத்தை வாசித்தேன்.
உண்மையே உனக்கு நிகர் நீயே!
மற்றொரு நாடக சம்பந்தமாகவும் இதே போன்ற ஒரு சம்பவம்
உண்டு. ஏறக்குறைய அதே சமயத்தில் ஒரு நாடகக் குழுவினர்
நடத்தி வந்த ஒரு நாடகத்தைப் பார்க்க என் தந்தையாரின் அனுமதி
பெற்றேன். அரிசந்திரன் என்ற இந்நாடகம், என் உள்ளத்தைக்
கொள்ளை கொண்டது. எத்தனை தரம் அதைப் பார்த்தாலும் எனக்குச்
சலிப்பு ஏற்படாது.
ஆனால், அதைப் போய் பார்க்க எத்தனை தடவைதான் என்னை
அனுமதிப்பர். சதா என் நினைவில் இருந்து வந்தது. எண்ணற்ற
சமயங்களில் எனக்குள் நானே அரிசந்திரனாக நடித்திருப்பேன்.
அரிச்சந்திரனைப் போல எல்லாரும் ஏன் சத்தியசீலர்கள் ஆகக்
கூடாது என்று அல்லும், பகலும் என்னை நானே கேட்டுக் கொள்வேன்.
சத்தியத்தைக் கடைபிடிப்பதும், அதற்காக அரிச்சந்திரன்
அனுபவித்த துன்பங்களையெல்லாம் அனுபவிப்பதுமாகிய
லட்சியமே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது.
அரிச்சந்திரனின் கதை, உண்மையிலேயே நடந்த ஒன்று என்றே
நான் நம்பிவிட்டேன். அதை நினைத்துப் பல சமயங்களில் அழுதும்
விடுவேன். அரிச்சந்திரன் சரித்திர புருஷனாக இருந்திருக்க முடியாது
என்று என் பகுத்தறிவு இன்று எனக்குக் கூறுகிறது என்றாலும்,
என்னைப் பொறுத்தவரையில் அரிச்சந்திரனும், சிரவணனும் வாழ்வின்
உண்மைகள்.
அந்த நாடகங்களைத் திரும்ப இன்று நான் படித்தாலும் முன்போலவே
என் மனம் உருகிவிடும் என்பது நிச்சயம்.
-
இது, 'மகாத்மா காந்தி அடிகளின்' சுய சரிதத்தில், குழந்தை பருவம்
என்ற தலைப்பில், அவர் எழுதிய வாழ்க்கை சரிதத்தின் சுவடுகள்.
உலகிலேயே உத்தமராய் அவதரித்த, 'காந்தி மகானின்' மேன்மையை
போற்றுதல் ஒவ்வொரு இந்தியரின் உன்னத கடமை.
-
--------------------------------
சிறுவர்மலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என்ன தவம் செய்தோமோ தமிழா?
» இணைய கலாட்டா
» தமிழனாய் பிறக்க, எந்த ஜென்மத்தில்,என்ன தவம் செய்தோமோ!
» என்ன பாவம் செய்தோமோ!
» நீ என்ன தவம் செய்தாய் தமிழா
» இணைய கலாட்டா
» தமிழனாய் பிறக்க, எந்த ஜென்மத்தில்,என்ன தவம் செய்தோமோ!
» என்ன பாவம் செய்தோமோ!
» நீ என்ன தவம் செய்தாய் தமிழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|