Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விளக்கம் தேவை.?
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
விளக்கம் தேவை.?
First topic message reminder :
அன்பிற்கினிய தமிழ் சான்றோர்களுக்கு இனியவனின் இனிய வணக்கங்கள்.?
சமீபத்தில் எனக்கேற்பட்ட இரு சந்தேகங்களுக்கு தங்களிடம் விளக்கம் பெற ஆவலாக உள்ளேன்.
சந்தேகம் 1 :
மகாகவி பாரதியின் "தேடிச்சோறு நிதந்தின்று" எனும் கவிதையை நாம் அனைவருமே படித்திருப்போம்..அதில் வரும் "கொடுங்கூற்று" என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் விளக்கம் என்ன.??
சந்தேகம் 2 :
தமிழ் மொழி திராவிட மொழியின் குடும்பமென்று ஒரு கருத்தும்,
"த்ரவிட" என்னும் வார்த்தையே "தமிழ்" என்று திரிந்ததாய் ஒரு கருத்தும்,
"தமிழ்" மொழியே திரிந்து "த்ரவிட" என்றும் அதுவே இப்பொழுது திராவிடம் என மருவியுள்ளதாய் ஒரு கருத்தும் பரவலாக நிலவியுள்ளதே.?
இதில் சரியான கூற்று எது.? ஆரியம் - திராவிடம் இவை தமிழ் மண்ணில் தோன்றியது எப்போது.? எங்கு.? யாரால்.??
பதில்களுக்கு காத்திருக்கும்,
*தி.கோ இனியவன்
அன்பிற்கினிய தமிழ் சான்றோர்களுக்கு இனியவனின் இனிய வணக்கங்கள்.?
சமீபத்தில் எனக்கேற்பட்ட இரு சந்தேகங்களுக்கு தங்களிடம் விளக்கம் பெற ஆவலாக உள்ளேன்.
சந்தேகம் 1 :
மகாகவி பாரதியின் "தேடிச்சோறு நிதந்தின்று" எனும் கவிதையை நாம் அனைவருமே படித்திருப்போம்..அதில் வரும் "கொடுங்கூற்று" என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் விளக்கம் என்ன.??
சந்தேகம் 2 :
தமிழ் மொழி திராவிட மொழியின் குடும்பமென்று ஒரு கருத்தும்,
"த்ரவிட" என்னும் வார்த்தையே "தமிழ்" என்று திரிந்ததாய் ஒரு கருத்தும்,
"தமிழ்" மொழியே திரிந்து "த்ரவிட" என்றும் அதுவே இப்பொழுது திராவிடம் என மருவியுள்ளதாய் ஒரு கருத்தும் பரவலாக நிலவியுள்ளதே.?
இதில் சரியான கூற்று எது.? ஆரியம் - திராவிடம் இவை தமிழ் மண்ணில் தோன்றியது எப்போது.? எங்கு.? யாரால்.??
பதில்களுக்கு காத்திருக்கும்,
*தி.கோ இனியவன்
திகோ இனியவன்- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016
Re: விளக்கம் தேவை.?
திருக்குறளில்
தமிழ் , கடவுள் , ஒன்பது ஆகிய சொற்களைக் காணமுடியாது .
தமிழ் , கடவுள் , ஒன்பது ஆகிய சொற்களைக் காணமுடியாது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: விளக்கம் தேவை.?
மேற்கோள் செய்த பதிவு: 1222814M.Jagadeesan wrote:திருக்குறளில்
தமிழ் , கடவுள் , ஒன்பது ஆகிய சொற்களைக் காணமுடியாது .
ஆகையால்தான் அது உலகப் பொதுமறையோ ஐயா!
வாழ்க நம் தமிழ்வேதம்.
வளர்க மானுடத்துள் அதன் அறிவூட்டம்
Re: விளக்கம் தேவை.?
மேற்கோள் செய்த பதிவு: 1222751M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1222685இனியவன் wrote:தமிழ் மொழி திராவிட மொழியின் குடும்பமென்று ஒரு கருத்தும்,
"த்ரவிட" என்னும் வார்த்தையே "தமிழ்" என்று திரிந்ததாய் ஒரு கருத்தும்,
"தமிழ்" மொழியே திரிந்து "த்ரவிட" என்றும் அதுவே இப்பொழுது திராவிடம் என மருவியுள்ளதாய் ஒரு கருத்தும் பரவலாக நிலவியுள்ளதே.?
இதில் சரியான கூற்று எது.? ஆரியம் - திராவிடம் இவை தமிழ் மண்ணில் தோன்றியது எப்போது.? எங்கு.? யாரால்.??
பதில்களுக்கு காத்திருக்கும்,
*தி.கோ இனியவன்
"தமிழுக்கும் அமுதென்று பேர் " என்றான் பாவேந்தன் .
" அமிழ்து , அமிழ்து " என்று விடாமல் சொல்லிக் கொண்டிருந்தால் , அது " தமிழ் , தமிழ் " என்று நம் காதுகளில் ஒலிக்கும் !
என்னதான் இருந்தும் என்ன பயன் இக்காலத்தில்;
தமிழில் எனக்குச் சரியாகப் பேசவராது என்பதில் இக்காலத் தமிழன் பெருமிதம் கொள்கிறான்;
இருவர் தமிழர் சந்தித்தாலும் பேசுவது ஆங்கிலத்தில்தான்;
தமிழரின் பிள்ளைகள்; பெயரப்பிள்ளைகள் பள்ளிகளில் கற்பது என்னவோ தமிழில் அல்லவே அல்ல.
பழம் பெருமை பாராட்டிக் காலம் கழிப்பதில்தான் தமிழனுக்கு எவ்வளவு பெருமை !
என் தாத்தா தனவந்தர் என்பதில் என்ன நன்மை இருக்க முடியும் - தான் தரித்திரனாய் இருந்துகொண்டு.
Re: விளக்கம் தேவை.?
எப்போதும் சிறு சிறு முயற்சிகளே பெரிய பெரிய மாற்றங்களை கொண்டுவந்து சேர்க்கும்.
இந்த ஈகரை இணைய பக்கம் அந்த முயற்சிகளை இதுநாள்வரை மிக அழகாக செய்துவருகிறது..அதுமட்டுமின்றி இப்பக்கத்தில் இணைத்துள்ள உலக தமிழர்களும் தங்களால் முடிந்த அளவிற்கு தமிழ் வளர்க்க பாரெங்கும் பரப்ப விழையலாம்..
உதாரணமாக :
தமிழின் பெருமைகளை சிறுவர்/சிறுமிகளுக்கு சிறுவயதிலேயே செப்பித்தல் வேண்டும்,வளர வளர அந்த எண்ணமானது பசுமரத்தாணி போல மனதில் பதியலாம்..
தமிழ் பரப்ப விரும்பும் நாமும் சிற்சில மாற்றங்களை மேற்கொள்ளுதல் அவசியம்,தமிழர்கள் ஆங்கிலத்தில் விட்டுவிட்டு முடிந்தளவில் தமிழிலேயே "கையெழுத்தை"போட்டு பழகலாம்..தேங்க்ஸ்,சாரியை மறந்து நன்றி மன்னிக்கவும் என கூப்பிட ஆரம்பிக்கலாம்..வரலாற்று படிமங்களை சேகரித்து அவை அழியாமல் தடுக்க முன்னேற்பாடுகளையும்,பாதுகாப்பு காரணிகளையும் செய்யலாம்..
ஆங்கிலம் ஒரு அறிவே அது தமிழனின் அடையாளமன்று,தமிழ் தமிழனின் அடையாளம் அது ஒரு சாதாரண மொழியோ அதை பேசுவதில் கேவலமோ அல்லது அதன் வாயிலாக தமிழ் வழி கல்வி கற்பது அவல நிலையோ அல்ல என்பதை விழிப்புணர்ச்சி செய்து பாரெங்கும் முரசறைந்து செப்பி தமிழை மீட்போம் தமிழை காப்போம்.
- தி.கோ இனியவன்
இந்த ஈகரை இணைய பக்கம் அந்த முயற்சிகளை இதுநாள்வரை மிக அழகாக செய்துவருகிறது..அதுமட்டுமின்றி இப்பக்கத்தில் இணைத்துள்ள உலக தமிழர்களும் தங்களால் முடிந்த அளவிற்கு தமிழ் வளர்க்க பாரெங்கும் பரப்ப விழையலாம்..
உதாரணமாக :
தமிழின் பெருமைகளை சிறுவர்/சிறுமிகளுக்கு சிறுவயதிலேயே செப்பித்தல் வேண்டும்,வளர வளர அந்த எண்ணமானது பசுமரத்தாணி போல மனதில் பதியலாம்..
தமிழ் பரப்ப விரும்பும் நாமும் சிற்சில மாற்றங்களை மேற்கொள்ளுதல் அவசியம்,தமிழர்கள் ஆங்கிலத்தில் விட்டுவிட்டு முடிந்தளவில் தமிழிலேயே "கையெழுத்தை"போட்டு பழகலாம்..தேங்க்ஸ்,சாரியை மறந்து நன்றி மன்னிக்கவும் என கூப்பிட ஆரம்பிக்கலாம்..வரலாற்று படிமங்களை சேகரித்து அவை அழியாமல் தடுக்க முன்னேற்பாடுகளையும்,பாதுகாப்பு காரணிகளையும் செய்யலாம்..
ஆங்கிலம் ஒரு அறிவே அது தமிழனின் அடையாளமன்று,தமிழ் தமிழனின் அடையாளம் அது ஒரு சாதாரண மொழியோ அதை பேசுவதில் கேவலமோ அல்லது அதன் வாயிலாக தமிழ் வழி கல்வி கற்பது அவல நிலையோ அல்ல என்பதை விழிப்புணர்ச்சி செய்து பாரெங்கும் முரசறைந்து செப்பி தமிழை மீட்போம் தமிழை காப்போம்.
- தி.கோ இனியவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்ததை கற்பித்து
மறம்தனை செப்பித்து
மீட்டெடுப்போம் உரிமையை
தமிழனெனும் பெருமையை...
திகோ இனியவன்- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016
Re: விளக்கம் தேவை.?
கடவுள் ,ஒன்பது,தமிழ் என சில எழுத்துகள் சொற்கள் திருக்குறளில் பாவிக்கப்படவில்லை. ஏன் என்ற கேள்வியை வைத்து இணையத்தில் தேடிய போது கிடைத்த சில தகவல்கள்.......
திருக்குறள் பொதுமறை என்பதால் தமிழ் போன்ற சில வார்த்தைகளுக்கு அவசியம் வரவில்லை. அன்று தமிழர்கள் இந்தியா முழுவதும் பரந்து வாழ்ந்தார்கள்,அத்துடன் தமிழ் என இன்று போல் தூக்கிப் பிடித்து போர் நடத்தியதில்லை. மொழியைத் தூக்கிப்பிடிக்கும் பழக்கம், அந்தக் காலத்தில் இல்லை.பல மொழிகள் இல்லாதது காரணமாக இருக்கலாம். திருவள்ளுவர் வேறு நூல்களையும் எழுதி இருப்பதால்,அங்கே தமிழ் போன்ற சொற்களை அவர் குறிப்பிட்டிருக்கலாம்.
இது முத்துநிலவனின், கம்பன் தமிழும், கணினித் தமிழும் -கருத்து.
வள்ளுவன் எண்களில் 1-8 வரை பாவித்திருக்கிறான். ஆனால் ஒன்பதையும், ஒள போன்ற சில எழுத்துகளையும் பாவிக்கவில்லை. இதற்கு விடை தருகிறது பரிபாடல்….......
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என (தொண்டு- ஒன்பது , பாழ்- சுழியம்-0 ).
ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏடெடுக்கும் வழக்கம் காரணமாக சில மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. அதன் காரணமாக சில சொற்கள்,எழுத்துகள் மாற சேர வாய்ப்புண்டு.வள்ளுவர் காலத்தில் இருந்த எழுத்துகள்,சொற்கள் பல பாவனை இழந்து விட்டது.திருமந்திரத்தில் சில பாடல்கள் பிற்சேர்க்கையாக இருப்பதை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
தமிழில் எ, ஒ விற்கு புள்ளி வழக்கம் வீரமாமுனிவர் காலம் வரை நீடித்தது.
கி.பி.400 வரை முற்கால முறை : நிகாழகாலாம,இடைக்கால முறை : நிகழகாலம,பிற்கால முறை : நிகழ்காலம்.ஆனாலும் தொல்காப்பியர் காலத்தில் புள்ளி இடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.புள்ளி வைக்கும் வழக்கம் இடையிலே மறைந்து பின்னர் மீண்டும் உருவாயிற்று.
16 ஆம் நூற்றாண்டு இறுதியில்,வீரமாமுனிவருக்கு முன், அச்சிடப்பட்ட கிறித்துவ நூல்..............
![விளக்கம் தேவை.? - Page 2 Tamil_15th_century](https://2img.net/h/www.virtualvinodh.com/wp/wp-content/uploads/2011/03/tamil_15th_century.png)
கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சமவயங்க சுத்த என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள் பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் தமிழி என்பதும் ஒன்று.
பிராகிருத மொழியினர் தமிழ் எழுத்துகளைத் தமிழி, திராவிடி என்று குறிப்பிடுகின்றனர். திராவிடி என்பது பிற்காலப் பெயர். இப்பெயர் கி.பி.5,6 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய நூலாகக் கருதப் பெறுகின்ற லலித விஸ்தாரம் என்னும் நூலிலேயே இடம் பெற்றுள்ளது.-(கல்வெட்டு அறிஞர் நாகசாமி )
நன்றி. இணையப் பல்கலைக்கழகம்/தமிழ் மரபு அறக்கட்டளை.
திருக்குறள் பொதுமறை என்பதால் தமிழ் போன்ற சில வார்த்தைகளுக்கு அவசியம் வரவில்லை. அன்று தமிழர்கள் இந்தியா முழுவதும் பரந்து வாழ்ந்தார்கள்,அத்துடன் தமிழ் என இன்று போல் தூக்கிப் பிடித்து போர் நடத்தியதில்லை. மொழியைத் தூக்கிப்பிடிக்கும் பழக்கம், அந்தக் காலத்தில் இல்லை.பல மொழிகள் இல்லாதது காரணமாக இருக்கலாம். திருவள்ளுவர் வேறு நூல்களையும் எழுதி இருப்பதால்,அங்கே தமிழ் போன்ற சொற்களை அவர் குறிப்பிட்டிருக்கலாம்.
இது முத்துநிலவனின், கம்பன் தமிழும், கணினித் தமிழும் -கருத்து.
வள்ளுவன் எண்களில் 1-8 வரை பாவித்திருக்கிறான். ஆனால் ஒன்பதையும், ஒள போன்ற சில எழுத்துகளையும் பாவிக்கவில்லை. இதற்கு விடை தருகிறது பரிபாடல்….......
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என (தொண்டு- ஒன்பது , பாழ்- சுழியம்-0 ).
ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏடெடுக்கும் வழக்கம் காரணமாக சில மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. அதன் காரணமாக சில சொற்கள்,எழுத்துகள் மாற சேர வாய்ப்புண்டு.வள்ளுவர் காலத்தில் இருந்த எழுத்துகள்,சொற்கள் பல பாவனை இழந்து விட்டது.திருமந்திரத்தில் சில பாடல்கள் பிற்சேர்க்கையாக இருப்பதை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
தமிழில் எ, ஒ விற்கு புள்ளி வழக்கம் வீரமாமுனிவர் காலம் வரை நீடித்தது.
கி.பி.400 வரை முற்கால முறை : நிகாழகாலாம,இடைக்கால முறை : நிகழகாலம,பிற்கால முறை : நிகழ்காலம்.ஆனாலும் தொல்காப்பியர் காலத்தில் புள்ளி இடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.புள்ளி வைக்கும் வழக்கம் இடையிலே மறைந்து பின்னர் மீண்டும் உருவாயிற்று.
16 ஆம் நூற்றாண்டு இறுதியில்,வீரமாமுனிவருக்கு முன், அச்சிடப்பட்ட கிறித்துவ நூல்..............
![விளக்கம் தேவை.? - Page 2 Tamil_15th_century](https://2img.net/h/www.virtualvinodh.com/wp/wp-content/uploads/2011/03/tamil_15th_century.png)
கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சமவயங்க சுத்த என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள் பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் தமிழி என்பதும் ஒன்று.
பிராகிருத மொழியினர் தமிழ் எழுத்துகளைத் தமிழி, திராவிடி என்று குறிப்பிடுகின்றனர். திராவிடி என்பது பிற்காலப் பெயர். இப்பெயர் கி.பி.5,6 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய நூலாகக் கருதப் பெறுகின்ற லலித விஸ்தாரம் என்னும் நூலிலேயே இடம் பெற்றுள்ளது.-(கல்வெட்டு அறிஞர் நாகசாமி )
நன்றி. இணையப் பல்கலைக்கழகம்/தமிழ் மரபு அறக்கட்டளை.
Guest- Guest
Re: விளக்கம் தேவை.?
தொன்பது என்றால் ஒன்பது என படித்த நினைவு .
தொன் --தொன்மையானது --முதன்மையானது .
பது...பத்து
தொன்பது (ஒன்பது) ...பத்துக்கு முந்தையது .
தொன்னூறு... நூறுக்கு முந்தையது
தொள்ளாயிரம் --ஆயிரத்திற்கு முந்தையது .
ரமணியன்
தொன் --தொன்மையானது --முதன்மையானது .
பது...பத்து
தொன்பது (ஒன்பது) ...பத்துக்கு முந்தையது .
தொன்னூறு... நூறுக்கு முந்தையது
தொள்ளாயிரம் --ஆயிரத்திற்கு முந்தையது .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sat Oct 01, 2016 7:37 am; edited 1 time in total (Reason for editing : correction)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: விளக்கம் தேவை.?
முற்காலத்தில் ஒன்பது " தொண்டு " என்ற சொல்லால் வழங்கப்பட்டு வந்தது . இந்த " தொண்டு " என்ற சொல் எப்படியோ நீக்கப்பெற்று அந்த இடத்தில் " ஒன்பது " என்ற சொல் வந்து உட்கார்ந்துகொண்டது . அதிலிருந்து குழப்பமும் ஆரம்பித்துவிட்டது .
உண்மையில் 90 தான் ஒன்பது என்று அழைக்கப் பட்டிருக்கவேண்டும் . அதைத் தொண்ணூறு என்று பிழையாக அழைத்து வருகிறோம் . இதேபோல
900 - தொண்ணூறு என்று அழைப்பதற்குப் பதிலாக தொள்ளாயிரம் என்று அழைத்து வருகிறோம் .
இந்தப் பிழை எண்ணியலின் இறுதிவரை பாதித்துள்ளது .
ஆனாலும் வள்ளுவர் ஒன்பது என்ற சொல்லை ஏன் பயன்படுத்தவில்லை என்பது மர்மமாகவே உள்ளது .
உண்மையில் 90 தான் ஒன்பது என்று அழைக்கப் பட்டிருக்கவேண்டும் . அதைத் தொண்ணூறு என்று பிழையாக அழைத்து வருகிறோம் . இதேபோல
900 - தொண்ணூறு என்று அழைப்பதற்குப் பதிலாக தொள்ளாயிரம் என்று அழைத்து வருகிறோம் .
இந்தப் பிழை எண்ணியலின் இறுதிவரை பாதித்துள்ளது .
ஆனாலும் வள்ளுவர் ஒன்பது என்ற சொல்லை ஏன் பயன்படுத்தவில்லை என்பது மர்மமாகவே உள்ளது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2G பற்றிய விளக்கம் தேவை
» விளக்கம் தேவை.?
» விளக்கம் தேவை
» இலக்கண விளக்கம் தேவை
» ரத்தம் சில விளக்கம் தேவை
» விளக்கம் தேவை.?
» விளக்கம் தேவை
» இலக்கண விளக்கம் தேவை
» ரத்தம் சில விளக்கம் தேவை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|