ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இரசித்த பாடல் - 2

3 posters

Go down

நான் இரசித்த பாடல் - 2  Empty நான் இரசித்த பாடல் - 2

Post by Guest Fri Sep 23, 2016 11:02 pm

இந்த வாரம் இரசித்து ருசித்துக் கேட்ட பழைய பாடல்

அகத்தியர் என்ற படத்தில், வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால்.....என்று தொடங்கும் பாடல்,உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் வரிகளை, டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இணைந்து பாடியுள்ளார்கள். நடித்தவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், ஆர்.எஸ்.மனோகர். இசை குன்னக்குடி வைத்தியநாதன்.சுவரங்களும் அட்சரங்களும் சேர்ந்து வந்த இராகமாலிகை பாடல் இதுவாகும். இதுபோல் வேறு பாடல்கள் இருக்கிறதா தெரியவில்லை.

இந்தப் பாடலில் உள்ள பல வரிகள் இராகங்களை இணைத்து  எழுதப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு சிறப்பு  -ச ரி க ம ப த நி-  சுரங்களை வைத்தே சொற்களை உண்டாக்கியிருக்கிறார். இன்று இப்படியான பாடல்களை கேட்பது அரிது.

ச ம ம – சமமா?
ச ரி ச ம ம – சரி சமமா?
நி ச ரி ச ம ம – நீ சரி சமமா?
ம நி த நி பா த க ம – மனிதா நீ பாதகமா!
இப்படி வருகிறது.



இதுபோல் நகைச்சுவையாக, இசையையும் மக்கள் சேவையையும் இணைத்து உருவான, உன்னால் முடியும் தம்பி படத்தில், இளையராசா இசையில் என்ன சமையலோ......... எனத் தொடங்கும் பாடல், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கே.எஸ் சித்திராவும் பாடியது. ஓரளவிற்கு மேலேயுள்ள பாடல் போல் அமைந்த இந்தப் பாடல் கல்யாணி, வசந்தா, மோகனம், மத்தியமாவதி என்ற இராகங்களில் அமைக்கப்பட்டுள்ளது.



avatar
Guest
Guest


Back to top Go down

நான் இரசித்த பாடல் - 2  Empty Re: நான் இரசித்த பாடல் - 2

Post by T.N.Balasubramanian Sat Sep 24, 2016 9:11 am

அருமையான தேர்ந்தெடுப்பு ,மூர்த்தி .
நல்ல கலைஞானம் .
சரியான ஒப்பீடு .
நான் இரசித்த பாடல் - 2  RVZ70hoJRxu805ByGp7u+Fabled-Beauty-Bouquet_top-ftd-flower-bouquets
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நான் இரசித்த பாடல் - 2  Empty Re: நான் இரசித்த பாடல் - 2

Post by ayyasamy ram Sat Sep 24, 2016 9:36 am

நான் இரசித்த பாடல் - 2  103459460
-
ரொம்பவே தீவிரமாக அமைந்த படத்தில்
சற்று குஷியான காட்சியமைப்போடு கமல் தங்கையோடு
சேர்ந்துகொண்டு சமையற்கட்டில் லூட்டியடிக்கும்
'என்ன சமையலோ' பாடல் வெகு சுவாரஸ்யமான பாடல்.

நம்மூர் சாப்பாடு என்றால் இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு,
என்று பல்சுவையோடு பலவகை பதார்த்தங்கள்
நிறைந்திருக்கும். பாடலை நினைவுறுத்திப் பார்க்கையில்
நண்பன் வீட்டு விசேஷத்தில் ஆள் படுக்குமளவு
வாழையிலையை விரித்து பதார்த்தங்களைக் குவித்து
அடுத்தடுத்து இரண்டு பந்திகளில் தொடர்ந்து சாப்பிட்ட
'இளமை (குசும்புக்) காலங்கள்' நினைவுக்கு வருகின்றன.

சமையல் குறித்த பாடலாதலால் பல்சுவை கொண்ட
ராகங்களைக் கோர்த்து ராகமாலிகாவாக இந்தப் பாடலை
அமைத்தது இசைஞானி, கேபி, கமல் இவர்களில் யாருடைய
யோசனை என்று தெரியவில்லை. 'கூட்டு' :-) முயற்சியில் கூட
விளைந்திருக்கலாம்!
-
ரொம்பவே ஜாலியான பாடல் இது. கமல்ஹாஸனின் சேட்டைகள்
மறக்கவே முடியாது. பாலுவும் ஏகமாகச் சேட்டைகள் செய்திருக்கும்
பாடல் இது.
-
------------------------------------------
நன்றி- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நான் இரசித்த பாடல் - 2  Empty Re: நான் இரசித்த பாடல் - 2

Post by T.N.Balasubramanian Sat Sep 24, 2016 12:45 pm

பொதுவாக காரைக்குடி பக்கங்களில் தலைவாழை போட்டு
இலை  நிறைய வெவ்வேறு விதமான பதார்த்தங்கள் போடுவார்கள் என்றும் ,
சாப்பிட முடியாதவர்கள், கூடவே கொண்டுவந்துள்ள
பெரிய அளவு டிஃபன்கேரியரில்
அவைகளை எடுத்து செல்வர் என கேள்விப்  பட்டுள்ளேன்  .

உண்மையா Ram ?

ரமணியன்

@ayyasami ram


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நான் இரசித்த பாடல் - 2  Empty Re: நான் இரசித்த பாடல் - 2

Post by ayyasamy ram Sat Sep 24, 2016 1:28 pm

கம்பன் 2014 உலகத் தமிழ்க் கருத்தரங்கின் விருந்தோம்பல்
பற்றி சிங்கப்பூர் திருமிகு வரதராசன் அவர்களின் மதிப்புரை

--
செட்டிக் குலத்தவர் செய்விருந் தோம்பலுக்(கு)
அட்டியெது(ம்) இல்லை அறிந்திடுவாய். - ஒட்டி
உறவாடு(ம்) அன்னார்க்(கு) உளமார்ந்த நன்றி
மறவாமல் சொல்வேன் மகிழ்ந்து.
-
இலையே உரைக்கு(ம்) இதயத்தின் வீச்சை;
மலையென்(று) உறைகின்றார் மாண்பில். - குலையா
நகரத்தார் காட்டுகிற நல்விருந் தோம்பலைப்
பகரத்தான் வேண்டும் பணிந்து.

-
சிரித்த முகம்கொண்டு செட்டிநன் நாட்டார்
விரித்தயிலை யிட்டார் விருந்து.- கருத்தூன்றித்
தன்னலம் போக்கிய தாய்மார்க்கு நன்றிபல
முன்னம்யான் கூறல் முறை.
-
போலியான அன்பின்றிப் புன்னகைப்பார்; எந்தவோர்
வேலியும் கட்டார் விருந்துக்குக். - கோலமுடன்
காரைக் குடிமக்கள் காட்டுகிற நல்லன்பின்
சீரை உளம்வைத்துச் செப்பு.

-
எப்பொழுதும் வந்தவர்பால் இன்முகத்தர் என்றாகி
முப்பொழுதும் இட்டார் முழுவிருந்து. - அப்பழுக்(கு)
ஏதுமே இல்லாமல் இன்னுரை யார்மாட்டும்
கோதறச் சொல்வார் குளிர்ந்து.
-
காசுபணம் பாரார்; களங்கமறு உள்ளத்தில்
நேசமதை மட்டும் நிறைக்கின்றார். - தேசுமிகு,
வள்ளிமுத் தையாவின் வற்றாக் கனிவன்பு
உள்ளிருக்கு(ம்) என்று(ம்) உறைந்து.

-
பண்டத்தின் மேன்மை பகர்ந்திடும் பாவல்லான்
அண்டத்தில் இல்லை அறைந்திடுவேன். - தண்டனிட்டுச்
சென்னியவர் பாதத்தில் சீராய்ப் படிந்திருக்கப்
பன்னினேன் நன்றியுரைப் பா.
-
-----------------------------------
வரதராசன். அ.கி.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நான் இரசித்த பாடல் - 2  Empty Re: நான் இரசித்த பாடல் - 2

Post by T.N.Balasubramanian Sat Sep 24, 2016 1:51 pm

அய்யா, வெளியிட்ட நன்றியுரைப் பா ,
விளக்கஉரையாக அமைந்தது .
நான் இரசித்த பாடல் - 2  1571444738 நான் இரசித்த பாடல் - 2  3838410834
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நான் இரசித்த பாடல் - 2  Empty Re: நான் இரசித்த பாடல் - 2

Post by Dr.S.Soundarapandian Sat Sep 24, 2016 2:18 pm

நான் இரசித்த பாடல் - 2  3838410834 நான் இரசித்த பாடல் - 2  1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நான் இரசித்த பாடல் - 2  Empty Re: நான் இரசித்த பாடல் - 2

Post by Guest Sat Sep 24, 2016 4:15 pm

பூங்கொத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா. ஓய்வு நேரத்தில் இசை ஆர்வத்தினால் கேட்கும் பாடலுடன் சிறிய என் இசை அறிவையும் சேர்த்திருந்தேன் அவ்வளவுதான்.
avatar
Guest
Guest


Back to top Go down

நான் இரசித்த பாடல் - 2  Empty Re: நான் இரசித்த பாடல் - 2

Post by T.N.Balasubramanian Sat Sep 24, 2016 4:19 pm

விரும்பத் தக்க கலவை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நான் இரசித்த பாடல் - 2  Empty Re: நான் இரசித்த பாடல் - 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum