புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_m10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_m10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_m10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_m10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_m10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10 
25 Posts - 3%
prajai
ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_m10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_m10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_m10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_m10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_m10ஔவையின் அகவலில் யோக நெறி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஔவையின் அகவலில் யோக நெறி


   
   

Page 1 of 2 1, 2  Next

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 17, 2016 8:01 am

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)  
தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

ஒன்றேயாகிய பரம் பொருளை ஔவையார் ஸ்ரீ குருதேவராகவே காண்பதாக அகவல் வரிகள் அமைந்துள்ளன. இந்த அகவல் ஒரு அற்புதமான யோக நூல். அகவலின் இறுதி அடி, “வித்தக விநாயக! விரைகழல் சரணே”  என்று முடிவடைகிறது. ஆகையால் அகவலின் இரண்டிரண்டு அடிகளையும், ‘வித்தக விநாயக’ என்பதை முன்னிட்டு பொருள் கொள்வது ஔவையின் உபதேசத்தைப் புரிந்து கொள்ள உதவும்.

நாயகர் என்றால் மேலானவர்- தலைவர் என்று பொருள். அதாவது இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரிகளுக்கும் மேலானவர் – தலைவர் - உயர்ந்தவர் என்பது பொருள்.

‘வி’ என்பது உயர்வு சிறப்பு கருதி வந்த பெயர் முன்னொட்டு.  

ஆக விநாயகர் என்றால் உயினினங்களில் மேலானவற்றிற்கெல்லாம் மேலானவர் என்பது உண்மைப்பொருள். அவர் குருதேவரைத் தவிற வேறு யாராக இருக்க முடியும்!

வித்தகம்   என்றால் அறிவு; கல்வி;  சின்முத்திரை  என்று பொருள்.
ஆக “வித்தக விநாயக” என்னும்  சொற்றொடர், “சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளேயாகிய ஸ்ரீகுருதேவா !” என்ற அறிவுப் பூர்வமான பொருள் கொள்ளப்படுகிறது.

அதன்படி ஔவையார் அருளிய விநாயகர் அகவலின்  அடுத்த இருஅடியின் பொருளைக் காண்போம் :

வித்தக விநாயக!
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப  (4)

பொன் – தங்கம் போன்ற பிரகாசம்.
அரை – இடை; அருமை ; விருப்பின்மை;
ஞா – பொருந்தி இருத்தல்.
பூ -  பூமி; பிறப்பு; மென்மை; அழகு.
துகில் -  ஆசாரம்; ஒழுகலாறு.
ஆடை – செம்மைகட்டுதல்; நலம் பாராட்டுதல்.
வன்னம் – எழுத்து; கல்வி; இலக்கணம்.
மருங்கு – நூல்.
வளர்தல் –மிகுதல்.
அழகு –சிறப்பு; நற்குணம்.
எறித்தல்  - ஒளிவீசுதல் ; பரத்தல் ; பெருமையுடன் கூடிய புகழை அடைதல்

தெளிவுரை :

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளேயாகிய  ஸ்ரீகுருதேவா !

உலக இருப்புக்கள் யாவற்றிலும் பற்றின்மை ( விருப்பு-வெறுப்பு இல்லாமை) என்னும் உயர்ந்த ஒழுக்கத்தைச் செம்மையாகக் கடைப்பிடித்து , மென்மைகூடிய அழகோடு சுத்த தங்கம் போல் ஒளிர்பவர் தாங்களே !
இலக்கண , இலக்கிய நூல்களின் ஞானத்தில் மிகுந்தவராய் நற்குண சீலராய் பெருமையுடன் கூடிய புகழை உடையவரும்  தாங்களே !



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Sep 18, 2016 5:05 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)  

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி

(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்           (6)

பதப்பொருள்:
பேழை - பெட்டி; பெருமை; உயர்வு.
வயிறு - உதரம்; உள்ளிடம்; மனம்.
பாரம் – பொறுப்பு.
பெரும்பாரம் – பெரிய பொறுப்பு.
கோடு – மலை; உயர்வு, உறுதி.
வேழம் – யானை; இனிப்பு .
முகம் ; வாய்; சொல்.
விளங்குதல் - ஒளிர்தல்; தெளிவாதல்; விளக்கமாதல்; பளபளப்பாதல்; பெருகுதல்; மிகுதல்; அறிதல்.
சிந்தூரம் – சந்தன அங்கி.

தெளிவுரை :

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

      மானுடர்களை ஆத்ம வித்யாவால் உய்வித்து அவர்களுக்கு ஆன்ம விடுதலையை அளிக்கவேண்டும் என்னும் உயர்ந்த பெரிய பொறுப்பை  உள்ளத்தில் கொண்டு அப்பொறுப்பை  நிறைவேற்றுவதில் மலையைப் போல் உயர்ந்தும் உறுதியாகவும் இருப்பவர் தாங்களே!
இனிய சொல்லமிர்தம் கொண்டவர் ; சந்தன வண்ண அங்கியில் விளக்கமாகுபவரும்  தாங்களே!



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 19, 2016 5:06 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி

(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் (8)

பதப்பொருள்:

அஞ்சு –அச்சம்.
கரம் –கை; திடம்.
அங்குசம் -விரல்
பாசம் - அன்பு
நெஞ்சம் –அன்பு.
குடிகொள்ளுதல்- நிலையாக குடியிருத்தல்.
நீலம் - இரக்கமுள்ள மனம்
மேனி- உடல்; அழகு.


தெளிவுரை :

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

உலக மானுடரின் அச்சத்தைப் போக்கக் கூடிய சின்முத்திரை பூண்ட திடமான கையை உடையவர் தாங்களே! தம்மை அண்டியவர்களுக்கு அன்போடு தொடு தீட்சை(ஸ்பர்ச தீட்சை) அளிக்கும் கைவிரல்களைக் கொண்டுள்ளவரும் தாங்களே !

தங்களிடமே அன்பு நிலையாகக் குடிகொண்டுள்ளது; பிறர்பால் இரக்க குணம் கொண்ட முழுவதும் அழகே உருவானவர் தாங்களே !




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 20, 2016 1:21 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி

(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

பதப்பொருள் :

நால்தல் – துலங்குதல்.
வாய் - வாக்கு
நாலிரு - எட்டு
புயம் -திசை
மூன்று – கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்காலம்
கண் –அறிவு.
மும்மதம் – மூன்று + மதம்
மதம் – மகிழ்ச்சி
சுவடு- அடையாளம்.

தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !
உலகின் எட்டு திசைகளிலும் வாழும் மக்கள் எல்லோராலும் ஏற்கப்பட்டு அவர்கள் யாவரும் முன்னேற்றம் அடையும் வகையில் ஞானோபதேசம் அளிக்கக்கூடியவர் தாங்களே !
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்கால நிகழ்வுகளையும் அறியும் ஆற்றலுடையவர் தாங்களே! அதேபோல் துயரம் என்பதே எப்போதும் இல்லாமல் முக்காலத்திலும் மகிழ்ச்சி குடிகொண்டு, ஆனந்தத்தின் அடையாளமாக இருப்பவரும் தாங்களே !





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 21, 2016 8:18 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி

(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் (12)


பதப்பொருள் :

இரண்டு –இரட்டிப்பான.
செவி - காது>கேள்வி>கல்வி>உசாவுதல்; ஆலோசித்தல்.
இலங்கு- தவசி.
பொன் –அணிகலன்; அழகு; ஒளி.
முடி – உயர்வு; உச்சி.
திரளுதல் – மிகுதல்.
முப்புரி – திறனாய்தலில் சிறத்தல் (Standard assessment).
நூல் – புத்தகம் > ஞானம்.
திகழ் - விளங்குதல் .
ஒளி – பிரகசம்; புகழ்.
மார்பு – நெஞ்சம் ; உள்ளம்; மனம்; அகம்.


தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

இகவழ்விற்கான வித்யா ஞானம், பரவாழ்விற்கான ஆத்மஞானம் ஆக இரட்டிப்பு ஞானத்தையும் ஆராய்ந்து தெளிந்து பிறருக்கு உபதேசிப்பவர் தாங்கள் அல்லவோ!

கடுமையான இராஜயோக நெறிகளாகும் தவத்தையே தம் அணிகலனாகக் கொண்ட உயர்ச்சியாகுபவரும் தாங்களே!

உருவாகவும் அருவாகவும் விளங்கும் உலக இருப்புக்கள் எதனைப் பற்றியும் திறனாய்தலில் மிகுந்த சிறந்த ஞானத்தைத் தன்னகத்தே கொண்டு புகழுடன் பிரகாசிப்பவர் தாங்களே!




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 23, 2016 10:01 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி

(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே! (14)


பதப்பொருள் :

சொற்பதம் – இத்தன்மையது என்று பிறருக்கு விளங்கும் வகையில் வாயால் சொல்லி புரியவைத்தல்.
கடத்தல்- தாண்டுதல்;கடத்தல்.
துரியம் –தியான நிலை.
மெய்ஞ்ஞானம் - மெய்யறிவே ஆகும் பிரபஞ்சப்பேராற்றல்
அற்புதம் – வியப்பு.
நிற்றல் – நிலைத்து இருத்தல்.
கற்பகம் – வேண்டியதைத் தருவது.
களிறு- மதயானை

தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

இத்தன்மையது என்று பிறருக்கு விளங்கும் வகையில் வாயால் சொல்லிப் புரியவைக்க முடியாத வகையில் அந்த நிலைக்கு அப்பாலாகிய தியானத்தில் அமர்ந்து மெய்யறிவே ஆகும் பிரபஞ்சப்பேராற்றலை ஆத்ம தரிசனமாகக் காணும் பேறுபெற்றவர் தாங்களே!
மானுடராய்ப் பிறந்து மானுடருடன் மானுடராகவே வாழ்ந்துகொண்டிருந்தும் அனைவர்களிடம் இருந்து மாறுபட்டு விளங்கும் தங்களின் வாழ்வும் இருப்பும் வியப்பிற்குரியதே ! வேண்ட நினைப்பதை அறிவோய் நீ ! வேண்டக் கிடைப்பதை அருள்வோய் நீ ! நிலைத்து உறுதியாய் இருப்பதில் மதயானையைப் போல் சற்றும் பிறழாது தம் தவ ஒழுகலாறுகளில் நிலைத்து இருப்பவரும் தாங்களே !
(குறிப்பு - வேண்டுவதும் அருளுவதும் ஆத்ம ஞானம்)




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 10:37 am

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி

(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டி (16)

பதப்பொருள் :

முப்பழம்- முப்பலன் > வினைப்பலன்> பழவினை(சஞ்சித கர்மம்), நுகர்வினை(பிராரப்த கர்மம்),
ஏறுவினை(ஆகாமிய கர்மம்) ஆகிய மூன்று வினைப்பயன்கள்.
நுகர்தல் – அனுபவித்தல்.
மூஷிகம் – எலி > இன்பம்,உற்சாகமுடைமை, களிப்பு, மகிழ்ச்சி,மதப்பு,அடக்கமுடைமை.
வாகனம் – ஆசாரம்; ஒழுக்கம்.
இப்பொழுது – இந்த இப்பிறவியில்.
என்னை – அடியேனை.
ஆட்கொள்ளுதல் –அடிமைகொள்ளுதல்.
வேண்டி –குறைநீக்க வேண்டுதல்.


தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !
பழவினை(சஞ்சித கர்மம்), நுகர்வினை(பிராரப்த கர்மம்), வருவினை(ஆகாமிய கர்மம்) ஆகிய மூன்று வினைப்பயன்களையும் தவறாமல் தாமும் அனுபவித்துக்கொண்டு தம்மை நாடியவர்களையும் முறையாக அனுபவிக்கச் செய்வித்தும், ஆனாலும் அவற்றால் உண்டாகும் இன்பதுன்ப விளைவுகள் இயல்பானவையே என்று அவைகளைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை அளிப்பதும் தாங்களே! எவ்வளவு அமானுட ஆற்றல் உடையவராய் இருந்த போதிலும் அடக்கமுடைமையையே தங்களது அன்றாட ஒழுகலாறாகவும் கொண்டு விளங்குவதும் தாங்களே!

இந்த இப்பிறவியில் அடியேனையும் தங்களின் அடிமையாக ஏற்றுக் கொண்டு அடியனின் பிறவித்துயராகிய குறைகளைப் போக்கி அடியனக்கு ஆன்ம முக்தி அருள விழைந்ததும் தாங்களே !




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 05, 2016 5:51 am

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்து (18)

பதப்பொருள் :
தாயாய் – அடியனைப் பெற்றெடுத்த அன்னையாகவே ஆகி.
எனக்கு - அடியனௌக்கு
தான் – தாங்களாகவே
எழுதல் – ஆத்ம வித்யாவைத் தொடங்கி வைத்தல்
அருளல் - கருணையோடு கற்பித்தல்.
மாய்தல் - அழிதல்
பிறவி – பிறப்பு –இறப்பு என்னும் சுழற்சி.
மயக்கம் –அறிவின் திரிபு ; அஞ்ஞானம்; அறியாமை.
அறுத்தல் –நீக்குதல்.

தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

அடியனைப் பெற்றெடுத்த அன்னையாகவே ஆகி அடியனுக்குத் தாங்களாகவே முன்விரும்பி
ஆத்ம வித்யாவைத் தொடங்கி வைத்து அதனைக் கருணையோடு கற்பிப்பவரும் தாங்களே !

முடிவே இல்லாமல் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் பிறப்பு-இறப்பு என்னும் சுழற்சிக்குக் காரணமாகிய உலக இருப்புக்களின்பால் அடியனுக்கு இருக்கும் அடியனுடைய அறியாமையை நீக்கி அறிவுத்தெளிவைத் தந்தருளுபவரும் தாங்களே!




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 07, 2016 4:51 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

பதப்பொருள் :

திருந்துதல்- செவ்வையாதல்; மேன்மையாதல்.
முதல்- அனைத்திற்கும் முதன்மையாதல்.
ஐந்தெழுத்து- குருவேநம என்னும் ஐந்தெழுத்து மகாமந்திரம்.
தெளிவு – விளக்கம்; மன அமைவு.
பொருந்துதல் – அடைதல்.
வருதல்- தாமாகவே தேடி வருதல்.
என் -அடியன் .
உளம் – நெஞ்சகம்.
தன்னில் –அதனில் .
புகுதல் –நுழைதல்.

தெளிவுரை:
 
சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

உலகில் இருக்கும் அனைத்து மகா மந்திரங்களிலும் முதன்மையானதும், செவ்வையானதும், மேன்மையானதும் ஆகிய  “குருவேநம” என்னும் ஐந்தெழுத்து மகாமந்திரத்தை அடியனுக்குப் பொருள் விளக்கம் தந்ததோடு அடியனது மனதில் அம்மந்திரமே எப்போதும் அமைந்திருக்குமாறு கருணையோடு அருளியதும் தாங்களே!

மேலும் அடியனைத் தேடிவந்து தாங்களாவே அடியனுடைய நெஞ்சகத்தில் அடியனுக்கு தெரிவிக்காமலேயே நுழைந்து அடியவன் வேறு - தாங்கள் வேறு என இருமை அல்லாமல் தங்களோடு அடியனையும் இரண்டறக் கலப்பித்து இருவரையும் ஒன்றேயாக வேதிசெய்வித்து அருளுவதாவதும் தாங்களே!

"நீயென நானென வேறில்லை  என்னும் நினை வருளித்
தாயென மோன குருவாகி வந்து தடுத் தடிமைச்
சேயெனைக் காத்தனையே பரமேநின் திருவருளுக்குக்
கேயென செய்யும்  கைம்மா  றுளதோ  சுத்த ஏழையனே"  - தயுமான சுவாமிகள்



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 3:26 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென (22)

பதப்பொருள்

குரு வடிவாகி – ஸ்ரீ குருதேவராக உருவம் எடுத்து அவதரித்து.
குவலயம் தன்னில்- இப்பரந்த பூமியில்.
திருவடி வைத்துத் – தம் திருவடிகளைப் பதிப்பித்து.
திறம் இது – வல்லமையோடு அறிந்து தெரிந்து கொள்ளவேண்டுவது இராஜயோக நெறிகளாகிய இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தரணை, தியானம், சமாதி ஆகிய இவைகளே என்று.
பொருள் என - மெய்ப்பொருளாகிய பரமாத்மாவை அடையும் மார்க்கம் என்றுஅறிந்து தெளிதல்.

தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

இப்பரந்த பூமியில் , ஸ்ரீ குருதேவராக உருவம் எடுத்துத் தாங்கள் அவதரித்ததோடு, தம் திருவடிகளை இங்கே பதிப்பித்து இப்பூமியில் மனிதரோடு மனிதராக வாழ்ந்துகொண்டு ஒவ்வொரு மானுடனும் ஆர்வத்துடனும் முழுமுயற்சியோடும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டுவது இராஜயோக நெறிகளாகிய இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோக நெறிகளே என்றும் அந்நெறிகளே மெய்ப்பொருளாகிய பரமாத்மாவை அடையும் மார்க்கம் என்று அறிந்துகொள்ளவும் அந்நெறிகளில் யாவரும் தெளிவு பெறவும் அருளுவதாவதும் தாங்களே!




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக