புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஔவையின் அகவலில் யோக நெறி


   
   

Page 2 of 2 Previous  1, 2

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 17, 2016 8:01 am

First topic message reminder :

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)  
தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

ஒன்றேயாகிய பரம் பொருளை ஔவையார் ஸ்ரீ குருதேவராகவே காண்பதாக அகவல் வரிகள் அமைந்துள்ளன. இந்த அகவல் ஒரு அற்புதமான யோக நூல். அகவலின் இறுதி அடி, “வித்தக விநாயக! விரைகழல் சரணே”  என்று முடிவடைகிறது. ஆகையால் அகவலின் இரண்டிரண்டு அடிகளையும், ‘வித்தக விநாயக’ என்பதை முன்னிட்டு பொருள் கொள்வது ஔவையின் உபதேசத்தைப் புரிந்து கொள்ள உதவும்.

நாயகர் என்றால் மேலானவர்- தலைவர் என்று பொருள். அதாவது இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரிகளுக்கும் மேலானவர் – தலைவர் - உயர்ந்தவர் என்பது பொருள்.

‘வி’ என்பது உயர்வு சிறப்பு கருதி வந்த பெயர் முன்னொட்டு.  

ஆக விநாயகர் என்றால் உயினினங்களில் மேலானவற்றிற்கெல்லாம் மேலானவர் என்பது உண்மைப்பொருள். அவர் குருதேவரைத் தவிற வேறு யாராக இருக்க முடியும்!

வித்தகம்   என்றால் அறிவு; கல்வி;  சின்முத்திரை  என்று பொருள்.
ஆக “வித்தக விநாயக” என்னும்  சொற்றொடர், “சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளேயாகிய ஸ்ரீகுருதேவா !” என்ற அறிவுப் பூர்வமான பொருள் கொள்ளப்படுகிறது.

அதன்படி ஔவையார் அருளிய விநாயகர் அகவலின்  அடுத்த இருஅடியின் பொருளைக் காண்போம் :

வித்தக விநாயக!
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப  (4)

பொன் – தங்கம் போன்ற பிரகாசம்.
அரை – இடை; அருமை ; விருப்பின்மை;
ஞா – பொருந்தி இருத்தல்.
பூ -  பூமி; பிறப்பு; மென்மை; அழகு.
துகில் -  ஆசாரம்; ஒழுகலாறு.
ஆடை – செம்மைகட்டுதல்; நலம் பாராட்டுதல்.
வன்னம் – எழுத்து; கல்வி; இலக்கணம்.
மருங்கு – நூல்.
வளர்தல் –மிகுதல்.
அழகு –சிறப்பு; நற்குணம்.
எறித்தல்  - ஒளிவீசுதல் ; பரத்தல் ; பெருமையுடன் கூடிய புகழை அடைதல்

தெளிவுரை :

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளேயாகிய  ஸ்ரீகுருதேவா !

உலக இருப்புக்கள் யாவற்றிலும் பற்றின்மை ( விருப்பு-வெறுப்பு இல்லாமை) என்னும் உயர்ந்த ஒழுக்கத்தைச் செம்மையாகக் கடைப்பிடித்து , மென்மைகூடிய அழகோடு சுத்த தங்கம் போல் ஒளிர்பவர் தாங்களே !
இலக்கண , இலக்கிய நூல்களின் ஞானத்தில் மிகுந்தவராய் நற்குண சீலராய் பெருமையுடன் கூடிய புகழை உடையவரும்  தாங்களே !



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 14, 2016 5:48 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே (24)


பதப்பொருள் :

வாடுதல் – மனதாலும் உடலாலும் வருத்தப்படுதல்.
வகை –தன்மை.
மகிழ்தல் – சுகம் பெறுதல்.
அருளல் –.கருணையோடு அளித்தல்.
கோடு – நடுவுநிலைமை.
ஆயுதம் – கருவி.
கொடுவினை - பாவம் புண்ணியம் என்னும் துயரத்தைத் தரும் வினைப்பயன்கள்.
களைதல் - நீக்குதல்.

தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

உலக வாழ்வின் நிமித்தமாக அடியனால் ஆற்றப்படும் செயல்களின் விளைவுகளால் மனதாலும் உடலாலும் வருத்தப்படாதத் தன்மையில் அடியேனுக்குச் சுகத்தைக் கருணையோடு அளிப்பதும் தாங்களே !

உலக உயிர்கள் அனைத்திடமும் அடியனின் வாழ்வின் நிமித்தமாக செய்யப்படும் அனைத்து விதமான செயல்பாடுகளிலும் நடுவுநிலைமை என்னும் கருவியால் செய்விக்கச்செய்து அடியனுக்குப் பாவம் புண்ணியம் என்னும் துயரத்தைத் தரும் வினைப்பயன்கள் புதியதாக ஏற்படாமலும் மேலும் முன்னதாகவே என்னிடம் இருக்கும் அத்தகைய வினைப்பயன்கள் என்னை விட்டு நீங்குமாறும் கருணையோடு அருளுவதும் தாங்களே !

[நம் பாட்டி குறிப்பிடும் சுகம் ஆத்ம வித்யா பழகலாறுகளால் கிடைக்கப்பெறுவது].




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 19, 2016 8:06 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி (26)

பதப்பொருள் :

உவட்டுதல் – மிகுதல்; திகட்டுதல்.
உபதேசம் –ஞானபோதனை.
புகட்டுதல் –உட்புகுத்துதல்.
செவி – காது; கேள்வி ஞானம்.
தெவிட்டுதல் –நிறைதல்.
ஞானம் –மெய்ஞ்ஞானம்; பிரபஞ்சப் பேராற்றலாகும் பரம்பொருளைப் பற்றிய அறிவுடைமை.
தெளிவு –விளக்கம்.
காட்டுதல் –அறிமுகம் செய்வித்தல்.


தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

கற்கக் கற்கப் போதும் என்று எப்போதுமே தெவிட்டாத மெய்ஞ்ஞான போதனைகளை அடியவனின் காதுகள் வழியாக, கேள்வி ஞானமாகக் கற்பித்து , அத்தகைய மெய்ஞ்ஞானம் அடியனுக்குள் நிறைந்து இருக்குமாறு செய்வித்து, மேலும் பிரபஞ்சப் பேராற்றலாகும் பரம்பொருளைப் பற்றிய அறிவுடைமை விளக்கங்களையும் அடியனுக்கு அறிமுகம் செய்வித்து அருளுவதாவதும் தாங்களே !





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 27, 2016 11:00 am

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளி (28)

பதப்பொருள் :

ஐம்புலன் – மெய், வய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து செயற்புலன்கள்.
அடக்குதல் – நெறிப்படுத்துதல்.
உபாயம் – வழி ; இராஜயோக நெறி என்னும் வழி.
இன்பு – இனிமை; இன்பம்.
உறுதல் – சம்பவித்தல், அமைத்தல் .
கருணை –அருள்; தயை.
இனிது –நன்மையாவது.
அருளல் – இரக்கப்பட்டுக் கொடுத்தல்.

தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

தத்தம் போக்கிற்கு அலைந்து திரியும் மெய், வய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து செயற்புலன்களையும் நெறிப்படுத்துதலுக்கு உகந்த வழியாக, ஆத்ம வித்யா என்னும் இராஜயோக நெறிகளை அடியேனுக்குப் பயிற்றுவித்து அவற்றைச் சரியாகப் பழகவும் செய்வித்தமை தாங்கள் இயல்பாகவே அடியனிடம் கொண்டுள்ள கருணையினாலும், மற்றும் அனைவருக்கும் நன்மை அளிக்கவேண்டும் என்னும் தங்களின் இரக்க குணத்தாலும் அனைவருக்கும் இன்பத்தை உண்டாக்கும் தயையினால் அருளியது தாங்களே !




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 28, 2016 4:56 am

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

பதப்பொருள் :

கருவி –குழப்பம்; மயக்கம்; மருட்சி
ஒடுங்குதல் - அடங்குதல்
கருத்து - விவேகம்
அறிவித்தல் -கற்பித்தல்
இருவினை – பாவம்,புண்ணியம் என்னும் இரு வினைகள்.
அறுத்தல்- நீக்குதல்
இருள் – அஞ்ஞானம்; மாயை
கடிதல் -ஓட்டுதல்

தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

மானுட வாழ்வில் உண்டாகும் குழப்பங்களை உண்டு பண்ணும் மயக்கம் முழுமையையும் தடுத்து நிறுத்தி, அம்மயக்கத்திலிருந்து விடுபடும் மெய்ஞ்ஞானத்தைக் கற்பித்து, அதன் விளைவாக வாழ்வின் செயல்பாடுகளில் உண்டாகும் பாவம் புண்ணியம் என்னும் இரு வினைப் பயன்களையும் நீக்குவதும், இறுதியில் அஞ்ஞானம் மொத்தமாக அகன்ற நிலையில் மெய்ப்பொருளைப் பாரெங்கும் காட்சியாக்குவதும் தாங்களே !




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக