ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

5 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

request அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Thu Sep 15, 2016 4:41 pm

First topic message reminder :

தெரிந்து கொள்வோம்   தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

 “தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
                                      ஆத்திச்சூடி
                           (ஔவையார் அருளியது)


01. அறஞ் செய விரும்பு.


பதவுரை:
அறம் – தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவை.
செயல்  -  கடந்த கால நிகழ்வுகளை அனுபவமாகக் கொண்டு நிகழ்
காலத்திலும்   எதிர்காலத்திலும் எண்ணம் , சொல் ,செயல் ஆகிய
மூன்றினாலும் தூய்மையோடு வாழ்தல்.
விரும்புதல் – அழுத்தமாய்க்கருதுதல்; உறுதியாகக் கடைப்பிடித்தல்.

தெளிவுரை -
  கடந்த கால நிகழ்வுகளை தத்தம் அனுபவமாகக் கொண்டு, நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் எண்ணம் சொல் செயல் ஆகிய மூன்றினாலும் தூய்மைமைக் கடைப்பிடித்து, தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவற்றை வாழ்வில் உறுதியாக நடைமுறைப் படுத்தி ஒவ்வொருவரும் வாழவேண்டும்.
பாட்டியின் தொடக்க அறிவுரையே வெகு அற்புதம். பாட்டியின் தாள் போற்றி.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down


request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by M.Jagadeesan Fri Sep 30, 2016 8:23 am

கண்ணால் கண்டதற்கு மாறாக வேறொன்றைச் சொல்லாதே !

என்று குழந்தைகளுக்கு ஒளவை சொல்கிறாள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Fri Sep 30, 2016 8:36 am

ஆத்திச் சூடி அனைவருக்கும் நம் ஔவை தந்தது தானே ஐயா.

அதனைக் குழந்தைச் சொத்தாகவும் கொள்ளலாம்.

நாம் அனைவரும் பரம்பொருளின் குழந்தைகள் தானே .

ஔவையின் பார்வை உயர்நோக்கு.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by M.Jagadeesan Fri Sep 30, 2016 8:57 am

நான் சொல்ல வந்தது வேறு . உங்கள் உரை மாறுபட்டு இருப்பதைக் குறிப்பிடுகிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Fri Sep 30, 2016 9:22 am

M.Jagadeesan wrote:நான் சொல்ல வந்தது வேறு . உங்கள் உரை மாறுபட்டு இருப்பதைக் குறிப்பிடுகிறேன் .
[You must be registered and logged in to see this link.]

உரை மாறுபடவில்லை ஐயா.  ஆத்திச் சூடி  ஆரம்பப்  பள்ளிச் சிறார்களுக்கு ஓரளவு பொருந்துவது.

உண்மையில் பார்க்கப்போனால், அது பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் ஆராய்ச்சிக்கு உகந்த ஓர் அற்புதப் படைப்பு என்பது அடியனின்  கருத்து.

மதிப்பு  மிகுந்த  அந்த  வைரத்தைக்     கூழாங்கல்லாகக்  கருதி,   விளயாடும் சிறுவர்கள் போல்    தம் உண்டி வில்லில் வைத்து  மரக்கிளையில் இருக்கும் குருவியை  இதுவரை     நாம் அடித்து  விளையாடிக் கொண்டு இருந்தோமோ என எண்ணவைக்கின்றன அந்த அற்புத மொழிகள்.

அதனால்தான் ஐயா இப்பதிவிற்குத் "தெரிந்து கொள்வோம் தேன் தமிழை" என்று தலைப்பிட்டோம்.

  வணக்கம் ஐயா!  இவை மறுப்பல்ல - அடியனின் உள்ளத் தவிப்பு.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by M.Jagadeesan Fri Sep 30, 2016 9:50 am

ஒரு பாடலுக்கு உரை எழுதும் முன்பாக , அப்பாடலுக்கு நம்முடைய ஆசிரியர்கள் எவ்வாறு பொருள் கூறினார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ளவேண்டும் .இரண்டாவதாக பிற உரையாசிரியர்களின் கருத்தை ஊன்றிப் படிக்கவேண்டும் .

இவ்விரண்டையும் விடுத்து மனம்போன போக்கிலே நாம் உரை எழுதக்கூடாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Fri Sep 30, 2016 11:07 am

M.Jagadeesan wrote:ஒரு பாடலுக்கு உரை எழுதும் முன்பாக , அப்பாடலுக்கு நம்முடைய ஆசிரியர்கள் எவ்வாறு பொருள் கூறினார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ளவேண்டும் .இரண்டாவதாக பிற உரையாசிரியர்களின் கருத்தை ஊன்றிப் படிக்கவேண்டும் .

இவ்விரண்டையும் விடுத்து மனம்போன போக்கிலே நாம் உரை எழுதக்கூடாது .
[You must be registered and logged in to see this link.]

ஐயா !
முன்னோர்கள் மதிக்கத் தக்கவர்களே ! வணங்கத்தக்கவர்களே !
வணங்குதல் என்பது வேறு வழிபடுதல் என்பது வேறு.

முன்னோர்களும் பின்னோர்களும் மனிதர்களே. இதில் உயர்வு தாழ்வு பார்ப்பது முறையாகாது.
அதற்காக அவர்கள் பொருளுரையே முழுவதும் ஏற்கத்தக்கது என்பதும் எவ்வாறு ஏற்புடையதாகும்!

வேத காலந்தொட்டு வந்த “ கப்பியாசம்” என்னும் உபநிஷதச் சொற்பொருளை, வேத விற்பன்னரும் தன் போற்றுதலுக்குரிய குருவுமாகிய யாதவப் ப்ரகாசருக்கு மாறுபட்டு அதே சமயத்தில் யாவரும் ஏற்கத் தகுந்த உயர்வான பொருளை நம் இராமனுஜர் மாணவப் பருவத்திலேயே திருப்புட்குழி குருவாஸ்ரமத்தில் பதிவு செய்து இன்றும் உலகப் புகழோடு விளங்குகிறார- அவர் உரைத்த பொருளும்தான்.

வெண்பாவிற்கு மாறுபட்டதென்றும் யாப்புக்குறை என்றும் தூற்றப்பட்டு, தமிழ்ச்சங்கத்தில் ஏற்க மறுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நம் வள்ளுவரின் திருக்குறள், ஔவையால் போற்றப்பட்டபின் தமிழ்ச்சங்கத்தால் ஏற்கப்பட்டு இன்று திருக்குறள் உலகப் பொதுமறையாகிறது- நமது திருவள்ளுவரும் ஐயன் ஆகிறார்.

பொருளும், சமுதாயத்திற்குப் பொருளின் உபயோகமும்தான் முக்கியமே தவிற மாறுபாடோ வேறுபாடோ கணக்கிடத்தக்கவை அல்ல.

நமது குலவிளக்குகளின் மடிசார்புடவை ,சுடிதார் , நைட்டி ஆகிவிட்டது– பாரம்பரியத்தை மீறி – ஆனால் உவகையோடு ஏற்கிறோம் – உடலை மறைப்பதால்.

மஞ்சள் குங்குமம் ஸ்டிக்கர் ஆகிவிட்டது- பாரம்பரியத்தை மீறி – ஆனால் உவகையோடு ஏற்கிறோம் – அதுவும் அழகைத் தருதலால்.

நமது பஞ்ச கச்ச வேட்டி யும் உத்தரியமும் – பேண்ட் சர்ட் மற்றும் கோட் சூட்டாகிவிடாது - பாரம்பரியத்தை மீறி - ஆனால் உவகையோடு ஏற்கிறோம் - உடலை மறைப்பதால்

கடவுள் கூட காரில் பயணம் செய்கிறார் – மரபை மீறி - வழிபடுகிறோம் வாசலுக்கு வந்தமையால்.

நீண்ட ஒருவரிச் சொற்றொடர் - இலக்கணத்தை முழுவதும் தூக்கி உதறித் தள்ளிவிட்டு, யாப்பைக் கண்டே கொள்ளாமல், எதுகை மோனையை எங்கே என்று கேட்கவைத்துவிட்டு - ஓரிரண்டு சொற்களாக ஒடிக்கப்பட்டு புதுக்கவிதை யாகிறது - பாரம்பரியத்தை மீறி-ஆனால் உவகையோடு ஏற்கிறோம்- மரபுக் கவியில் தொடுக்கச் சிறிது சிரமமாகும் கருத்தைக் கொண்டதால்.

மர விறகும் மண்பானையும் போய் - சமைப்பதற்கு இப்போதைய நிலை யாதுவோ! –ஏற்கிறோம் உண்ணத்தகுந்த உணவைப் பெறுவதால்.

உரல் நிற்க குழவி சுழன்ற காலம் போய் இன்று குழவி நிற்க உரல் ஆடுகிறது – நம் கிரைண்டரைத்தான்- ஏற்கிறோம் விளைவு மாவாவதால்.

இன்னும் இதுபோல் இன்றைய உலகம் எவ்வளவாக மாறுபட்டு வேறுபடுகிறது

கிடைக்கும் நூற்பொருள் மாறுபட்ட கருத்தாக இருந்து அதௌ ஏற்கப்பட்டு வாழ்வில் நடைமுறைப் படுத்த இயலாத ஆபத்தைத் தரும் என்றாலோ, சொற்பிழையோ பொருட்பிழையோ அல்லது இலக்கணப் பிழையோ இருந்தாலோ கண்டிக்கத்தக்கதே. எல்லாம் சரியாகவும் ஏற்புடையதாகவும் இருக்கும்போது, முன்னோர் சொல்லவில்லை என்பது மட்டுமே சரியான காரணமாகுமா !

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினாலே.
மாற்றம் ஒன்றே மாறாதது.

இவை எல்லாம் அடியனின் கருத்து. ஏற்பதும், மறுப்பதும்,தள்ளிவைப்பதும் தங்களின் உரிமை.
கருத்து என்னவோ ஒரு சிலராலாவது இப்போதோ அல்லது பிற்காலத்திலோ ஏற்கப்படலாம் - ஏற்கப்படாமலும் போகலாம். அதனால் எந்த பாதிப்பும் எக்காலத்திலும் இருக்கப்போவதில்லை.

வெட்ட வெளியில் இருந்தாலும் – கூரைபோட்டு மறைத்தாலும் சூரியன் சுட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

ஆகையால் எம் கடன் யாருக்கும் பாதகம் இல்லா மனநிறைவின்படி பணிசெய்து கிடப்பதே




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Sat Oct 01, 2016 5:52 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)

15. ஙப்போல் வளை.

பதப்பொருள்:
ங - ஙனம் > தன்மை ; இடம் ; ஙகரவரிசைத் தழுவல் போல் சுற்றம் தழுவல்.
வளை – பொறு; உடன்படு.

தெளிவுரை:

‘ங’ என்னும் தனி எழுத்து, எவ்வாறு ஏனைய பிற “ஙா முதல் ஙௌ” வரையிலான பயன்பாட்டில் இல்லாதத் தன் வர்க்க எழுத்துக்களைச் சார்ந்து அவ்வெழுத்துக்களின் இடம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு அவைகளுக்குத் துணையாய் அவற்றைத் தழுவி அவற்றுடன் உடன்பட்டு அவைகளின் பொருள் உயர்ந்து விளங்கும் வகையில் நிற்கிறதோ, அவ்வாறே நீயும் உன் சுற்றத்தினரோடு உடன்பட்டு அவர்களுடன் மகிழ்ச்சியோடு வாழ்.

(அதாவது சுற்றத்தார்கள் பயன் அற்றவராயினும் அவர்களோடு ஒத்து உடன்பட்டு வாழ வேண்டும் என்பது கருத்து).


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Sun Oct 02, 2016 7:08 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)

16. சனி நீராடு

பதப்பொருள்:    
                                                                                                                                           
சனி – சந்தி; காலைமாலை.
நீராடல் – குளித்தல்

தெளிவுரை:

தினமும் காலையும் மாலையும் நீரில் குளி.
(காலையில் உறங்கி எழுந்தவுடனும், மற்றும் மாலையில்  பகல் பணி முவுற்ற பின்னும் ஆக தினமும்  இரு முறை குளித்து உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்)


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Mon Oct 03, 2016 7:17 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

17. ஞயம்பட வுரை.

பதப் பொருள்:

ஞயம் – சொல் தூய்மை
படுதல் – மேன்மையடைதல்
உரை – முழக்கம்; உரக்கப் பேசுதல்.

தெளிவுரை :

அனைவருக்கும் உயர்வைத் தரும் உண்மையைப் பலருக்கும் தெரியும் வண்ணம் பேசு.
(எப்போதும் அனைவருக்கும் மேன்மையைத் தரக்கூடிய உண்மையை மட்டுமே பேசுதல் வேண்டும்)




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Tue Oct 04, 2016 7:12 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

(ஔவையார் அருளியது)

18. இடம்பட வீடெடேல்.

பதப்பொருள்:

இடம்: விரிவு.
படுதல்: மிகுதியாதல்.
வீடு : இருப்பிடம்.
எடு : அளவெடுத்தல் ; ஒன்றன் நீளம் அகலம் முதலியவற்றை நிர்ணயித்தல்.

தெளிவுரை:

குடியிருக்கும் இருப்பிடத்தின் நீளம் அகலம் முதலியவற்றைத் தேவைக்கும் மிகுதியாக விரிவாக இருக்குமாறு முடிவு செய்யாதே.

(குடி இருக்கும் வீட்டை அவரவர் தேவைக்கு ஏற்றாற்போல் அளவானதாக அமைத்துக் கொள்ள வேண்டும். தேவைக்கும் மிகுதியாக வீடு கட்டக் கூடாது. அப்படி வீட்டைப் பெரிதாகக் கட்டும்போது ஆகும் கூடுதல் செலவு மற்றும் தொடர்ந்த பராமரிப்புச் செலவு ஆகியவை தேவையற்றப் பிற இன்னல்களையும் ஏற்படுத்தும்)


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum