ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

5 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

request அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Thu Sep 15, 2016 4:41 pm

தெரிந்து கொள்வோம்   தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

 “தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
                                      ஆத்திச்சூடி
                           (ஔவையார் அருளியது)


01. அறஞ் செய விரும்பு.


பதவுரை:
அறம் – தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவை.
செயல்  -  கடந்த கால நிகழ்வுகளை அனுபவமாகக் கொண்டு நிகழ்
காலத்திலும்   எதிர்காலத்திலும் எண்ணம் , சொல் ,செயல் ஆகிய
மூன்றினாலும் தூய்மையோடு வாழ்தல்.
விரும்புதல் – அழுத்தமாய்க்கருதுதல்; உறுதியாகக் கடைப்பிடித்தல்.

தெளிவுரை -
  கடந்த கால நிகழ்வுகளை தத்தம் அனுபவமாகக் கொண்டு, நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் எண்ணம் சொல் செயல் ஆகிய மூன்றினாலும் தூய்மைமைக் கடைப்பிடித்து, தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவற்றை வாழ்வில் உறுதியாக நடைமுறைப் படுத்தி ஒவ்வொருவரும் வாழவேண்டும்.
பாட்டியின் தொடக்க அறிவுரையே வெகு அற்புதம். பாட்டியின் தாள் போற்றி.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 16, 2016 2:49 pm

நல்ல விளக்கம், நன்றி, தொடருங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Fri Sep 16, 2016 3:08 pm

தெரிந்து கொள்வோம்   தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
                         “தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
                                                          ஆத்திச்சூடி
                                              (ஔவையார் அருளியது)
02.       ஆறுவது சினம்.

பதவுரை:

ஆறு –அழிவு.

சினம் – பகைமை ; கோபம்; வெறுப்பு; கண்டிப்பு ;போர்.

தெளிவுரை :

   பகைமை, கோபம், வெறுப்பு, கண்டிப்பு , போர் ஆகிய வன்மைகளை முழுவதுமாக நீக்கி அவைகள் எவையும் இல்லாத வகையில் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிரு.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by T.N.Balasubramanian Fri Sep 16, 2016 5:06 pm

ஆத்திச் சூடியை போற்றியே பின்பற்றுவோம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Sat Sep 17, 2016 7:11 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

3. இயல்வது கரவேல்

பதப்பொருள் ;
இயல் - கூடியதாதல்;செய்யப்படுதல்; உடன்படுதல்; செய்யமுடிவது.
கரத்தல் - மறைத்தல்; கெடுதல்.
தெளிவுரை:
உன்னால் உனக்கே செய்துகொள்ள முடியக் கூடியனவற்றையும், பிறருக்குச் செய்ய முடிவனவற்றையும் என்னால் முடியவில்லையே என்று கபடமான முறையில் சொல்லிக்கொண்டிருக்காமல், அவற்றை உண்மையோடு நீயே செய்.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Sun Sep 18, 2016 5:18 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

4. ஈவது விலக்கேல்
ஈ – > பவ்வீ > பணிவுள்ளவன்.
ஈவது = ஈ +அது > ஈயது> ஈவது
விலக்கு - வேண்டாததென்றுஒதுக்குகை
தெளிவுரை:
வாழ்வில் என்றும் பணிவுடைமையாகிய பண்பை வேண்டாததென்று ஒதுக்காதே.
அதாவது எப்போதும் பணிவுடன் வாழ்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Mon Sep 19, 2016 4:58 pm


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

5. உடையது விளம்பேல்.

பதப்பொருள் :

உடைமை - சொந்தமானவை; உரிமையானவை.
விளம்பு - பேசு; சொல்.
விளம்பேல் – பேசாதே; சொல்லாதே.

தெளிவுரை:

இவ்வுலகில் இருக்கும் உன்னால் அனுபவிக்கப்படும் எதனையும் உனக்குச் சொந்தமானது என்று யாரிடமும் பேசாதே (அதாவது எல்லாவற்றிலிருந்தும் பற்றற்று வாழ்ந்து கொண்டிரு).

வியப்புரை:

உலக மானுட நிம்மதி முழுமைக்குமாவதை இரண்டே சொற்களில் சொல்லிவிட்டார், நம் தமிழ்ப்பாட்டி. முன் பாடலில் பணிவுடைமையை அறிவுறுத்தி, அடுத்ததாக இப்பாடலில் ஆசையைத் தவிர் என்று வாழ்வின் நிம்மதிக்கான உபதேசத்தை வெகு அழகாக கூறிவிட்டார். கௌதம புத்தர் இதற்காகவென ஒரு மதத்தையே ஏற்படுத்தினார். மிகப் பெரிய ஞானிகள் , மகான்கள் என்று கூறிக்கொண்டு சீருடை அணிந்தும், தம்மை வெவ்வேறு வகைகளில் சிறப்பித்துக் கொண்டும் இருப்பவர்கள் எல்லாம் சொல்லளவில் மட்டுமே பேசும் உபதேசம் ‘ஆசையைத் தவிர்’ . அதைச் சொல்லியதோடு , வாழ்ந்தும் காட்டியவர் நம் பாட்டி. அனைத்து நீதி நூல்கள், ஞான நூல்கள், யோக நூல்கள் மற்றும் பக்தி நூல்களின் சாராம்சத்தை போகிற போக்கில் இரு சொற்களில் சொல்லிச் சென்ற நம் பாட்டியின் அறிவுத்திறன், கவித்திறன் மற்றும் கல்வித்திறனை என்னென்று வியப்பது!


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Tue Sep 20, 2016 1:20 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

6. ஊக்கமது கைவிடேல்.

பதப்பொருள்:

ஊக்கம் – உண்மை; முயற்சி.
அது – சுட்டுச்சொல்.
கை –செய்யத்தக்கது; கடைப்பிடித்தல்.
விடேல் - நீங்காதே;விலகாதே.

தெளிவுரை:

வாழ்வில் எப்போதும் உண்மையை விட்டு விலகாதே.

கருத்துரை:

உலகில் என்றும் மாறாமலும் அழியாமலும் இருப்பது எதுவோ அது, ‘உண்மை’ என்பதாகும். இது சம்ஸ்க்ருதத்தில் ‘சத்’ என்று சொல்லப்படுவது. சத்யம் என்றால் உண்மை. சத்யத்திற்கு எதிர்ச்சொல் அசத்யம். ஆனால் உண்மை அல்லாததற்கு நம் அழகு தமிழில் ‘பொய்’ எனும் தனிச்சொல்லே உண்டு.
உண்மை - உண்மை, வாய்மை, மெய்ம்மை என்று - மூன்று வழிகளிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டுவதாகும். கடைப்பிடித்தல் என்னும் சொல்லிற்குக் கைக்கொண்டு ஒழுகுதல் என்றும் பெயர்.
உள்ளத்தால் பொய்யாமை (உண்மை), வாயினால் பொய்யாமை (வாய்மை), உடம்பால் - மெய்யால் பொய்யாமை (மெய்ம்மை) என்று மூன்று வகையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய இந்த ஒழுகலாற்றிற்குத் திரிகரண சுத்தி என்று பெயர்.
மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஆகிய மூவழிகளாலும் எவ்வழியிலும் தவறாமல் கைக்கொண்டு ஒழுகவேண்டுவதுதான் உண்மை . ஆதலால் ‘ உண்மையதனைக் கைவிடேல்’ என்பதை நம் பாட்டி, ‘ஊக்கமது கைவிடேல்’ என்று இன்னும் அற்புதமாக சுருங்கச் சொல்கிறார். நழுவ விடாமல் கைக்கொண்டு ஒழுக வேண்டுவதால் கைவிடேல் என்கிறார்.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by சிவனாசான் Tue Sep 20, 2016 7:52 pm

அருமையான விளக்கம். நன்று.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K Wed Sep 21, 2016 8:13 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4 ( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

7. எண்ணெழுத் திகழேல்.

பதப்பொருள்:

எண் – அறிவு; இலக்கம். உணவு -
எழுத்து – கல்வி; தரித்திரம்; ஏழ்மை.
இகழேல் – அவமதிக்காதே.

தெளிவுரை:

i. கல்வி அறிவை ஒன்றோடொன்று ஒப்பிட்டு அவற்றுள் உயர்வு தாழ்வு பாராட்டி அவமதிக்காதே.
ii. செல்வந்தனோடு ஒப்பிட்டு கல்வியறிவாளனை அவமதிக்காதே.
iii. உண்ணும் உணவையும் ஒருவருடைய ஏழ்மையையும் அவமதிக்காதே.

கருத்துரை:

i. மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கும் மாண்பிற்கும் பற்பல துறைகளில் கல்வி அறிவு தேவைப்படுகிறது. அவை இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், பொறியியல், கட்டடம், ஓவியம், சிற்பம், இயற்பியல், அறிவியல், வேதியியல் ,வானியல், கடல்வளம், தச்சுக்கலை, பொன்- இரும்பு முதலிய உலோகக்கலை,வண்ணம் தீட்டல் எனப் பல்வேறு வகைப்படுபவை. ஒவ்வொரு கல்வியாலும் மானுட வாழ்விற்கு அவ்வகையிலாகும் அறிவு கண்டிப்பாக தேவைப்படுகிறது. அவ்வாறான கல்வி அறிவில் உயர்வு தாழ்வு பாராட்டி அவற்றுள் பேதம் பார்த்து எவ்வகைக் கல்வியறிவையும் ஒன்றைவிட பிறிதொன்று தாழ்ந்தது என்று கருதக் கூடாது என்பது பொருள்.

ii. எண்ணெழுத்து என்றால் கல்விகற்ற அறிவாளன் என்னும் பொருளும் உண்டு. செல்வந்தனோடு ஒப்பிட்டு கல்வியறிவாளனை அவமதிக்காதே என்றும் பொருள் கொள்ளலாம்.

iii. உண்ணும் உணவு அது பசியைப் போக்கி, உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்குமானால் அதைத் தாழ்த்திப் பேசக் கூடாது. அதுபோலவே ஒருவருடைய ஏழ்மையையும் தாழ்த்திப் பேசக்கூடாது.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum