ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்

2 posters

Go down

 இது உங்கள் இடம் Empty இது உங்கள் இடம்

Post by vasuselva Thu Sep 15, 2016 4:23 pm

பரந்த மனப்பான்மையை வளர்ப்போமே!
பெரும் பணக்காரரான என் உறவினரின் மகளுக்கு வரன் தேடுவதாக அறிந்ததும், மருத்துவர், இன்ஜினியர், வெளிநாட்டில் பணிபுரிபவர் மற்றும் தொழிலதிபர்கள் என, உறவினர்கள் பலர், பெண் எடுக்க போட்டி போட்டனர்.
இந்நிலையில், நகரில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் தூரத்து உறவினர் மகனுக்கு, அவரது மகளை நிச்சயம் செய்யப் போவதாக அறிந்து, அதிர்ந்து போனோம். என் பெற்றோர் நேரில் சென்று விசாரித்த போது, பெண்ணின் தந்தை, என் அம்மாவிடம், 'அந்த பையன, ரொம்ப நாளா பாத்திட்டு வர்றேன். கடையை கண்ணும், கருத்துமா கவனிக்கிறான்; பெற்றோர் மீது அக்கறையாக இருக்கிறான்; எந்த கெட்ட பழக்கமும் இல்ல; எனக்கு மட்டுமில்ல, என் வீட்டில் எல்லாருக்கும் பையன ரொம்ப பிடிச்சிருந்ததால, நாங்களே, அவங்க வீட்டிற்கு சென்று, பேசி முடிவு செய்தோம்.
'யாரோ ஒரு பணக்காரருக்கோ, பதவியிலிருக்கிற மாப்பிள்ளைக்கோ, என் மகளை கொடுக்குறத விட, நல்ல பையனுக்கு கொடுத்து, எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாமே...' என்று கூறியுள்ளார்.
பணம், பணத்தோடு தான் சேரும் என்ற நடைமுறை கோட்பாட்டை மாற்றி, தன்னை விட வசதி குறைவானாலும், நல்ல பையனுக்கு, மகளை தாரை வார்க்க முன் வந்த அவரது பரந்த மனப்பான்மையை பாராட்டினோம்.
— பி.சதீஷ்குமார், மதுரை.

ஆசிரியர் நினைத்தால்...
அரசு துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு, கணக்குப் பாடம் சுத்தமாக வரவில்லை; எவ்வளவு முயன்றும், அவனால் கணக்குகளை புரிந்து கொள்ள முடியவில்லை.
எங்கள் கவலையை உணர்ந்த அவனது வகுப்பாசிரியர், ஒருநாள், எங்கள் வீட்டுக்கு வந்து, அவனை, பூங்காவுக்கு அழைத்து சென்றார். மரம், செடி மற்றும் பூக்கள் என, இயற்கையோடு தன்னை மறந்து விளையாடிய அவனிடம், 'இந்த செடியில், எத்தனை பூக்கள் இருக்குன்னு எண்ணு...' என்று கூறியுள்ளார்.
அவன் சரியாக எண்ணி சொல்லியுள்ளான். 'இந்த மொத்தப் பூக்களில், நான்கை மட்டும் கழித்து விட்டால், மீதி எத்தனை இருக்கும்...' என்று கேட்க, உடனே அவன், நான்கு பூக்களை விட்டு விட்டு, மீதியை எண்ணி, சரியாக கூறியுள்ளான். தொடர்ந்து, 'அப்படியே இந்த மொத்த பூக்களில், ஐந்தைக் கூட்டினால், மொத்தம் எத்தனை பூக்கள் இருக்கும்...' என்று கேட்க, அதற்கும், சரியாக பதிலளித்துள்ளான். 'இந்த பூக்களை, இரண்டிரண்டாக பிரித்தால், மொத்தம் எத்தனை ஜோடி வரும்?' என்று கேட்க, சிறிது நேரத்தில் அதற்கும் சரியாக பதில் சொல்ல, 'இதுதான்பா கணக்கு... இதைப் பாட புத்தகத்துல படிக்கும் போது சிரமப்படுறியே...' என்று கூற, அவன் தெளிவடைந்தான்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவன் இப்போது, கணக்கில், நூற்றுக்கு நூறு மார்க் வாங்குகிறான். இச்செயலை, நாங்கள் செய்திருந்தால் கூட, அவன் இவ்வளவு பக்குவம் அடைந்திருக்க மாட்டான். ஆசிரியர்கள் மனது வைத்தால், தரிசு நிலத்திலும், சாகுபடி செய்ய முடியும் என்பதை, நிரூபித்து விட்டார், அந்த ஆசிரியர்.
இக்காலத்திற்கு இவர் போன்ற ஆசிரியர்களே தேவை!
— எஸ்.தங்கமுடிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஆச்சரியப்பட வைத்தார்!
சமீபத்தில், என் நண்பர் மகளின், மஞ்சள்நீராட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். கணவன் - மனைவி இருவருமே நல்ல வேலையில் இருப்பதால், உடன் வேலை செய்வோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, நிறைய பேர் வந்திருந்தனர்.
சடங்கு ஆரம்பித்த சில நிமிடங்களில், 'ராணியை கூப்பிடுங்க...' என்று உரக்க குரல் கொடுத்தார் நண்பர். மண்டப வாசலில் நின்றிருந்த அப்பெண், மேடை அருகே வந்தவள், அருகில் வர, தயங்கி நின்றாள். காரணம், அவள், அவர்களது வீட்டில் வேலை செய்பவள்.
நண்பரின் மனைவி, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி, மேடை ஏற்றி, தன் மகளை அவருடைய காலில் விழ வைத்து, ஆசீர்வாதம் வாங்க வைத்தாள். அதை, அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, உடனே, நண்பரின் மனைவி, 'நானும், என் கணவரும் பணி நிமித்தமாக, அடிக்கடி வெளியூர் சென்று விடுவோம். அதனால், நாங்கள் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. என் மகளை பாதுகாப்பாக வளர்த்து ஆளாக்கிய பெருமை, எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் ராணியையே சேரும்...' என்று, உணர்ச்சி ததும்ப கூறினார்.
அதைக் கேட்ட நாங்கள் எல்லாரும் சிலிர்த்துப் போனோம்.
— ஜெ.ஆர்.ஜோயல் ஜெபஸ்டின், சென்னை.

நன்றி தினமலர்
vasuselva
vasuselva
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 11/08/2014

https://www.youtube.com/channel/UC_lKSRxHNpAJTQlQUL4qiRw

Back to top Go down

 இது உங்கள் இடம் Empty Re: இது உங்கள் இடம்

Post by சிவனாசான் Thu Sep 15, 2016 4:33 pm

நூற்றில்  ஒன்றுஇரண்டு என விரல்விட்டு எண்ணக்கூடியது. எங்கங்க ஆசிரியர்களை  படிக்கவரும்  பிள்ளைகள் பெரும்பாலும் மதித்து செயல்படராங்க. படி என்று சொன்னால் போதும்>>>> ஏன் பள்ளிக்கு காலதாமதாமாக வருகிறாய் என்றால்போதும்>>>>.நீங்கள் கூறிடும் பையன் அரசு பள்ளியில் படிப்பவனா? தனியார் பள்ளியில் படிப்பவனா? வீட்டு வேலைக்காரி உங்களுக்கு நல்லவளாக அமைந்திருந்ததால் குறிப்பிட்டுள்ளீர்கள் கொடுத்து வைத்தவர்கள் >>>>மகிழ்ச்சி>>>உங்கள் பெற்றோர்கள் இல்லையா?
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 இது உங்கள் இடம் Empty Re: இது உங்கள் இடம்

Post by சிவனாசான் Thu Sep 15, 2016 4:43 pm

என்ன நண்பரே 2014ல் சேர்ந்துள்ளீர் தற்போதுதான் வருகின்றீர்கள்.!!!!!!!!!!!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 இது உங்கள் இடம் Empty Re: இது உங்கள் இடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum