புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_lcapஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_voting_barஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_lcapஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_voting_barஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_lcapஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_voting_barஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_lcapஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_voting_barஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_lcapஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_voting_barஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_lcapஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_voting_barஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_lcapஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_voting_barஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_lcapஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_voting_barஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_lcapஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_voting_barஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_lcapஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_voting_barஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 14, 2016 7:24 am

First topic message reminder :

தெரிந்து கொள்வோம்  தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)
                                          ஔவைக்குறள்  
                                 (ஔவையார் அருளியது)
                                    வீட்டு நெறிப்பால்
                                1.பிறப்பின் நிலைமை.


4.            தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்
               உருவத்தா லாய பயன். (1-04)

தெளிவுரை :
உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமலும் குற்றமற்ற வழியிலும் ஈட்டுதல், அவ்வாறு  ஈட்டிய பொருளைத் தாமும் பிறரும் அனுபவித்து மகிழ்தல், அச்செய்கையின் விளைவாக உலக இருப்புக்களின்பால் இருக்கும் தீராத பற்றை விடுதல் ஆகிய இந்நான்கு  வகை வாழ்க்கை ஒழுகலாறுகளும்  மானுட உடல் தாங்கி இவ்வுலகில் பிறந்து வாழ்வதால் உண்டாகும் உண்மைப் பயன் ஆவன.


பதப்பொருள் :
தருமம் – அறம்( தர்மம்).
பொருள்- பொருள் (அர்த்தம்).
காமம் – இன்பம ( காமம்).
வீடு – வீடுபேறு ( மோட்சம்).
உருவம் –உடல் ; பிறவி.
ஆய் – நுண்மை; அழகு.
பயன் – பலன்.

பதவுரை :

தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்
- உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமலும் குற்றமற்ற வழியிலும் ஈட்டுதல், அவ்வாறு  ஈட்டிய பொருளைத் தாமும் பிறரும் அனுபவித்து மகிழ்தல், அச்செய்கையின் விளைவாக உலக இருப்புக்களின்பால் இருக்கும் தீராத பற்றை விடுதல் ஆகிய இந்நான்கு   வகை வாழ்க்கை ஒழுகலாறுகளும்;  
உருவத்தா லாய பயன்
- மானுட உடல் தாங்கி இவ்வுலகில் பிறந்து வாழ்வதால் உண்டாகும் உண்மைப் பயன் ஆவன.

விளக்கவுரை:
 மனிதப் பிறவியின் நோக்கமும் ஆக்கமும் இக்குறட்பாவில் உபதேசமாகின்றன.  அன்றாட மானுட வாழ்வை யோசித்திப் பார்த்தால் அது உண்பதும் உறங்குவதுமாக முடிகிறது என்பதுதானே உண்மை. உலக உயிர்கள் அத்தனையின் அன்றாட வாழ்வின் முடிவும் கூட அதேதான்.  
பிறவிகளில் அரியதாக சொல்லப்படும் மனிதனுக்கு இந்த அன்றாட முடிவைத் தவிறவும்  அவனது பிறவியின் நோக்கமும் ஆக்கமும் வேறு ஒன்றாகவும் இருக்க வேண்டும். இல்லையேல் மனிதப் பிறவி எவ்வாறு அரியதும் உயர்வும் உடையதாகும்!  

நாடு, மதம், மொழி, இனம், காலம்  சமயம், ஆகிய அனைத்தையும் கடந்த உலக மானுடம் முழுமைக்குமாக ஆக்கி வைக்கைப்பட்டுள்ள ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களும் அவற்றின் உபநிஷதங்களும் மானுடப் பிறவியின் நோக்கமும் ஆக்கமும் புருஷார்த்தம் என்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் முயன்று அடைய வேண்டியதே புருஷார்த்தம்- அதாவது அறம், பொருள், இன்பம், வீடு என்பன.

இந்நான்கு  நெறிகளின் ஒழுகலாறுகளால் மனிதனுக்கு இவ்வுலகில் வாழும்போதும் இன்பம் – வாழ்விற்குப் பின் மீண்டும் பிறவாமை அமைவதால் அப்போதும் இன்பம். இதையே நம் ஔவைக் குறள் அழகுற விளக்குகின்றது.

உலக மானுடத்திற்கான நான்மறைகள் சமயச் சாயம் பூசப்பட்டு, நமது  பாரததேசத்தின் உடைமை ஆக்கப்பட்டமை  ஒரு மாபெரும் மானுட விபத்து. அவற்றின் கருத்துக்களை அறிவுப்பூர்வமாக மொழிபெயர்க்காமல் சமயநோக்கோடு மொழி பெயர்த்தமையால், உலகில் இதர சமயத்தவரால் அவற்றில் பொதிந்திருக்கும் அற்புத ஞானம் புறக்கணிக்கப் படுகின்றது என்பதே ஒரு கசக்கும் உண்மை.

உலகில் மனிதனின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் எல்லாம் அனைத்து உலக மக்களுக்கும் ஆகும்போது, நமது வேதகால ஞானிகளின் மெய்ஞ்ஞானத் தேடலின் முடிவாகிய நான்மறைகளை நாம் நமது உடைமையாக்கிக் கொண்டது போன்ற ஒரு தோற்ற மாயை ஏற்படுத்தப்பட்டமை ஒரு  மானுட பாவச் செயல். அச்செயலின் விளைவாய், வேதங்களின் பரந்த பயன் சுருக்கப்பட்டு, வேதக் கருத்துக்கள் மானுடம் முழுமைக்குமாகப் பயன்படாமல் போவதால்  வேதகால ஞானிகளின் சிந்தனைகளுக்குத் தாழ்ச்சியை உண்டாக்கியது கூடுதலான பாவச்செயல் என்பதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது!   வேதக் கருத்துக்களை மானுடம் முழுமைக்கும் ஆக்கிவைக்க இனி அறிவுப் பாதையில் சிந்தித்து முயலுவோம்.

அதுவரை , ஏதோ நம் தமிழ்ப்பாட்டி ஔவை, சம்ஸ்க்ருத வேதங்களைத் தம் குறட்பாவில் தமிழ் செய்துள்ளார். வேதங்களின் சாரமாக விளங்கும் இந்த அற்புதக் குறட்பாக்களாவது மானுடம் புரிந்து கொள்ளும் வகையில் இதன் பொருள் உலகம் முழுமைக்கும் ஆகட்டும். மானுடம் மேன்மை அடையட்டும்.
ஸ்ரீகுருவே நம:



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 9:37 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்
அதிகாரம் 3.
உள் உடம்பின் நிலைமை

3.09 வாயுவினா லாய வுடம்பின் பயனே
ஆயுவி னெல்லை யது. (29)


தெளிவுரை
:
பரமாத்மா மற்றும் ஜீவாத்மா ஆகிய இரண்டும் தங்கி இருப்பதும் , இயங்குவதாகவும் ஆகிய இந்த மானுட உடம்பின் இருப்பும் முடிவும் ஆகிய நிலை உண்மையில் மூச்சுக்காற்று என்னும் பிராணவாயுவால் ஆனது


பதப்பொருள்:

வாயு- காற்று > ப்ராண வாயு
ஆய - ஆவது
பயன் -மெய்ம்மை
ஆயு – ஆராய்தல்
எல்லை - முடிவு

பதவுரை:

ஆயுவின் எல்லை அது
- பரமாத்மா மற்றும் ஜீவாத்மா ஆகிய இரண்டும் தங்கி இருப்பதும் , இயங்குவதாகவும் ஆகிய இந்த மானுட உடம்பின் இருப்பும் முடிவும் ஆகிய நிலை என்பது;

வாயுவினால் ஆயஉடம்பின் பயனே
- உண்மையில் மூச்சுக்காற்று என்னும் பிராணவாயுவால் ஆனது

விளக்கவுரை:

கடந்த குறளில் மானுட உடம்பு , மெய்ப்பொருளாகிய பரமாத்மா மற்றும் ஜீவாத்மா ஆகியவற்றின் இருப்பிட சாதனமாகிறது எனப்பட்டது. இந்த குறளில் அந்த உடம்பின் இருப்பிற்கே பிராணவாயுதான் சாதனமாகிறது எனப்படுகிறது.






+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 13, 2016 12:47 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்
அதிகாரம் 3.
உள் உடம்பின் நிலைமை

3.10 ஒன்பது வாசலு மொக்க வடைத்தால்
அன்பதி லொன்றா மரன். (30)

தெளிவுரை :

மானுட உடம்பில் இருக்கும் இரண்டு காதுகள், இரண்டு கண்கள், மூக்கின் இரு வழிகள்; வாய் ஒன்று , கரு வாய் ஒன்று மற்றும் எருவாய் ஒன்று ஆகிய ஒன்பது வழிகளையும் ஒரு சேர ஒரே நேரத்தில் மூடிவைக்கப்படுமானால் பரம்பொருள் அவ்வுடம்பில் தோழமையோடு உடம்புடன் தானும் ஒன்றி இருப்பதை அறியலாம்.

பதப்பொருள்:

ஒன்பது வாசல் – மானுட உடம்பில் இருக்கும் இரண்டு காதுகள், இரண்டு கண்கள், மூக்கின் இரு வழிகள்;
வாய் ஒன்று , கரு வாய் ஒன்று மற்றும் எருவாய் ஒன்று ஆகிய ஒன்பது வழிகள்
ஒக்க அடைத்தல் – ஒரு சேர ஒரே நேரத்தில் மூடிவைத்தல்.
அன்பு – தொடர்பு; தோழமை.
ஒன்றுதல் - நெருங்குதல், ஒன்றாதல்.
அரன் –பரம்பொருள்.

பதவுரை:

ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தால்
- மானுட உடம்பில் இருக்கும் இரண்டு காதுகள், இரண்டு கண்கள், மூக்கின் இரு வழிகள்; வாய் ஒன்று , கரு வாய் ஒன்று மற்றும் எருவாய் ஒன்று ஆகிய ஒன்பது வழிகளையும் ஒரு சேர ஒரே நேரத்தில் மூடிவைக்கப்படுமானால்;

அன்பு அதில் ஒன்றாம் அரன்
- பரம்பொருள் அவ்வுடம்பில் தோழமையோடு உடம்புடன் தானும் ஒன்றி இருப்பதை அறியலாம்.

விளக்கவுரை:
குதபாத வஜ்ர பத்மாசனத்தில் இருந்து கொண்டு, யோகியனவன் ஷண்முகி முத்ரா நிலையில் பிராணாயாமங்களைப் பழகுவானாகில் , பரம்பொருள் தன் உடம்பிலேயே தோழமையோடு உடம்புடன் ஒன்றி இருப்பதை அறியலாம் என்பது கருத்து.
குதபாத வஜ்ர பத்மாசன இருக்கையும், ஷண்முகி முத்ரா நிலையும் ஸ்ரீகுருதேவரிடம் நேர்முகமாகத் தெரிந்து கொள்ள வேண்டியவை.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 14, 2016 5:45 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்
அதிகாரம் 4.

நாடிதாரணை.

4.01
எழுபத்தீ ராயிர நாடியவற்றுள்
முழுபத்து நாடி முதல். (31)

தெளிவுரை :

மானுட உடம்பில் 72000 நரம்புகள் உள்ளன. அவற்றுள் இடை, பிங்கலை, காந்தாரி,அஸ்தி, ஜீவன், பூசா, உசாஸ்வினி, அலபுசம், குகுவா சங்கினி ஆகியவை முதன்மையாக விளங்கும் பத்து நாடிகளாவன

பதப்பொருள்:

நாடி - நரம்பு

பதவுரை:

எழுபத்தீ ராயிர நாடியவற்றுள்
- மானுட உடம்பில் 72000 நரம்புகள் உள்ளன. அவற்றுள்

முழுபத்து நாடி முதல்
- முதன்மையாக விளங்குவது இடை, பிங்கலை, காந்தாரி,அஸ்தி, ஜீவன், பூசா, உசாஸ்வினி, அலபுசம், குகுவா சங்கினி என்றவாறு பத்து நாடிகளாவன.

விளக்கவுரை:

தசநாடிகளுள் இடை, பிங்கலை, காந்தாரி,அஸ்தி, ஜீவன் என்பன பிரதான நாடிகள் என்றும் பூசா, உசாஸ்வினி, அலபுசம், குகுவா, சங்கினி ஆகியன உபநாடிகள் என்றும் அழைக்கப்படுவன.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 18, 2016 8:09 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்
அதிகாரம் 4.
நாடிதாரணை.

4.02 நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லாம்
உரம்பெறு நாடியொன் றுண்டு. (32)

தெளிவுரை :

நரம்பு என்று சொல்லப்படும் அத்தனை நாடிகளுக்குள்ளும் திண்மை பெறும் நாடி என்று ஒன்று உள்ளது. அதுதான் முதுகுத்தண்டு வழியேஓடும் ( சூட்சுணா நாடி என்று அழைக்கப்படும் ) தண்டுவடம் என்பதாகும்.

பதப்பொருள்:
உரம் – திண்மை;

பதவுரை:

நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லாம்
- நரம்பு என்று சொல்லப்படும் அத்தனை நாடிகளுக்குள்ளும்

உரம்பெறு நாடியொன் றுண்டு
- திண்மை பெறும் நாடி என்று ஒன்று உள்ளது.

விளக்கவுரை:

72000 நாடிகள் அனித்திற்குள்ளும் திண்மை பெறும் நாடி என்பது தண்டுவடம் என்னும் சூட்சும்ணா நாடி என்பதாகும்.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 19, 2016 7:53 pm


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)
ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்
அதிகாரம் 4.
நாடிதாரணை.

4.03 உந்தி முதலா யுறுமுடிகீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து. (33)

தெளிவுரை :
மேற்குறிப்பிட்ட 32 வது குறளில் கூறப்பட்ட அந்த திண்மையான சூட்சும்ணா நாடியானது , மனித வயிற்றில் கொப்பூழுக்கு மேலும் கீழுமாக தலைவரைப் பக்குவமாகக் கட்டுண்டு நிலைபெறுவது ஆகும்


பதப்பொருள்:
உந்தி- கொப்பூழ்; உயற்சி
முடி –தலை; உச்சி
கீழ்மேலாய் – மேலும் கீழுமாக
பந்தித்தல் – கட்டுதல்.
பரிவு- பக்குவம்.

பதவுரை:
உந்தி முதலா யுறுமுடிகீழ் மேலாய்ப்
- மேற்குறிப்பிட்ட 32 வது குறளில் கூறப்பட்ட அந்த திண்மையான சூட்சும்ணா நாடியானது , மனித வயிற்றில் கொப்பூழுக்கு மேலும் கீழுமாக தலைவரை;

பந்தித்து நிற்கும் பரிந்து
- பக்குவமாகக் கட்டுண்டு நிலைபெறுவது ஆகும்

விளக்கவுரை:
மேற்குறிப்பிட்ட 32 வது குறளில் கூறப்பட்ட அந்த திண்மையான சூட்சும்ணா நாடியானது மானுட உடம்பில் இருக்கும் இடத்தக் கூறுகிறது இக்குறள். ஆகையால் இதனை தொட்டு அறிய முடியாது என்பது பொருள்.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 28, 2016 5:01 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்
அதிகாரம் 4.
நாடிதாரணை.

4.04 காலொடு கையி னடுவிடைத் தாமரை
நூல்போலு நாடி நுழைந்து. (34)

தெளிவுரை :

மிகவும் சிறிய பருமன் கொண்ட நுண்ணியதான அந்த சூட்சும்ணா நாடியானது எப்போதும் வழக்கமாக முதுகுத்தண்டின் நடுவாக தாமரைத்தண்டின் நூல் அளவுடையதாக அந்த முதுகுத்தண்டில் நுழைந்து அதன் உட்புறமாக (தண்டுவடம், பிரம்மநாடி, அக்னிகலை நாடி என்னும் பெயரில்) உள்ளது.


பதப்பொருள்:

கால் – வழி.
கை – சிறியது.
நடு – வழக்கம்; நீதி.
இடை -நடுவில்

பதவுரை:

கால் ஒடு கையின் நடு இடைத்
- மிகவும் சிறிய பருமன் கொண்ட நுண்ணியதான அந்த சூட்சும்ணா நாடி யானது எப்போதும் வழக்கமாக முதுகுத் தண்டின் நடுவாக;

தாமரை நூல்போலும் நாடி நுழைந்து
- தாமரைத்தண்டின் நூல் அளவுடையதாக அந்த முடுகுத் தண்டில் நுழைந்து அதன் உட்புறமாக (தண்டுவடம், பிரம்மநாடி, அக்னிகலை நாடி என்னும் பெயரில்) உள்ளது

விளக்கவுரை:

தண்டுவடம் என்னும் பெயரில் முதுகுத் தண்டின் உட்புறமாக அதன் நடுவில் இருப்பதுதான அந்த சூட்சும்ணா நாடி என்பது கருத்து. இந்த குறளில் சூட்சும்ணா நாடியின் இருப்பு விளக்கப்படுகிறது.





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 30, 2016 7:33 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்
அதிகாரம் 4.
நாடிதாரணை.

4.04 காலொடு கையி னடுவிடைத் தாமரை
நூல்போலு நாடி நுழைந்து. (34)

தெளிவுரை :

மிகவும் சிறிய பருமன் கொண்ட நுண்ணியதான அந்த சூட்சும்ணா நாடியானது எப்போதும் வழக்கமாக முதுகுத்தண்டின் நடுவாக தாமரைத்தண்டின் நூல் அளவுடையதாக அந்த முடுகுத்தண்டில் நுழைந்து அதன் உட்புறமாக (தண்டுவடம், பிரம்மநாடி, அக்னிகலை நாடி என்னும் பெயரில்) உள்ளது.


பதப்பொருள்:

கால் – வழி.
கை – சிறியது.
நடு – வழக்கம்; நீதி.
இடை -நடுவில்

பதவுரை:

கால் ஒடு கையின் நடு இடைத்
- மிகவும் சிறிய பருமன் கொண்ட நுண்ணியதான அந்த சூட்சும்ணா நாடி யானது எப்போதும் வழக்கமாக முதுகுத் தண்டின் நடுவாக;

தாமரை நூல்போலும் நாடி நுழைந்து
- தாமரைத்தண்டின் நூல் அளவுடையதாக அந்த முடுகுத் தண்டில் நுழைந்து அதன் உட்புறமாக (தண்டுவடம், பிரம்மநாடி, அக்னிகலை நாடி என்னும் பெயரில்) உள்ளது

விளக்கவுரை:

தண்டுவடம் என்னும் பெயரில் முதுகுத் தண்டின் உட்புறமாக அதன் நடுவில் இருப்பதுதான அந்த சூட்சும்ணா நாடி என்பது கருத்து. இந்த குறளில் சூட்சும்ணா நாடியின் இருப்பு விளக்கப்படுகிறது.







+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக