Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறளில் காணும் நிறை
4 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
குறளில் காணும் நிறை
First topic message reminder :
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7 – ( திருக்குறள் )
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும் அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும்.
கல்வி என்பது புத்தகக் கல்வி மட்டும் அன்று. உலக வாழ்விற்குத் தேவையான அறிவைப் பெறும் அனைத்தைப் பற்றியும் பாடமாகவும் பயிற்சியாகவும் கற்கப்படும் அனைத்தும் கல்விதான் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிவது. அவரவர்க்கு எதனில் ஆர்வம் உள்ளதோ அதனைக் முழு முயற்சியுடனும் தெள்ளத் தெளிவாகவும் கற்பது கல்வி.
391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (40-01)
தெளிவுரை:
ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும். அதன்பின்பு அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்.
பதப்பொருள்:
கற்றல் – யாதொன்றைப்பற்றியும் அறிந்து உணர்தல்.
கசடு – பிழை; குற்றம்.
அற- இல்லாமல் ஆதல்.
நிற்றல்-ஒழுகுதல்.
தகுதல் –ஏற்றவாறாதல்.
பதவுரை:
கற்க கசடறக் கற்பவை
- ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும்.
கற்றபின் நிற்க அதற்குத் தக
- அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்
விளக்கவுரை:
ஒருவரது வாழ்வு அவர் விரும்பிக் கற்ற கல்வியால் அமையவேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது. தச்சுத் தொழிலைக் கற்றவர் பொற்கொல்லராகவும், வேதம் படித்தவர் மருத்துவராகவும், சட்டம் படித்தவர் எழுத்தராகவும், மின்பொறியாண்மை கற்றவர் விவசாயமும் செய்ய முனைவது அவர்களது வாழ்வில் அவர்களுக்கு நிம்மதியோ மகிழ்ச்சியையோ கொடுக்காது.
கற்ற தொழிலைச் சார்ந்து வாழ்தலே உலகில் ஒருவருக்குக் களிப்பைத் தருவது என்பதே இங்கு கூறப்படும் கருத்து.
என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.
(+91 94438 09850) [You must be registered and logged in to see this link.]
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7 – ( திருக்குறள் )
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும் அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும்.
கல்வி என்பது புத்தகக் கல்வி மட்டும் அன்று. உலக வாழ்விற்குத் தேவையான அறிவைப் பெறும் அனைத்தைப் பற்றியும் பாடமாகவும் பயிற்சியாகவும் கற்கப்படும் அனைத்தும் கல்விதான் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிவது. அவரவர்க்கு எதனில் ஆர்வம் உள்ளதோ அதனைக் முழு முயற்சியுடனும் தெள்ளத் தெளிவாகவும் கற்பது கல்வி.
391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (40-01)
தெளிவுரை:
ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும். அதன்பின்பு அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்.
பதப்பொருள்:
கற்றல் – யாதொன்றைப்பற்றியும் அறிந்து உணர்தல்.
கசடு – பிழை; குற்றம்.
அற- இல்லாமல் ஆதல்.
நிற்றல்-ஒழுகுதல்.
தகுதல் –ஏற்றவாறாதல்.
பதவுரை:
கற்க கசடறக் கற்பவை
- ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும்.
கற்றபின் நிற்க அதற்குத் தக
- அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்
விளக்கவுரை:
ஒருவரது வாழ்வு அவர் விரும்பிக் கற்ற கல்வியால் அமையவேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது. தச்சுத் தொழிலைக் கற்றவர் பொற்கொல்லராகவும், வேதம் படித்தவர் மருத்துவராகவும், சட்டம் படித்தவர் எழுத்தராகவும், மின்பொறியாண்மை கற்றவர் விவசாயமும் செய்ய முனைவது அவர்களது வாழ்வில் அவர்களுக்கு நிம்மதியோ மகிழ்ச்சியையோ கொடுக்காது.
கற்ற தொழிலைச் சார்ந்து வாழ்தலே உலகில் ஒருவருக்குக் களிப்பைத் தருவது என்பதே இங்கு கூறப்படும் கருத்து.
என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.
(+91 94438 09850) [You must be registered and logged in to see this link.]
Re: குறளில் காணும் நிறை
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43
அறிவுடைமை.
422. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. (43-02)
தெளிவுரை :
கல்வி கற்ற ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அவரைவிட்டு அகலாது அவருடனேயே இருந்து , அவருக்கு ஏற்பட இருக்கும் துன்பங்களை நீக்குவதோடு நன்மைகள் உண்டாகும் விதமாகவே அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெறப்பட்ட அறிவு அவரைக் கொண்டு சேர்க்கும்.
பதப்பொருள் :
செலவு – தன்னை விட்டு அகலுதல்.
தீது –தீமைகள் ; துன்பங்கள்.
ஒரீ- நீக்குதல்.
நன்று- நன்மை.
உய்த்தல்- கொண்டுபோதல்.
அறிவு -– கல்வி மற்றும் கேள்வியால் பெறப்படும் அறிவு.
பதவுரை :
சென்ற இடத்தால் செலவிடாது தீது ஒரீஇ
- கல்வி கற்ற ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அவரைவிட்டு அகலாது அவருடனேயே இருந்து அவருக்கு ஏற்பட இருக்கும் துன்பங்களை நீக்குவதோடு;
நன்றின்பால் உய்ப்பது அறிவு
- அவருக்கு நன்மைகள் உண்டாகும் விதமாகவே அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெறப்பட்ட அறிவு அவரைக் கொண்டு சேர்க்கும்.
விளக்கவுரை :
உலகில் எங்கிருந்தாலும் கல்வியாளருக்கு அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெற்ற அறிவு அவரை விட்டு விலகாது அவருடனேயே இருந்து தீமைகளை விலக்கி அவருக்கு நன்மையைக் கொடுக்கும் என்பது கருத்து.
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43
அறிவுடைமை.
422. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. (43-02)
தெளிவுரை :
கல்வி கற்ற ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அவரைவிட்டு அகலாது அவருடனேயே இருந்து , அவருக்கு ஏற்பட இருக்கும் துன்பங்களை நீக்குவதோடு நன்மைகள் உண்டாகும் விதமாகவே அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெறப்பட்ட அறிவு அவரைக் கொண்டு சேர்க்கும்.
பதப்பொருள் :
செலவு – தன்னை விட்டு அகலுதல்.
தீது –தீமைகள் ; துன்பங்கள்.
ஒரீ- நீக்குதல்.
நன்று- நன்மை.
உய்த்தல்- கொண்டுபோதல்.
அறிவு -– கல்வி மற்றும் கேள்வியால் பெறப்படும் அறிவு.
பதவுரை :
சென்ற இடத்தால் செலவிடாது தீது ஒரீஇ
- கல்வி கற்ற ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அவரைவிட்டு அகலாது அவருடனேயே இருந்து அவருக்கு ஏற்பட இருக்கும் துன்பங்களை நீக்குவதோடு;
நன்றின்பால் உய்ப்பது அறிவு
- அவருக்கு நன்மைகள் உண்டாகும் விதமாகவே அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெறப்பட்ட அறிவு அவரைக் கொண்டு சேர்க்கும்.
விளக்கவுரை :
உலகில் எங்கிருந்தாலும் கல்வியாளருக்கு அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெற்ற அறிவு அவரை விட்டு விலகாது அவருடனேயே இருந்து தீமைகளை விலக்கி அவருக்கு நன்மையைக் கொடுக்கும் என்பது கருத்து.
Re: குறளில் காணும் நிறை
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்.
436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு. (44-06)
தெளிவுரை :
தனக்கும், பிறருக்கும் தெரியும் வண்ணம் தன்னிடம் இயல்பாகவே இருக்கும் பிழைகளை எவர் ஒருவர் முதலில் தன்னிடம் இருந்து நீக்கிவிட்டுப் பின்பு மற்றவர்களிடம் இருப்பதாகத் தான் எண்ணும், பிழைகளைக் காண்பாராகில், அவ்வாறான பிழைகள் எதுவும் மற்றவர்களிடம் இருப்பாதாக அத்தகைய சான்றோர்கள் கருதமாட்டார்கள்.
பதப்பொருள் :
தன்குற்றம் – தன்னிடம் தானே காணும் பிழைகள்
நீக்குதல் – களைதல்
பிறர்குற்றம்- பிறரிடம் தான் காணும் பிழைகள்.
காணல் - சொல்லுதல்
என்குற்றம் – எம்மாதிரியான பிழை
ஆகும் – ஏற்பட முடியும்
இறை – சான்றோர்.
பதவுரை :
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
- தனக்கும், பிறருக்கும் தெரியும் வண்ணம் தன்னிடம் இயல்பாகவே இருக்கும் பிழைகளை எவர் ஒருவர் முதலில் நீக்கிவிட்டுப் பின்பு மற்றவர்களிடம் இருப்பதாகத் தான் எண்ணும், பிழைகளைக் காண்பாராகில்;
என்குற்ற மாகும் இறைக்கு
- அவ்வாறான பிழைகள் எதுவும் மற்றவர்களிடம் இருப்பாதாக அத்தகைய சான்றோர்கள் கருதமாட்டார்கள்.
விளக்கவுரை :
பிறரிடம் இருப்பதாகத் தான் கருதும் பிழைகளைத் தன்னிடமும் அவை இருக்கின்றனவா என்று கருதிப்பார்த்து, தன்னிடம் இருக்கும் அத்தகையப் பிழைகளை நீக்கிவிடுவாராகில், அத்தகையவர் சான்றோர்கள் என்னும் தன்மையை அடைந்து பிறரிடமும் அத்தகையப் பிழைகளைக் கூறமாட்டார்கள் என்பது கருத்து.
Re: குறளில் காணும் நிறை
அய்யனார் வள்ளுவர் அறியாதது ஒன்றுமே இல்லை. அவர்கூறியுள்ளது
அனைத்தும் நிறைவே>>>>>>>>>>>>>
அனைத்தும் நிறைவே>>>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நிறை மதி ...!
» நிறை வாழ்வு
» நிறை – கவிதை
» குறையே நிறை!
» பாலிக் அமிலம் நிறைந்த உணவுப்பொருட்கள்
» நிறை வாழ்வு
» நிறை – கவிதை
» குறையே நிறை!
» பாலிக் அமிலம் நிறைந்த உணவுப்பொருட்கள்
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|