ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கபாலி

2 posters

Go down

கபாலி Empty கபாலி

Post by M.Jagadeesan Sun Sep 04, 2016 4:10 pm

டாஸ்மாக்கில் கபாலி ,  மூச்சு  முட்டக் குடித்துவிட்டு டேபிளின்மீது சரிந்து கிடந்தான் .

வெயிட்டர் வந்து பக்கத்தில் நின்று , " சார் ! " என்று குரல் கொடுத்தான்.

லேசாகக் கண்விழித்த கபாலி , வெயிட்டர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தவுடன்,  ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டி  , " இந்தா ! மீதிப் பணத்தை நீயே வெச்சுக்க ! " என்று சொல்லிக் கொடுத்தான் .

தன்னிடமிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தான் கபாலி. சரியாக பத்தாயிரம் இருந்தது. அதை அப்படியே தன் பேண்டின் பின்புறத்தில் இருந்த பாக்கெட்டில் வைத்துவிட்டு மீண்டும் டேபிளின்மீது சரிந்தான் .

இதையெல்லாம் சற்றுத்தொலைவில் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் கத்திகுத்து கந்தன். அவன் தன்னுடைய பாக்கெட்டில் ரூ 90000/= வைத்திருந்தான் .அத்துடன் ரூ 10000/= சேர்த்தால் ஒரு லட்சம் ஆகிவிடும் என்று கணக்குப் போட்டான் . கபாலியிடம் இருக்கும் ரூ 10000/ = அபகரிக்கத் திட்டம் போட்டான் .

மெதுவாகக் கபாலியிடம் சென்று , " அண்ணே ! கடையை மூடப் போறாங்க ; எழுந்திருங்க அண்ணே ! " என்று அவன் தோளைத்தட்டி எழுப்பினான் கத்திகுத்துக் கந்தன் . ஆனால் கபாலியோ அசையவில்லை . அவன் கையைத் தன் தோள்மீது போட்டுக்கொண்டு , கைத்தாங்கலாக வெளியே நடத்திச் சென்றான் . சுற்றுமுற்றும் பார்த்த கந்தன் , சட்டென்று கபாலியின் பாக்கெட்டிலிருந்து பத்தாயிரம் ரூபாயை அபேஸ் செய்தான் . கடைக்கு வெளியே வந்தவுடன் , கபாலி நிலைகுலைந்து கீழே விழுந்தான் .

அப்போது சரேலென ஒரு கார் வந்து நின்றது . அதிலிருந்து ஒருவன் இறங்கினான். அவன் கபாலியைப் பார்த்தவுடன் , " ஐயோ ! " என்று அலறினான் .

" என்ன ஆச்சுன்னே உனக்கு ? " என்று கபாலி தோளைத் தொட்டு உலுக்கினான் .

" அண்ணன் கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டார். கடையிலேயே மயங்கி சாய்ஞ்சி கிடந்தார் ; நான்தான் வெளியில கொண்டாந்து விட்டேன் ; வெளியில வந்ததும் மறுபடியும் விழுந்திட்டார் .ஆமா ! நீங்க யாரு ? " என்று கேட்டான் கத்திக்குத்து கந்தன் .

" நான் இவரோட தம்பி ! அரைபிளேடு அருணாச்சலம்னு கூப்பிடுவாங்க ; ஒயின் ஷாப்புக்குப் போயிட்டுவரேன்னு சொன்னார்; ரொம்ப நேரமா காணோம் ; அதான் தேடிகிட்டு வந்தேன் . நீங்க கொஞ்சம் உதவி பண்ணினா  இவரை தூக்கிட்டுப்போயி காருக்குள்ளாற போட்டுடலாம் . " என்றான் வந்தவன்.

இருவரும் கபாலியைத் தூக்கிகொண்டுபோய் காரில் போட்டார்கள் .

" அப்ப நான் போயிட்டு வரேன் ! அண்ணனை பத்திரமா அழைச்சிகிட்டுப் போங்க ! ' என்று சொல்லி கத்திகுத்து கந்தன் விடை பெற்றான் .


கார் சிறிதுதூரம் சென்றவுடன் கபாலி ,அருணாசலத்தைப் பார்த்து ,

"என்ன அருணாசலம் ! காரியத்தை முடிச்சிட்டையா ? " என்று கேட்டான் .

" அண்ணே ! கச்சிதமா முடிச்சிட்டேன் ; உங்களைத் தூக்கிட்டு வரும்போது அவன் பையிலிருந்து மொத்தப் பணத்தையும் எடுத்துட்டேன் . ஆமாம் அண்ணே ! எனக்கொரு சந்தேகம் ; அவன்கிட்ட பணம் இருக்குறது உங்களுக்கு எப்படி தெரியும் ? "

" டேய் தம்பி ! நான் குடிக்க வரும்போது , அவன் பணத்தை கத்தையா வச்சுகிட்டு எண்ணிகிட்டு இருந்தான் ;
உடனே ஒரு திட்டம் போட்டேன் ; உன்னையும் வரச்சொல்லி போன்  செய்தேன் ; எல்லாமே சக்ஸஸ் ஆயிடுச்சி ; ஆமாம் எவ்வளவு பணம் அவன் வச்சிருந்தான் ? "

" இதோ எண்ணி சொல்றேன் " என்று பணத்தை எண்ணினான் அரைபிளேடு அருணாசலம் .

" அண்ணே ! சரியா ஒரு லட்ஷம் இருக்கு "

" அப்படியா !அதில என்னோட பணம் பத்தாயிரம் போக மீதி 90000/= நாம கொள்ளையடிச்சது ; அதுல உன்னோட ஷேர் ரூ 45000 போக மீதி ரூ 55000 எனக்கு கொடு ! '

" சரிண்ணே ! பாவம் அவன் ! 10000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 90000 ரூபாயை விட்டுட்டான் . ஆனா நீங்க சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிச்சிட்டீங்க  ; பலே ஆளுன்னே நீங்க ! '

" அதாண்டா கபாலி !

===============================================
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு .

என்பது ஐயனின் வாக்கு.

பொருள் :
=========
ஒரேயொரு பொருளைப் பெறுவதற்காக , அதைப்போல நூறுமடங்கு பொருளை இழக்கின்ற சூதாடிகளுக்கு விடிவுகாலம் என்பது கிடையாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கபாலி Empty Re: கபாலி

Post by T.N.Balasubramanian Sun Sep 04, 2016 8:35 pm

கபால் கபாலி கபளீகரம் பண்ணிட்டான் .
அருமை Jagadeesan .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum