ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவலஞ்சுழி – கோயில்

Go down

திருவலஞ்சுழி – கோயில் Empty திருவலஞ்சுழி – கோயில்

Post by ayyasamy ram Thu Sep 01, 2016 6:10 am

கோயில்

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம், மூன்று
திருச்சுற்றுகள், ஐந்து மண்டபங்கள், மூன்று விமானங்கள்
கொண்டு கோயில், நுழைந்ததும், உள்ள மிக விஸ்தாரமான
பிராகாரம், அதில் ஒரு திருக்குளம். குளத்தின் மேல் கரையில்
‘ஜடா தீர்த்த விநாயகர்’ சிறிய சன்னதி ஒன்றில்
குடிகொண்டுள்ளார்.

இரண்டாவது வாயிலில் பஞ்சமூர்த்தி சுதை வடிவங்கள்.
இது கட்டை கோபுரம் கொண்டுள்ளது.

இதைக் கடந்து இரண்டாவது பெரிய பிராகாரத்தில், மூலவரின்
கோபுரத்திற்கு முன்பாக ஸ்வேத விநாயகருக்கென்று தனிக்
கோயில். இக்கோயிலுக்கென கொடி மரம், நந்தி மண்டபம்
எல்லாம் உண்டு.

அழகிய வேலைப்பாடுகள் கொண்ட 36 தூண்கள் அமைந்த
மண்டபம், விநாயகர் கோயிலுக்கு தனி அழகைத் தருகின்ற
ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட பலகணி சிற்பியின்
கலைத் திறனைக் காட்டுகி்ன்றன.

இந்த விநாயகரின் கருவறையை இந்திரன் விருப்பத்திற்கு
ஏற்ப தேவலோக சிற்பி விஸ்வகர்மாவே கட்டினார் என்று ஐதிகம்.

விநாயகர் கோயில் மூலஸ்தானம் காயத்ரி மண்டபம் என்று
அழைக்கப்படுகிறது. காயத்ரி மந்திர 24 அட்சரங்களுக்கு ஏற்ப
24 தூண்கள். எல்லாம் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள்
கொண்டவை காண்போரை வியக்கச் செய்பவை.

கருவறையில் கலச நிலைப்படி, கலசத்தேர் மாடம், கலச மஞ்சம்
ஆகியவற்றின் மேல் விநாயகர் தந்தம், அங்குசம், பாசம், மோதகம்
ஏந்திய நிலையில் வெண்மையான தோற்றத்தில் ஒரு முழ நீளமே
கொண்டவராக அமர்ந்துள்ளார். இவரை வழிபட்டால் மணப்பேறு,
மகப்பேறு கிட்டுவதாகச் சொல்கிறார்கள்.

ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை பிரமிக்க வைக்கிறது. மனிதர்கள்
கட்டியதா, பூதங்களும் சிவ கணங்களும் சேர்ந்து கட்டியதா என்று
வியப்படைச் செய்யும் விதமாக அமைந்துள்ளது.

அரசன் ஒருவன் செய்த தெய்வ குற்றத்திற்காக கண் பார்வை
இழந்தான். இத்தலத்து ஈசனை வேண்டி விரதமிருந்த பலனால்,
மீண்டும் கண்ணொளி பெற்றான். நேர்த்திக்கடனாக அவன் கட்டிய
மண்டபம் ஒன்று, ‘அபராத மண்டபம்’ எனும் பெயரில் விளங்குகிறது.
மற்றும் அலங்கார மண்டபம் நிறைமணி மண்டபம் உற்சவ மண்டபம்
ஆகியனவும் உள்ளன.

மூன்றாம் வாயிலைக் கடந்ததும் வருவது முதல் திருச்சுற்று.
அதன் தென்புறம் நவசக்தி லிங்கம், மேற்கில் தல விநாயகரான
வலஞ்சுழி விநாயகர், சோம தேவன், வள்ளி – தெய்வானை சமேத
சுப்பிரமணியர், வடக்கில் தேவர்கள் பூஜித்த லிங்கம் ஆகியோர்
பிரதிஷ்டைச் செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு பிராகார இடதுபுற நீண்ட மண்டபத்தில் 32 சிவலிங்கங்கள்
ஒரே வரிசையில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த
சிவலிங்கத்திற்கும் மேலே சுவரில் அதன் பெயர்கள் எழுதி
வைக்கப் பட்டுள்ளது.

கருவறைப் புறச்சவர், பிறைகளில் பிட்சாடனர், நடராஜர்,
நர்த்தன கணபதி ஆகியோருக்கு அடுத்தபடியாகவே
தட்சிணாமூர்த்தி உள்ளார். நடராஜர் மற்றும் பிட்சாரடனர் சிற்பங்கள்
எழிலார்ந்தவையாக உள்ளன. நடராஜர் கையில் பாம்பு உள்ளது.

இக்கோயிலில் நவகிரக சன்னதி கிடையாது.

அதனால் கோஷ்டத்தில் பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீசுவரரை
அடுத்து, சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நதி உள்ளது. சனீஸ்வரர்
கிழக்கு முகமாக இருக்க, நேர் எதிரே சூரியன், மேற்கு முகமாக
நிறுவப்பட்டுள்ளார். ஒருவரையொருவர் பார்த்தபடி இங்கு
சனீஸ்வரருக்கும் சூரியனுக்கு தனித்தனி பூஜைகள் உண்டு.

மூலவர் கபர்தீஸ்வரர் லிங்க வடிவில் கருவறையில் எழுந்தருளியுள்ளார்.
தெய்வ சாந்நித்யம் பரிபூரணமாகத் திகழும் சந்நதி. இவர் வலஞ்சுழி நாதர்
என்றும் அழைக்கப்படுகிறார்.

அம்பாள் பெரிய நாயகி எனும் பெயரில் தனிச் சந்நதியில் உள்ளார்.
அஷ்டபுஜ காளியும் எட்டுக் கரங்களுடன் தனிக்கோயில் கொண்டுள்ளார்.

காவிரியும் அரிசிலாறும் இத்தலத்தில் இரண்டு புண்ணிய தீர்த்தங்கள்.
கோயிலுக்குள் இருக்கும் திருக்குளம் – ஜடா தீர்த்தம், சிவனின்
ஜடாமுடியுள் உள்ள கங்கையின் பெயரால் அமைந்தது.

கோயிலில் நான்கு கால பூஜை நந்திக்கு பின்புறம் இருந்தே ஆராதனை
நடத்துகின்றன. பத்து நாள் பிரமோற்சவம் உண்டு. ஒன்பதாம் நாள்
விழாவில் இந்திரனுக்கென தனி பூஜை உண்டு. பத்தாம் நாள் பஞ்சமூர்த்தி
ஊர்வலம் சென்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.

அருகிலுள்ள அறுபடை தலமான சுவாமிமலைக் கோயிலின் உபகோயில்
இது. திருஞான சம்பந்தரால் தேவாரத்திலும் திருநாவுக்கரசரால்
திருத்தாண்டகத்திலும் பாடப்பெற்ற தலம்.

சம்பந்தர் இத்தலத்து ஈசனை வணங்கும்போது ‘என்ன புண்ணியம்
செய்தனை நெஞ்சே…’ என்று மனமுருகிப் பாடுகின்றார்.
பல சிறப்புகள் கொண்ட இத்தலத்தை நீங்களும் சென்று வழிபட்டு
வரலாமே.

எங்கே இருக்கு: கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில்
திருவலஞ்சுழி உள்ளது.

தரிசன நேரம்: காலை 6-12; மாலை 4-8

———————————————

– ஆர்.சி. சம்பத்
குமுதம் பக்தி செய்திகள்:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» திருவலஞ்சுழி - விநாயகர் கோயில்
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum