புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_m10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_m10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_m10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_m10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_m10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_m10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_m10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_m10இழைகளாலான இணையம் – இறையன்பு Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இழைகளாலான இணையம் – இறையன்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 01, 2016 6:09 am

சங்குத் துவாரத்திற்குள்
உள்ள தண்ணீரில்
முழுவானமும் தெரிந்தது”

பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு
பொருளும் பிரபஞ்சத்தை
உள்ளடக்கியதுதான்.
ஒரு புல்லின் நுனியிலும்,
பூவின் இதழிலும்,
பறவையின் சிறகிலும்
பிரபஞ்சம் முழுமையாகப்
பிரதிபலிக்கிறது.
இவை அனைத்தையும்
அடக்கியதைப் பிரபஞ்சம் என்றால்
பிரபஞ்சமும் இவை அனைத்திலும்
அடங்கியிருக்க வேண்டும்.

ஒரு புல்லின் நுனி
கிள்ளப்படும்போது பிரபஞ்சத்தின்
ஒரு பகுதியும் காயப்படுகிறது.

ஒரு பறவையின் சிறகு
சேதப்படும்போது பிரபஞ்சத்தின்
காதுகளில் சீழ் வடியும்.

ஒரு கவிதையுண்டு

“இந்த பிரபஞ்சம்
சிலந்தி வலையை போல்
பின்னப்பட்டிருக்கிறது.
எங்கே அறுந்தாலும்
மொத்த வலையுமே
சிதைந்துவிடும்.
எந்த மலரைப் பறித்தாலும்
தூரத்து நட்சத்திரம் கூட
கண்ணவிழ்ந்துபோகலாம்.”

மலருக்கும் நட்சத்திரத்திற்கும் கூட
கண்ணுக்குத் தெரியாத
சிலந்தி வலைகள்
பின்னப்பட்டிருக்கின்றன.
பிரபஞ்சமே மெல்லிய
இழைகளால் ஆன இணையம் தான்
அது பரிமாறும் அழகிய தகவல்கள்
மனிதனின்
புரிந்து கொள்ளுதலுக்கும்
அப்பாற்பட்டவை.

குழந்தை மனிதனின் தந்தை
என்பது குழந்தையும் தந்தையும்
முன்பிருந்ததைக்
குறிப்பது.
பிரபஞ்சம் சற்று முன்னர் இருந்தது
தந்தை வடிவமெனின் அதன்
வளர்ச்சியே குழந்தையாய்
நீடித்திருப்பதன் அடையாளம்.

பனித்துளியும் நீர்தான் –
கடல் முத்தும் நீர்தான்­-
இரண்டுக்குமான வேறுபாடு
அளவில்தான்­-
இன்னும் சற்றுக் கூர்ந்து பார்த்தால்
பனித்துளிகள் அனைத்தும் கடலில்
இருந்து வந்தவையே-
அவை சென்று சேர்வதும் கடலில்தான்.

சங்கு துவாரத்திற்குள் இருக்கும்
தண்ணீர்
வாணத்தைப் பிரதிபலிக்கலாம்-
ஏன் பனித்துளியில் கூட வானம்
முகம் பார்க்கலாம்-
வானத்தின் அளவில் வேறுபாடு
ஏதுமில்லை.
கடலில் தெரிகிற வானம்
பனித்துளியில் தெரிகிற
வானத்தை காட்டிலும்
பெரியது என்று ஒப்பிட எந்த
முகாந்தரமும் இல்லை.

சங்கும் கடலிலிருந்துதான்
வருகிறது.
ஒவ்வொரு புல்லுக்குள்ளும் ஒரு
வனம் இருப்பது போல்,
ஒவ்வொரு மரத்திற்குள்ளும் ஒரு
காடு
இருப்பது போல்,
ஒவ்வொரு சங்குக்குள்ளும் ஒரு
கடல் இருக்கிறது.

கடல் ஏன் நீல நிறமாயிருக்கிறது?
வானத்தைப் பிரதிபலிப்பதால்-
வானம் என்பது என்ன?
வானம் எங்கே முடிகிறது?
அதன் நிறம் என்ன?
சூரியன் தான் வானத்தின் நிறத்தை
முடிவு செய்கிறானா?
முடிவில்லாத அண்டப்
பெருவெளிதான் வானமெனின்
அதை எப்படி நீர் பிரதிபலிக்க
முடியும்?

வானம் என்பது இருப்பது அல்ல
இல்லாதவற்றாலானது.
வானத்திற்கு வடிவம்
மேகங்களால்,
நிலவால்,
உச்சிக்குப் பறக்கும் பறவைகளால்,
சூரியனால்,
நட்சத்திரங்களால்,
உயரமாகச் செல்லும்
ஆகாய விமானங்களால்
தரப்படுகிறது.

இருக்கிறவை சேர்ந்து
இல்லாததற்கு,
முடிவில்லாத ஒன்றுக்கு வடிவம்
தருகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 01, 2016 6:09 am


சங்குகள் இருக்கும் நீருக்குள்-
தெரிவது வானமல்ல-
மேகங்களும், விண்மீன்களும்,
நிலவும், அவை
உமிழும் ஒளியும் தான்
தெரிகின்றன வானமாய்,
ஆகாயமாய்,
அண்டப்பெருவெளியாய்.
சங்குக்குள் காது வைத்துக்
கேட்டால்
பேரிரைச்சல் கேட்கும்-
சின்ன சங்குக்குள் அந்தப்
பேரிரைச்சல் எப்படி நுழைந்தது?

பிரபஞ்சம் புரியாத புதிர்.
அதைப் புதிர் என்று
வேண்டுமானால் புரிந்து
கொள்ளலாம்.

சங்குகளில் மட்டுமல்ல
கடலில் கூடத் தெரிவது
வானமல்ல
வானத்தின் பிரதிபலிப்பு தான்­-
வானமென்பதே எண்ணத்தின்
நீட்சிதான் என்றால்
பிரதிபலிப்பு எதில் சேர்த்தி?

நமக்குள் இறைமை
பிரதிபலிக்கலாம்-
நாம் சின்ன சங்குதான் என்பதை
உணர்ந்தால்
இறைமை வானமாய்ப்
பிரதிபலிக்கச் சம்மதிக்கும்.

—————————-

இறையன்பு
“முகத்தில் தெளித்த சாரல்” நூலிலிருந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக