புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவலஞ்சுழி – கோயில் Poll_c10திருவலஞ்சுழி – கோயில் Poll_m10திருவலஞ்சுழி – கோயில் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
திருவலஞ்சுழி – கோயில் Poll_c10திருவலஞ்சுழி – கோயில் Poll_m10திருவலஞ்சுழி – கோயில் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவலஞ்சுழி – கோயில் Poll_c10திருவலஞ்சுழி – கோயில் Poll_m10திருவலஞ்சுழி – கோயில் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
திருவலஞ்சுழி – கோயில் Poll_c10திருவலஞ்சுழி – கோயில் Poll_m10திருவலஞ்சுழி – கோயில் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவலஞ்சுழி – கோயில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 01, 2016 6:10 am

கோயில்

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம், மூன்று
திருச்சுற்றுகள், ஐந்து மண்டபங்கள், மூன்று விமானங்கள்
கொண்டு கோயில், நுழைந்ததும், உள்ள மிக விஸ்தாரமான
பிராகாரம், அதில் ஒரு திருக்குளம். குளத்தின் மேல் கரையில்
‘ஜடா தீர்த்த விநாயகர்’ சிறிய சன்னதி ஒன்றில்
குடிகொண்டுள்ளார்.

இரண்டாவது வாயிலில் பஞ்சமூர்த்தி சுதை வடிவங்கள்.
இது கட்டை கோபுரம் கொண்டுள்ளது.

இதைக் கடந்து இரண்டாவது பெரிய பிராகாரத்தில், மூலவரின்
கோபுரத்திற்கு முன்பாக ஸ்வேத விநாயகருக்கென்று தனிக்
கோயில். இக்கோயிலுக்கென கொடி மரம், நந்தி மண்டபம்
எல்லாம் உண்டு.

அழகிய வேலைப்பாடுகள் கொண்ட 36 தூண்கள் அமைந்த
மண்டபம், விநாயகர் கோயிலுக்கு தனி அழகைத் தருகின்ற
ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட பலகணி சிற்பியின்
கலைத் திறனைக் காட்டுகி்ன்றன.

இந்த விநாயகரின் கருவறையை இந்திரன் விருப்பத்திற்கு
ஏற்ப தேவலோக சிற்பி விஸ்வகர்மாவே கட்டினார் என்று ஐதிகம்.

விநாயகர் கோயில் மூலஸ்தானம் காயத்ரி மண்டபம் என்று
அழைக்கப்படுகிறது. காயத்ரி மந்திர 24 அட்சரங்களுக்கு ஏற்ப
24 தூண்கள். எல்லாம் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள்
கொண்டவை காண்போரை வியக்கச் செய்பவை.

கருவறையில் கலச நிலைப்படி, கலசத்தேர் மாடம், கலச மஞ்சம்
ஆகியவற்றின் மேல் விநாயகர் தந்தம், அங்குசம், பாசம், மோதகம்
ஏந்திய நிலையில் வெண்மையான தோற்றத்தில் ஒரு முழ நீளமே
கொண்டவராக அமர்ந்துள்ளார். இவரை வழிபட்டால் மணப்பேறு,
மகப்பேறு கிட்டுவதாகச் சொல்கிறார்கள்.

ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை பிரமிக்க வைக்கிறது. மனிதர்கள்
கட்டியதா, பூதங்களும் சிவ கணங்களும் சேர்ந்து கட்டியதா என்று
வியப்படைச் செய்யும் விதமாக அமைந்துள்ளது.

அரசன் ஒருவன் செய்த தெய்வ குற்றத்திற்காக கண் பார்வை
இழந்தான். இத்தலத்து ஈசனை வேண்டி விரதமிருந்த பலனால்,
மீண்டும் கண்ணொளி பெற்றான். நேர்த்திக்கடனாக அவன் கட்டிய
மண்டபம் ஒன்று, ‘அபராத மண்டபம்’ எனும் பெயரில் விளங்குகிறது.
மற்றும் அலங்கார மண்டபம் நிறைமணி மண்டபம் உற்சவ மண்டபம்
ஆகியனவும் உள்ளன.

மூன்றாம் வாயிலைக் கடந்ததும் வருவது முதல் திருச்சுற்று.
அதன் தென்புறம் நவசக்தி லிங்கம், மேற்கில் தல விநாயகரான
வலஞ்சுழி விநாயகர், சோம தேவன், வள்ளி – தெய்வானை சமேத
சுப்பிரமணியர், வடக்கில் தேவர்கள் பூஜித்த லிங்கம் ஆகியோர்
பிரதிஷ்டைச் செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு பிராகார இடதுபுற நீண்ட மண்டபத்தில் 32 சிவலிங்கங்கள்
ஒரே வரிசையில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த
சிவலிங்கத்திற்கும் மேலே சுவரில் அதன் பெயர்கள் எழுதி
வைக்கப் பட்டுள்ளது.

கருவறைப் புறச்சவர், பிறைகளில் பிட்சாடனர், நடராஜர்,
நர்த்தன கணபதி ஆகியோருக்கு அடுத்தபடியாகவே
தட்சிணாமூர்த்தி உள்ளார். நடராஜர் மற்றும் பிட்சாரடனர் சிற்பங்கள்
எழிலார்ந்தவையாக உள்ளன. நடராஜர் கையில் பாம்பு உள்ளது.

இக்கோயிலில் நவகிரக சன்னதி கிடையாது.

அதனால் கோஷ்டத்தில் பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீசுவரரை
அடுத்து, சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நதி உள்ளது. சனீஸ்வரர்
கிழக்கு முகமாக இருக்க, நேர் எதிரே சூரியன், மேற்கு முகமாக
நிறுவப்பட்டுள்ளார். ஒருவரையொருவர் பார்த்தபடி இங்கு
சனீஸ்வரருக்கும் சூரியனுக்கு தனித்தனி பூஜைகள் உண்டு.

மூலவர் கபர்தீஸ்வரர் லிங்க வடிவில் கருவறையில் எழுந்தருளியுள்ளார்.
தெய்வ சாந்நித்யம் பரிபூரணமாகத் திகழும் சந்நதி. இவர் வலஞ்சுழி நாதர்
என்றும் அழைக்கப்படுகிறார்.

அம்பாள் பெரிய நாயகி எனும் பெயரில் தனிச் சந்நதியில் உள்ளார்.
அஷ்டபுஜ காளியும் எட்டுக் கரங்களுடன் தனிக்கோயில் கொண்டுள்ளார்.

காவிரியும் அரிசிலாறும் இத்தலத்தில் இரண்டு புண்ணிய தீர்த்தங்கள்.
கோயிலுக்குள் இருக்கும் திருக்குளம் – ஜடா தீர்த்தம், சிவனின்
ஜடாமுடியுள் உள்ள கங்கையின் பெயரால் அமைந்தது.

கோயிலில் நான்கு கால பூஜை நந்திக்கு பின்புறம் இருந்தே ஆராதனை
நடத்துகின்றன. பத்து நாள் பிரமோற்சவம் உண்டு. ஒன்பதாம் நாள்
விழாவில் இந்திரனுக்கென தனி பூஜை உண்டு. பத்தாம் நாள் பஞ்சமூர்த்தி
ஊர்வலம் சென்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.

அருகிலுள்ள அறுபடை தலமான சுவாமிமலைக் கோயிலின் உபகோயில்
இது. திருஞான சம்பந்தரால் தேவாரத்திலும் திருநாவுக்கரசரால்
திருத்தாண்டகத்திலும் பாடப்பெற்ற தலம்.

சம்பந்தர் இத்தலத்து ஈசனை வணங்கும்போது ‘என்ன புண்ணியம்
செய்தனை நெஞ்சே…’ என்று மனமுருகிப் பாடுகின்றார்.
பல சிறப்புகள் கொண்ட இத்தலத்தை நீங்களும் சென்று வழிபட்டு
வரலாமே.

எங்கே இருக்கு: கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில்
திருவலஞ்சுழி உள்ளது.

தரிசன நேரம்: காலை 6-12; மாலை 4-8

———————————————

– ஆர்.சி. சம்பத்
குமுதம் பக்தி செய்திகள்:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக