ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுத மொழிகள் - தொடர் பதிவு

2 posters

Go down

அமுத மொழிகள் - தொடர் பதிவு Empty அமுத மொழிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 29, 2016 4:23 pm

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர
சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
-
நன்றி- இணையம்

-
-------------------------------------------------------------
அமுத மொழிகள் - தொடர் பதிவு 4bEd2YnSTSe6kFkwGTTS+in_kanchipuram
-
-
1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும்.
கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம்
செய்ய வேண்டும்.

தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச்
சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது.

இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து
அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.
-
----------------------------------------
-
2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய
சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம்.

விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம்
செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும்
சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.
-

----------------------------------------------

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம்.
பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை?
மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம்
யோசித்துப் பார்த்தேன்.

அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது.
பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.
-
--------------------------------------------------


Last edited by ayyasamy ram on Mon Aug 29, 2016 4:30 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமுத மொழிகள் - தொடர் பதிவு Empty Re: அமுத மொழிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 29, 2016 4:26 pm

அமுத மொழிகள் - தொடர் பதிவு KVEB5KpiSzuNSGctFWHO+periyava-veena
-

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து
வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று
இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது.

எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம்
அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும்
நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி
அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து
விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும்.

அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.
-
------------------------------------------

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன்
இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார்.
காமேச்வரனாக அருள் புரிகிறார்.

பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய
அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார்.
நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு
சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.
-

---------------------------------------------

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க
வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள்
வேறே இருக்கின்றன.

பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம்.
ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு பு
ராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை மிகுதியுள்ள ஒரு லட்ச
கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை
பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.
-
----------------------------------------------------


Last edited by ayyasamy ram on Mon Aug 29, 2016 4:32 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமுத மொழிகள் - தொடர் பதிவு Empty Re: அமுத மொழிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 29, 2016 4:29 pm

அமுத மொழிகள் - தொடர் பதிவு XvfINAP0TUW6iwInaJzH+kamakshi_maha-periyava1
-

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு
வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது.

வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம்
போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின்
மத்தியில் இருக்கிறது.
(சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம்
சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும்
சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப்
போக்கிவிடும்.
-
---------------------------------------------

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது.
அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம்
முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது
ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம்.

அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம்
மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு
அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று
பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை
அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில்
சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று
தெரிகிறது.
-
---------------------------------------------------


9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச்
சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து
கொண்டிருக்க வேண்டும்.
அவைகளாவன
: (1) விபூதி தரித்தல்,
(2) ருத்ராக்ஷம் அணிதல்,
(3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல்,
பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை
ஜபம் செய்தல்,
(4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல்,
(5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல்

இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக்
கூடியது.
-
--------------------------------------------------------
(குறிப்பு:
பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு
. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம்
சொல்லலாம்.
கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும்
இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர்.)
-
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமுத மொழிகள் - தொடர் பதிவு Empty Re: அமுத மொழிகள் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Mon Aug 29, 2016 5:58 pm

மிக முக்கியமான விஷயங்கள்
மிக அழகாக பெரியவா கூற
அதை இணையத்திலிருந்து
இணைத்ததற்கு

நன்றிகள் பல a ram நன்றி நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமுத மொழிகள் - தொடர் பதிவு Empty Re: அமுத மொழிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 29, 2016 9:28 pm

அமுத மொழிகள் - தொடர் பதிவு S5KTFaMTbWHkkjm0xmir+periyava_request_to_nama_japam
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமுத மொழிகள் - தொடர் பதிவு Empty Re: அமுத மொழிகள் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Tue Aug 30, 2016 7:06 am

நன்றி a ram .

காலை பொழுதில் , பெரியவா தரிசனம் , மனதில் நிம்மதி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமுத மொழிகள் - தொடர் பதிவு Empty Re: அமுத மொழிகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum