ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவாரம்பூ

5 posters

Go down

ஆவாரம்பூ Empty ஆவாரம்பூ

Post by தாமு Mon Nov 23, 2009 5:51 am

ஆவாரை
மலைச்சரிவுகளிலும், சிலவகைப் பூமியிலும் அதிகம் கிடைக்கிறது. சீயக்காய் போன்று சிகையிலுள்ள அழுக்கைப் போக்கிவிடும். வடிவத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கும். இச்செடியானது மத்திய இந்தியா, தென்னிந்தியா, ஸ்ரீலங்கா போன்ற இடங்களில் ஏராளமாக வளரும் குத்துச் செடி. இதன் இலை, பூ, வேர், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.
இது பெருஞ்செடி வகையைச் சேர்ந்தது. இது செம்மண் பூமியில் தான் அதிக அளவில் பயிராகிறது. பெருஞ்செடியாக அடர்ந்து வளரும். முட்டை வடிவத்தில் குண்டு குண்டாக மொக்குகள் விட்டு பெரிய இதழுடன் மஞ்சள் நிறப் பூக்களுடன் காணப்படும். மழைக் காலத்தில் செழிப்பாகவும், கோடைகாலத்தில் செழுமை குன்றியும் காணப்படும். இலை அகத்திக் கீரையை ஒத்த வடிவத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கும்.
ஆவாரஞ் செடியின் பட்டை தோல் பதனிட அதிக அளவில் பயன்பட்டு வருகிறது. மந்தமான கண் தெளிவடையும். மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும். ஆவாரம் பூவின் இதழ்களை ஆய்ந்து எடுத்து பச்சைப் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து சமைத்து தொடர்ந்து 40 நாள் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர உடலில் நல்ல பலம் பெறும்.
உடல் சூட்டை ஆவாரம் பூ தணிக்கக் கூடியது. பூவுடன் பாசிப்பயிறு சேர்த்து அரைத்து உடம்பிற்குத் தேய்த்துக் குளிக்கலாம். உடலிலுள்ள அரிப்பு நீங்க நன் மருந்து. ஆவாரைக்கு ‘தங்க மங்கை’ என்ற சிற்ப்புப் பெயருண்டு. இதில் தங்க பஸ்பம் செய்வார்கள்.
வைத்தியத் துறையில் இதன் எல்லா பாகங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உடலிலுள்ள துர்நீரை இறக்கி சிறு நீராக சுரக்கச் செய்து நீரை வெளியேற்றுகிறது. நரம்பு தளர்ச்சியை நீக்கி, வலிமையைக் கொடுக்கிறது.
ஆவாரம்பூவை நெய்யில் வதக்கி உட்கொண்டு வர உடலில் மறைந்திருக்கும் பல வியாதிகள் அகன்று விடும். பூவை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை, வெட்டை, மேக நோய்கள், சோர்வு, நாவறட்சி, உடல் வறட்சி நீங்கும். ஆவாரம் பூவுடன் நாவல் மர இலையை சேர்த்துப் பொடியாக்கி பசும்பாலில் கலக்கிக் குடித்துவர சர்க்கரை வியாதி விலகி விடும். நாவல் இலைக்குப் பதில் வில்வ இலையையும் சேர்க்கலாம்.
ஆவாரம் பூவுக்கு உடலைப் பொலிவுடன் அமைக்கும் சக்தி உண்டு. விருப்பம் போல பக்குவம் செய்து, இதனை உணவோடு சேர்த்துக் கொண்டால் உடலில் நல்ல தளதளப்பும், சாந்தியும் ஏற்படும்.
பூவுடன் பச்சைப் பயிறு சேர்த்தரைத்து நமைச்சலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். இலைகள் குளிர்ச்சியுடையது. வெயிலில் வெகு தூரம் நடப்பவர்கள், இந்த இலையை தலையின் மீது பரப்பி அதன்மீது தலைப்பாகை கட்டி நடப்பார்கள். வெயிலின் வெப்பம் பாதிக்காது. நடையும் சுறுசுறுப்புடன் தோன்றும்.
ஆவாரைப் பிசின் நிரிழிவு, வெள்ளைப்படுதல் முதலிய சிறுநீர் கேடுகளைப் போக்கும். இலை குளிர்ச்சியுடையமையால், வெயிலில் வெகுதூரம் நடப்பவர்கள் இவ்விலைகளைத் தலையின் மீது பரப்பி அதன்மீது தலைப்பாகையிட்டு நடக்க வெயிலின் கடுமை தாக்காது. பூவைச் சமைத்துச் சாப்பிட, கற்றாழை மணம், நீரிழிவு, நீர் வேட்கை சமனப்படும்.
விதையின் தோலைப் போக்கி, நுண்ணியதாகப் பொடிசெய்து கண்ணில் தூவியாவது அல்லது தேங்காய் எண்ணெயில் குழைத்து கண்ணோய்க்கு இடல் வழக்கு. இதனால் சீழ்பிடிக்கும் கண்ணோய் தீரும்.
வேரை குடிநீரிலிட்டுச் சாப்பிட்டுவர நீரிழிவு, ஆண்குறி எரிச்சல் தணியும். வேண்டுமானால் இத்துடன் கற்கண்டு, பசுவின் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆவாரை வேர்ப்பட்டையை கஷாயஞ் செய்து அதற்கு நேர் வெள்ளாட்டுப் பால் அல்லது பசுவின் பால், எண்ணெய் இவற்றைக் கூட்டித் தைலம் செய்து தலைமுழுகி வர, உடல் வெப்பந் தணியும், கண் குளிரும்.
ஆவாரந்துளிர், கல்மதம், கொன்றைவேர் ஆகிய மூன்றையும் புளித்த மோரில் கலக்கிக் குடிக்க நீரிழிவு நோய் நீங்கும். ஆவாரம், சீந்தில், தில்லைச்செடி இவைகளின் வேர், இலை, தண்டு, பூ முதலியவற்றை முறையே மூன்று, இரண்டு, ஒன்று எனும் எடையாகக் கொண்டு, இளவறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்துப் பொடியாக்கி அரைப்படிக்கு அரைப்படி நீரிட்டு, அரைக்கால் படியாகக் குடிநீர் செய்து அதில் பால் கூட்டி காலை, மாலை கொடுக்க நீரிழிவு போகும். நீரில் சர்க்கரை அளவும் குறையும்.

- tamilvanan
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆவாரம்பூ Empty Re: ஆவாரம்பூ

Post by சிவா Fri Apr 24, 2015 11:22 pm

ஆவாரம்பூ 3838410834


ஆவாரம்பூ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆவாரம்பூ Empty Re: ஆவாரம்பூ

Post by krishnaamma Fri Apr 24, 2015 11:44 pm

ஆவாரம்பூ R0ZAU0SRWK2CM1Um6bsA+30-tanners-cassia300

அருமையான பகிர்வு.....வெகு நாட்களுக்கு அப்புறம் ( வருடங்களுக்கு? ) மேலே கொண்டு வந்ததற்கு நன்றி சிவா புன்னகை ..ஆமாம் தாமுவை காணுமே?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆவாரம்பூ Empty Re: ஆவாரம்பூ

Post by விமந்தனி Fri Apr 24, 2015 11:53 pm

சூப்பருங்க நன்றி சிவா.


ஆவாரம்பூ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆவாரம்பூ L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆவாரம்பூ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆவாரம்பூ Empty Re: ஆவாரம்பூ

Post by ayyasamy ram Sat Apr 25, 2015 3:34 am

ஆவாரம்பூ 103459460 ஆவாரம்பூ 3838410834
-
ஆவாரம்பூ PT5SDw9EQVitbwWQeyMa+p60c
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆவாரம்பூ Empty Re: ஆவாரம்பூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum