Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமான் - இறுதிச்சுற்று..!
+5
T.N.Balasubramanian
பாலாஜி
ராஜா
ChitraGanesan
விமந்தனி
9 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
ஆமாம், இந்த முறை ஆட்களும் அதிகமாயிற்றே... அதனால் தான்....பாலாஜி wrote:
சென்ற முறை ஏற்பட்ட அனுபவம் ,அதை இந்த முறை சரி செய்து வீட்டிர்கள்.
சூப்பர் ....கலக்குங்க
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
சதுரகிரி போகும் போது தானே சொல்ல சொன்னீங்க ....?T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் தொடருங்கள் .
போன முறையே ,அடுத்த முறை போகும்போது ஈகரை உறவுகளை கூட்டி செல்ல , வேண்டுதல் வச்சிருந்தோமே . மறந்துவிட்டீர்களா ?
பரவாயில்லை அடுத்த முறை போகும்போது அழைப்பு விடவும் , டூரிசம் மந்திரியே!
ரமணியன்
மறுபடியும் அந்தமான் போவேன்னு நானே எதிர்பார்க்கலை.... தவிர புக்கிங் டைம் ரொம்பவும் குறைவாக இருப்பதினாலும், அதிகம் டிஸ்கஸ் செய்யவும் முடிவதில்லை. (ஆபர் அல்லவா அதனால் தான்)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
மறுநாள் 7 ந்தேதி அன்று விடியற் காலையில் (நடு இரவு என்றால் சரியாக இருக்கும்) இரண்டு மணியளவில் அனைவரும் எழுந்து புறப்பட்டோம். மூன்று பத்துக்கெல்லாம் தயாராக இருந்தும் எங்களுக்கான வாகனம் வந்ததென்னவோ மூன்றரை மணிக்குத்தான்.
இந்த பாரடாங் தீவு போர்ட் ப்ளேயரில் இருந்து கிட்டத்தட்ட நூறு கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ளது. சரியாக இரண்டரை மணிநேரப்பயணம்.
நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கிளம்பி ஒன்றரை மணி நேர பயண முடிவில் ஜிர்கி டாங் என்னும் இடத்தில் எங்கள் வண்டி நிறுத்தப்பட்டது. விடிகாலை மணி நான்கு ஐம்பது ஆகியிருந்தது. அந்த நேரத்திற்கே பொழுது புலர்ந்து கொண்டுவருவதை பாருங்கள். சரியாக நாலரை மணிக்கெல்லாம் இங்கே விடியத்துவங்கி விடுகிறது.
வண்டிகள் அனைத்தும் அங்கேயே நிறுத்தப்பட்டது. எங்களுக்கு முன்னால் ஏற்கனவே கணிசமான அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.
இதற்கு மேல் வேறெங்கும் சாப்பிடும் வசதி இல்லாத காரணத்தினால் இங்கேயே காலை உணவை நாங்கள் அனைவரும் முடித்துக்கொண்டோம். எனக்கு நினைவு தெரிந்து அன்று தான் காலை 5 மணிக்கே நான் உணவருந்தியது. ஆனால், பசியுடன் தான் இருந்தோம். அதனால் நேரம் ஒரு பொருட்டாக தெரியவில்லை.
இட்லி, சட்டினி, சாம்பார், வடை, பூரி, பரோட்டா என அந்நேரத்திர்க்கே எல்லாம் தயாராக தான் இருந்தது. ருசியும் நன்றாகத்தான் இருந்தது. இங்கே பூரிக்கு தொட்டுக்கொள்ள பட்டாணி போட்டு குருமா போல வைக்கிறார்கள்.
அது ஒரு செக் போஸ்ட். இதன் மேற்கொண்டு நாம் பயணிக்கும் பாதை ஜராவா பழன்குடிநினரின் இருப்பிடம்.
எனவே சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நம்மை அவ்வழியே போக அனுமதிக்கிறார்கள். முதல் நுழைவு காலை ஆறு மணிக்கும், அடுத்தது ஒன்பது மணி, பன்னிரண்டு மணி மற்றும் இரண்டரை மணிக்கு என்று சுற்றுலா பயணிகளின் வாகனங்களை அனுமதிக்கிறார்கள்.
மேலும் இதற்கு மேல் செல்லும் வழிகளில் தான் நாம் ஜராவா இனத்தவரை காண முடியும். பெரும்பாலும் அவர்கள் நம் கண்ணில் அகப்படுவதில்லையாம். அதுபோல அவர்களை பார்க்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகளும் உண்டாம்.
அவர்களை பார்க்க முடிவதும், முடியாமல் போவதும் நம் அதிர்ஷ்டத்தை சார்ந்த விஷயம். இந்த ஜராவி இன மக்கள் பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளாக இங்கே வசித்து வருகிறார்களாம். ஆனாலும், உலகில் மிகவும் அருகி வரும் இன மக்களாக இப்பழங்குடியினரை அறிவிக்கப்பட்டிருக்கிறார்களாம். காரணம் இப்போதைய இவர்களது மொத்த மக்கள் தொகையே வெறும் முன்னூறிலிருந்து நானூறுக்குள்ளே தான் இருப்பதாக எங்களுடனேயே வந்த வழிக்காட்டியாக வந்தவர் சொன்னார்.
இவர்களது பூர்விக்கத்தினர் ஆப்ரிக்காவில் இருந்து வந்ததாகவும் சொல்கிறார்கள். அருகி வரும் இவ்வினத்தவரை பாதுக்காக்கும் பொருட்டு, அந்தமான் அரசு இவர்களுக்கு எல்லா வகையிலும் முன்னுரிமை அளித்திருக்கிறது.
இவர்களுக்கு சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும் என்பதும், அந்நிறத்தில் ஆடை அணிந்திருக்கும் சுற்றுலா பயணிகள் யாரேனும் கண்ணில் பட்டால் அவ்வளவு தானாம். கிழித்து பிய்த்து எறிந்துவிடுவார்கள் என்று கேள்வி பட்டிருந்தேன். அதனாலேயே உடன் வரும் அனைவரிடமும் பாரடாங் போகும் அன்று மட்டும் சிவப்பு நிற உடை அணிய வேண்டாம் என்றும் சொல்லியிருந்தேன்.
இதுபற்றி எங்களுடன் வந்த வழிகாட்டியை (பெயர் கார்த்திக். ஆகவே, இனி கார்த்திக் என்று அழைப்போம்) கேட்ட போது, அவர் சொன்னது, “இதற்கு முன் அப்படித்தான் இருந்தார்கள். ஆனால், சமீப காலங்களாக அப்படி ஏதும் நடப்பதில்லை. அவர்களும், நம்மைப்போல நாகரீக வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
பட உதவி: இணையம்.
தற்போது இவர்கள் அனைவருமே ஆடை உடுத்த ஆரம்பித்து இருக்கிறார்களாம். அரசாங்கமே ஏற்பாடு செய்திருக்கும் இருவர் தினமும் இவர்களுக்கு சமையல் செய்து கொடுத்துவிட்டு வருகிறார்களாம்.
அவர்கள் இருவரும் பழங்குடியினர் இருப்பிடத்திற்கு செல்ல காத்திருந்த சமயத்தில் நாங்கள் அவர்களை பார்க்க நேர்ந்தது. அப்போது தான் உடன் வந்த கார்த்திக் இவ்விஷயத்தை சொன்னார்.
வழியெங்கும் போகும் போதும், திரும்பும் போதும் என கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட ஆதிவாசிகளை எங்களால் பார்க்க முடிந்தது. எங்கள் பார்வையில் பட்ட அனைவருமே டீ ஷர்ட், பனியன் சகிதம் இருப்பதை காண முடிந்தது.
முக்கியமான் ஒரு விஷயம் விட்டுப்போனது. நாம் வழியில் காணும் அவர்களை படம் பிடிப்பதோ அல்லது வண்டியை நிறுத்தி அவர்களுடன் பேச முயலுவதோ கூடாது.
அப்படி படம் பிடிப்பவருக்கு ரூபாய். 10,000/- அபராதம் விதிக்கப்படுகிறதாம். (நாம வண்டிக்குள்ள இருந்து படம் புடிச்சா யாருக்கு தெரியப்போவுதுன்னு நினைக்கறவங்களுக்கு – இவ்வழியாக முதலாவதாக செல்லும் வண்டிக்கு முன்னாலும், கடைசியாக வரும் வண்டிக்கு பின்னாலும் காவல் துறையினரின் வாகனம் நமக்கு காபந்தாக வரும்)
மேலும், படம் பிடித்தவரின் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறதாம். இதில் விந்தை என்னவென்றால், ஆதிவாசியால் நாம் தாக்கப்பட்டால் அது ஒரு போதும் குற்றம் ஆகாதாம்.
ஆக, முள் மீது சேலை விழுந்தாலும், சேலை மீது முள் விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்ற பழமொழிக்கு ஏற்ப அங்கு செல்பவர்கள் சர்வ ஜாக்கிரதையுடன் செல்வது நல்லது.
இந்த பாரடாங் தீவு போர்ட் ப்ளேயரில் இருந்து கிட்டத்தட்ட நூறு கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ளது. சரியாக இரண்டரை மணிநேரப்பயணம்.
நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கிளம்பி ஒன்றரை மணி நேர பயண முடிவில் ஜிர்கி டாங் என்னும் இடத்தில் எங்கள் வண்டி நிறுத்தப்பட்டது. விடிகாலை மணி நான்கு ஐம்பது ஆகியிருந்தது. அந்த நேரத்திற்கே பொழுது புலர்ந்து கொண்டுவருவதை பாருங்கள். சரியாக நாலரை மணிக்கெல்லாம் இங்கே விடியத்துவங்கி விடுகிறது.
வண்டிகள் அனைத்தும் அங்கேயே நிறுத்தப்பட்டது. எங்களுக்கு முன்னால் ஏற்கனவே கணிசமான அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.
இதற்கு மேல் வேறெங்கும் சாப்பிடும் வசதி இல்லாத காரணத்தினால் இங்கேயே காலை உணவை நாங்கள் அனைவரும் முடித்துக்கொண்டோம். எனக்கு நினைவு தெரிந்து அன்று தான் காலை 5 மணிக்கே நான் உணவருந்தியது. ஆனால், பசியுடன் தான் இருந்தோம். அதனால் நேரம் ஒரு பொருட்டாக தெரியவில்லை.
இட்லி, சட்டினி, சாம்பார், வடை, பூரி, பரோட்டா என அந்நேரத்திர்க்கே எல்லாம் தயாராக தான் இருந்தது. ருசியும் நன்றாகத்தான் இருந்தது. இங்கே பூரிக்கு தொட்டுக்கொள்ள பட்டாணி போட்டு குருமா போல வைக்கிறார்கள்.
அது ஒரு செக் போஸ்ட். இதன் மேற்கொண்டு நாம் பயணிக்கும் பாதை ஜராவா பழன்குடிநினரின் இருப்பிடம்.
எனவே சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நம்மை அவ்வழியே போக அனுமதிக்கிறார்கள். முதல் நுழைவு காலை ஆறு மணிக்கும், அடுத்தது ஒன்பது மணி, பன்னிரண்டு மணி மற்றும் இரண்டரை மணிக்கு என்று சுற்றுலா பயணிகளின் வாகனங்களை அனுமதிக்கிறார்கள்.
மேலும் இதற்கு மேல் செல்லும் வழிகளில் தான் நாம் ஜராவா இனத்தவரை காண முடியும். பெரும்பாலும் அவர்கள் நம் கண்ணில் அகப்படுவதில்லையாம். அதுபோல அவர்களை பார்க்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகளும் உண்டாம்.
அவர்களை பார்க்க முடிவதும், முடியாமல் போவதும் நம் அதிர்ஷ்டத்தை சார்ந்த விஷயம். இந்த ஜராவி இன மக்கள் பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளாக இங்கே வசித்து வருகிறார்களாம். ஆனாலும், உலகில் மிகவும் அருகி வரும் இன மக்களாக இப்பழங்குடியினரை அறிவிக்கப்பட்டிருக்கிறார்களாம். காரணம் இப்போதைய இவர்களது மொத்த மக்கள் தொகையே வெறும் முன்னூறிலிருந்து நானூறுக்குள்ளே தான் இருப்பதாக எங்களுடனேயே வந்த வழிக்காட்டியாக வந்தவர் சொன்னார்.
இவர்களது பூர்விக்கத்தினர் ஆப்ரிக்காவில் இருந்து வந்ததாகவும் சொல்கிறார்கள். அருகி வரும் இவ்வினத்தவரை பாதுக்காக்கும் பொருட்டு, அந்தமான் அரசு இவர்களுக்கு எல்லா வகையிலும் முன்னுரிமை அளித்திருக்கிறது.
இவர்களுக்கு சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும் என்பதும், அந்நிறத்தில் ஆடை அணிந்திருக்கும் சுற்றுலா பயணிகள் யாரேனும் கண்ணில் பட்டால் அவ்வளவு தானாம். கிழித்து பிய்த்து எறிந்துவிடுவார்கள் என்று கேள்வி பட்டிருந்தேன். அதனாலேயே உடன் வரும் அனைவரிடமும் பாரடாங் போகும் அன்று மட்டும் சிவப்பு நிற உடை அணிய வேண்டாம் என்றும் சொல்லியிருந்தேன்.
இதுபற்றி எங்களுடன் வந்த வழிகாட்டியை (பெயர் கார்த்திக். ஆகவே, இனி கார்த்திக் என்று அழைப்போம்) கேட்ட போது, அவர் சொன்னது, “இதற்கு முன் அப்படித்தான் இருந்தார்கள். ஆனால், சமீப காலங்களாக அப்படி ஏதும் நடப்பதில்லை. அவர்களும், நம்மைப்போல நாகரீக வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
பட உதவி: இணையம்.
தற்போது இவர்கள் அனைவருமே ஆடை உடுத்த ஆரம்பித்து இருக்கிறார்களாம். அரசாங்கமே ஏற்பாடு செய்திருக்கும் இருவர் தினமும் இவர்களுக்கு சமையல் செய்து கொடுத்துவிட்டு வருகிறார்களாம்.
அவர்கள் இருவரும் பழங்குடியினர் இருப்பிடத்திற்கு செல்ல காத்திருந்த சமயத்தில் நாங்கள் அவர்களை பார்க்க நேர்ந்தது. அப்போது தான் உடன் வந்த கார்த்திக் இவ்விஷயத்தை சொன்னார்.
வழியெங்கும் போகும் போதும், திரும்பும் போதும் என கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட ஆதிவாசிகளை எங்களால் பார்க்க முடிந்தது. எங்கள் பார்வையில் பட்ட அனைவருமே டீ ஷர்ட், பனியன் சகிதம் இருப்பதை காண முடிந்தது.
முக்கியமான் ஒரு விஷயம் விட்டுப்போனது. நாம் வழியில் காணும் அவர்களை படம் பிடிப்பதோ அல்லது வண்டியை நிறுத்தி அவர்களுடன் பேச முயலுவதோ கூடாது.
அப்படி படம் பிடிப்பவருக்கு ரூபாய். 10,000/- அபராதம் விதிக்கப்படுகிறதாம். (நாம வண்டிக்குள்ள இருந்து படம் புடிச்சா யாருக்கு தெரியப்போவுதுன்னு நினைக்கறவங்களுக்கு – இவ்வழியாக முதலாவதாக செல்லும் வண்டிக்கு முன்னாலும், கடைசியாக வரும் வண்டிக்கு பின்னாலும் காவல் துறையினரின் வாகனம் நமக்கு காபந்தாக வரும்)
மேலும், படம் பிடித்தவரின் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறதாம். இதில் விந்தை என்னவென்றால், ஆதிவாசியால் நாம் தாக்கப்பட்டால் அது ஒரு போதும் குற்றம் ஆகாதாம்.
ஆக, முள் மீது சேலை விழுந்தாலும், சேலை மீது முள் விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்ற பழமொழிக்கு ஏற்ப அங்கு செல்பவர்கள் சர்வ ஜாக்கிரதையுடன் செல்வது நல்லது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
ஜரோவா குடியினர் சர்வதேச அளவில் Protected Tribes என்ற பிரிவில் பாதுகாத்து வரப்படுகிறார்கள் என அறிகிறேன் .
நல்ல பகிர்வு .
காலை 5 மணிக்கே உணவருந்தினால் , சிறிது லேசாக தூக்க கலக்கம் இருக்குமே .
ரமணியன்
நல்ல பகிர்வு .
காலை 5 மணிக்கே உணவருந்தினால் , சிறிது லேசாக தூக்க கலக்கம் இருக்குமே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
ரமணியன்சதுரகிரி போகும் போது தானே சொல்ல சொன்னீங்க ....?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
அடடா ... அது விமந்தனியா, நான் டால்பின் மீனாக்கும் என்று நினைத்தேன்விமந்தனி wrote:அதோ.... தூரத்துல இருக்கற அக்கா பொண்ணு தெரியலையாக்கும்....ராஜா wrote:விமந்தனி wrote:அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
T.N.Balasubramanian wrote:ஜரோவா குடியினர் சர்வதேச அளவில் Protected Tribes என்ற பிரிவில் பாதுகாத்து வரப்படுகிறார்கள் என அறிகிறேன் .
நல்ல பகிர்வு .
காலை 5 மணிக்கே உணவருந்தினால் , சிறிது லேசாக தூக்க கலக்கம் இருக்குமே .
ரமணியன்
லைட்டான டிபன் என்பதால் no தூக்கம். அதுவுமில்லாமல் புதிதான ஒரு இடத்திற்கு செல்லும் குதூகலத்தில் தூக்கம் என்பது எது....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
அந்த அலைகள்ல அவன் தனியா இல்லை என்பது தெரியுமா ராஜா?ராஜா wrote:விமந்தனி wrote:அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.
இதோ அதன் அசல் படம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
ஒருவழியாக ஆறுமணியளவில் கேட் திறக்கப்பட வரிசையாக நின்ற வண்டிகள் நகர ஆரம்பித்தது. சற்று தூரம் வரையிலும் வண்டிகளின் நெருக்கடி காரணமாக கொஞ்சம் ட்ராபிக். பிறகு போகப்போக சரியாகி வண்டி வேகமெடுக்க ஆரம்பித்தது.
பாதை வளைந்தும், நெளிந்தும், எறியும், இறங்கியும் என பயணம் எதிர்பாரா திருப்பங்களுடன் இருந்தது. பாதையின் இருமருங்கும் ஓங்கி உயர்ந்திருந்த விதவிதமான காட்டு மரங்கள். பச்சை பசேல் என்று பார்க்கப்பார்க்க கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சியை அள்ளித்தந்தது.
அடர்ந்திருந்த மரங்களின் ஊடே சூரியனும் தன் ஒளிக்கரங்களை நுழைக்க யோசித்துக்கொண்டிருந்தான். காலை நேரத்து இதமான சூழ்நிலை மனதை கிறங்கடித்துக்கொண்டு இருந்தது. இந்த அழகான நிமிஷங்கள் கரைவது தெரியாமல் அமர்க்களமாக கரைந்து சரியாக ஒருமணி நேரம் கழித்து, நாங்கள் இறங்கும் இடம் வந்தது.
அந்த இடத்தில் இருந்து ஒரு சின்ன பயணிகள் கப்பல் மூலம் பாரடாங் செல்லவேண்டும். இது தான் அந்த கப்பல். பத்து நிமிட பயண நேரம் தான்.
இதில் பாருங்கள் பஸ், கார், வேன் போன்ற வாகனங்களையும் பயணிகளுடன் சேர்த்து ஏற்றிக்கொண்டு வந்து பாரடங் தீவில் விடுகிறார்கள்.
கப்பலின் உள்ளே – பயணிகள் அமரும் இடம்.
அடுத்த பத்தாவது நிமிடம் பாரடாங் தீவு வந்து விட்டது.
இந்த தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு தான் சாப்பிட்டு ஆகவேண்டும். உணவு நன்றாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும்... வேறு வழியே இல்லை.
அங்கிருந்து கூப்பிடு தொலைவிலேயே பாரடாங் ஜெட்டி உள்ளது. அங்கு காத்திருக்கும் விசைப்படகுகளில் நாம் அடுத்த பயணம் மேற்கொள்ளவேண்டும்.
எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................?
பாதை வளைந்தும், நெளிந்தும், எறியும், இறங்கியும் என பயணம் எதிர்பாரா திருப்பங்களுடன் இருந்தது. பாதையின் இருமருங்கும் ஓங்கி உயர்ந்திருந்த விதவிதமான காட்டு மரங்கள். பச்சை பசேல் என்று பார்க்கப்பார்க்க கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சியை அள்ளித்தந்தது.
அடர்ந்திருந்த மரங்களின் ஊடே சூரியனும் தன் ஒளிக்கரங்களை நுழைக்க யோசித்துக்கொண்டிருந்தான். காலை நேரத்து இதமான சூழ்நிலை மனதை கிறங்கடித்துக்கொண்டு இருந்தது. இந்த அழகான நிமிஷங்கள் கரைவது தெரியாமல் அமர்க்களமாக கரைந்து சரியாக ஒருமணி நேரம் கழித்து, நாங்கள் இறங்கும் இடம் வந்தது.
அந்த இடத்தில் இருந்து ஒரு சின்ன பயணிகள் கப்பல் மூலம் பாரடாங் செல்லவேண்டும். இது தான் அந்த கப்பல். பத்து நிமிட பயண நேரம் தான்.
இதில் பாருங்கள் பஸ், கார், வேன் போன்ற வாகனங்களையும் பயணிகளுடன் சேர்த்து ஏற்றிக்கொண்டு வந்து பாரடங் தீவில் விடுகிறார்கள்.
கப்பலின் உள்ளே – பயணிகள் அமரும் இடம்.
அடுத்த பத்தாவது நிமிடம் பாரடாங் தீவு வந்து விட்டது.
இந்த தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு தான் சாப்பிட்டு ஆகவேண்டும். உணவு நன்றாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும்... வேறு வழியே இல்லை.
அங்கிருந்து கூப்பிடு தொலைவிலேயே பாரடாங் ஜெட்டி உள்ளது. அங்கு காத்திருக்கும் விசைப்படகுகளில் நாம் அடுத்த பயணம் மேற்கொள்ளவேண்டும்.
எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!
அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...
நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
தொடருங்கள் அக்க்கா...
நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» அந்தமான் சிறைச்சாலை
» அந்தமான் சிறைச்சாலை
» அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள்
» அந்தமான் சென்று வர வாய்ப்பு....
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» அந்தமான் சிறைச்சாலை
» அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள்
» அந்தமான் சென்று வர வாய்ப்பு....
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|