புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே.
Page 1 of 1 •
அழுக்காறு என ஒரு பாவி ... பொறாமையை இப்படித்தான் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். செல்வத்தைக் கெடுப்பதோடு மட்டுமல்லாது பொறாமை, தீய வழிகளிலும் செலுத்திவிடும் என்கிறார். தீமையே நினைக்கும் பகைவனைக் காட்டிலும் பொறாமையில் புகையும் நண்பன் கொடியவன் என ஆங்கில வழக்கும் இப்பாவியைப் பழிக்கிறது. பொறாமைப்படுவது ஆண்களில் அதிகமா அல்லது பெண்களில் அதிகமா என்பது, முடிவே பெறாத வாதங்களாய் நீள்கிறது. மனதுக்குள்ளே மறைத்துக் கொள்ளத் தெரியாததால், பெண்களின் தரப்புக்கு இதில் பின்னடைவே.
தன்னிடம் இல்லாத ஒன்று தனக்கு அருகில் இருப்போரிடம் இருக்கையில் அல்லது தனக்கு கிடைத்திராத ஒன்று அவர்களுக்கு வந்து வாய்க்கையில், அங்கே பொறாமையின் வித்து ஊன்றப்படுகிறது. இவை நடப்பது கண்டும் பொறாமைப்படாதோர், நமக்கு கிடைப்பதை தமக்குக் கிடைப்பதாகக் கொள்பவர்கள் அல்லது தமக்கு யாவுமே வாய்த்துள்ளதென்ற தர்ம நிறைவைப் பெற்றவர்கள்.
பிறருக்கு கிடைப்பது தமக்கும் கிடைக்க வாய்ப்பிருந்தால் பொறாமைப்படுவது மனித குணம். வாய்க்கவே வாய்ப்பில்லாத ஒன்றைக் கண்டு பொறாமை வரின் அது அறிவீனம். பொறாமையின் படுகையில் தலைப்படுவோர், தம் தரத்தை தாழ்த்தி அறிவைத் தொலைப்பர். அறிவை இழந்து அவர் செய்யும் செயல்களால், மதிப்போடு மாண்பையும் இழப்பர்.
மதுரையில் ஒரு கருத்தரங்கிற்கு அதிகாரிகள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். நானும் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அங்கிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் அமைந்த கல்லூரியில் கருத்தரங்கம். ஒரே இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தாலும், ஒவ்வொரு அதிகாரிக்கும் தனி வாகனம்.
சக பெண் அதிகாரியை மதுரையில் சந்தித்தேன். பரஸ்பர நல விசாரிப்பிற்குப் பிறகு இருவரும் கருத்தரங்கிற்கு கிளம்பினோம். எங்களைக் கண்டதும் ஏற்பாட்டாளர்கள் இரு வாகனங்களைக் கொண்டு வந்தனர். தனக்கு தரப்பட்ட வாகனத்தில் அமர்ந்த அவர், என்னையும் உடன் வர நிர்ப்பந்தித்தார். பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது பேசிக் கொண்டே செல்வோம் என்று அழைத்தார். எனக்கென வாகனம் தனியாகத் தந்தும் இவர் எனது நண்பர்தான் இவரை நானே என்னுடன் அழைத்துச் செல்கிறேன் என ஏற்பாட்டாளர்களிடம் சொல்லிவிட்டார். மறுக்க முடியாத நிலையில் நானும் அவருடனேயே கிளம்பிவிட்டேன்.
பயணத்தின்போது, பதினைந்து வருட இடைவெளியை செய்திகள் பரிமாறி அடைத்துக் கொண்டோம். கல்லூரி வந்தவுடன் இறங்கிச் சென்று கருத்தரங்கில் கலந்துகொண்டோம். மாலை ஐந்து மணிக்கு நிகழ்ச்சி நிறைந்ததும் கல்லூரியிலிருந்து வெளியே வந்தோம் அடுத்தடுத்து அதிகாரிகள் அவரவர் வாகனத்தில் அகன்றார்கள்.
நானும் சக பெண் அதிகாரியும் வாகனத்திற்காக நின்றபோது அங்கே மூன்று யுவதிகள் வந்தார்கள். மூவரும் அக்கல்லூரியிலேயே பயிலும் மாணவிகளாகத் தெரிந்தார்கள். இருவரில் யாரைப் பார்க்க வருகிறார்கள் என்பது முதலில் தெரியவில்லை. அப்பெண்களில் ஒருவர் என்னிடம் கேட்டார், ""நீங்கள் கன்னியாகுமரி கலெக்டர்தானே? உங்களை பத்திரிகைகளில் பார்த்திருக்கிறோம். உங்களைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி... எங்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுத் தருவீர்களா? ''
நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு வந்த இடத்தில் இளம்பெண்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டதில் எல்லையில்லா ஆனந்தம் எனக்கு. அவர்களின் படிப்பு குறித்த விவரங்களைக் கேட்டேன். வாகன வரிசை கடந்து கொண்டிருந்தது எங்களின் வாகனம் வரவில்லை... இரு பெண்களின் நோட்டுப் புத்தகங்களை வாங்கி கையெழுத்திட்டு திருப்பித் தந்தேன். அவர்களை நன்கு படிக்க கேட்டுக் கொண்டேன். சக பெண் அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தார். இன்னமும் வாகனம் வந்திருக்கவில்லை.
இரண்டு பெண்கள் வாங்கியதைப் பார்த்து மூன்றாவது பெண்ணும் உற்சாகமாகிவிட்டார். தனக்கும் கையெழுத்து வேண்டுமென்று தன்மையாக கேட்டுக் கொண்டார். அவரது நோட்டையும் வாங்கி அதில் வாழ்த்துகளுடன் என்றெழுதி கையெழுத்திட்டு நிமிர்ந்தேன். அதுவரை எனது பக்கத்தில் நின்றிருந்த சக பெண் அதிகாரியைக் காணோம். இளம்பெண்கள் மூவரும் விடை பெற்றுச் சென்றனர். வாகனங்களின் வரிசையும் முடிந்துவிட்டது. என்னுடன் வந்த அதிகாரி அங்கில்லை. எங்களை அழைத்து வந்த வாகனமும் அங்கில்லை. நான் மட்டும் தனியே நின்று கொண்டிருந்தேன்.
ஏற்பாட்டாளர்கள் வந்து விசாரித்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் சொன்னார், ""நீங்கள் அந்தப் பெண்ணுக்கு ஏதோ எழுதித் தருகையில் உங்களின் வாகனம் வந்தது. உங்களுடன் வந்த அதிகாரி அதில் தான் மட்டும் ஏறிச்சென்றுவிட்டார் என்று'' இப்படியும் நடந்து கொள்ள முடியுமா என வியந்தேன். காலையில் அவர் காட்டிய அன்பை நினைத்தேன். இளம்பெண்கள் அங்கே எனக்குத் தந்த அங்கீகாரத்தில் இவரது அன்பை நான் இழந்திருந்தேன். இருவருமே பெண் அதிகாரிகள் எனினும் என்னை மட்டுமே அம்மாணவிகள் அடையாளம் கண்டு கொண்டதை என் சக பெண் நண்பரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அங்கிருந்து நான் எப்படி திரும்புவேன் என்பது குறித்த உணர்வேதுமின்றி என்னை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தார். தான் மட்டும் நகரும்போது எனக்கு தகவல் கூட சொல்லவில்லை. காலையில் எனக்காக வந்திருந்த வாகனத்தை அவர்தான் வேண்டாமென சொல்லியிருந்தார். அழைத்து வந்தது போல் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நாகரீகம் கூட மறந்துவிட்டார்.
இளம்பெண்கள் தந்த இயல்பான பாராட்டு, பல வருட கால நட்பைக் கெடுத்தது. துளி நேரத்தில் துளிர்த்த பொறாமை, பழி தீர்த்துக் கொண்டது. அறிவு முழுக்க அதிர்வுகளோடு பிறிதொரு வாகனத்தில் திரும்பினேன். மூன்று வருடங்கள் கழித்து ஒருநாள் உதவி கேட்டு அவர் வந்தார். இன்னா செய்த அவர் நாண நன்னயம் செய்து ஒறுத்தினேன்.
நடக்க இருக்கும் நல்லதையும் கெடுக்க நினைப்பர் பொறாமையாளர்கள். நல்ல சம்பந்தம் கிடைக்க இருந்தால் குறைகள் சொல்லி குலைப்பது, நல்ல வாய்ப்பு கிடைக்க இருந்தால் பொல்லவை செய்து தடுப்பது என பொறாமையின் போர்க்குணங்கள் ஆழமானவை.
தன்னைப் பற்றிய உயர் மதிப்பீடுகள் இருப்பின் பொறாமைக்கு அங்கே புகலிடமில்லை. சுய மதிப்பீடு அதிகம் உள்ளோர் பொறாமைத் தீயில் பொசுங்குவதில்லை. மாறாக, ஒருவரது உயர்வையோ அல்லது வாய்ப்பையோ கண்டு பாராட்டும் குணம் அங்கே வருகிறது. பெண்களைப் பாராட்டும் பெண்கள் நல்ல சுய மரியாதையும், மதிப்பீடும் மிக்கவர்கள்.
பாராட்டே கூட சில சமயங்களில் பொறாமையாக பார்க்கப்படலாம். மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது வரப்பெற்ற பணிமாற்றத்தையடுத்து, வாடகை வீட்டில் சிறிது காலம் தங்கி இருக்க நேர்ந்தது. அடுத்த வீட்டினர் தங்கள் மகனின் திருமணத்திற்கு அழைத்தனர். நல்லுறவு பேணும் நல்நோக்கில் அவர்களின் வீட்டிற்கு நான் சென்றிருந்தேன். அந்தப் பையனின் தாயார் கொஞ்சம் இளமையாகத் தெரிவார். அவரைப் பாராட்டுவதாக எண்ணிக் கொண்டு, ""சின்னப்பெண் மாதிரி இருக்கிறீர்கள். உங்கள் பையனுக்கு திருமணமா'' என்றேன். அவர் உடனே ""மேடத்துக்கு பொறாமையைப் பாருங்கள்'' என்று சட்டென சிரிப்புடன் சொல்லிவிட்டார். இதற்கு பதில் சொல்ல எனக்கு வரவில்லை. எனது மனமார்ந்த பாராட்டை ஏற்றுக்கொள்ளாமல், நான் பொறாமைப்படும் வகையில் தான் இருப்பதாக அவர் நினைத்தது கண்டு மலைத்தேன். பாராட்டுவதற்கு மட்டுமல்ல, பாராட்டை ஏற்றுக்கொண்டு மகிழ்வதற்கும், நிறைவான மதிப்பீடு அவசியம் என்பதை இந்நிகழ்வு எனக்கு உணர்த்தியது.
பொறாமைதானே உயர்வுக்கு வழி என வாதிடுவோரும் பலருண்டு. தனக்கும் கிடைக்க வாய்ப்புள்ள ஒன்று அடுத்தவருக்கு மட்டும் கிடைக்கையில் அதை பொறாமையாகப் பார்க்காமல், ஓர் ஏக்கமாகக் கொண்டிடலாம். அந்த ஏக்கத்தையே கனவாக்கி, அக்கனவை நனவாக்க முயற்சிக்கலாம். ஏக்கமும் கனவும் முயற்சியும் பிறரை, அடுத்துக் கெடுத்து வெறுப்பதில்லை.
தன்னிறைவு இருக்குமிடம், பொறாமைக்கு என்றும் களர் நிலம். பிறருக்குக் கிடைப்பதில் மன மகிழ்வும், தமக்கும் கிடைக்கும் என்ற மனத்தெளிவும் பொறாமையை தொலைவில் வைக்கின்றன. பொறாமையற்ற முகமே பொலிவினைப் பெறுகிறது. பொறாமை எனும் அழுக்கு படின், அது பொலிவை இழக்கிறது. அழகான முகம் பெற அனைவருக்கும் ஆசைதான். பொறாமையை நீக்கி வைத்தால் அதுவும் நமக்கு சாத்தியம்தான்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பகிர்வுக்கு நன்றி சிவா !
அய்யன் வள்ளுவர் திருக்குறளில் " பாவி " என்ற சொல்லை இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார்.
இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் . ( நல்குரவு - 1042 )
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்று
தீயுழி உய்த்து விடும். ( அழுக்காறாமை - 168)
வறுமை , பொறாமை ஆகிய இரண்டையும் பாவிகள் என்று குறிப்பிடுகிறார் .
மனதிலே ஏற்படும் நான்கு குற்றங்களாக பொறாமை ,ஆசை ,சினம் , இன்னாச்சொல் ஆகியவற்றை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம். ( அறன்வலியுறுத்தல் - 35 )
மனதிலே ஏற்படும் நான்கு குற்றங்களில் " அழுக்காறு " எனும் குற்றத்தை முதன்மையாக வைத்ததைக் காண்க .
அய்யன் வள்ளுவர் திருக்குறளில் " பாவி " என்ற சொல்லை இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார்.
இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் . ( நல்குரவு - 1042 )
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்று
தீயுழி உய்த்து விடும். ( அழுக்காறாமை - 168)
வறுமை , பொறாமை ஆகிய இரண்டையும் பாவிகள் என்று குறிப்பிடுகிறார் .
மனதிலே ஏற்படும் நான்கு குற்றங்களாக பொறாமை ,ஆசை ,சினம் , இன்னாச்சொல் ஆகியவற்றை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம். ( அறன்வலியுறுத்தல் - 35 )
மனதிலே ஏற்படும் நான்கு குற்றங்களில் " அழுக்காறு " எனும் குற்றத்தை முதன்மையாக வைத்ததைக் காண்க .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தன்னைப் பற்றிய உயர் மதிப்பீடுகள் இருப்பின் பொறாமைக்கு அங்கே புகலிடமில்லை. சுய மதிப்பீடு அதிகம் உள்ளோர் பொறாமைத் தீயில் பொசுங்குவதில்லை. மாறாக, ஒருவரது உயர்வையோ அல்லது வாய்ப்பையோ கண்டு பாராட்டும் குணம் அங்கே வருகிறது. பெண்களைப் பாராட்டும் பெண்கள் நல்ல சுய மரியாதையும், மதிப்பீடும் மிக்கவர்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|