புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
44 Posts - 41%
heezulia
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
3 Posts - 3%
prajai
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
3 Posts - 3%
Barushree
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
21 Posts - 5%
prajai
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10மலேசிய செய்திகள் - Page 7 Poll_m10மலேசிய செய்திகள் - Page 7 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய செய்திகள்


   
   

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:42 pm

First topic message reminder :

மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!

கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.

அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.



மலேசிய செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 31, 2021 10:23 pm




கோலாலம்பூர்., ஜூலை 31 – திங்கட்கிழமையன்று நடைபெறவிருந்த நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில எம்.பிக்கள் திட்டமிட்டபடி நாடாளுமன்றம் செல்லப்போவதாக கூறியுள்ளனர். முஹிடின் யாசினும் அவரது பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கமும் கோழையாக இருப்பதாக டி.ஏ.பியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். டி.ஏ.பியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என அவர் தெரிவித்தார்.


உண்மையில் முஹிடினுக்கு 110 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பது உண்மையானால் நாடாளுமன்ற கூட்டம் நடத்துவதை தவிர்ப்பது ஏன் என்றும் லிம் வினவினார். இதனிடையே லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்ஷீல், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் ஆகியோரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் செல்லப்போவதாக கூறியுள்ளனர். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு தடுப்பூசிகளை போட்டு விட்டனர் . எனவே கோவிட் தொற்றை காரணம் காட்டி நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைப்பது நியாயம் இல்லையென பாமி பாட்ஷீல் கூறினார்.


மக்கள் விவேகமற்றவர்கள் அல்ல. எனக்கும் இதர எம்.பிக்களும் நாடாளுமன்ற பணிகளுக்காக சம்பளம் வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை நான் நிச்சயம் நாடாளுமன்றம் செல்வேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என சைட் சாடிக் சவால் விடுத்தார். இதனிடையே நாடாளுமன்றத்தை கைப்பாவையாக அரசாங்கம் பயன்படுத்தி வருவது குறித்து Selangau நாடாளுமன்ற உறுப்பினர் பாரு பியன் ஏமாற்றம் தெரிவித்தார்.





மலேசிய செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2021 9:39 pm



கோலாலம்பூர் : நாடு புதியதொரு அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அம்னோ உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெறவிருக்கிறது.

இதன் காரணமாக, அம்னோ என்ன முடிவெடுக்கும் என்ற பரபரப்பு அரசியல் பார்வையாளர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

இயங்கலை வழி (ஒன்லைன்) இந்த அம்னோ உச்சமன்றக் கூட்டம் நடத்தப்படும்.

இதற்கு முன்னர் கடந்த புதன்கிழமை (ஜூலை 7) இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் ஆளும் தேசியக் கூட்டணியின் பிரதமர் மொகிதின் யாசினுக்கு இனி ஆதரவு தருவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

எனினும் அந்த முடிவு பிசுபிசுத்தது. அம்னோவின் இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதற்காக அம்னோ உச்சமன்றமோ அதன் தலைமைத்துவமோ கண்டனம் தெரிவிக்கவில்லை.

மாறாக அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடியும், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் தனித் தனியாக பிரதமர் அலுவலகம் சென்று இஸ்மாயில் சாப்ரியைச் சந்தித்து விட்டு வந்தனர்.

தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், நாளடைவில் அந்த முடிவு மொகிதினுக்கு எதிரான முடிவு மட்டுமே என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. தேசியக் கூட்டணி அரசாங்கம் ஆதரவு வழங்குவோம் என்பது போன்று அம்னோ தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்தன.

அதே சமயத்தில் பல அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பகிரங்கமாக எடுத்தனர். அம்னோவின் 9 அமைச்சர்கள் மொகிதினுக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அதற்கும் இதுவரையில் அம்னோ உச்சமன்றத் தரப்பிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எதுவும் இல்லை.

இந்தச் சூழலில்தான் அம்னோவின் உச்சமன்ற அவசரக் கூட்டம் நாளை நடைபெறுவதால், என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.



மலேசிய செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2021 9:41 pm



கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றக் கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை இன்று காலை முதல் முற்றுகையிடத் தொடங்கினர்.

எனினும் நாடாளுமன்றக் கட்டடத்தின் வாயில்கள் மூடப்பட்டு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் அவர்கள் திரண்டனர். அங்கிருந்து பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி நடந்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இன்னொரு வகையில் திருப்பம் கண்டிருக்கிறது.

முதன் முறையாக ஜசெக, பிகேஆர், அமானா, சைட் சாதிக் தலைமையிலான மூடா கட்சி, துன் மகாதீர் தலைமையிலான பெஜூவாங் கட்சி, வாரிசான், பார்ட்டி சரவாக் பெர்சாத்து, உப்கோ என அனைத்துக் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்து மொகிதினும், அவரின் அமைச்சரவையும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தின.

இந்தப் போராட்டத்தில் துன் மகாதீரும், அன்வார் இப்ராகிமும் தங்களின் சொந்த கருத்து முரண்பாடுகளைக் களைந்து களத்தில் ஒன்றாக நின்ற காட்சி அரசியல்வ வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



மலேசிய செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2021 9:43 pm



யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் உத்தரவை ஒதுக்கி வைக்கும் வகையில் அமைந்த, அவசரகாலச் சட்டத்தை இரத்து செய்யும் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரனின் அறிக்கை திமிர்தனம் கொண்டதாகப் பிகேஆர் கருதுகிறது.

விக்னேஸ்வரன் அரசாணை மீதான விவாதத்தைப் பயனற்றது என்று கருதுவது ஏற்புடையதல்ல என்று பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டா அகின் சொன்னார்.

“அகோங்கின் ஆணையை ஆணவத்துடன் மீறும் இந்த விக்னேஸ்வரன் யார்?” என்று அவர் இன்று ஒரு செய்திக்குறிப்பில் கேள்வி எழுப்பினார்.

அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, அவசரகாலச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, விவாதிக்க வேண்டும் என்று முன்பு தெளிவாக உத்தரவிட்டார் என்று ஹாங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான ஷம்சுல் இஸ்கண்டார் விளக்கினார்.

“இந்த அரசாணை மீதான விவாதத்தை வீண் என்று சொல்ல அவருக்கு (விக்னேஸ்வரன்) என்ன தைரியம்?” என்று அவர் மேலும் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து நாட்டை மீட்க உதவும் வகையில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், மக்களவையில் அவசரகாலச் சட்டம் பற்றிய விவாதம் நேர விரயம் என்று நேற்று விக்னேஸ்வரன் சொன்னதாகக் கூறப்படுகிறது.

அந்த மேலவை முன்னாள் சபாநாயகரின் கூற்றுப்படி, மக்களவை உறுப்பினர்கள் அவசரகால கட்டளை பற்றி விவாதிப்பது அவசியமற்றது.

ஒரே ஒரு வழிதான் உள்ளது

ஷம்சுல் இஸ்கண்டாரின் கூற்றுப்படி, அனைத்து தேசியக் கூட்டமைப்பின் (பிஎன்) தலைவர்களும், `ஈரமான நூலை நேராக்குவதற்கான` முயற்சிகளை நிறுத்த வேண்டும், ஏனெனில் ஓர் அரசாங்கமாக அவர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

“கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது, அதோடு மட்டுமின்றி, மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் உத்தரவை நிலைநாட்டவும் அது தவறிவிட்டது.

“பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் இன்று ஒரே ஒரு வழிதான் உள்ளது, மரியாதையுடன் அவர்கள் பதவி விலக வேண்டும்,” என்று அவர் கூறினார்.

தேசிய முன்னணியில், ம.சீ.ச., மற்றும் அம்னோவுடன் ஓர் அங்கமாக ம.இ.கா. இருக்கிறது.

தற்போதைய பிரதமர் முஹைதீன் யாசினுக்கான எம்.பி.க்களின் ஆதரவைத் திரும்பப் பெற அம்னோ முடிவு செய்துள்ளது.

எனினும், முஹைதீனின் அமைச்சர்களாக இருக்கும் அம்னோ எம்.பி.க்கள் யாரும் தங்கள் உச்சமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்காததால், அம்முயற்சி கடினமாக காணப்படுகிறது.

மறுபுறம், ம.சீ.ச. மற்றும் ம.இ.கா. அரசாங்கத்திற்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியதோடு, முஹிதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான எந்த முடிவும் ஒருமித்த கருத்தினால் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின.

ஜூலை 31-ம் தேதி, ம.சீ.ச. மற்றும் ம.இ.கா. தகவல் பிரிவு தலைவர்கள், முஹைதீன் யாசினுக்கும்ம் அவரது அமைச்சரவைக்கும் ஆதரவாக ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். பதிவுக்காக ம.சீ.ச.வும் ம.இ.கா.வும் அமைச்சரவையில் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளன.

நேற்று, பேராக் ம.சீ.ச. இளைஞர் பிரிவுத் தலைவர், கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் வகையில், நாட்டை வழிநடத்த அதிகத் தகுதி வாய்ந்தவர்களை அனுமதிக்க உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் முஹிதீனுக்கு அழைப்பு விடுத்தார்.



மலேசிய செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 03, 2021 8:16 am

பி.கே.ஆர் கட்சியின் தலைவருக்கு தான் எப்படியாவது பிரதமர் ஆக வேண்டும் என்னும் பேராசை தலையோங்கி நிற்கிறது. இரண்டு முறை சிறை சென்று வந்தவருக்கு இப்படி ஆசை இருப்பதஉ ஆச்சர்யம் தான். நாடு நாசமாகிக் கொண்டிருக்கிறது, எல்லாருக்கும் பதவி ஆசை., எனக்கும் பிரதமராகும் ஆசை இருக்கிறது. ஆனால் முடியாதே.


சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:02 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கும் பிரதமராகும் ஆசை இருக்கிறது. ஆனால் முடியாதே.

எந்தன் ஓட்டு உங்களுக்குதான் அய்யா!

@மாணிக்கம் நடேசன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2021 9:21 pm

ஒட்டுமொத்த மலேசியாவும் ‘குழப்பத்தில்’ – எம் சரவணன்

ம.இ.கா. துணைத் தலைவர் எம் சரவணன், அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, தேசியக் கூட்டணி அரசு மற்றும் பிரதமர் முஹைதீன் யாசினுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவது, மலேசியர்களைக் குழப்பமடைய செய்துள்ளது என்றார்.

அம்னோ, மசீச உட்பட ம.இ.கா. உறுப்பினர்களின் மிகப்பெரிய கேள்வி, அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் நமது திசை எது?

“நம்மிடம் 41 இடங்கள் உள்ளன. 41 இடங்களுடன், பெர்சத்து, டிஏபியுடன் இருக்க அம்னோ விரும்பவில்லை, பிகேஆருடன் இணைந்து வேலை செய்ய முடியாது. எனவே, 41 இடங்களுடன், நமது திசை எது? இது ஒரு மக்கள் பிரதிநிதியாக என்னிடம் உள்ள கேள்வி, கட்சி உறுப்பினர்களிடம் நான் விளக்க வேண்டும்.

“நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மலேசியாவும் குழப்பத்தில் உள்ளது, பிஎன்-இன் நிலைப்பாடு என்ன? அரசாங்கம் வீழ்ச்சியடைந்தால், புதிய அரசாங்கம் அமைக்க எந்தவொரு கட்சியும் நம்முடன் இல்லை. என்ன நடக்கப் போகிறது?” என்று அவர் இன்று கோலாலம்பூரில், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முன்னதாக, துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த தாப்பா எம்.பி. கலந்துகொண்டார்.

இந்தச் செப்டம்பரில் நாடாளுமன்றம் கூடும் வரை, தேசிய முன்னணியின் 31 எம்.பி.க்களும் தேசியக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிப்பதாக இஸ்மாயில் சப்ரி இன்று அறிவித்தார்.

மசீசவைச் சேர்ந்த இருவர், ம.இ.கா. 1 மற்றும் பிபிஆர்எஸ் 1 உட்பட, 31 தேசிய முன்னணி எம்.பி.க்களின் பெயர் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

இதற்கிடையில், தாப்பா அம்னோ பிரிவுத் தலைவர் இஷாம் ஷாருட்டின், தேசியக் கூட்டணி மற்றும் முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறும் அம்னோ உச்சமன்றக் குழுவின் முடிவை முழுமையாக ஆதரிப்பதாக சொன்னார்.



மலேசிய செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 11, 2021 7:30 pm

முகமட் ஹாசான் துணைப் பிரதமர் பதவியை மறுத்தார்

கோலாலம்பூர் : அம்னோவில் நிகழ்ந்து வரும் பல்வேறு போராட்டங்கள், மாற்றங்களுக்கு இடையில் அனைவருக்கும் பொதுவான – அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக – பாரமான அரசியல் மூட்டைகள் எதையும் சுமந்து கொண்டிருக்காத தலைவராக- பார்க்கப்படுபவர் அம்னோவின் துணைத் தலைவர் முகமட் ஹாசான்.

முகமட் ஹாசானுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் மொகிதின் யாசின் முன்வந்தார் – என அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் ஆச்சரியகரமான தகவல் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்.

எனினும் இது குறித்து பதலளிக்கவோ, மேலும் தகவல் பகிரவோ முகமட் ஹாசான் மறுத்துள்ளார்.

“நான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் கட்சியின் முடிவை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் முடிவுகள்” என்று மட்டும் முகமட் ஹாசான் கூறியுள்ளார்.

இவ்வாறாக கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டும், கொள்கைகளுக்கு ஏற்பவும் அரசியல் ரீதியான முடிவுகளை எடுத்து வருவதால் அவர் மீதான மதிப்பீடும், அபிமானமும் அம்னோ அடிமட்ட உறுப்பினர்களிடையே அதிகரித்து வருவதைக் காண முடிவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

முகமட் ஹாசான் துணைப் பிரதமர் பதவியை மறுத்ததைத் தொடர்ந்தே இஸ்மாயில் சாப்ரியை இறுதிக்கட்ட அரசியல் வியூகமாக மொகிதின் யாசின் துணைப் பிரதமராக ஜூலை 7-ஆம் தேதி நியமித்திருக்கிறார்.



மலேசிய செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 11, 2021 7:31 pm

28.3% மலேசியர்கள் 2 மருந்தளவு தடுப்பூசிகளை நிறைவு செய்துள்ளனர் – ஆடாம்

நாட்டின் மொத்த மக்கள்தொகையில், 28.3 விழுக்காடு அல்லது 9,246,295 பேர், நேற்று வரையில் இரண்டு மருந்தளவுகள் கோவிட் -19 தடுப்பூசி மருந்துகளை முடித்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

தனது அதிகாரப்பூர்வ கீச்சகத்தில், ஒரு விளக்கப்படத்தைப் பகிர்ந்து, 16,119,916 பேர் முதல் மருந்தளவைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இதன்வழி, நேற்றைய நிலவரப்படி, தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டம் (பிக்) மூலம் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 25,366,211 மருந்தளவுகளாகப் பதிவு செய்துள்ளது.

“அந்த விழுக்காட்டின் படி, நாட்டில் பெரியவர்களில் 68.9 விழுக்காட்டினர் முதல் மருந்தளவைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 39.5 விழுக்காட்டினர் தங்களின் முழு அளவிலான கோவிட் -19 தடுப்பூசி மருந்தை முடித்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், தினசரி தடுப்பூசிகள் மொத்தம் 357,891 மருந்தளவைப் பதிவு செய்துள்ளன, 160,320 முதல் மருந்தளவாகவும், 197,661 இரண்டாவது மருந்தளவாகவும் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும், கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளை வழங்கும் ‘பிக்’ திட்டம் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்பட்டது.

பெர்னாமா




மலேசிய செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 11, 2021 7:32 pm

மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் எரிந்தது, நோயாளி காயமடைந்தார்

தஞ்சோங் மாலிம், சிலிம் ரீவர் மருத்துவமனையில், தனிமைப்படுத்தப்பட்ட அறையில், நேற்று இரவு ஆக்ஸிஜன் எரிவாயு சிலிண்டர் தீ விபத்தில், ஆண் நோயாளி ஒருவர் தீக் காயமடைந்தார்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செய்தித் தொடர்பாளர், இரவு 7.42 மணிக்கு அழைப்பைப் பெற்ற பின்னர், சிலிம் ரீவர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறினார்.

48 வயது நோயாளியின் கைகளில், ஒன்பது விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

“சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர், 15×20 சதுர அடி அளவிலான ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறை தீக்குள்ளானதைக் கண்டறிந்தது.

“இருப்பினும், தீயணைப்பு படையினர் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்,” என்று அவர் நேற்று இரவு ஓர் அறிக்கையில் கூறினார்.

மேலும், அச்செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தீயணைப்பு படையினர் அடுத்தடுத்து முழுமையான மதிப்பீடு மற்றும் ஆய்வை மேற்கொண்டனர், சம்பவ இடத்தில் வேறு எந்த ஆபத்துகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியப் பின்னர், இரவு 8.55 மணியளவில் ஆய்வுப் பணிகள் முழுமையாக முடிவடைந்தன.

பெர்னாமா




மலேசிய செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக