by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
மலேசிய செய்திகள்
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!
கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.
அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
கோலாலம்பூர், ஜூலை 22 – காஜாங்கில், போலீஸ் நிலையத்திற்குள் ஆட்டம் பாட்டம் என கேளிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட நான்கு போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், போதைப் பொருள் உட்கொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
போலீஸ் நிலையத்தின் ஓர் அறையை ‘குட்டி டிஸ்கோ’ தளமாக மாற்றி கும்மாளமிட்ட , நான்கு போலீஸ் அதிகாரிகளும், நான்கு பெண்களும் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என, புக்கிட் அமானின் உயர்நெறி கட்டொழுங்கு துறையின் இயக்குநர் டத்தோ அஸ்ரி அஹ்மாட் ( Datuk Azri Ahmad ) தெரிவித்தார்.
தொடக்க முடிவில், ஒரு போலீஸ் அதிகாரி THC வகை போதைப் பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோலாலம்பூர் : கடந்த ஜனவரி மாதத்தில் அமுலாக்கப்பட்ட அவசர கால சட்டத்தை அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் 4 தீர்மானங்கள் எதிர்க்கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்துவதற்கோ, மறுப்பதற்கோ நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு அதிகாரமில்லை என இந்தத் தீர்மானங்களைச் சமர்ப்பித்த புருவாஸ் நாடாளுமன்றத்திற்கான ஜசெக உறுப்பினர் இஙே கூ ஹாம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானங்கள் ஜூலை 19-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டன.
மலேசிய அரசியலமைப்பு சட்டம் விதி 150 (3) வரையறுத்தபடி அவசர கால சட்டங்கள் நாடாளுமன்றத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும், எனவே அவைத் தலைவர் அசார் ஹாருண் இந்தத் தீர்மானங்களை நிராகரிக்க முடியாது எனவும் இஙே மேலும் குறிப்பிட்டார்.
இஙே சமர்ப்பித்துள்ள தீர்மானங்கள் ஜனவரியில் கொண்டுவரப்பட்ட அவசர கால சட்டம் மற்றும் மேலும் மூன்று அவசர கால சட்டங்களை இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.
இந்தத் தீர்மானங்கள் மீதான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதால் ஜூலை 26 நாடாளுமன்றக் கூட்டத்தின் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் ஒரு கடுமையான மோதலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன என்பதையே ஜசெகவின் தீர்மானங்கள் காட்டுகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோலாலம்பூர் : ஆளும் தேசியக் கூட்டணியையும், பிரதமர் மொகிதின் யாசினையும் ஆட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் அகற்றுவது என்பது இப்போதைக்கு இயலாத காரியம் – காரணம் எந்தக் கட்சிக்கும் அதற்கான பெரும்பான்மை இல்லை என வீடமைப்புத் துறை அமைச்சர் சுரைடா கமாருடின் (படம்) கூறியுள்ளார்.
சுரைடா பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினருமாவார். பிகேஆர் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த சுரைடா, அஸ்மின் அலியோடு இணைந்து பெர்சாத்து கட்சிக்குத் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார்.
எனவே, அடுத்த பொதுத் தேர்தல் வரை அனைத்துக் கட்சிகளும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் – பிரதமரின் ஆட்சி தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் சுரைடா கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவிருக்கும் நிலையில் மொகிதின் யாசினை பிரதமர் பதவியில் இருந்து அகற்றும் இன்னொரு முயற்சியை எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எனினும், இந்த முயற்சிக்கு அம்னோ ஒத்துழைப்பு வழங்குமா என்பது இன்னும் தெரியவில்லை.
அம்னோவின் இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பதால் அம்னோ திருப்தியடைந்து விடுமா அல்லது ஏற்கனவே அம்னோ உச்சமன்றம் எடுத்துள்ள முடிவின்படி மொகிதின் அரசாங்கத்திற்கு ஆதரவு தராமல் விலகிக் கொள்ளுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் பிரதமர் அலுவலகம் சென்று இஸ்மாயில் சாப்ரியை சந்தித்துப் பேசியிருப்பதும் பல்வேறு ஆரூடங்களுக்கு வித்திட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவே அதிகம். செயலில் உள்ள கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையும் மிக உயர்ந்த அளவில் (147,386) உள்ளது.
மேலும், இன்று 144 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 7,718- ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 10,094 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 456 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
வகை அடிப்படையில் முறிவு
வகை 5 – (மோசமான நிலை, சுவாசக் கருவியின் உதவி தேவை) : 29 நேர்வுகள் (0.2%)
வகை 4 – (உயிர்வளி உதவி தேவை) : 74 நேர்வுகள் (0.5%)
வகை 3 – (நிமோனியா) : 102 நேர்வுகள் (0.6%)
வகை 2 – (இலேசான அறிகுறிகள்) : 7,095 நேர்வுகள் (45.6%)
வகை 1 – (அறிகுறிகள் இல்லை) : 8,273 நேர்வுகள் (53.1%)
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (7,672), கோலாலம்பூர் (2,063), கெடா (937), ஜொகூர் (722), நெகிரி செம்பிலான் (682), பினாங்கு (530), சபா (516), சரவாக் (461), பஹாங் (457), மலாக்கா (452), பேராக் (415), கிளந்தான் (372), திரெங்கானு (229), புத்ராஜெயா (41), லாபுவான் (21), பெர்லிஸ் (3).
மேலும் இன்று, 30 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 16 சமூகப் பரவலுடன் தொடர்புடையது, 7 பணியிடத் திரளைகள் ஆகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தடுப்பூசி மையங்களில், ஆடைக் குறியீடுகள் குறித்த விதிகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) தெரிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக, கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த அதிகத் தடுப்பூசிகளைச் செலுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அதன் தலைவர், டாக்டர் எம். சுப்பிரமணியம் பரிந்துரைத்தார்.
முன்னதாக, இரண்டு பிபிவி-க்களில் ஆடைக் குறியீட்டைக் கடைப்பிடிக்காத இருவரை உபசரிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு பிபிவி, தனது முகநூலில் ஆடைகள் குறித்த வழிகாட்டுதல்களை அறிவித்தது.
மலேசியாகினியிடம் பேசிய சுப்பிரமணியம், அத்தகைய விதிமுறைகள் தேவையில்லை என்று கூறினார்.
“உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு எந்தவிதமான நடத்தை விதிகளும் இருக்கக்கூடாது. அவர்களுக்குத் தடுப்பூசி நியமனம் இருக்கும் வரை, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும்.
“இப்போது முக்கிய முன்னுரிமை, முடிந்தவரைப் பலருக்குத் தடுப்பூசி போடுவதுதான். மக்களைப் புறக்கணிப்பதற்கான நேரம் இதுவல்ல,” என்றார் அவர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
கவனமாக இருக்கவும்.
Profile பார்த்தேன். இப்பிடித்தான் வண்டியை ஓட்டுவீர்களோ?
கால்கள் வைக்கும் இடத்தில் அதிகமாக சுமைகள் வைக்கலாம்.
நல்ல ஐடியா
@சிவா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1348973T.N.Balasubramanian wrote:உங்கள் இருப்பிடம் எந்த பகுதியில் வருகிறது.?
கவனமாக இருக்கவும்.
Profile பார்த்தேன். இப்பிடித்தான் வண்டியை ஓட்டுவீர்களோ?
கால்கள் வைக்கும் இடத்தில் அதிகமாக சுமைகள் வைக்கலாம்.
நல்ல ஐடியா
@சிவா
நான் இருப்பது சிலாங்கூர் மாநிலம், பூச்சோங் என்ற இடம். கோலாலம்பூரிலிருந்து 25 கிமீ
நிற்கும் பைக்கில் எப்படி காலை வைத்தால் தான் என்ன?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
இதுவும் சரிதான்.
எந்தன் இளம் வயது மலரும் நினைவுகள்........
5ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.( உண்மையாகத்தான் 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன்.)
அண்ணன் 7ம் வகுப்பு . அவருக்கு சைக்கிள் உண்டு.நீ சின்னவன் ஓட்டக்கூடாது. பெடல் எட்டாது என தடுத்துவிடுவான்.வீட்டில் ஸ்டாண்ட் போட்டு வண்டி நிறுத்தப்பட்டு இருக்கும்.அதில் குரங்கு பெடல் பண்ணி சந்தோஷமடைவேன்.
@சிவா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
T.N.Balasubramanian wrote:நிற்கும் பைக்கில் எப்படி காலை வைத்தால் தான் என்ன?
இதுவும் சரிதான்.
எந்தன் இளம் வயது மலரும் நினைவுகள்........
5ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.( உண்மையாகத்தான் 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன்.)
அண்ணன் 7ம் வகுப்பு . அவருக்கு சைக்கிள் உண்டு.நீ சின்னவன் ஓட்டக்கூடாது. பெடல் எட்டாது என தடுத்துவிடுவான்.வீட்டில் ஸ்டாண்ட் போட்டு வண்டி நிறுத்தப்பட்டு இருக்கும்.அதில் குரங்கு பெடல் பண்ணி சந்தோஷமடைவேன்.
@சிவா
எனக்கு சைக்கிள் ஓட்டி பழகித் தராததால் என் அண்ணனின் சைக்கிளில் காற்றைப் பிடுங்கி அடிவாங்கிய அழகான நினைவுகளும் எனக்குண்டு...
அரசாங்கப் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்றும் இதுபோன்ற கடினமான காலங்களில் ஒற்றுமையுடன் இருப்பது முகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
“எனவே, யாரும் விரல்களைக் காட்டவும் சுட்டிக்காட்டவும் தேவையில்லை. நாட்டிலுள்ள மக்கள் ஒட்டுமொத்தமாக அவதிப்படுகிறார்கள், அதே நேரத்தில் முன்னணி மற்றும் மருத்துவமனைகள் மிக அழுத்தத்தில் உள்ளன, “ என்றும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|