Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசிய செய்திகள்
+5
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
SK
ChitraGanesan
சிவா
9 posters
Page 3 of 11
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
மலேசிய செய்திகள்
First topic message reminder :
மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!
கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.
அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.
மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!
கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.
அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மலேசிய செய்திகள்
மலேசியாவிலும் ஆதார்: இந்தியாவை பின்பற்ற முடிவு
-
அரசின் அனைத்து திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் ஆதார் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டன. தவிர பான் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் போன்றவற்றுக்கும் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான் என்று தீர்ப்பளித்தது. அதேசமயம் அதன் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் ஆதார் தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் மக்களிடம் நிலவி வருகின்றன. ஆனால் ஆதார் பயன்பாட்டால் போலியான நபர்கள் ஒழிக்கப்பட்டு மானியங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு வாதிட்டு வருகிறது.
இந்தநிலையில் மலேசிய அரசும் தங்கள் நாட்டில் ஆதாரை பயன்படுத்த ஆலோசித்து வருகிறது. அந்நாட்டில் ஏற்கெனவே தேசிய அடையாள அட்டை குடிமக்களுக்கு உள்ளது. மைகாட் என்ற பெயரிலான இந்த அட்டையில் ஆதார் போன்று கைரேகை மற்றும் விழித்திரை எடுக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
மலேசிய குழுவினர் அண்மையில் இந்தியா தரப்பில் ஆதார் தொடர்பான தகவல்களை கேட்டு பெற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை
அமைச்சர், குலசேகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்
கூறுகையில்
‘‘மலேசியாவிலும் ஆதார் போன்ற அட்டையை வழங்க
ஆலோசித்து வருகிறோம்.
இதன் மூலம் மானியங்கள் உரிய நபர்களை சென்றடைவதை
உறுதி செய்ய முடியும். மலேசிய அமைச்சரவை இதற்கு ஒப்புதல்
அளித்துள்ளது’’ எனக் கூறியுள்ளார்.
-
தி இந்து
-
அரசின் அனைத்து திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் ஆதார் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டன. தவிர பான் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் போன்றவற்றுக்கும் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான் என்று தீர்ப்பளித்தது. அதேசமயம் அதன் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் ஆதார் தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் மக்களிடம் நிலவி வருகின்றன. ஆனால் ஆதார் பயன்பாட்டால் போலியான நபர்கள் ஒழிக்கப்பட்டு மானியங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு வாதிட்டு வருகிறது.
இந்தநிலையில் மலேசிய அரசும் தங்கள் நாட்டில் ஆதாரை பயன்படுத்த ஆலோசித்து வருகிறது. அந்நாட்டில் ஏற்கெனவே தேசிய அடையாள அட்டை குடிமக்களுக்கு உள்ளது. மைகாட் என்ற பெயரிலான இந்த அட்டையில் ஆதார் போன்று கைரேகை மற்றும் விழித்திரை எடுக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
மலேசிய குழுவினர் அண்மையில் இந்தியா தரப்பில் ஆதார் தொடர்பான தகவல்களை கேட்டு பெற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை
அமைச்சர், குலசேகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்
கூறுகையில்
‘‘மலேசியாவிலும் ஆதார் போன்ற அட்டையை வழங்க
ஆலோசித்து வருகிறோம்.
இதன் மூலம் மானியங்கள் உரிய நபர்களை சென்றடைவதை
உறுதி செய்ய முடியும். மலேசிய அமைச்சரவை இதற்கு ஒப்புதல்
அளித்துள்ளது’’ எனக் கூறியுள்ளார்.
-
தி இந்து
Re: மலேசிய செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1281802ayyasamy ram wrote:மலேசியாவிலும் ஆதார்: இந்தியாவை பின்பற்ற முடிவு
-
அரசின் அனைத்து திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் ஆதார் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டன. தவிர பான் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் போன்றவற்றுக்கும் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான் என்று தீர்ப்பளித்தது. அதேசமயம் அதன் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் ஆதார் தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் மக்களிடம் நிலவி வருகின்றன. ஆனால் ஆதார் பயன்பாட்டால் போலியான நபர்கள் ஒழிக்கப்பட்டு மானியங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு வாதிட்டு வருகிறது.
இந்தநிலையில் மலேசிய அரசும் தங்கள் நாட்டில் ஆதாரை பயன்படுத்த ஆலோசித்து வருகிறது. அந்நாட்டில் ஏற்கெனவே தேசிய அடையாள அட்டை குடிமக்களுக்கு உள்ளது. மைகாட் என்ற பெயரிலான இந்த அட்டையில் ஆதார் போன்று கைரேகை மற்றும் விழித்திரை எடுக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
மலேசிய குழுவினர் அண்மையில் இந்தியா தரப்பில் ஆதார் தொடர்பான தகவல்களை கேட்டு பெற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை
அமைச்சர், குலசேகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்
கூறுகையில்
‘‘மலேசியாவிலும் ஆதார் போன்ற அட்டையை வழங்க
ஆலோசித்து வருகிறோம்.
இதன் மூலம் மானியங்கள் உரிய நபர்களை சென்றடைவதை
உறுதி செய்ய முடியும். மலேசிய அமைச்சரவை இதற்கு ஒப்புதல்
அளித்துள்ளது’’ எனக் கூறியுள்ளார்.
-
தி இந்து
மலேசியாவில் ஆதார் அட்டையை விட மிக நவீன முறையிலான அடையாள அட்டை அனைவருக்கும் உள்ளது.
ஒரு மலேசியரின் வாழ்க்கை, நடவடிக்கைகள் அனைத்தையும் அந்த அட்டையை ஸ்கேன் செய்தால் வெளிவந்துவிடும். அந்த அட்டை இல்லாமல் வீட்டை விட்டு ஒருவர் சென்று போலீசாரிடம் சிக்கினால் அவருக்கு சிறைத்தண்டனை உண்டு.\
எனவே இது ஒரு பொய்யான செய்தி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசிய செய்திகள்
ஆதர் விடாது துரத்தும் கருப்பு
மலேசியாவிலும் தொடர்கிறது
நன்றி தலைவா.
மலேசியாவிலும் தொடர்கிறது
நன்றி தலைவா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மலேசிய செய்திகள்
கே .ஒய். சி. ... .... அடையாள அட்டை அவசியம்தான் ஓர் மனிதனுக்கு நல்லதே.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: மலேசிய செய்திகள்
பினாங்கு நிலச் சரிவு : 8-வது சடலம் கண்டெடுக்கப்பட்டது
ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தின் பாயா தெருபோங் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 19) நிகழ்ந்த நிலச் சரிவில் புதையுண்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில் இன்று 8-வது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்தோனிசியரான சுபேரி என்ற 34 வயது நபர்தான் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 8-வது நபர் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.
நிலச்சரிவினால் ஏற்பட்ட குப்பை கூளங்களை இராட்சத இயந்திரங்களைக் கொண்டு மீட்புப் படையினர் அகற்ற முற்பட்டபோது சுபேரியின் சடலம் காணப்பட்டது. அவரது மனைவி நோராசிசா என்ற 24 வயது கம்போடியப் பெண்மணி இந்த நிலச்சரிவில் காயமடைந்திருந்தார். பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுபேரியின் சடலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டினார்.
நோராசிசா அந்த நிலச் சரிவில் இடுப்பு வரையில் புதையுண்டார். அவரது கணவர் சுபேரி நோராசிசா கண்முன்னே மண்ணில் புதையுண்டார்.
இன்று பிற்பகல் 2.00 மணிவரையில் 8 சடலங்கள் மீட்புப் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் மூவர் இந்தோனிசியர், நால்வர் வங்காளதேசத்தினர், ஒருவர் மியான்மார் பெண்மணியாவார்.
மேலும் வங்காளதேசிகள் என நம்பப்படும் இருவர் இன்னும் புதையுண்டிருக்கின்றனர் என அஞ்சப்படுகிறது.
நால்வர் இந்த நிலச்சரிவில் காயமடைந்தனர். ஒரு வங்காளதேசி, இரண்டு இந்தோனிசிய பெண்மணிகள் மற்றும் கம்போடியப் பெண்மணி ஒருவர் ஆகியோரே அந்த நால்வராவர். காயமடைந்த பெண்மணிகளில் ஒருவர் 4 மாத கர்ப்பிணியாவார்.
ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தின் பாயா தெருபோங் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 19) நிகழ்ந்த நிலச் சரிவில் புதையுண்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில் இன்று 8-வது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்தோனிசியரான சுபேரி என்ற 34 வயது நபர்தான் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 8-வது நபர் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.
நிலச்சரிவினால் ஏற்பட்ட குப்பை கூளங்களை இராட்சத இயந்திரங்களைக் கொண்டு மீட்புப் படையினர் அகற்ற முற்பட்டபோது சுபேரியின் சடலம் காணப்பட்டது. அவரது மனைவி நோராசிசா என்ற 24 வயது கம்போடியப் பெண்மணி இந்த நிலச்சரிவில் காயமடைந்திருந்தார். பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுபேரியின் சடலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டினார்.
நோராசிசா அந்த நிலச் சரிவில் இடுப்பு வரையில் புதையுண்டார். அவரது கணவர் சுபேரி நோராசிசா கண்முன்னே மண்ணில் புதையுண்டார்.
இன்று பிற்பகல் 2.00 மணிவரையில் 8 சடலங்கள் மீட்புப் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் மூவர் இந்தோனிசியர், நால்வர் வங்காளதேசத்தினர், ஒருவர் மியான்மார் பெண்மணியாவார்.
மேலும் வங்காளதேசிகள் என நம்பப்படும் இருவர் இன்னும் புதையுண்டிருக்கின்றனர் என அஞ்சப்படுகிறது.
நால்வர் இந்த நிலச்சரிவில் காயமடைந்தனர். ஒரு வங்காளதேசி, இரண்டு இந்தோனிசிய பெண்மணிகள் மற்றும் கம்போடியப் பெண்மணி ஒருவர் ஆகியோரே அந்த நால்வராவர். காயமடைந்த பெண்மணிகளில் ஒருவர் 4 மாத கர்ப்பிணியாவார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசிய செய்திகள்
பினாங்கு நிலச்சரிவு சம்பவம் : கட்டுமானத் தொழிலாளர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?
மலைப்பகுதிகளில் நடக்கும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தக்கோரும் அழைப்பை வரவேற்பதாக, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
“அக்டோபர் 19-ல், 7 உயிர்களைப் பலிகொண்ட, புக்கிட் குக்குஸ், சாலை கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, மோசமான பணி பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளின் விளைவாக நடந்தது எனத் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார தேசிய நிறுவனம் (நியோஸ்) கூறியுள்ளது.”
“ஆக, அக்கட்டுமான நிறுவனம், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஒழுங்குமுறைகளில் தீவிர கவனம் செலுத்தவில்லை என்பது இங்கு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
“அதுமட்டுமின்றி, வேலை நிறுத்த உத்தரவைப் பெற்ற பின்னரும் கூட, தொடர்ந்து பணியை மேற்கொண்டது, தொழிலாளர்கள் மீது அந்நிறுவனம் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டதைக் காட்டுகிறது,” என்று பி.எஸ்.எம். மத்திய செயலவை உறுப்பினரான இராணி இராசையா கூறினார்.
“பல கட்டுமானத் தளங்களில் ஏற்படும் இறப்புக்கள் பணியிடப் பாதுகாப்பு விதிகளை மீறுவதாலேயே ஏற்பட்டுள்ளன. ஆக, அது ஏன் தொடர்ந்து நடக்கிறது? கட்டுமானத் தொழிலாளர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?” என்று இராணி கேள்வி எழுப்பினார்.
“அனைத்து சடலங்களையும் கண்டுபிடிப்பதற்கு முன்னமே, கட்டுமான நிறுவனம், இறந்தவர்கள் அனைவரும் சட்டவிரோதத் தொழிலாளர்கள் என்று அறிவித்தது. இதன்வழி, இறப்புக்கள் மற்றும் காயங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பிலிருந்து விலகிச்செல்ல அது முயல்கிறது.
“நம் அரசாங்கம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கொள்கைகளில் கொண்டிருக்கும் இடைவெளிகள் மற்றும் குறைபாடுகளின் காரணமாக, கட்டுமானத் துறை நிறுவனங்கள் ஆவணமற்ற தொழிலாளர்கள் மீதே அதிக ஆர்வம் கொண்டுள்ளது,” என்றார் அவர்.
“ஒரு வெளிநாட்டுத் தொழிலாளி, குறிப்பிட்ட ஒரு கட்டுமான நிறுவனத்தின் கீழ், பணி அனுமதி பெற்று நாட்டில் நுழைகிறார். அந்நிறுவனத்தின் கட்டுமானப் பணி நிறைவடைந்ததும், அத்தொழிலாளி ஆவணமற்றவர் ஆகிறார். அதன்பிறகு, வேறொரு நிறுவனத்தில் அவர் வேலை செய்யும்போது, முறையான ஆவணமற்றவர் அல்லது சட்டவிரோதத் தொழிலாளி ஆகிறார்,” என, பி.எஸ்.எம். அந்நியத் தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான இராணி விளக்கமளித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்துவதற்காக, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தற்போது பல தரப்பினரிடமிருந்து பரிந்துரைகளைச் சேகரித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
“என்ன செய்ய முடியும் என்பதற்கான யோசனைகளை விட, தொழிலாளர்களுக்கு மனிதாபிமானமற்றதாக இருக்கும் தொழிலாளர் கொள்கைகளைச் சரியான முறையில், துல்லியமாக அமைக்கும் அரசியல் தைரியம் நமக்கு வேண்டும்,” என அவர் மேலும் கூறியுள்ளார்.
“11-வது மலேசியத் திட்டம், தற்போதைய சூழ்நிலையைச் சீரமைக்க, தேவையான அடிப்படை மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. முந்தைய அரசாங்கம் அதில் சிறிதும் அக்கறை காட்டாமல், முரண்பாடான பல முடிவுகளை எடுத்தது.
ஆனால், ஹராப்பான் அரசாங்கம் அவ்வாறில்லாமல், பெறப்படும் பரிந்துரைகளில் தீவிரக் கவனம் செலுத்தி, விரைந்து செயல்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என இராணி, அவ்வறிக்கையின் வழி கேட்டுக்கொண்டார்.
மலைப்பகுதிகளில் நடக்கும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தக்கோரும் அழைப்பை வரவேற்பதாக, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
“அக்டோபர் 19-ல், 7 உயிர்களைப் பலிகொண்ட, புக்கிட் குக்குஸ், சாலை கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, மோசமான பணி பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளின் விளைவாக நடந்தது எனத் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார தேசிய நிறுவனம் (நியோஸ்) கூறியுள்ளது.”
“ஆக, அக்கட்டுமான நிறுவனம், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஒழுங்குமுறைகளில் தீவிர கவனம் செலுத்தவில்லை என்பது இங்கு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
“அதுமட்டுமின்றி, வேலை நிறுத்த உத்தரவைப் பெற்ற பின்னரும் கூட, தொடர்ந்து பணியை மேற்கொண்டது, தொழிலாளர்கள் மீது அந்நிறுவனம் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டதைக் காட்டுகிறது,” என்று பி.எஸ்.எம். மத்திய செயலவை உறுப்பினரான இராணி இராசையா கூறினார்.
“பல கட்டுமானத் தளங்களில் ஏற்படும் இறப்புக்கள் பணியிடப் பாதுகாப்பு விதிகளை மீறுவதாலேயே ஏற்பட்டுள்ளன. ஆக, அது ஏன் தொடர்ந்து நடக்கிறது? கட்டுமானத் தொழிலாளர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?” என்று இராணி கேள்வி எழுப்பினார்.
“அனைத்து சடலங்களையும் கண்டுபிடிப்பதற்கு முன்னமே, கட்டுமான நிறுவனம், இறந்தவர்கள் அனைவரும் சட்டவிரோதத் தொழிலாளர்கள் என்று அறிவித்தது. இதன்வழி, இறப்புக்கள் மற்றும் காயங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பிலிருந்து விலகிச்செல்ல அது முயல்கிறது.
“நம் அரசாங்கம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கொள்கைகளில் கொண்டிருக்கும் இடைவெளிகள் மற்றும் குறைபாடுகளின் காரணமாக, கட்டுமானத் துறை நிறுவனங்கள் ஆவணமற்ற தொழிலாளர்கள் மீதே அதிக ஆர்வம் கொண்டுள்ளது,” என்றார் அவர்.
“ஒரு வெளிநாட்டுத் தொழிலாளி, குறிப்பிட்ட ஒரு கட்டுமான நிறுவனத்தின் கீழ், பணி அனுமதி பெற்று நாட்டில் நுழைகிறார். அந்நிறுவனத்தின் கட்டுமானப் பணி நிறைவடைந்ததும், அத்தொழிலாளி ஆவணமற்றவர் ஆகிறார். அதன்பிறகு, வேறொரு நிறுவனத்தில் அவர் வேலை செய்யும்போது, முறையான ஆவணமற்றவர் அல்லது சட்டவிரோதத் தொழிலாளி ஆகிறார்,” என, பி.எஸ்.எம். அந்நியத் தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான இராணி விளக்கமளித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்துவதற்காக, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தற்போது பல தரப்பினரிடமிருந்து பரிந்துரைகளைச் சேகரித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
“என்ன செய்ய முடியும் என்பதற்கான யோசனைகளை விட, தொழிலாளர்களுக்கு மனிதாபிமானமற்றதாக இருக்கும் தொழிலாளர் கொள்கைகளைச் சரியான முறையில், துல்லியமாக அமைக்கும் அரசியல் தைரியம் நமக்கு வேண்டும்,” என அவர் மேலும் கூறியுள்ளார்.
“11-வது மலேசியத் திட்டம், தற்போதைய சூழ்நிலையைச் சீரமைக்க, தேவையான அடிப்படை மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. முந்தைய அரசாங்கம் அதில் சிறிதும் அக்கறை காட்டாமல், முரண்பாடான பல முடிவுகளை எடுத்தது.
ஆனால், ஹராப்பான் அரசாங்கம் அவ்வாறில்லாமல், பெறப்படும் பரிந்துரைகளில் தீவிரக் கவனம் செலுத்தி, விரைந்து செயல்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என இராணி, அவ்வறிக்கையின் வழி கேட்டுக்கொண்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசிய செய்திகள்
டெக்சி ஓட்டுனர்கள் வெளிநடப்பு: பதவி துறக்கத் தயார்- மகாதிர் அறிவிப்பு
பிரதமர் டாக்டர் மகாதிருடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற டெக்சி ஓட்டுனர்கள் அவர் கிரேப் வாகனச் சேவையைத் தடைசெய்ய மறுத்ததை அடுத்து வெளிநடப்புச் செய்தனர்.
இன்று காலை லங்காவியில் நடைபெற்ற அக்கூட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டார்கள். அவர்களில் சிலர் கூட்டத்திலிருந்து வெளியேறியதும் சிறு சலசலப்பு ஏற்பட்டதாக உத்துசான் மலேசியா கூறியது.
டெக்சிகளுக்கும் கிரேப் வாகனச் சேவைக்குமிடையிலான பிரச்னைக்கு புத்ரா ஜெயா ஒரு நியாயமான தீர்வைக் காணும் என மகாதிர் கூறியது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
“இப்பிரச்னைக்குத் தீர்வு காண அவகாசம் கொடுங்கள். தடை செய்வது எளிதல்ல.
“எல்லாரும் பிழைக்க வேண்டும். அதற்கேற்ப தீர்வு காணத்தான் ஆசை. ஆனால், எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது”, என்று மகாதிர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
அவர்களுக்குத் தம்மைப் பிடிக்கவில்லை என்றால் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறவும் தயார் என்று லங்காவி எம்பி- ஆன மகாதிர் கூறினார்.
“பிரதமராக இருப்பது என் விருப்பமல்ல. நான் ஏற்கனவே பணி ஓய்வு பெற்று விட்டேன்.
“மக்கள் விரும்பி அழைத்தார்கள். திரும்பி வந்தேன். நான் பிரதமராக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இன்றே பணிவிலகத் தயார்”, என்றாரவர்.
பிரதமர் டாக்டர் மகாதிருடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற டெக்சி ஓட்டுனர்கள் அவர் கிரேப் வாகனச் சேவையைத் தடைசெய்ய மறுத்ததை அடுத்து வெளிநடப்புச் செய்தனர்.
இன்று காலை லங்காவியில் நடைபெற்ற அக்கூட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டார்கள். அவர்களில் சிலர் கூட்டத்திலிருந்து வெளியேறியதும் சிறு சலசலப்பு ஏற்பட்டதாக உத்துசான் மலேசியா கூறியது.
டெக்சிகளுக்கும் கிரேப் வாகனச் சேவைக்குமிடையிலான பிரச்னைக்கு புத்ரா ஜெயா ஒரு நியாயமான தீர்வைக் காணும் என மகாதிர் கூறியது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
“இப்பிரச்னைக்குத் தீர்வு காண அவகாசம் கொடுங்கள். தடை செய்வது எளிதல்ல.
“எல்லாரும் பிழைக்க வேண்டும். அதற்கேற்ப தீர்வு காணத்தான் ஆசை. ஆனால், எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது”, என்று மகாதிர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
அவர்களுக்குத் தம்மைப் பிடிக்கவில்லை என்றால் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறவும் தயார் என்று லங்காவி எம்பி- ஆன மகாதிர் கூறினார்.
“பிரதமராக இருப்பது என் விருப்பமல்ல. நான் ஏற்கனவே பணி ஓய்வு பெற்று விட்டேன்.
“மக்கள் விரும்பி அழைத்தார்கள். திரும்பி வந்தேன். நான் பிரதமராக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இன்றே பணிவிலகத் தயார்”, என்றாரவர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசிய செய்திகள்
‘காற்றின் மொழி’ படப் பாடலாசிரியராக மலேசியர் பீனிக்ஸ் தாசன் தேர்வு
சென்னை – ஜோதிகா கதாநாயகியாகவும், விதார்த் நாயகனாகவும் நடிக்கும் ‘காற்றின் மொழி’ திரைப்படம் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கான ஒரு பாடலைப் புதுமையான முறையில் உருவாக்க நினைத்த படக் குழுவினர் அதற்காக புதுமையான போட்டி ஒன்றை நடத்தினர்.
கவிஞர்கள் தாங்கள் எழுதிய பாடல் வரிகளைத் தங்களுக்கு அனுப்பி வைக்கும்படி படக் குழுவினர் கேட்டுக் கொள்ள அதன்படி ஆயிரக்கணக்கான பாடல்கள் குவிந்திருக்கின்றன. அதிலிருந்து சிறந்த பாடல்களை எழுதிய சுமார் 60 பாடலாசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை சென்னைக்கு நேரில் வரும்படி படக் குழுவினர் அழைப்பு விடுத்தனர்.
அந்த 60 பாடலாசிரியர்களில் மலேசியரான பீனிக்ஸ்தாசனும் ஒருவராவார். பீனிக்ஸ் தாசன் ‘செல்லியல்’ ஊடகத்தின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 60 பாடலாசிரியர்களை மீண்டும் சலித்தெடுத்து இருவரை மட்டும் பாடல் எழுத ‘காற்றின் மொழி’ படக் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். அந்த இருவரில் மலேசியரான பீனிக்ஸ்தாசனும் ஒருவராவார்.
அவருடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மற்றொருவர் சென்னையைச் சேர்ந்த பத்மஜா ஸ்ரீராம் என்பவராவார்.
காற்றின் மொழி படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – ஜோதிகா கதாநாயகியாகவும், விதார்த் நாயகனாகவும் நடிக்கும் ‘காற்றின் மொழி’ திரைப்படம் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கான ஒரு பாடலைப் புதுமையான முறையில் உருவாக்க நினைத்த படக் குழுவினர் அதற்காக புதுமையான போட்டி ஒன்றை நடத்தினர்.
கவிஞர்கள் தாங்கள் எழுதிய பாடல் வரிகளைத் தங்களுக்கு அனுப்பி வைக்கும்படி படக் குழுவினர் கேட்டுக் கொள்ள அதன்படி ஆயிரக்கணக்கான பாடல்கள் குவிந்திருக்கின்றன. அதிலிருந்து சிறந்த பாடல்களை எழுதிய சுமார் 60 பாடலாசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை சென்னைக்கு நேரில் வரும்படி படக் குழுவினர் அழைப்பு விடுத்தனர்.
அந்த 60 பாடலாசிரியர்களில் மலேசியரான பீனிக்ஸ்தாசனும் ஒருவராவார். பீனிக்ஸ் தாசன் ‘செல்லியல்’ ஊடகத்தின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 60 பாடலாசிரியர்களை மீண்டும் சலித்தெடுத்து இருவரை மட்டும் பாடல் எழுத ‘காற்றின் மொழி’ படக் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். அந்த இருவரில் மலேசியரான பீனிக்ஸ்தாசனும் ஒருவராவார்.
அவருடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மற்றொருவர் சென்னையைச் சேர்ந்த பத்மஜா ஸ்ரீராம் என்பவராவார்.
காற்றின் மொழி படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசிய செய்திகள்
இர்வான் செரிகார் இல்லத்தில் அதிரடி சோதனை
புத்ரா ஜெயா – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகார் அப்துல்லாவின் இல்லத்தில் அந்த ஆணையத்தினர் இன்று அதிரடியாக நுழைந்து சோதனைகள் மேற்கொண்டனர்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வாக்குமூலம் வழங்க ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்த இர்வான் செரிகார் பின்னர் மாலை 4.30 மணியளவில் ஆணைய அதிகாரிகளால் புத்ரா ஜெயா பிரிசிண்ட் 8 என்ற வளாகத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் அந்த இல்லத்திலிருந்து ஒரு பெட்டி மற்றும் இர்வானின் இரண்டு ஜோடி ‘கோட்’ ஆடைகளுடன் ஊழல் தடுப்பு ஆணையத்தினர் வெளியேறினார்கள்.
மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான நிதியில் முறைகேடுகள் புரிந்ததற்காக இர்வான் செரிகார் மற்றும் நஜிப் துன் ரசாக் இருவரும் நாளை வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர் என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்திருக்கிறது.
புத்ரா ஜெயா – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகார் அப்துல்லாவின் இல்லத்தில் அந்த ஆணையத்தினர் இன்று அதிரடியாக நுழைந்து சோதனைகள் மேற்கொண்டனர்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வாக்குமூலம் வழங்க ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்த இர்வான் செரிகார் பின்னர் மாலை 4.30 மணியளவில் ஆணைய அதிகாரிகளால் புத்ரா ஜெயா பிரிசிண்ட் 8 என்ற வளாகத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் அந்த இல்லத்திலிருந்து ஒரு பெட்டி மற்றும் இர்வானின் இரண்டு ஜோடி ‘கோட்’ ஆடைகளுடன் ஊழல் தடுப்பு ஆணையத்தினர் வெளியேறினார்கள்.
மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான நிதியில் முறைகேடுகள் புரிந்ததற்காக இர்வான் செரிகார் மற்றும் நஜிப் துன் ரசாக் இருவரும் நாளை வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர் என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்திருக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» மலேசிய தமிழர்களின் கவனத்திற்கு..
» மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!
» மலேசிய விமானப்படைக்கு தேஜாஸ்
» மலேசிய 53 -வது சுதந்திரதினக் கொண்டாட்டம்!
» மலேசிய தமிழர்களின் கவனத்திற்கு..
» மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!
» மலேசிய விமானப்படைக்கு தேஜாஸ்
» மலேசிய 53 -வது சுதந்திரதினக் கொண்டாட்டம்!
Page 3 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|