புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_m10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_m10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_m10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_m10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_m10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_m10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_m10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_m10கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 14, 2016 4:46 pm

அண்மைக்காலமாக பாடல் துறையிலும் கவிதைத்
துறையிலும் தனன்கென முத்திரை பதிக்கும் ஒரு
அழகான கவிஞனைப்பற்றி நான் படித்தவைகளை
இங்கு பகிர்கிறேன்..

தீயோடு தோன்றுக!

1975 ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின்
பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ
மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த
மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான்
வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப்
பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து,
மொட்டை மாடிக்குச் சென்றது. ஒரு சில உயரமான கட்ட டங்களே
சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன்
அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு
இருப்பதை.

இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித்
தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன்
தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான்… ‘இன்று உலகின் இரண்டாவது
அறிவாளி பிறந்தான்!’
நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!



ஆழம் அறி!


எங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே வியாபித்திருந்தன.
தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார்.
வால்கா முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில்
பயணிக்கவைத்தார்.

மூன்றாம் வகுப்பு படிக்கையில் சந்தை என்ற தலைப்பில்
சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன்.
காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய
கதை.

வாசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார்.
அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி
சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச்
சந்தைக் குக் கூட்டிச் சென்றார்.

ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள்
இறங்கிக்கொண்டு இருக்க…

உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு
இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை
ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை
விரட்டிக்கொண்டு இருந்தார். ‘இந்த டீக்கடையில் நான்
காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்து
விட்டு வா’ என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி
வந்த என்னிடம் ‘உன் கதை நன்றாக இருந்தது.

ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை.
எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து
அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்’ என்றார்.

வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன்.
அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்!



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 14, 2016 4:47 pm

கோபம் கற்றுணர்!

பள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும் கதைகளும்
பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில
ஆசிரியர்கள் தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு
மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள்.

வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள்
என்று கவிதைத் தொகுதி வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை
விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள்.

வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன்
அப்பா முன் நின்றேன். அவர் அமைதியாகச் சொன்னார்,
‘இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு இருக்கிறது.
இன்னும் நிறைய எழுது!’ மூன்றாம் முறையாக நான் நா.முத்துக்குமார்
ஆனேன்.


உன் திசை உற்றுணர்!


காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் சேர்ந்தேன்.
எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில்
இருந்து என் கவிதைக்கு வரும் சன்மானத் தொகையை என்
வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர்.

வேதியியல் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து,
‘இப்படியே கதை, கவிதைன்னு சுத்துனா, சத்தியமா நீ பாஸாக மாட்டே’
என்று திட்டினார். எப்போதும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன்
ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்.

அன்று ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது
அதிகம் வாங்க வேண்டும். 85 சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.

அவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில்
எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன்.

இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை
சொன்னார்கள். மௌனமாகத் தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த
மழைத் துளிபோல் தமிழின் வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன்.

கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும்,
அமெரிக்காவில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்
பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது. மாதம் மூன்று லட்சம் சம்பளம்.
மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத் துறையில் உதவி
இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன்.

என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், ‘உன் முடிவை நீயே எடு.
பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே
உரிமை உண்டு!’ அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா சென்றுஇருந்தால்,
முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே இருந்திருப்பேன்.

சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 14, 2016 4:49 pm

எரிக்க எரிக்க எழுந்து வா!

இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று
பலரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம்
சேர்ந்தேன். பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த கால
கட்டம் அது.

ஒரு வருடமாக வேலை நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச்
சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். என் தூர் கவிதையை ஒரு
விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல் மஞ்சள் வெளிச்சம்
விழுந்தது.

நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக எழுதத் தொடங்கி,
கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற
நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

‘சினிமா உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்தது. இங்கு தூங்கும்போது
கூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால்,
இறந்துவிட்டான் என்று எரித்து விடுவார்கள்’ என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்.

சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான் விபத்தில் இறந்து
விட்டதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி
கிளம்பியது. இறந்துபோனதை அறிந்த பிறகுதான், ‘இறக்க வேண்டும் நான்’
என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது.


முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும்,
கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று தோன்றியபோது, நான்
ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!

————————————
மூலம் : ஆனந்த விகடன்
நன்றி- ஷப்லி வலைப்பூ

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 14, 2016 6:55 pm

ஆறாத் துயரை தந்தவனே
ஆறாம் முறையென கூற
மறுபடியும் பிறந்து வா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 14, 2016 11:06 pm

வந்தவேளை முடிந்துவிட்டால் , காலன் அவர்களை விட்டுவைப்பதில்லை . பாரதியார் , கணித மேதை இராமானுஜன் போன்றோர் இளமையில் உயிர் துறந்தவர்களே !

நா. முத்துக்குமாரின் ஆன்மா சாந்தியடையட்டும்!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக