ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி

2 posters

Go down

பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி Empty பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி

Post by ayyasamy ram Tue Aug 09, 2016 7:11 am

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் 75 பேர் பலியாகினர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வழக்குரைஞர்கள். போலீஸார், செய்தியாளர்களும் இந்த குண்டு வெடிப்பில் பலியானார்கள். நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று மாகாண அரசு அறிவித்தது.

முன்னதாக, பலூசிஸ்தான் பார் கவுன்சில் தலைவர் பிலால் அன்வர் காஸி, காலையில் மர்ம நபர்களால் சுடப்பட்டார். பிரேதப் பரிசோதனைக்காக அவருடைய உடல் குவெட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, அங்கு ஏராளமான வழக்குரைஞர்கள், காவலர்கள் கூடியிருந்தனர். இந்தச் செய்தியை சேகரிக்க அங்கு பல செய்தியாளர்களும் வந்தனர்.

அப்போது மருத்துவமனையில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 75 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் வழக்குரைஞர்கள். மேலும் போலீஸார், செய்தியாளர்கள், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தனர். நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருபது பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் அந்த வட்டாரத்தில் இருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் குண்டடிபட்டு இறந்தவர்கள் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

அந்த இடத்தை ஆய்வு செய்த வெடிகுண்டு நிபுணர்கள், இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்று தெரிவித்தனர். எட்டு கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரிக்-ஏ-தலிபான் பயங்கரவாதக் குழுவின் ஒரு பிரிவான ஜமாதுல் அஹாரா பொறுப்பேற்றது. பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரை இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என்று அந்தக் குழு வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பலூசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் சர்பராஸ் புக்தி கூறியதாவது: முதலில் பலூசிஸ்தான் பார் கவுன்சில் தலைவர் பிலால் அன்வர் காஸி சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் மருத்துவமனை குண்டு வெடிப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து தற்போது எதுவும் தெரியவில்லை. இந்த இரட்டை சம்பவங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளின் தோல்வியைக் காட்டுகின்றன. இது தொடர்பான விசாரணையை நானே நேரடியாக மேற்பார்வையிட்டு வருகிறேன்.

காயமடைந்தவர்களுக்கு வேண்டிய அனைத்து சிகிச்சைகளையும் அளிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாக்குதல் நிகழ்ந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க கூடுதல் மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் காயமடைந்த சிலர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார் அவர்.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ராணுவத்தினரும் போலீஸாரும் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர்.

அதிபர், பிரதமர் கண்டனம்

குவெட்டா மருத்துவமனை குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசேன் கண்டனம் தெரிவித்தார்.

பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் செயல்பட்டு இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். நமது பாதுகாப்புப் படையினரின் எண்ணற்ற தியாகத்தின் பயனாக பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைதி நிலவி வருகிறது. அதனைக் குலைப்பதற்கு நடக்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்றார் அவர்.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மாகாண முதல்வர் சனாவுல்லா ஜெஹரி தலைமையில் பாதுகாப்பு நிலை குறித்து அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் கூறியதாவது: மருத்துவமனை துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பலூசிஸ்தான் மாகாணத்தில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும். அரசு கட்டடங்களில் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்படும். மாகாண அரசு சார்பான அனைத்துப் பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று மாகாண முதல்வர் சனாவுல்லா ஜெஹரி தெரிவித்தார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி Empty Re: பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி

Post by ChitraGanesan Tue Aug 09, 2016 10:13 am

கண்டனத்துகுறியது.
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தான்: 2 மசூதிகளில் குண்டுவெடிப்பு - 72 பேர் பலி
» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
» டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி? 28 பேர் காயம்
» ஆப்கனில் இந்திய தூதரகம் முன்பு குண்டுவெடிப்பு ; 14 பேர் பலி
» ஜப்பானில் கடும் அனல் காற்று: 65 பேர் பலி: 22,000 பேர் மருத்துவமனையில் அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum