ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்

3 posters

Go down

ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Empty ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்

Post by ayyasamy ram Tue Aug 09, 2016 8:37 am

புதுடில்லி:
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி மசோதா லோக்சபாவில் ஒரு
மனதாக நிறைவேறியது.

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை திருத்த
மசோதா குறித்து பார்லி. லோக்சபாவில் இன்று விவாதம்
நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் ராஜ்யசபாவில்
ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில்,
இன்று லோக்சபாவில் பிரதமர் மோடி மசோதா குறித்து
ரை ஆற்றினார்.

பின்னர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜி.எஸ்.டி.
திருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சியினரின்
கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். இதையடுத்து
ஓட்டெடுப்பு நடப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன்
அறிவித்தார். இதில் தமிழகத்தின் கோரிக்கைகள் நிறை
வேற்றப்பட வில்லை என கூறி அ.தி.மு.க. எம்.பி.க்கள்
வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் ஜி.எஸ்.டி. திருத்த மசோதா மீது லோக்சபாவில் நடந்த
ஓட்டெடுப்பு நடந்தது. இந்த விவாதத்தில் 443 எம்.பி.க்கள் கலந்து
கொண்டனர். இவர்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து மசோதா
ஒரு மனதாக நிறைவேறியது.

அ.தி.மு.க வெளிநடப்பு:
லோக்சபாவில் ஜி.எஸ்.டி மசோதா தொடர்பான விவாதத்தின்
போது அ.தி.மு.க எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். ஓட்டெப்பில்
பங்கேற்பதை தவிர்ப்பதற்காக அ.தி.மு.க வெளிநடப்பு செய்துள்ளது.
ராஜ்சபாவில் ஜி.எஸ்.டி மசோதா ஓட்டெடுப்பிலும் அ.தி.மு.க
பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன?

பெரிதும் எதிர்பாக்கப்பட்ட ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும
சேவை வரி தொடர்பான திருத்த மசோதா பார்லி. இரு
அவைகளிலும் ஒரு மனதாக நிறைவேற்றியது. இதையடுத்து,
இந்த மசோதா, மாநில சட்டசபைகளின் ஒப்புதலுக்கும் அனுப்பி
வைக்கப்படும். இறுதியாக ஜனாதிபதி ஒப்புதல் அளித்த உடன்
அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் கருத்து:

ஜி.எஸ்.டி மசோதா நிறைவேறியது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்
என எண்ணுகிறேன். ஜி.எஸ்.டி மசோதாவில் எங்களுக்கும்
பா.ஜ. அரசிற்கும் இடையே 3 முக்கிய திருத்தங்களில் கருத்து
வேறுபாடு நிலவியது. அதனை விவாதித்து மாற்றம் செய்தோம்.
தற்போது 18 சதவீத வரி என்பதில் எங்களுக்கு முரண்பாடு உள்ளது.
அதை டிசம்பரில் நடக்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில்
விவாதிப்போம்.

——————————–
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Empty Re: ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்

Post by ayyasamy ram Tue Aug 09, 2016 8:38 am

ஜிஎஸ்டி அமலுக்கு வருவதால் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ரூ.9 ஆயிரம் கோடி இழப்பு: மக்களவையில் அதிமுக கவலை
-

சரக்கு, சேவை வரிகள் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதால் ஆண்டுதோறும் மாநிலத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று மக்களவையில் அதிமுக கவலை தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையில் கடந்த வாரம் ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தது. இந்நிலையில், மக்களவையில் திங்கள்கிழமை மாலையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது.

அலட்சியப் போக்கு:

முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதம் திங்கள்கிழமை மாலையில் தொடங்கியது. அப்போது அதிமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டாக்டர் பி. வேணுகோபால் பேசியது:

உற்பத்தி சார்ந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அந்த வகையில், ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வருவதால் உற்பத்தி மாநிலமான தமிழகத்தின் உழைப்பை விலையாகக் கொடுத்து, சரக்குகளின் பயனைப் பெறும் மாநிலங்கள் அதிகம் பலனடையும். ஜிஎஸ்டி வரைவு மசோதாவில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி பிரதமருக்கும் மத்திய நிதியமைச்சருக்கும் தமிழக முதல்வர் பல முறை கடிதங்கள் எழுதினார். ஆனால், அவற்றை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை.

கூட்டாட்சி முறையிலான நமது நாட்டில் மாநிலங்களின் நிதி சுயாட்சியை சமரசம் செய்து கொள்ளும் வகையிலும், மத்திய அரசுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் வகையிலும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கும் முடிவை தமிழகம் எதிர்த்தது.

பெட்ரோலிய பொருள்கள் மீதான வரி விதிப்பு முறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக் கூடாது என்று தமிழகம் வற்புறுத்தியது.

ஆனால், ஜிஎஸ்டி கவுன்சிலை உருவாக்கும் போது அது பற்றி தீர்மானிக்கலாம் என்ற மத்திய அரசின் யோசனைக்கு தமிழகம் ஆட்சேபம் தெரிவித்தது. மக்களின் நலன் கருதி, புகையிலைப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு தர வேண்டும் என்று தமிழகம் யோசனை கூறியது. அதையும் மத்திய அரசு ஏற்காமல் அலட்சியமாக இருந்தது.

கோரிக்கைகள் என்ன?: ஜிஎஸ்டி சட்ட அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்க மத்திய அரசு யோசனை கூறியது. ஆனால், உற்பத்தி மாநிலங்களின் நலன் கருதி இந்த இழப்பீட்டை நிரந்தரமாக வழங்க வேண்டும் என்று தமிழகம் கோரியது. ஆனால், அதை மத்திய அரசு ஏற்கவில்லை.

ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வருவதால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மாநிலங்களுக்கு இடையே விநியோகிக்கப்படும் சரக்குகளுக்கு விதிக்கப்படும் மத்திய ஜிஎஸ்டியில் நான்கு சதவீதத்தை மாநிலங்களே வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் "ரூ.1.5 கோடி வரை வருவாய் ஈட்டும் தொழில் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் உரிமை மாநிலங்களிடம் மட்டும் இருக்க வேண்டும்' என்று தமிழகம் வலியுறுத்தியது. ஆனால், அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

இதேபோல, ரூ.25 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள விற்பனையாளர்கள் ஜிஎஸ்டி பதிவு வரம்புக்குள் வரக் கூடாது என்றும் தமிழகம் கூறியது. அது குறித்து மத்திய நிதியமைச்சர் தெளிவுபடுத்தவில்லை. மாநிலங்களவையில் முன்மொழிந்த திருத்தங்களை மக்களவையில் நிறைவேற்றுவதற்கு முன்பாக மாநிலங்களின் நிதி சுயாட்சியைப் பாதுகாக்க உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார் வேணுகோபால். இதைத் தொடர்ந்து "உறுப்பினர்' என்ற முறையில் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை பேசுகையில், "ஜிஎஸ்டி அமலாக்கத்தின் போது மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் அளிக்காமல் நிரந்தரமாக மத்திய அரசு வழங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

வெளிநடப்பு: இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த பதில் அதிமுக உறுப்பினர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. இதையடுத்து, ஜிஎஸ்டி மசோதா தொடர்பான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Empty Re: ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்

Post by ChitraGanesan Tue Aug 09, 2016 11:48 am

ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் 103459460
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Empty Re: ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்

Post by சிவனாசான் Wed Aug 10, 2016 8:19 pm

நடமுறையில் வரும்போது அதன் நன்மைதனை பார்ப்போம். நாடுபூரா ஒரே விலை நிலை என கொண்டு வருவது வரவேற்க தக்கதே.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Empty Re: ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum