>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Today at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Today at 5:44 pm
» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Today at 5:44 pm
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Today at 5:42 pm
» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 5:41 pm
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Today at 5:02 pm
» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Today at 5:00 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Today at 3:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:53 pm
» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Today at 2:46 pm
» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Today at 2:37 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:57 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm
» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by Dr.S.Soundarapandian Today at 12:33 pm
» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm
» தமிழில் பிழை
by T.N.Balasubramanian Today at 10:57 am
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Today at 10:30 am
» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Today at 10:27 am
» அம்மா – கவிதை
by ayyasamy ram Today at 10:27 am
» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Today at 8:26 am
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Today at 12:23 am
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Today at 12:22 am
» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:40 pm
» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:22 pm
» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm
» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm
» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:48 pm
» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்
by சக்தி18 Yesterday at 12:47 pm
» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில
by சக்தி18 Yesterday at 12:26 pm
» குடியரசு தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:45 pm
» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:39 pm
» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:37 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» நாளை தைப்பூச திருவிழாby ayyasamy ram Today at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Today at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Today at 5:44 pm
» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Today at 5:44 pm
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Today at 5:42 pm
» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 5:41 pm
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Today at 5:02 pm
» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Today at 5:00 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Today at 3:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:53 pm
» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Today at 2:46 pm
» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Today at 2:37 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:57 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm
» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by Dr.S.Soundarapandian Today at 12:33 pm
» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm
» தமிழில் பிழை
by T.N.Balasubramanian Today at 10:57 am
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Today at 10:30 am
» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Today at 10:27 am
» அம்மா – கவிதை
by ayyasamy ram Today at 10:27 am
» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Today at 8:26 am
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Today at 12:23 am
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Today at 12:22 am
» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:40 pm
» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:22 pm
» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm
» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm
» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:48 pm
» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்
by சக்தி18 Yesterday at 12:47 pm
» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில
by சக்தி18 Yesterday at 12:26 pm
» குடியரசு தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:45 pm
» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:39 pm
» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:37 pm
Admins Online
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
First topic message reminder :
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)
உடல் உறுப்புக்களுள் குறைத்தால் வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
ஊரார்கண் படட்டும் படட்டும்
உற்றார்கண் படட்டும் படட்டும்
ஆடவர்கண் படட்டும் படட்டும்
உண் கண்ணே பட ட் டும்
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது. (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்) பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா சீயக்காய் நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................ (ஃபாரவர் ( forever) இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு, மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும் இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.
கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8) மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.
நரை கூந்தல் - முதுமை
தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்
அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ……………………… (நற். 10: 1-4)
என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல் முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை
அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)
என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.
புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.
கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்
முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.
……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)
என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு
மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)
சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக் கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே (நற். 141 ; 11 – 12)
என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்
பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)
மேற்குறித்த பாடல்கள் பொருள்வயிற் பிரிந்தால் தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.
பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் (நற். 139; 7- 8)
நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு ( நற். 197 :5>6)
இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.
கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்
திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில் ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்
நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)
எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு
நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)
தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம் ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)
உடல் உறுப்புக்களுள் குறைத்தால் வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
ஊரார்கண் படட்டும் படட்டும்
உற்றார்கண் படட்டும் படட்டும்
ஆடவர்கண் படட்டும் படட்டும்
உண் கண்ணே பட ட் டும்
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது. (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்) பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா சீயக்காய் நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................ (ஃபாரவர் ( forever) இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு, மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும் இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.
கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8) மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.
நரை கூந்தல் - முதுமை
தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்
அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ……………………… (நற். 10: 1-4)
என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல் முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை
அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)
என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.
புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.
கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்
முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.
……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)
என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு
மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)
சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக் கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே (நற். 141 ; 11 – 12)
என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்
பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)
மேற்குறித்த பாடல்கள் பொருள்வயிற் பிரிந்தால் தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.
பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் (நற். 139; 7- 8)
நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு ( நற். 197 :5>6)
இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.
கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்
திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில் ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்
நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)
எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு
நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)
தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம் ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.
முனைவர் ப.குணசுந்தரி- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
மதிப்பீடுகள் : 100
Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
ஆரஞ்சு இனத்தைச் சேர்ந்த நார்த்தை என்பதுதான் நரந்தம் என்று விக்கிப்பீடியாவில் உள்ளது . அது புல்வகையா அல்லது மலரா ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] wrote:
நதிக்கரையில் மண் பூசி குளிக்கும் மக்கள் கண்டதுண்டு .
கூந்தலுக்கு களிமண் பூசி குளிப்பது அறியாத விஷயம் .
ரமணியன்
இது அனுபவத் தகவல்தான் ஐயா !
எங்கள் கிராமத்து ஏரிகளிலும் ஏரிவாய்க்கால்களிலும் இப்படியும் தாய்மார்களும் பெண்களும் 1960 களில் குளித்தது உண்மைதான்
Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
மாதீர்த்தனார் பாடலில் பாடபேதம் உள்ளதாக டாக்டர் உ .வே .சா .குறிப்பிடுகிறார் . எருமணம் என்ற சொல்லுக்கு செங்கழுநீர்ப்பூக்கள் என்ற கருத்து ஏற்புடையதாக உள்ளது .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
சிகைக்காய்த்தன்மை செங்குவளைப் பூக்களுக்கும் இருப்பதுதான்.
எருமண்ணும் , செங்குவளைப் பூக்களும் ஆகிய இரண்டுமே இப்பாடலுக்கு ஏற்புடையன. கூந்தலின் எண்ணெய்ப் பிசுபிசுப்பைப் போக்குவன.
இவை இரண்டுமே குளிக்கும் இடைத்திலேயே எளிதில் கிடைப்பன. ஆதலால் குளிக்கச்செல்லும்போது தனியே கவனமாகக் கொண்டு செல்லத்தேவையற்றவை.
இருகைவீசி நடந்து சென்று ஆனந்தக் குளியலுக்குப் பின் அகம் திரும்பலாம்- இருபாலரும்.
எருமண்ணும் , செங்குவளைப் பூக்களும் ஆகிய இரண்டுமே இப்பாடலுக்கு ஏற்புடையன. கூந்தலின் எண்ணெய்ப் பிசுபிசுப்பைப் போக்குவன.
இவை இரண்டுமே குளிக்கும் இடைத்திலேயே எளிதில் கிடைப்பன. ஆதலால் குளிக்கச்செல்லும்போது தனியே கவனமாகக் கொண்டு செல்லத்தேவையற்றவை.
இருகைவீசி நடந்து சென்று ஆனந்தக் குளியலுக்குப் பின் அகம் திரும்பலாம்- இருபாலரும்.
Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
ஜகதீசன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
தாங்கள்
ஆரஞ்சு இனத்தைச் சேர்ந்த நார்த்தை என்பதுதான் நரந்தம் என்று விக்கிப்பீடியாவில் உள்ளது . அது புல்வகையா அல்லது மலரா ? என்று கேட்டுள்ளீர்கள்
நரந்தம் என்பது புல்வகை. இப்புல்லினை மான்கள் விரும்பியுண்ணும் என்று சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன.
நன்றி.
தாங்கள்
ஆரஞ்சு இனத்தைச் சேர்ந்த நார்த்தை என்பதுதான் நரந்தம் என்று விக்கிப்பீடியாவில் உள்ளது . அது புல்வகையா அல்லது மலரா ? என்று கேட்டுள்ளீர்கள்
நரந்தம் என்பது புல்வகை. இப்புல்லினை மான்கள் விரும்பியுண்ணும் என்று சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன.
நன்றி.
முனைவர் ப.குணசுந்தரி- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
மதிப்பீடுகள் : 100
Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
இராமலிங்கம் ஐயாவிற்கு வணக்கம்
தாங்கள் சொல்வது போல கிராமங்களில் அன்று இருபாலரும் இருகைவீசி நடந்து சென்று ஆனந்தக் குளியலிட்டு வீடு திரும்பிய காலங்கள் உண்டுதான். நானும் என் கிராமத்தில் அப்படி இருந்தவள்தான். இன்று நிலை மாறியிருக்கிறது. ஆரோக்கியமும்தான். தொண்டை மண்டலப் பகுதியின் உள் கிராமங்களில் இவ்வழக்கத்தைச் சிலர் பின்பற்றுவது மனதிற்கு நிறைவாக இருக்கின்றது. இன்று அனைவரும் இயற்கையின் பெருமையை உணரத் துவங்கியுள்ளனர். வரும் தலைமுறையாவது இயற்கையோடு இணைந்த தொழிநுட்ப வாழ்வை வாழ்வார்களாக.
நன்றி.
தாங்கள் சொல்வது போல கிராமங்களில் அன்று இருபாலரும் இருகைவீசி நடந்து சென்று ஆனந்தக் குளியலிட்டு வீடு திரும்பிய காலங்கள் உண்டுதான். நானும் என் கிராமத்தில் அப்படி இருந்தவள்தான். இன்று நிலை மாறியிருக்கிறது. ஆரோக்கியமும்தான். தொண்டை மண்டலப் பகுதியின் உள் கிராமங்களில் இவ்வழக்கத்தைச் சிலர் பின்பற்றுவது மனதிற்கு நிறைவாக இருக்கின்றது. இன்று அனைவரும் இயற்கையின் பெருமையை உணரத் துவங்கியுள்ளனர். வரும் தலைமுறையாவது இயற்கையோடு இணைந்த தொழிநுட்ப வாழ்வை வாழ்வார்களாக.
நன்றி.
முனைவர் ப.குணசுந்தரி- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
மதிப்பீடுகள் : 100
Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
தொடர்ச்சி தொடர்ச்சி தொடர் – 4
தலைவியின் மீது கோபம்கொண்ட பரத்தை, தலைவிக்கு வேண்டியவர்கள் கேட்கும்படியாகத் தனக்கும் தலைவனுக்கும் இடையே உள்ள நெருக்கம் எப்படிப்பட்டது என்பதைக் கூறுவதாக வரும் ஔவையாரின் மருதத்திணை பாடலில் முதல் அடி இப்படி வருகின்றது.
கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி (குறுந். 80:1,2)
இவ்வடிகளுக்குப் பொருள்தரும் உரையாசிரியர் முனைவர் வி. நாகராசன் அவர்கள் கூந்தலைப் போன்ற நெறிப்பினை உடைய ஆம்பலின் முழுமையான செறிந்த இலைகளைத் தழையாடையாக உடுத்தி, பெருவெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி (பக். 197, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ்,2004) என்று பொருள் தருகின்றார். மேலும் சொற்பொருள் தரும் பகுதியில் கூந்தல் ஆம்பல் என்பதற்குக் கூந்தலைப் போன்ற ஆம்பலின் நெளிவுகள் என்றும் அடைச்சி என்பதற்கு உடுத்தி (பக்.198, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ்,2004) என்றும் பொருள் தருகின்றார். இதிலிருந்து கூந்தல் தழையாடைக்கு உவமையாக்கப்பட்டுள்ள தகவல் பெறப்படுகின்றது.
உ.வே.சா அவர்கள் இவ்வடிக்குக் கூந்தற்கண் ஆம்பலினது புறவிதழ் ஒடித்த முழுப்பூவைச் செருகி வெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி என்றும் விளக்க உரை பகுதியில் முழுநெறி என்பதற்குப் புறவிதழ் ஒடித்த முழுப் பூ (புறநா.116:2 உரை) இதழொடியாத பூவெனினுமாம் (சிலப். 2:34 அடியார்க்கு நல்லார் ) என்றும் அடைச்சுதல் என்பதற்குச் செருகுதல் என்றும் (ஆம்பல் முழுநெறி : அகநா.156 : 9, நற். 113, சிலப். 2:14, 14: 75 – 7, 1,2) புறநானூறு,அகநானூறு மற்றும் சிலப்பதிகாரத்திலிருந்து மேற்கோள் காட்டி பொருள் தருகின்றார். உ.வே.சா ஆராய்ச்சி உரைப்பகுதி, பக். 162,163 பாடல் 80 க்கான உரைப்பகுதி, தமிழ் இணையக் கல்விக்கழகம்) இவர்தரும் உரைப்பொருளில் இருந்து கூந்தலில் ஆம்பல் சூட்டப்படுகிற நிகழ்வு அறியப்படுகிறது.
ஒரே பாடலின் அடிக்கு முனைவர் வி.நாகராசன் அவர்கள் கூறும் பொருளும் உ.வே.சா அவர்கள் தரும் பொருளும் வெறுபட்டிருப்பதை அறியமுடிகிறது. என்றாலும் இருவரில் உ.வே.சா அவர்கள், தான் தந்த உரைக்கு மற்ற செவ்விலக்கியங்களில் இருந்து மேற்கோள்காட்டி நிறுவுவது போன்று முனைவர் வி.நாகராசன் அவர்கள் செய்யவில்லை என்பதனால் இங்கு உ.வே.சா அவர்கள் தரும் பொருளே சிறப்பெனக் கருதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் கூந்தலில் ஆம்பல் சூட்டப்படுவது அழகூட்டவும் மணம்பெறவுமே என்று கொள்ளலாம்.
தொடரும்..............
தலைவியின் மீது கோபம்கொண்ட பரத்தை, தலைவிக்கு வேண்டியவர்கள் கேட்கும்படியாகத் தனக்கும் தலைவனுக்கும் இடையே உள்ள நெருக்கம் எப்படிப்பட்டது என்பதைக் கூறுவதாக வரும் ஔவையாரின் மருதத்திணை பாடலில் முதல் அடி இப்படி வருகின்றது.
கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி (குறுந். 80:1,2)
இவ்வடிகளுக்குப் பொருள்தரும் உரையாசிரியர் முனைவர் வி. நாகராசன் அவர்கள் கூந்தலைப் போன்ற நெறிப்பினை உடைய ஆம்பலின் முழுமையான செறிந்த இலைகளைத் தழையாடையாக உடுத்தி, பெருவெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி (பக். 197, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ்,2004) என்று பொருள் தருகின்றார். மேலும் சொற்பொருள் தரும் பகுதியில் கூந்தல் ஆம்பல் என்பதற்குக் கூந்தலைப் போன்ற ஆம்பலின் நெளிவுகள் என்றும் அடைச்சி என்பதற்கு உடுத்தி (பக்.198, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ்,2004) என்றும் பொருள் தருகின்றார். இதிலிருந்து கூந்தல் தழையாடைக்கு உவமையாக்கப்பட்டுள்ள தகவல் பெறப்படுகின்றது.
உ.வே.சா அவர்கள் இவ்வடிக்குக் கூந்தற்கண் ஆம்பலினது புறவிதழ் ஒடித்த முழுப்பூவைச் செருகி வெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி என்றும் விளக்க உரை பகுதியில் முழுநெறி என்பதற்குப் புறவிதழ் ஒடித்த முழுப் பூ (புறநா.116:2 உரை) இதழொடியாத பூவெனினுமாம் (சிலப். 2:34 அடியார்க்கு நல்லார் ) என்றும் அடைச்சுதல் என்பதற்குச் செருகுதல் என்றும் (ஆம்பல் முழுநெறி : அகநா.156 : 9, நற். 113, சிலப். 2:14, 14: 75 – 7, 1,2) புறநானூறு,அகநானூறு மற்றும் சிலப்பதிகாரத்திலிருந்து மேற்கோள் காட்டி பொருள் தருகின்றார். உ.வே.சா ஆராய்ச்சி உரைப்பகுதி, பக். 162,163 பாடல் 80 க்கான உரைப்பகுதி, தமிழ் இணையக் கல்விக்கழகம்) இவர்தரும் உரைப்பொருளில் இருந்து கூந்தலில் ஆம்பல் சூட்டப்படுகிற நிகழ்வு அறியப்படுகிறது.
ஒரே பாடலின் அடிக்கு முனைவர் வி.நாகராசன் அவர்கள் கூறும் பொருளும் உ.வே.சா அவர்கள் தரும் பொருளும் வெறுபட்டிருப்பதை அறியமுடிகிறது. என்றாலும் இருவரில் உ.வே.சா அவர்கள், தான் தந்த உரைக்கு மற்ற செவ்விலக்கியங்களில் இருந்து மேற்கோள்காட்டி நிறுவுவது போன்று முனைவர் வி.நாகராசன் அவர்கள் செய்யவில்லை என்பதனால் இங்கு உ.வே.சா அவர்கள் தரும் பொருளே சிறப்பெனக் கருதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் கூந்தலில் ஆம்பல் சூட்டப்படுவது அழகூட்டவும் மணம்பெறவுமே என்று கொள்ளலாம்.
தொடரும்..............
முனைவர் ப.குணசுந்தரி- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
மதிப்பீடுகள் : 100
Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] wrote:இராமலிங்கம் ஐயாவிற்கு வணக்கம்
இன்று அனைவரும் இயற்கையின் பெருமையை உணரத் துவங்கியுள்ளனர். வரும் தலைமுறையாவது இயற்கையோடு இணைந்த தொழிநுட்ப வாழ்வை வாழ்வார்களாக.
நன்றி.
உண்மைதான் தாயே !
இயற்கையின் மதிப்பை உணர்ந்து அதன் சிறப்பை விஞ்ஞான முனேற்றத்தோடு இணைத்து செயல்படும் போது கிடைக்கும் இன்பம் அலாதிதான்.
அதனுடன் கொஞ்சம் மனிதத்வமும் இணைந்துவிட்டால்
சொர்க்கம் இருப்பது இங்கே - வேறெங்கே !
Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
தொடர்ச்சி தொடர் – 4
பொம்மல் ஓதியும் புனையல்;
எம்மும் தொடாஅல் என்குவெம் மன்னே. (குறுந்.191:5 – 7)
பொருகளிறு மிதித்த நெறிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
நின்று கொய்ய மலரும் …………………………… ( குறுந். 208: 1 – 4)
கடற்றில் கலித்த முடச்சினை வெட்சித்
தளை அவிழ் பல்போது கமழும்
மைஇருங் கூந்தல் மடந்தை நட்பே. (குறுந். 209:4 – 7)
குறுந்தொகையின் 19ஆவது பாடலில் பிரிந்தால் தலைவி வருந்துவாளே என்பதை உணர்ந்துகொள்ளாமல் தலைவன் பிரிந்து சென்றிருக்கின்றான். அவன் மீண்டு வந்தால் என் கூந்தலில் பூச்சூடுதலையும் தொடுதலையும் ஒழிக என்று கூறுவேன் என்பதாக வருகின்றது. இப்பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அப்பாடலடி வருமாறு,
…………………………………………………………………போதின்பொம்மல் ஓதியும் புனையல்;
எம்மும் தொடாஅல் என்குவெம் மன்னே. (குறுந்.191:5 – 7)
இங்குக் கூந்தலில் பூச்சூட்டுதல் என்பது தலைவி மீது தலைவனுக்குள்ள உரிமையை எடுத்துக் காட்டுவதோடு மட்டுமன்றி அழகும் மணமும் பெறுவதற்காகவும் என்பதை அறியமுடிகிறது.
மற்றொருபாடலில் தலைவன் வரைவு நீட்டித்தவழி ஆற்றாதவளாய் வருந்தும் தலைவி தோழியிடம் தலைவன் குன்றத்தில் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் யானை, வேங்கையின் அடிமரத்தைச் சிதைத்துச் செல்லும். அப்படி அடிசிதைந்து வளைந்து காணப்படும் வேங்கை மரங்களில் மலரும் மலர்களைக் குறவர் இனப் பெண்கள் மரங்களில் ஏறாமலேயெ பறித்துச் சூடிக் கொள்வர். என்நிலையும் அதுதான் என்று கூறுவதாக வருகின்றது.
………………………………………………………………குன்றத்துப்மற்றொருபாடலில் தலைவன் வரைவு நீட்டித்தவழி ஆற்றாதவளாய் வருந்தும் தலைவி தோழியிடம் தலைவன் குன்றத்தில் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் யானை, வேங்கையின் அடிமரத்தைச் சிதைத்துச் செல்லும். அப்படி அடிசிதைந்து வளைந்து காணப்படும் வேங்கை மரங்களில் மலரும் மலர்களைக் குறவர் இனப் பெண்கள் மரங்களில் ஏறாமலேயெ பறித்துச் சூடிக் கொள்வர். என்நிலையும் அதுதான் என்று கூறுவதாக வருகின்றது.
பொருகளிறு மிதித்த நெறிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
நின்று கொய்ய மலரும் …………………………… ( குறுந். 208: 1 – 4)
இப்பாடலில் பெண்கள் தங்கள் கூந்தலில் மலர் சூடுதலை விரும்புகிறார்கள் என்றால் அம்மலர் மரத்திற்கு மேல் இருந்தாலும் சரி பறித்துச் சூடியதையே இது காட்டுகிறது. மேலும் மலர்ச்சூடும் நிகழ்வின் மூலம் தலைவனுக்கும் தனக்குமான உறவை வெளிப்படுத்திக் காட்டும் நுட்பம் செவ்விலக்கியத்தின் பல பாடல்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் அறியமுடிகிறது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ தன் பாடலில் பிரிவிலும் தலைவியையே நினைத்திருந்த தலைவனின் மனதைப் பதிவுசெய்கிறார்.
……………………………………………………….நெறிமுதல்பாலை பாடிய பெருங்கடுங்கோ தன் பாடலில் பிரிவிலும் தலைவியையே நினைத்திருந்த தலைவனின் மனதைப் பதிவுசெய்கிறார்.
கடற்றில் கலித்த முடச்சினை வெட்சித்
தளை அவிழ் பல்போது கமழும்
மைஇருங் கூந்தல் மடந்தை நட்பே. (குறுந். 209:4 – 7)
இவ்வடிகளில் தலைவன் தோழியிடம் தலைவியின் வெட்சி மலர் பலவற்றின் மணம் கமழ்கின்ற மேகம் போன்ற கரிய கூந்தலை உடைய பெண்ணின் நட்பே தனக்கு நினைவு வந்ததாகக் கூறுவதிலிருந்து உரிமையுடைய பெண்ணை நினைத்துப் பார்க்கும் ஆணுக்கு அவளின் மலர் சூட்டப்பெற்ற கூந்தலே முன்நிற்கிறது என்பதைப் பதிவுகள் காட்டுகின்றன.
தொடரும்..............................
முனைவர் ப.குணசுந்தரி- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
மதிப்பீடுகள் : 100
Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
நன்றி ஐயா. தங்களைப் போன்ற அறிஞர்களின் வாழ்த்துதான் வளர்ச்சிக்குக் காரணம்.
முனைவர் ப.குணசுந்தரி- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
மதிப்பீடுகள் : 100
Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
தொடர்ச்சி ………………. தொடர்– 4
கோடைகாற்றின் மணம்
கைவள் ஓரிகானம் தீண்டி
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்
மைஈர் ஓதி மாஅயோள் வயின் (குறுந். 199: 2 – 5)
பொன்செய் புனைஇழை கட்டிய மகளிர்
கதுப்பிற் தோன்றும் புதுப்பூங் கொன்றை (குறுந்.21:1 – 3)
கோடைகாற்றின் மணம்
பரணர் பாடலில் தலைவி இற்செறிக்கப்பட்டதைத் தோழியின் மூலம் அறியும் தலைவனுக்குத் தலைவியின் மணம் கமழும் கூந்தலே நினைவு வருகின்றது. அக்கூந்தல் திண்ணிய தேரினை உடைய ஓரியின் வனத்தைத் தழுவி வீசுகின்ற கோடை காற்றின் மணம் கமழும் செறிந்தத் தன்மையினை உடையதாயிருப்பதைப் பாடல் பதிவு செய்கிறது.
……………………………………. திண்தேர்க்கைவள் ஓரிகானம் தீண்டி
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்
மைஈர் ஓதி மாஅயோள் வயின் (குறுந். 199: 2 – 5)
அத்தகைய தலைவியுடன் நான் கொண்ட நட்பு இப்பிறவியில் அவளுடன் சேர்ந்து வாழ வழிவகுக்கும் என்று தன் நெஞ்சிற்கு உரைப்பதாகக் கூறப்படுகிறது.
கூந்தல் உவமை ஓதலாந்தையார் தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்துவிட்டது. தலைவன் வரவில்லை. தலைவியை எவ்வாறு ஆற்றுவிப்பது என்று தெரியாமல் தோழி வருந்திக் கொண்டிருப்பதை உணரும் தலைவி, தலைவன் வாக்கில் நம்பிக்கை உடையவள். காரின் அறிகுறியை ஏற்கமாட்டேன் என்று தோழியிடம் குறிப்பிடுகிறாள். எனினும் ஆங்காங்கே பூத்துக் குலுங்கி கார்காலத்தின் வருகையைக் கூறும் கொன்றையை
வண்டுபடத் ததைந்த கொடிஇணர் இடை இடுபு பொன்செய் புனைஇழை கட்டிய மகளிர்
கதுப்பிற் தோன்றும் புதுப்பூங் கொன்றை (குறுந்.21:1 – 3)
என்கிறாள். அதாவது, இவ்வடிகளில் கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்குவது வண்டுகள் ஒலிக்க நெருங்கிப் பூத்திருக்கக் கூடிய நீண்ட பூங்கொத்துக்களை இலைகளுக்கு இடையே வைத்துப் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைச் சுற்றிக்கட்டி அழகுறப் புனையப்பட்ட மகளிரின் கூந்தலுக்கு உவமை காட்டப்படுகிறது. இதிலிருந்து பெண்களின் கூந்தல் பொன்னாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பதை அறியலாம். நற்றிணையிலும் இதுபோன்று கூந்தலை இயற்கையுடன் ஒப்பிட்டுக் காட்டும் பாடல்கள் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.
தொடரும் ..............
முனைவர் ப.குணசுந்தரி- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
மதிப்பீடுகள் : 100
Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
தொடர்ச்சி …………………… தொடர் – 4
கூந்தல் நிலை
பெண்களின் கூந்தல் நிலை பற்றி, முன்தொடர்களில் அது நீண்டும் சுருண்டும் கொண்டையிடப்பட்டும் விரிக்கப்பட்டும் எனப் பல்வேறு நிலைகளில் இருந்ததை அறியமுடிந்தது. அதன் தொடர்ச்சியாகக் குறுந்தொகையில் கூந்தல் நிலை எவ்விதம் சொல்லப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
கடுவன் மள்ளன் எனும் புலவரின் பாடலில் கூந்தல் பற்றிய பதிவொன்று காணப்படுகிறது. அப்பதிவுடைய பாடலடி வருமாறு வார் வணர் கதுப்பு உளரி ……………………………..(குறுந். 82: 1) இதற்கு நீண்டு சரிந்த கூந்தலைக் கோதி (பக். 202 நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 2004) என்று முனைவர் வி. நாகராசன் அவர்களும் நீட்சியை உடைய வளைந்த கூந்தலை வகிர்ந்து ( உ.வே.சா ஆராய்ச்சி உரைப் பதிப்பு, பக். 257, பாடல் 82க்கான உரைப்பகுதி, தமிழ் இணையக் கல்விக்கழகம்) என உ.வே. சா அவர்களும் பொருள் தருகின்றனர். இவற்றிலிருந்து கூந்தல் நீண்டதாகவும் வளைவுடனும் சரிந்தும் காணப்பட்டதாகப் பொருள் கொள்ளலாம்.
உரையாசிரியர்கள் பொருள்தரும் முறையில் ஒருசில பாடல்களில் வேறுபட்டும் ஒருசில பாடல்களில் ஒன்றுபடவும் வந்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
சிறைக்குடி ஆந்தையார் பாடலிலும் ……………………….. கொடிக் கூந்தலளே (குறுந். 132: 2) என்று கூந்தல் நீண்டதாக இருக்கும் நிலை பதிவு செய்யப்படுகிறது. வெள்ளிவீதியார் பாடலில் தண்டுடைக் கையர் வெண்தலைச் சிதவலர் (குறுந். 146 : 3) என முதுமை உடையோரது கூந்தல் நரைத்திருப்பதாகக் காட்டப்படுகிறது. மேலும் அழகிய சிலவாகிய கூந்தலையும் (குறுந். 211: 1, 280: 1 – 3) நுதல் தொட்டுப் பின் தாழ்ந்த அழகிய சிலவாக முடிக்கப்பெற்ற கூந்தலையும் (குறுந். 214: 1 – 3) மயிற்பீலியைப் போன்ற தழைத்த மெல்லிய கூந்தலையும் (குறுந். 225: 5 – 7) ஐவகையாக முடிக்கப்பெற்ற தலைமயிரினையும் (குறுந். 229 :1-4) பின்னிவிடப்பட்ட கூந்தலையும் (குறுந். 246 :5-7) உடையவர்களாகப் பெண்கள் இருந்தனர் என்பதைக் குறுந்தொகை பாடல்கள் பதிவு செய்துள்ளன.
பரணர் பாடலில் பெண்ணின் கூந்தல் கருமையுடையதாகவும் பலவாகவும் இயற்கை அழகுடனும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்பாடலடி வருமாறு,
………………………………………………………………………………………இவள்
இரும்பல் கூந்தல் இயல் அணி கண்டே (குறுந். 165 :4,4)
ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் எனும் புலவர் தம் பாடலில், கூந்தல் மயில் பீலியில் காணப்படும் கண்ணைப் போன்று மாட்சிமையுடையதாக இருக்கின்றது என்று குறிப்பிடுகின்றார். (குறுந். 184 :5) பூதன்புல்லன் எனும் புலவர் தம்பாடலில் நெறிப்பினை உடைய கரிய கூந்தல் எனும் பொருளில் நெறிஇருங் கதுப்பொடு பெருந்தோள் நீவி (குறுந். 190 :1) என்று குறிப்பிடுகின்றார்.
கச்சிப்பேட்டு நன்னாகையார் எனும் புலவர் தம் பாடலில் கூந்தலைக் கோதுவதற்கு உரிமையுடைய தலைவன் இளவேனில் பருவத்தும் வராமையினால் மணமூட்டப்பெறாத தன் கூந்தலைத் தானே கோதிக் கொள்வதாகக் குறிப்பிடுகின்றார். வறுங்குரல் கூந்தல் தைவருவேனே (குறுந். 192 :6) எனும் அடி இதனைச் சுட்டிக்காட்டுகின்றது.
பொதுவாகவே வியர்க்கும் எவ்வகை உயிரினத்திற்கும் அதன் வாழிடம் மற்றும் உணவுமுறை சார்ந்து உடலில் மணம் வீசுவது என்பது இயல்பு. அம்மணம் விரும்பக்கூடியதா? இல்லையா என்பதை அவ்வுயிரினத்தோடு சேர்ந்து வாழும் பிறிதொரு உயிரைப் பொறுத்ததாக அமையும். இச்சூழலில் அனைவரும் விரும்பக் கூடிய மணம் என்பது இயற்கையையும் செயற்கையையும் ஒன்றுகூட்டும்போது தான் கிடைக்கிறது. இதையே மேற்கண்ட குறுந்தொகைப் பதிவுகள் காட்டுகின்றன. பாடல் பதிவுகள் அனைத்தும் பெண்களின் கூந்தல் மலர்களாலும் மண்ணாலும் பல்வகைச் சாந்துப் பொருட்களாலும் மணமூட்டப்படுவதையே குறிப்பிடுகின்றன. ஆகையினால் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் இருக்கிறதா? இல்லையா? என்று எழுப்பப்படும் கேள்வி அர்த்தமற்றதாகத் தோன்றுகின்றது.
குறுந்தொகைப் பதிவுகள் முற்றும்.
அடுத்து தொடர் – 5 ஐங்குறுநூற்றின் தகவல்களுடன் சந்திப்போம்.
கூந்தல் நிலை
பெண்களின் கூந்தல் நிலை பற்றி, முன்தொடர்களில் அது நீண்டும் சுருண்டும் கொண்டையிடப்பட்டும் விரிக்கப்பட்டும் எனப் பல்வேறு நிலைகளில் இருந்ததை அறியமுடிந்தது. அதன் தொடர்ச்சியாகக் குறுந்தொகையில் கூந்தல் நிலை எவ்விதம் சொல்லப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
கடுவன் மள்ளன் எனும் புலவரின் பாடலில் கூந்தல் பற்றிய பதிவொன்று காணப்படுகிறது. அப்பதிவுடைய பாடலடி வருமாறு வார் வணர் கதுப்பு உளரி ……………………………..(குறுந். 82: 1) இதற்கு நீண்டு சரிந்த கூந்தலைக் கோதி (பக். 202 நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 2004) என்று முனைவர் வி. நாகராசன் அவர்களும் நீட்சியை உடைய வளைந்த கூந்தலை வகிர்ந்து ( உ.வே.சா ஆராய்ச்சி உரைப் பதிப்பு, பக். 257, பாடல் 82க்கான உரைப்பகுதி, தமிழ் இணையக் கல்விக்கழகம்) என உ.வே. சா அவர்களும் பொருள் தருகின்றனர். இவற்றிலிருந்து கூந்தல் நீண்டதாகவும் வளைவுடனும் சரிந்தும் காணப்பட்டதாகப் பொருள் கொள்ளலாம்.
உரையாசிரியர்கள் பொருள்தரும் முறையில் ஒருசில பாடல்களில் வேறுபட்டும் ஒருசில பாடல்களில் ஒன்றுபடவும் வந்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
சிறைக்குடி ஆந்தையார் பாடலிலும் ……………………….. கொடிக் கூந்தலளே (குறுந். 132: 2) என்று கூந்தல் நீண்டதாக இருக்கும் நிலை பதிவு செய்யப்படுகிறது. வெள்ளிவீதியார் பாடலில் தண்டுடைக் கையர் வெண்தலைச் சிதவலர் (குறுந். 146 : 3) என முதுமை உடையோரது கூந்தல் நரைத்திருப்பதாகக் காட்டப்படுகிறது. மேலும் அழகிய சிலவாகிய கூந்தலையும் (குறுந். 211: 1, 280: 1 – 3) நுதல் தொட்டுப் பின் தாழ்ந்த அழகிய சிலவாக முடிக்கப்பெற்ற கூந்தலையும் (குறுந். 214: 1 – 3) மயிற்பீலியைப் போன்ற தழைத்த மெல்லிய கூந்தலையும் (குறுந். 225: 5 – 7) ஐவகையாக முடிக்கப்பெற்ற தலைமயிரினையும் (குறுந். 229 :1-4) பின்னிவிடப்பட்ட கூந்தலையும் (குறுந். 246 :5-7) உடையவர்களாகப் பெண்கள் இருந்தனர் என்பதைக் குறுந்தொகை பாடல்கள் பதிவு செய்துள்ளன.
பரணர் பாடலில் பெண்ணின் கூந்தல் கருமையுடையதாகவும் பலவாகவும் இயற்கை அழகுடனும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்பாடலடி வருமாறு,
………………………………………………………………………………………இவள்
இரும்பல் கூந்தல் இயல் அணி கண்டே (குறுந். 165 :4,4)
ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் எனும் புலவர் தம் பாடலில், கூந்தல் மயில் பீலியில் காணப்படும் கண்ணைப் போன்று மாட்சிமையுடையதாக இருக்கின்றது என்று குறிப்பிடுகின்றார். (குறுந். 184 :5) பூதன்புல்லன் எனும் புலவர் தம்பாடலில் நெறிப்பினை உடைய கரிய கூந்தல் எனும் பொருளில் நெறிஇருங் கதுப்பொடு பெருந்தோள் நீவி (குறுந். 190 :1) என்று குறிப்பிடுகின்றார்.
கச்சிப்பேட்டு நன்னாகையார் எனும் புலவர் தம் பாடலில் கூந்தலைக் கோதுவதற்கு உரிமையுடைய தலைவன் இளவேனில் பருவத்தும் வராமையினால் மணமூட்டப்பெறாத தன் கூந்தலைத் தானே கோதிக் கொள்வதாகக் குறிப்பிடுகின்றார். வறுங்குரல் கூந்தல் தைவருவேனே (குறுந். 192 :6) எனும் அடி இதனைச் சுட்டிக்காட்டுகின்றது.
பொதுவாகவே வியர்க்கும் எவ்வகை உயிரினத்திற்கும் அதன் வாழிடம் மற்றும் உணவுமுறை சார்ந்து உடலில் மணம் வீசுவது என்பது இயல்பு. அம்மணம் விரும்பக்கூடியதா? இல்லையா என்பதை அவ்வுயிரினத்தோடு சேர்ந்து வாழும் பிறிதொரு உயிரைப் பொறுத்ததாக அமையும். இச்சூழலில் அனைவரும் விரும்பக் கூடிய மணம் என்பது இயற்கையையும் செயற்கையையும் ஒன்றுகூட்டும்போது தான் கிடைக்கிறது. இதையே மேற்கண்ட குறுந்தொகைப் பதிவுகள் காட்டுகின்றன. பாடல் பதிவுகள் அனைத்தும் பெண்களின் கூந்தல் மலர்களாலும் மண்ணாலும் பல்வகைச் சாந்துப் பொருட்களாலும் மணமூட்டப்படுவதையே குறிப்பிடுகின்றன. ஆகையினால் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் இருக்கிறதா? இல்லையா? என்று எழுப்பப்படும் கேள்வி அர்த்தமற்றதாகத் தோன்றுகின்றது.
குறுந்தொகைப் பதிவுகள் முற்றும்.
அடுத்து தொடர் – 5 ஐங்குறுநூற்றின் தகவல்களுடன் சந்திப்போம்.
முனைவர் ப.குணசுந்தரி- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
மதிப்பீடுகள் : 100
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Page 8 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|