ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

+6
விமந்தனி
ராஜா
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
ChitraGanesan
முனைவர் ப.குணசுந்தரி
10 posters

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

Go down

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 2 Empty சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி Sun Aug 07, 2016 10:42 pm

First topic message reminder :

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)

உடல் உறுப்புக்களுள் குறைத்தால்  வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை  இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து  இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
            ஊரார்கண் படட்டும் படட்டும்
            உற்றார்கண் படட்டும் படட்டும்
            ஆடவர்கண் படட்டும் படட்டும்
            உண் கண்ணே பட ட்  டும்
                       
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது.      (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்)  பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா  சீயக்காய்  நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................                     (ஃபாரவர் ( forever)  இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு  இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு,  மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும்  இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே  மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.

கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8)  மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.

நரை கூந்தல் - முதுமை

தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்

அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ………………………                                                         (நற். 10: 1-4)

என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல்  முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை

அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)

என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.

புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.


கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்

முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.

……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)

என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு

மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)

சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக்  கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது

அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே          (நற். 141 ; 11 – 12)

என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்

பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ  - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)

மேற்குறித்த பாடல்கள்  பொருள்வயிற் பிரிந்தால்  தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.

பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று  கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)

வணர்ந்து  ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்                 (நற். 139; 7- 8)

நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு     ( நற். 197 :5>6)

இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.

கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்

திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில்  ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்

நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)

எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு

                      நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)

தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம்  ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Back to top Go down


சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 2 Empty Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by M.Jagadeesan Thu Aug 11, 2016 1:15 pm

ChitraGanesan wrote:தொடருங்கள் பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டோ
[You must be registered and logged in to see this link.]

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் கிடையாது என்பதை அவ்வையார் பின்வரும் புறநானூற்றுப் பாடல் மூலம் குறிப்பாகச் சொல்லுகிறார்.

சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே;
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே;
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே;
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே;
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே;

அவ்வையும் , அதியனும் கொண்ட நட்பு உலகறிந்தது . அவன் அன்பு மிகுதியால் அவ்வையின் புலால் மணம் வீசுகின்ற தலையைத் தடவிக் கொடுப்பானாம் .

இதிலிருந்து என்ன தெரிகிறது ? தலை முடியை நன்கு நாம் பராமரிக்காவிட்டால் அது துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும் என்பது தெரிகிறதல்லவா ? ஆகவே கூந்தல் மணம் என்பது , அதன்மீது நாம் தடவுகின்ற வாசனைத் திரவியங்கள் மற்றும் பூக்களின் மணமேயாகும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 2 Empty Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by ராஜா Thu Aug 11, 2016 1:51 pm

ஆரம்பிச்சாச்சா தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி....

அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 2 Empty Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by விமந்தனி Fri Aug 12, 2016 10:41 am

தொடர் மிகவும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள். உங்களது எளிய விளக்கங்கள் நற்றிணையின் சுவையினை நன்கு உணரமுடிகிறது. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 2 Empty Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by விமந்தனி Fri Aug 12, 2016 10:57 am

singai wrote:மிகவும் சிறப்பாக இருந்தது. ஒரு வேண்டுகோள். ஊடகங்களில் வரும் வாசகர்கள் அனைவரும் ஒன்றுபோல் இருக்க வாய்ப்பில்லை. வேறுபட்ட இரசனையுடன் அணுகுவார்கள். இலக்கிய ஆக்கங்கள் கதை போல் படிக்க முடியாது. படித்து புரிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதனால் நீண்ட உங்கள் தொடரை சிறு பகுதியாக வெளியிட்டால் படிப்பவர்கள் கருத்திடவும்,சந்தேகம் கேட்கவும் வழி பிறக்கும்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 2 Empty சமூக விழுமியம் : தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து) தொடர்ச்சி

Post by முனைவர் ப.குணசுந்தரி Sat Aug 13, 2016 1:39 am

நற்றிணையின் தொடர்ச்சி

அவள் தன்னை அலங்கரித்துக் கொள்ளப் பயன்படுத்தும் பொருட்கள் அவள் நிலம் சார்ந்ததாகவே இருக்கும். அவள் தந்தையோ தமையனோ வேற்றுப்புலம் சென்றாலும் அங்கிருந்து பூ கொண்டுவந்து கொடுத்ததாகப் பதிவில்லை. ஆகையினால் அவள் கூந்தல் மணம் வேறுபட்டிருப்பதற்குக் காரணம் தலைவன் தன் நிலத்துப் பூவினையோ அல்லது அவள் நிலத்துப் பூவினையோ தலைவிக்குச் சூட்டுதலே ஆகும். இதற்குரிய பதிவுகளும் நற்றிணையில் இடம்பெற்றுள்ளன. ஆகவே திருமணத்திற்கு முன்பு பெண்ணின் கூந்தல் வேறுபட மணம் வீசினால் அதற்கு ஒரே காரணம் அவள் வேற்று நிலத்து ஆடவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கருத இடமளித்தது.

தலைவன் தலைவிக்குப் பூச் சூட்டி மகிழ்பவன் என்பதை நம்பிகுட்டுவன் எனும் புலவர் நெய்தல் பாடலில் இப்படி குறித்துள்ளார்.

இருங்கழி பொருத ஈர வெண்மணல்
மாக்கொடி அடும்பின் மா இதழி அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன் நாம் வெங்கேண்மை ( நற். 145: 1-4)

இப்பாடலில் தலைவி ஒருவனுடன் நட்புகொண்டிருக்கிறாள் என்பதை அறியும் அன்னை, தலைவியை வெளிச் செல்லாதவாறு வீட்டுக் காவலில் வைக்கின்றாள் (இற்செறித்தல்). அதனை அறியாது தலைவன் இரவில் தலைவியைக் காணவந்து சிறைப்புறத்து ( வீட்டிற்கு அருகாமையில் உள்ள இடம்) நிற்கின்றான். அதை அறியும் தோழி, தலைவன் தலைவியை விரைந்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவன் காதில் விழும்படி கூறுவதில் இக்கருத்து இடம்பெறுகின்றது. அதாவது,

நெய்தல் நிலத்து மணற்பரப்பில் படர்ந்து வளரும் தன்மையுடையது வலிய அடும்பங் கொடி. அதில் பூத்திருக்கும் பெரிய இதழுடைய மலர்கள் பெண்கள் தங்கள் கூந்தலில் சூடும் மாலைக்கு உரியனவாகும். அப்பூக்களைக் கண்டோர் விரும்பும் தன்மையுடையவனான நெய்தல் நிலத்திற்குரிய தலைவன் தான் விரும்பிய தலைவியின் கூந்தலில் சூட்டி மகிழ்ந்திருக்கின்றான். இந்நிகழ்வு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருந்த போது நடந்திருக்கிறது.
இன்று இற்செறிக்கப்பட்டுள்ள போது தலைவனுடன் தலைவிக்கு நட்பு இல்லாத சூழலில் அன்னை தலைவனுடன் தலைவி நட்புகொண்டிருப்பது போலவே அறமில்லாமல் பேசுகிறாள். அவன் எங்கே இருக்கிறான் என்றும் கேட்பாள் உன்னைப் பற்றி எனக்குத்தானே தெரியும் என்று கூறுவதாகப் பாடலில் வருகின்றது.

இதிலிருந்து பெண்கள் தங்கள் கூந்தலில் சூடும் பூக்களுள் ஒன்று அடும்பங்கொடிப் பூ என்பதும் அப்பூவினைத் தலைவன் தான் விரும்பும் பெண்ணுக்குச் சூட்டி மகிழ்வான் என்பதும் தெரியவருகின்றது.

பெண்களுக்குப் பூவினைத் தான் சூடிக் கொள்வதைக் காட்டிலும் தான் விரும்பும் தலைவன் தனக்குச் சூட்டிவிடுவதில்தானே இரட்டிப்பு மகிழ்ச்சி இன்றும்.

கருவூர் கோசனார் எனும் புலவர் பாடலிலும் தலைவன் தலைவிக்குப் பூச் சூட்டவரும் நிகழ்வு பதிவுசெய்யப்படுகிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன்பு இருக்கும் சமூகக் கடமை என்பது வேறு திருமணத்திற்குப் பிறகுள்ள கடமை என்பது வேறு. ஆதலின் தலைவன் தன் வாழ்க்கைத் துணையாக ஒருபெண்ணைத் தேர்ந்தெடுத்துவிட்டால் சமூகத்தில் அவனுக்குப் பொறுப்பு கூடுகிறது.

தலைவன் திருமண வாழ்வில் தாம் செய்ய வேண்டிய அறங்களுக்குப் பொருளாதாரம் அவசியம் என்பதை உணர்ந்திருப்பதால் அதைப் பெறுவதற்காக திருமணத்திற்கு முன்பே பொருள் தேடிச் செல்ல நினைக்கிறான். பிரிந்து செல்லும் முன் விரும்பும் பெண்ணிடம் இல்லறக்கடமையை எடுத்துக்கூறுவதுடன் இப்பிரிவு தற்காலிகமானது. உறுதியாகக் கார்காலத்தில் திரும்பி வந்து அக்காலத்தில் பூக்கும் தேன்சிந்தும் மலர்களை உன் அழகிய நீலமணி போன்ற கூந்தலில் சூடுவேன் எனக்காகக் காத்திரு என்று அவள் மனம் ஏற்கும்படியாகச் சத்தியம் செய்து பிரிந்து செல்கின்றான். அப்பாடல்

அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
அணிய வருதும் நின் மணிஇருங் கதுப்பு என
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி
மைசூழ் வெற்பின் மலை பல இறந்து (நற். 214: 4 – 7)
என்பது.
தலைவன் சத்தியம் செய்து திரும்பி வருவேன் என்று குறிப்பிட்டுச் சென்ற கார்காலம் வந்துவிட்டது. தலைவன் வரவில்லை. அவன்வரத் தாமதமாவதை உணர்ந்து அச்சத்துடன் சத்தியம் செய்திருக்கிறானே கார்பருவத்தை அவன் ஒருவேளை அறியவில்லையோ சத்தியத்தை மீறினால் அவனுக்குத் துன்பம் வந்துவிடுமே என்று தலைவி அவன் உரைத்துச் சென்ற மொழிகளை நினைத்துப் பார்ப்பதாக இப்பாடல் வருகின்றது.

தலைவன் தலைவிக்குப் பூச்சூடி மகிழ்வதால்தான் தலைவியின் மகிழ்வோடு அவளுடைய கூந்தலும் மணம் பெறுகிறது.
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Back to top Go down

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 2 Empty Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by Guest Sat Aug 13, 2016 12:13 pm

படித்து முடித்த போது ..............
அரிவை கூந்தலின்நறியவு முளவோநீ யறியும் பூவே; என்ற குறிஞ்சிப் பாடல் வரியையும் ,

நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்;
யானயந் துறைவோ டேம்பாய் கூந்தல்

என்ற குறுந்தொகை பாடல் வரிகளையும் இத்தருணத்தில் எண்ணிப் பார்க்கிறேன்.

நன்றி.
avatar
Guest
Guest


Back to top Go down

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 2 Empty Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by Guest Sat Aug 13, 2016 12:21 pm

தனித்தனி பதிவாக இல்லாமல்,ஒரே தலைப்பில் தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். தொடர்ந்து படிப்பதற்கும் இலகுவாக இருக்கும்.
மற்றவர்கள் கருத்து என்னவோ அறியேன்?
avatar
Guest
Guest


Back to top Go down

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 2 Empty Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by விமந்தனி Sat Aug 13, 2016 3:29 pm

தொடர் பதிவுகளை ஒரு திரியின் கீழேயே தொடர்ந்து பதிவிடுங்கள். அப்பொழுது தான் படிப்பவர்களுக்கும் தொடர்ந்து வருவது சற்று சுலபமாகவும், சுவாரசியம் குறையாமலும் இருக்கும். ஆகவே இத்திரியினை உங்களுடைய முந்தைய திரியுடன் இணைத்து விடுகிறேன். இத்தலைப்பில் தொடரும் பதிவுகளை இனி இதிலேயே பகிர்ந்துகொள்ளுங்கள். புன்னகை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 2 Empty Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by ராஜா Sat Aug 13, 2016 3:47 pm

விமந்தனி wrote:தொடர் பதிவுகளை ஒரு திரியின் கீழேயே தொடர்ந்து பதிவிடுங்கள். அப்பொழுது தான் படிப்பவர்களுக்கும் தொடர்ந்து வருவது சற்று சுலபமாகவும், சுவாரசியம் குறையாமலும் இருக்கும். ஆகவே இத்திரியினை உங்களுடைய முந்தைய திரியுடன் இணைத்து விடுகிறேன். இத்தலைப்பில் தொடரும் பதிவுகளை இனி இதிலேயே பகிர்ந்துகொள்ளுங்கள். புன்னகை
அருமை அக்கா நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 2 Empty Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by M.Jagadeesan Sat Aug 13, 2016 4:00 pm

singai wrote:படித்து முடித்த போது ..............
அரிவை கூந்தலின்நறியவு முளவோநீ யறியும் பூவே; என்ற குறிஞ்சிப் பாடல் வரியையும் ,
[You must be registered and logged in to see this link.]

இது குறுந்தொகை வரிகளல்லவா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 2 Empty Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum