புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_m10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_m10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_m10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10 
11 Posts - 4%
prajai
பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_m10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10 
9 Posts - 4%
Jenila
பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_m10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10 
4 Posts - 2%
Rutu
பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_m10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_m10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10 
2 Posts - 1%
jairam
பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_m10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_m10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_m10பெண்ணே  நீ  சிந்திக்க  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே நீ சிந்திக்க


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 19, 2016 7:29 pm

பெருநாளைக்குப் புதுத்துணி வாங்க குடும்பத்தோடு துணிக்கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார் சகோதரர். அப்போது அங்கு வந்த அவரது நண்பர், “அந்தக் கடைக்கா போற? புதுக்கடையாச்சே…. ரொம்ப நவநாகரீகமா வேற இருக்கு… பொம்பளைப் புள்ளைகளை வேற கூட்டிட்டுப் போற, ட்ரஸ்ஸை அங்க வச்செல்லாம் போட்டுப் பாக்கவேணாம்.  எங்கப் பாத்தாலும் ஒரே கேமராவை ஒளிச்சி வச்சு படம் புடிச்சி, பணங்கேட்டு மிரட்டுற கதையாத்தான் இருக்கு” என்று உண்மையான அக்கறையோடு அறிவுறுத்திவிட்டுச் சென்றார்!!

கடைகளில் மட்டுமல்ல, தங்கும் ஹோட்டல் அறைகளில், தியேட்டர், அலுவலகம் போன்ற இடங்களின் பெண்கள் கழிவறைகளில்… எல்லாஇடங்களிலும்  கேமராக்கள் ஒழித்து வைக்கப்பட்டிருக்கும் அபாயங்கள்!! அட, இப்போவெல்லாம் சொந்த வீட்டுக்குள்ளேயே நிம்மதியாகக் குளிக்க, உடைமாற்ற முடியாத அளவுக்கு, இந்த கேமரா அச்சம் எல்லாரையும் பிடித்தாட்டுகிறது!!

இதுபோக, நம் சொந்த மொபைல் அல்லது கேமராக்களில் உள்ள நமது புகைப்படங்களை, நம் மொபைலைத் தொடாமலேயேத் திருடி எடுக்குமளவு வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பங்கள்!! திருடி, அதை நவீன சாஃப்ட்வேர்கள் மூலம் வேறு பெண்களின் நிர்வாண உடல்களோடு ஒட்டி வலைகளில் பரப்பி விடுவதும் பெருகி வருகிறது.

முன்பெல்லாம், இது போன்ற நிகழ்வுகள் நடிகைகளுக்கு மட்டுமே நடக்கும் ஒன்றாக இருந்தது.  ஆனால், தொழிநுட்பமும் நாகரீகமும் மலிந்துவிட்ட இந்த காலத்தில் சாதாரண வெகுஜனப் பெண்களுக்கும் இந்தக் கொடுமை நிகழ ஆரம்பித்துவிட்டது!!

முன்பு இரகசியக் கேமராக்கள் வைத்து பெண்களைப் படம்பிடிப்பது, அந்தப் படங்களை நீலப்பட (போர்ன்) உலகத்தில் விற்பதற்காகச் செய்யப்பட்டு வந்தது.  அது ஒரு தனி உலகமாகச் செயல்பட்டு வந்ததால், குடும்பப் பெண்களின் படங்களே அதில் பகிரப்பட்டாலும் அப்படங்களைப் பார்ப்பவர்கள் வெளியில் சொல்லுவதில்லை - தாம் நீலப்படம் பார்ப்பது வெளியே தெரிந்துவிடுமே என்ற அவமானம் காரணமாக.

முன்னர், பெண்களைப் பழிவாங்க – அவர்களின் முன்னேற்றத்தில் பொறாமை கொள்வோர் அவர்களின் குணத்தின் மீது வாய்மொழியாக அவதூறு கிளப்புவதுதான் வழக்கமாக இருந்துவந்தது. டெக்னாலஜி வளர வளர, அதை ஈன வழிகளில் பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை “ஃபோட்டோஷாப்” வேலைகள் செய்து, இணையங்களில் புழங்க விடத் தொடங்கினார்கள்.

அதைவைத்து, அந்த ஈனர்கள் ஒன்றுமறியா அப்பாவிப் பெண்களை மிரட்டிப் பணம் பறிக்கவும், ஏன் அப்பெண்ணையே தம் கீழ்த்தர இச்சைக்குப் பயன்படுத்தவும் செய்யத் தொடங்கினர்!!

ஒரு ஆண், பெண்ணை மிரட்டி பணம் பறிக்கவோ, தன் இச்சைக்குப் பணிய வைக்கவோ எப்படி சாத்தியப்படுகிறது? காரணம், மானம், இங்கு உயிரைவிட மேலாகக் கருதப்படுவதாகக் காலங்காலமாகச் சொல்லித்தரப்பட்டு வருகிறது.

மானம் என்றால் என்ன என்பதன் புரிதலில் குழப்பம் உள்ளது.ஆண்களுக்கு, அது அவரின் சுயமரியாதையை, தன்மானத்தைக் காயப்படுத்தும்படி இழிவுபடுத்திப் பேசினாலோ, அல்லது மற்றவர்களின் முன் தாக்கப்பட்டாலோ, அது அவரைப் பொறுத்தவரை பழிவாங்கத் தகுதியான அவமானம். ஆனால், பெண்களைப் பொறுத்த வரை அது “உடல்” சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. 

இதில் முரண் என்னவென்றால், உடல் வெளியே தெரியும்படி ஆடை அணியும்போது அது மானக்கேடாகக் கருதப்படுவதில்லை. மாறாக, ஒரு பெண்ணை நிர்வாணமாக அல்லது உடல் அங்கங்கள் வெளியே தெரியும்படி படம் பிடித்து போடுவதுதான் – பழிவாங்க அல்ல,  உயிர்விடத் துணியுமளவுக்கு அவமானமாக கருதப்படுகிறது.

இதற்குக் காரணம், பெண் என்றால் அவளை ஒரு உயிராக – சக மனுஷியாக அல்லாமல், உடலாக மட்டுமே பிம்பப்படுத்தி வைத்திருப்பதுதான். 

இன்றைய ஊடகங்கள், திரைப்படங்கள் எல்லாமே மீண்டும் மீண்டும் இதைத்தான் வலியுறுத்தி வருகின்றன. பொய்யே ஆனாலும் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, அதுதான் மக்களின் மனதில் பதிந்துவிடுகிறது.

ஒரு பெண் தன் உடலை முழுமையாக மறைத்து ஆடை அணியும்போதுதான், எதிரில் நிற்பவரின் கவனம் உடலை விட்டு, அவரது அறிவை நோக்கித் திருப்பப்படுகிறது. உடலைக் காட்டும் ஆடைகள் அணியும்போது அவள் ஒரு “பொருளாகத்தான்” பார்க்கப்படுகிறாள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சமீபத்தில் ஒரு பதிவில் வாசித்ததைப் பகிர்கிறேன்: //சவுதி அரேபியாவில் ஒருவன் ஒரு பெண்ணிடம் உன்னுடைய நிர்வாணப் புகைப்படமும், வீடியோவும் இருக்கிறது. அதை நான் சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போகிறேன் என்று மிரட்டியிருக்கிறான்.

ஒரு முஸ்லிம் பெண், கட்டுப்பாடுகள் நிறைந்த அரபு நாட்டு சூழலில் ...அந்த பெண் சொல்கிறாள், ...எனது புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ நீ வெளியிடுவதால் எனக்கு எந்த அவமானமும் கிடையாது. காரணம், அது நான் அல்ல. என் பிம்பம் மட்டுமே. யாராலும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. எனவே, உன் கட்டளைக்கு நான் கட்டுப்பட முடியாது. நீ தாரளமாக அதை வெளியிடலாம் என கூறிவிட்டு காவல்துறைக்கு தெரிவிக்கிறாள்//

இதே போன்று,  அபுதாபியில் இன்னொரு அரபு நண்பருக்கும் நிகழ்ந்தது. அவரின் மகள் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடப்போவதாக எவனோ ஒருவன் தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டினான், அவர் அசரவேயில்லை. உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டார்.

இது போன்ற சந்தர்ப்பங்களில், இந்தியாவில் நடப்பது என்ன?  இதோ வினுப்பிரியா விஷயத்தில் நடந்தது போல,  எந்தப் பெண்ணின் முகத்தையும் தொழிநுட்ப உதவியுடன், வேறு பெண்ணின் உடலோடு இணைத்துப் போட்டு அப்பெண்ணை மிரட்டலாம். அது தன் உடல் இல்லை என்று அப்பெண்ணுக்குத் தெரிந்தாலும், அதை வெளிப்படையாகச் சொல்லத் துணிவின்றி அல்லது நிரூபிக்க வழியின்றி, ஒன்று மிரட்டுபவனுக்குக் கட்டுப்படுவது அல்லது உயிரை மாய்த்துக் கொள்வது என்பதுதான் இந்தியாவில் நடக்கிறது.

இதெற்கெல்லாம் காரணம், பெண்கள் தம் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதே காரணம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.  அதெல்லாம் ஒரு காலம். இன்று எங்கு நோக்கினும் “கேமரா மொபைல்கள்” அல்லது கண்காணிப்பு கேமராக்கள் என்றிருக்கும் உலகில், நாம் நமக்குத் தெரியாமலேயே புகைப்படம் எடுக்கப்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.  

இவை தவிர, இன்றும் படுக்கையறை, குளியலறை, ஹோட்டல் அறை, துணிக்கடை என்று “சீக்ரெட் கேமராக்கள்” அதிகம் பயன்படுத்தப்படுவது, பெண்களைத் தெய்வமாக,  நதி, மலை, மரம், மழை என இயற்கையாகப் போற்றிப் பூஜிக்கும் கலாச்சாரம் கொண்ட நம் நாட்டில்தான் என்பது எத்துணை முரண்??!!

முதலில்,  பெண்களுக்கு தம் உடல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  மானம், கௌரவம், கற்பு என்பதெல்லாம் உடல் சம்பந்தப்பட்டதல்ல, மனம் சம்பந்தப்பட்டது என்று தெளிவுபடுத்த வேண்டும். அவற்றிற்கான அளவுகோல்கள் மனிதர்களல்ல என்பதை உணர வேண்டும்.

உடல்  தெரியும்படியான தனது புகைப்படங்கள் வெளியானாலோ, அல்லது பலாத்காரம் செய்யப்பட்டாலோ அதை ஒரு விபத்து நேர்ந்தால் எப்படி எடுத்துக் கொள்வோமோ அதே போல எடுத்துக் கொள்ள வேண்டும். போகும் பாதையில் அசுத்தம் நம் உடல் மேல் பட்டால், கழுவி சுத்தம் செய்துவிட்டு வேறு வேலையைப் பார்ப்போமே தவிர, அசுத்தம் பட்ட உடல் பகுதியை வெட்டி வீசுவோமா? அது போன்ற தெளிவுதான் இங்கும் வேண்டும்.

சிறுவர்களுக்கு பேட் டச், குட் டச் குறித்துச் சொல்லிக் கொடுக்கும்போதே, எதிர்ப்பையும் மீறி பேட் டச் செய்யப்பட்டால் அதை உரியவர்களிடம் தெரிவித்துவிட்டு, அதை மறந்துவிட்டு, வேறு விஷயங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இரண்டாவது, பெண் குறித்த சமூகத்தின் பார்வை மாற்றப்பட வேண்டும். சமூகம் என்றால், பெற்றோர், உறவினர்கள், மற்றுள்ளோர்.   ஒரு பெண் தனக்கு நேர்ந்த அசம்பாவிதத்தை மறக்க நினைத்தாலும், “சமூகம்” என்ற பெயரில் இவர்களின் குத்தல்  பேச்சுகளும், கேட்கும் கேள்விகளும், கொள்ளும் சந்தேகமுமே அவளைத் தற்கொலை வரை தூண்டுகிறது.  அவள் வெறும் உடல் அல்ல, உணர்வுள்ள உயிர் என்ற எண்ணம் சமூகத்திற்கும் கட்டாயமாக ஏற்றப்பட வேண்டும். 

நம் வீட்டுப் பெண்கள் மீது நாமே சந்தேகப்படுவதுதான்,  அவர்கள் பெற்றோரிடம் மறைப்பதும், அதன் மூலம் விளைவுகள் விபரீதமாவதற்கும் காரணமாகி விடுகிறது. இந்த நிலை மாற, இருதரப்புக்குமே பெண் குறித்த புரிதல்கள் வேண்டும்.

கேரளாவில் 15 வயது சுனிதா கிருஷ்ணன்  என்ற பெண் எட்டு பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.  அதன் பின்னர், அவரது பெற்றோர் அவருக்கு ஆதரவாக இருக்கவில்லை. எனினும், சுனிதா தனது மன உறுதியால் வெளியே வந்து இன்று பாலியல் தொழிலாளிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்காக  மறுவாழ்வு இல்லம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

பாலியல் பலாத்காரத்திலிருந்து மீண்டு இது போன்று தன்னம்பிக்கையோடு வலம் வரும் பெண்கள் விரல்விட்டு எண்ணிவிடுமளவு கூட  இந்தியாவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மூன்றாவதாக, பெண்கள் குறித்த அரசின் நிலைப்பாடு. மேற்சொன்ன இரண்டும் சாத்தியப்படுவதற்கு,  சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்; ஊடகங்கள் – திரைப்படங்கள் – பத்திரிகைகள் ஆகியவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். விளம்பரங்கள், சினிமாக்களில் வரும் பெண் குறித்த பார்வையில் அடியோடு மாற்றம் தேவை. இதில் அரசின் பங்குதான் முதன்மையானது, அரசாங்கத்தினால் மட்டுமே சாத்தியமாக்கக் கூடியது.  

சிலமாதங்கள் முன் வந்த “பாபநாசம்” என்ற படத்தின் கதாநாயகன்,  தன் டீனேஜ் மகளை ஒருவன் ஆபாசமாகப் படம் பிடித்துவிட்டான் என்றதும், அவனை  மகளும் மனைவியும் கெஞ்சுவது போன்ற காட்சிகள்  இடம்பெற்றிருந்தன.   இப்படம் முற்போக்கு கருத்துகள் கொண்ட நடிகர் கமலஹாஸனின் படம் என்பதுதான் அதிர்ச்சி!! ஒரு தெளிவான புரிதல் இருந்திருந்தால்,  மேலே சொன்ன சவூதி பெண்ணைப் போல ”எனது பிம்பம் குறித்த கவலை எனக்கில்லை” என்று சொல்வதாக அந்தப் படம் இருந்திருந்தால், தமிழகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருக்கலாம்!!

மேலும், மேற்குறிப்பிட்ட இரு அரபு நாட்டு சம்பவங்களுக்கும், உரியவர்கள் மிரட்டல்காரனுக்குப் பணியாமல் உறுதியான நிலைப்பாடு எடுத்ததற்கு, அந்நாடுகளிலுள்ள கடுமையான சட்ட நடவடிக்கைகள் முக்கியக்காரணம் என்பதையும் கவனிக்க வேண்டும்.  அரசும் காவல்துறையும் குற்றத்தைத் தம்மீது திசை திருப்பி, தம்மைக் கேவலப்படுத்த மாட்டார்கள் என்கிற தைரியத்தில்தான் அவர்களால் காவல்துறையை நாடிச்சென்று குற்றவாளியை அடையாளம் காட்ட முடிந்தது.
கடுமையான சட்டங்கள் கொண்டு வராத வரை, இந்தியாவில் – தமிழ்நாட்டில் பாலியல் கொடுமைகள் குறைய வாய்ப்பில்லை. 

நன்றி:ஹுசைனம்மா

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 19, 2016 8:05 pm

உடல் தெரியும்படியான தனது புகைப்படங்கள் வெளியானாலோ, அல்லது பலாத்காரம் செய்யப்பட்டாலோ அதை ஒரு விபத்து நேர்ந்தால் எப்படி எடுத்துக் கொள்வோமோ அதே போல எடுத்துக் கொள்ள வேண்டும். போகும் பாதையில் அசுத்தம் நம் உடல் மேல் பட்டால், கழுவி சுத்தம் செய்துவிட்டு வேறு வேலையைப் பார்ப்போமே தவிர, அசுத்தம் பட்ட உடல் பகுதியை வெட்டி வீசுவோமா? அது போன்ற தெளிவுதான் இங்கும் வேண்டும்.
இந்த பக்குவம் வர இன்னும் ஆண்டுகள் பல கழியவேண்டும் என்றே நினைக்கிறேன்.

பெண்ணே  நீ  சிந்திக்க  3838410834 பெண்ணே  நீ  சிந்திக்க  3838410834 நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.



பெண்ணே  நீ  சிந்திக்க  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்ணே  நீ  சிந்திக்க  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்ணே  நீ  சிந்திக்க  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Aug 20, 2016 10:34 am

பெண்ணே  நீ  சிந்திக்க  3838410834 பெண்ணே  நீ  சிந்திக்க  103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக