புதிய பதிவுகள்
» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 12:37

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 12:35

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 12:34

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 12:33

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 12:31

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 12:27

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 12:24

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 12:22

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 12:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:14

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:49

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:26

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Today at 0:01

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 23:10

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 23:08

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 23:07

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 23:05

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 23:04

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 23:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:48

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:56

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 17:26

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:59

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:39

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:16

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 9:00

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon 26 Aug 2024 - 23:02

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 25 Aug 2024 - 17:33

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun 25 Aug 2024 - 14:31

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:19

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:18

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:16

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:14

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:13

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:12

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:11

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:09

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 20:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 20:21

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 23 Aug 2024 - 18:57

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 18:08

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 18:06

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 18:04

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
31 Posts - 65%
ayyasamy ram
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
16 Posts - 33%
mohamed nizamudeen
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
453 Posts - 54%
heezulia
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
318 Posts - 38%
mohamed nizamudeen
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
26 Posts - 3%
prajai
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
5 Posts - 1%
mini
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
4 Posts - 0%
vista
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை)


   
   
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat 6 Aug 2016 - 18:06

கடவுளைக் கண்ணால் காண முடியுமா? என்று ஒரு மாணவன் கிருபானந்த வாரியாரிடம் கேட்டான்

உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?''

"என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா நினைக்கின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''

"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். நீ படித்த அறிஞன்தான். ஆனால் நீ படித்த அறிவில் விளக்கம்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும்.
காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும்.
உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''

"ஆம். நன்றாகத் தெரிகின்றது.''

"அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?'' "என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாம்தான் தெரிகின்றது?''

"அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?'' "ஆம்! தெரிகின்றன.'' "முழுவதும் தெரிகின்றதா?'' அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.

"தம்பீ! உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?'' மாணவன் விழித்தான். "ஐயா! பின்புறம் தெரியவில்லை.''

"என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பலமுறை சொன்னாய். இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே.

சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?''

"முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'' "அப்பா! அவசரம் கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றாயா? நிதானித்துக் கூறு....''

"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.''

"தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''

"ஆம்! நன்றாகச் சிந்தித்தேச் சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.''

"தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றதா?

மாணவன் துணுக்குற்றான்.
நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தினான்.
பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்.

"குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முன்புறம் முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டிருக்கிறாய். இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்.
அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், நீயே சொல்.''

"ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''

"தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''

"ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள்.''

"அப்பனே! அவை கடையில் கிடைக்காது. வேதாகமத்தில் விளைந்தவை அவை அதில்தான் கிடைக்கும். ஞான மூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும்.

ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

"தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனைக் குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.'' அந்த மாணவன் தன் தவறை உணர்ந்தான்.





நேர்மையே பலம்
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) 5no
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 6 Aug 2016 - 18:47

கடவுளைக் கண்டேன் எனச்சொன்னால் பொய்யாம்
கடவுளுக்கு கைகால்கள் எல்லாமே கற்பனையே !
பாலிலே நெய்போல் மறைந்து இருக்கின்றான் !
வேலிபோல் காப்பான் அவன் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat 6 Aug 2016 - 18:56

முயன்றால் முடிய்யாத்தில்லை

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat 6 Aug 2016 - 19:42

கடவுளைப்பற்றி மாணிக்கவாசகர் சுவாமிகள் இப்படி சொல்லியிருக்கிறார்

சோதியனே துன்னிருளே
தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே



நேர்மையே பலம்
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக