புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
44 Posts - 59%
heezulia
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
3 Posts - 4%
viyasan
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
236 Posts - 42%
heezulia
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
13 Posts - 2%
prajai
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_m10சனி தோஷம் நீக்கும் சங்கரன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனி தோஷம் நீக்கும் சங்கரன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 03, 2016 7:29 am

சனி தோஷம் நீக்கும் சங்கரன் Oa517gI1SDSxomiRB6B8+E_1469438612
-
இயற்கையால் வகுக்கப்பட்ட நியதிகள் உயிரினங்கள்
அனைத்திற்கும் பொதுவானவை என்பதை உலகோர்க்கு
உணர்த்த ஈசன் நிகழ்த்திய சம்பவங்கள் எத்தனையோ!

அவற்றுள் ஒன்று, சனைச்சரனுக்கும் அவருக்கும் நடந்த
ஒரு போராட்டம். அதன் இறுதியில் சனிபகவானுக்கு ஈசன்
ஒரு வாக்குறுதி அளித்தார். அந்த சம்பவம் நிகழ்ந்த இடம்
சேங்காலிபுரம். அங்கேதான் அமைந்துள்ள விஸ்வநாதர்
ஆலயம்.

தன் சுழற்சி நியதியின்படி சனீஸ்வரன் வலம் வரும்போது,
சிவபெருமானை அவர் பீடிக்க வேண்டிய ஒரு தருணம்
வந்தது. சிவபிரானைப் பீடிப்பதா? அஞ்சினார். சனீஸ்வரன்.
ஆனாலும் கடமை தவறினால், தனது ஆற்றல் குன்றிவிடுமே
என்று சஞ்சலப்பட்டார்.

பின்னர், பிரானை அணுகி, பணிந்து வணங்கி, ‘பரம்
பொருளாகிய பரமனே! நான் மேற்கொண்டுள்ள கடமை
அடிப்படையில் தங்களை ஏழரை வருடம் பீடிக்க வேண்டிய
– ஏழரை நாட்டு சனிக்காலம் வந்துள்ளது தாங்களோ என்னையும்
சேர்த்து இந்தப் பிரபஞ்சத்தை ஆளும் மகேசன்.

எனவே, தங்களிடம் முன்னறிவிப்பு செய்கிறேன். உங்களைப்
பிடித்துக் கொள்ள எனக்கு அனுமதி அருளவேண்டும்’ என்று
வேண்டினார்.

‘அனைத்தையும் படைத்து, காத்து, அழித்தும், மீண்டும் படைத்து
உலகையே இயக்கியும் வரும் என்னை நீ பீடிப்பதா? என்ன
துணிச்சல்’ என்று கேட்டு புருவத்தை நெறித்தார்.

இறைவன் நிபந்தனை விதிப்பவர், தானும் அதற்குக் கட்டுப்பட
வேண்டும் என்பதை அறியமாட்டாரா என்ன? இருந்தாலும் நிமலன்
அதனை அறியாதவர்போல் நாடகம் ஆடினார்.

நடுங்கிப் போனார், சனிபகவான்.

‘தாங்கள் உலகத்தை இயக்கும் கருவிகளுள் நானும் ஒருவன் நான்
இயங்காமல் போனால் தங்கள் இயக்கமும், தடைப்படும்தானே!
என் கடமையை நான் செய்யத் தவறினால், பின்னர், நவகிரகங்களில்
நானும் ஒருவனாக விளங்கும் ஸ்தானம் வில்லங்கத்துக்கு உள்ளாகி
விடும். என் விஷயத்தில் யாரொருவரும் வாய்தா கோர வழியில்லை.
எனவே, தங்களை ஏழரை வருடங்கள் பிடிக்க அனமதிக்கா
விட்டாலும் ஏழரை மாதங்கள் மட்டும் பிடித்துக் கொள்கிறேன்’
என்றார் சனீஸ்வரன்.

ஈசன் அதற்கும் இணங்கவில்லை.
‘உன் பிடிக்குள் நான் அகப்பட்டால் என் பெருமை குன்றிவிடும்’
என்றார்.
‘சரி, ஏழரை நாட்கள் மட்டும் பிடித்துக் கொள்கிறேன்’ என்றார்,
சனீஸ்வரன்.

‘உன்னால் ஏழரை நாட்கள் பீடிக்கப்பட்டால், என் தொழிலில்
குழப்பமும் குளறுபடியும் உண்டாகி, உலக இயக்கம் தாறுமாறாகி
விடும். நில்லாதே போ!’ என்று கோபத்துடன் கூத்தபிரான் கூற
தர்மசங்கடத்துக்கு ஆளானார், சனி பகவான்.

‘தங்களைப் பிடிக்காவிட்டால் என் ஆற்றல் போய்விடுமே! பிறகு
உலகோர் முன் நான் எந்தத் தகுதியில் சென்று நிற்பேன்’ என்றார்
சனிபகவான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 03, 2016 7:30 am

சரி. ஒன்று செய். ஏழரை வினாடிகள் மட்டும் நீ என்னைப் பீடிக்க
நான் அனுமதிக்கிறேன். முடிந்தால் பிடித்துக் கொள்!’ என்று கூறி
சட்டென்று மறைந்து பாதாளத்திற்கு சென்று ஒளிந்துகொண்டார்.

ஏழரை வினாடிகள் கடந்ததும் சிவபிரான் சனீஸ்வரர் முன் தோன்றி
புன்சிரிப்புடன், ‘உன்னால் என்னைப் பிடிக்க முடிந்ததா?’ என்று
கேட்டார்.

சனீஸ்வரரோ மீண்டும் பிரானை வணங்கி, ‘ஈசனே! ஏழரை
வினாடிகள் நான் உங்களைப் பிடித்ததால்தான் தாங்கள்
பாதாளத்தில் போய் மறைந்திருக்கும்படி நேர்ந்தது’ என்று கூற,
தாமே ஆடிய திருவிளையாடலே அது என்பதை சனைச்சரனுக்கு
உணர்த்தினார், சங்கரன்.

அவரைப் பணிந்து வணங்கிய சனிபகவான், ‘அய்யனே தாங்கள்
எழுந்தருளிய இத்தலத்திற்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு ஏழரை
வருடங்களோ அல்லது அஷ்டமத்து சனியாக இரண்டரை
வருடங்களோ நான் பிடிக்கும் காலத்தில் இன்னல்களைக் கொடுக்க
மாட்டேன்’ என்று சனிபகவான் பரமனிடம் வாக்குறுதி அளித்தார்.
ஈசனும் அது கேட்டு மகிழ்ந்தார்.

ஈசனேயானாலும் கிரகங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து
முழுமையாகத் தப்பிக்க இயலாது என்பதையும், அதிகத் துன்பமின்றி
எளிதாகத் தீர்க்கக்கூடிய கஷ்டங்களாக அதை இறையருளால்
மாற்றச் செய்யலாம் என்பதையும் உணர்த்துவதே இத்தலத்தில்
வரலாறு.

மற்ற சிவாலயங்களைப் போல் இல்லாமல் இக்கோயிலின்
கருவறை தரைமட்டத்திலிருந்து மிக பாதாளத்தில் உள்ளது.
மேற்படி நிகழ்ச்சியை நினைவுறுத்தும் விதமாக!

கருவறையில் கோயில் கொண்டுள்ள ஈசனின் பெயர் விசுவநாதர்.
மொத்த கோயிலே பூமியின் தரைமட்டத்திற்குக் கீழேதான்
உள்ளது. ஒரே பிராகாரம் கொண்ட பழங்காலக் கோயில்.
அம்பிகை விசாலாட்சி எனும் பெயரோடு தெற்கு பார்த்த தனிச்
சன்னதியில் உள்ளார்.

ஜாதகத்தில் சனிபகவான் சஞ்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
இத்தலத்தில் ஈசனை வணங்கி வழிபட்டு துன்பப் பிடியிலிருந்து
விலகலாம். சனி பாதிப்பால் தீய பழக்கங்கள், தீய ஒழுக்கம்
ஆகியவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவிப்போர்.
இங்கு வந்து இறைவனை பூஜித்தால் நற்பலன் கிட்டுகிறது.
வாழ்வில் புத்தொளியும் புதுப்பாதையும் புலப்படுகிறதாம்.

எங்கே இருக்கு:
திருவாரூர் மாவட்டம், குடவாசலிலிருந்து 8 கி.மீ. தொலைவில்
சேங்காலிபுரம் உள்ளது.

தரிசன நேரம்: காலை 9-11.30; மாலை 5-8

————————————–

ஆர்.சி. சம்பத்
குமுதம் பக்தி செய்திகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக