ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் .. பிறகு குழந்தை … இதுதான் சாதனையா? கேட்கிறார்: சானியா மிர்ஸா

Go down

திருமணம் .. பிறகு குழந்தை … இதுதான் சாதனையா? கேட்கிறார்: சானியா மிர்ஸா Empty திருமணம் .. பிறகு குழந்தை … இதுதான் சாதனையா? கேட்கிறார்: சானியா மிர்ஸா

Post by ayyasamy ram Fri Jul 29, 2016 1:11 pm

திருமணம் .. பிறகு குழந்தை … இதுதான் சாதனையா? கேட்கிறார்: சானியா மிர்ஸா TbM27UYHQy9tCLZ8UA7O+77(2)
-

எல்லாரும் அறுபது எழுபது வயது கடந்துதான் சுயசரிதை எழுதுவார்கள். ஆனால் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா 29 வயதிலேயே “Ace against Odds’ என்னும் தலைப்பில் தந்தை இம்ரான் மிர்ஸாவுடன் இணைந்து எழுதியிருக்கிறார். முன்னுரை எழுதியிருப்பவர் மார்ட்டினா ஹிங்கிஸ்.

சானியாவின் சுயசரிதையை ஹிந்தி நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார்.

சானியா சிறுவயதில் சுயசரிதை எழுதக் காரணம் என்ன?


இருபத்தொன்பது வயதில் சுயசரிதை எழுத முடிந்திருப்பது ஒரு சாதனைதான். 16 வயதில் டென்னிஸ் ஆட வந்தேன்.. சுயசரிதையை 39 அத்தியாயங்களில் எழுத ஏகப்பட்ட விஷயங்கள். அனுபவங்கள், நிகழ்வுகள் என் வாழ்க்கைப் பயணத்தில் இருந்திருக்கிறதே. அவற்றைப் பதிவு செய்ய வேண்டாமா? தவிர இதுவரை என்னைப் பற்றி வெளிவந்த செய்திகள் பலவற்றை நான் சொல்லவே இல்லை. சரியான உண்மையான செய்திகள் என்ன என்று என் சுயசரிதை மூலம் நிறைவேற்றியிருக்கிறேன்” என்கிறார் சானியா.

“எப்போது சானியா சுயசரிதை வெளியிடுவார்’ என்று காத்திருந்தது போல், டிவி செய்தியாளர் ராஜ்தீப் ஸர்தேசாய், சானியா எப்போது வாழ்க்கையில் செட்டில் ஆகப் போகிறீர்கள்? தாயாகப் போவது எப்போது? குடும்பத்தைப் பேணுவது எப்போது? டென்னிஸிலிருந்து ஓய்வு இப்போதைக்கு இல்லையா? என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

இந்தக் கேள்வியை சானியா கையாண்ட விதம் அவரின் பக்குவத்தின் பரிமாணத்தைக் காட்டியது. “”வாழ்க்கையில் நான் இன்னமும் செட்டில் ஆகவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் கேள்வியில் ஏமாற்றம் தெரிகிறது. எத்தனையோ பதக்கங்கள் – இரட்டையர் பிரிவில் உலகில் நம்பர் 1… இதெல்லாம் உங்களுக்கு நிறைவாக – சாதனைகளாகத் தெரியவில்லையா?

திருமணம்.. பிறகு குழந்தை பெற்றுக் கொண்டால்தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிறைவு பெறுவதாக, சாதனை புரிந்ததாக ஏன் தீர்மானிக்கிறீர்கள்?

ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் கேள்வியும் இதுதான். நானும் பலமுறை இந்தக் கேள்வியை சந்தித்திருக்கிறேன். எனது வாழ்க்கையிலும் தாய்மைக்கு இடம் உண்டு. ஆனால் அது உடனடியாக இல்லை. தாய்மை அடைய நான் தீர்மானிக்கும் போது கட்டாயம் நானே பகிரங்கமாக அறிவிப்பேன். என்னை ஒரு சாதனைப் பெண்ணாக மக்கள் தங்கள் நினைவுகளில் நிறுத்தவேண்டும். அதைத்தான் விரும்புகிறேன்.

சாதனை பெண்களிடம் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்று கேள்விகள் கேட்காத நிலைமை ஏற்பட வேண்டும்”என்றார்.

சானியா தன் சுயசரிதையில் கணவர் சோயிப் மாலிக்கை அதிகம் விரும்புவது தூக்கலாகத் தெரிகிறது. நான் பொதுவாக மனம் திறந்து பேசுகிற ரகம் அல்ல. அதனால் சுயசரிதையில் மாலிக்கை முதன் முதலில் சந்தித்தது.. பிறகு பழகியது… திருமணம் செய்து கொண்டது.. பற்றி வெளிப்படையாக எழுத சிரமப்பட்டேன்.

அழகான ஆஸ்திரேலியாவின் அற்புதமான ஹோபர்ட் நகரம். 2010-இல் நான் அங்கே தங்கியிருந்தேன். ஒரு மாலைப் பொழுதில், நான், அப்பா, எனக்கு பயிற்சி அளிக்கும் லேன் மூவரும், ஏரிக்கரையில் அமைந்திருக்கும் இந்திய ஹோட்டலுக்குச் சென்றோம். கொஞ்ச நேரத்தில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சோயிப் மாலிக் ஹோட்டலுக்குள் வந்தார். உட்கார எங்கே இடம் காலியிருக்கிறது என்று நோட்டமிட்டார். எங்களைப் பார்த்ததும், நாங்கள் அமர்ந்திருந்த மேஜை அருகே வந்தார். என்னை நோக்கி ஹலோ என்றவாறே, என் அப்பாவைப் பார்த்து ஸலாம் (வணக்கம்) சொன்னார். நான் மாலிக்கை முன்னமே சந்தித்துள்ளேன். டில்லியில் ஒரு ஹோட்டலின் உடல் பயிற்சி செய்யும் ஜிம்மில், மாலிக்கை ஒரு பத்திரிகையாளர் அறிமுகம் செய்தார். ஒரு நிமிட சந்திப்பு. அவ்வளவுதான்.

நாளை நடக்கும் போட்டியில் சானியா ஆடுவதைப் பார்க்க வேண்டுமே என்றார். அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அந்த நிகழ்ச்சியிலிருந்து, எங்கள் நட்பு நீடித்தது. அடிக்கடி போன் மூலம் பேசிக் கொள்வோம். இரண்டு பேருக்கும் இடையில் ஒரு புரிதல் ஏற்பட்டிருந்தது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருமணம் .. பிறகு குழந்தை … இதுதான் சாதனையா? கேட்கிறார்: சானியா மிர்ஸா Empty Re: திருமணம் .. பிறகு குழந்தை … இதுதான் சாதனையா? கேட்கிறார்: சானியா மிர்ஸா

Post by ayyasamy ram Fri Jul 29, 2016 1:12 pm

ஒரு நாள், என்னிடம் “”நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?” என்று கேட்டார். பெரிய பீடிகை எதுவும் போடவில்லை. நாடகத்தனமாக வசனங்கள் ஏதும் பேசவில்லை. மிகச் சாதாரணமாகக் கேட்டார். எனக்கு அவர் சொன்ன விதம் பிடித்திருந்தது.

சில மாதங்களில் மாலிக்குடன் என் திருமணம் நடந்தது.. ஒரு மாலை வேளையில் நான் மாலிக்கிடம் கேட்டேன் “”நீங்கள் அன்று அந்த ஹோட்டலுக்கு வராதிருந்திருந்தால். நாம் சந்தித்திருக்கவே மாட்டோம் அல்லவா?” என்றேன். நான் தற்செயலாக அந்த ஹோட்டலுக்குள் வரவில்லை. எனது நண்பன் அந்த ஹோட்டலில் இருந்தான். என்னையும் அவன் அழைத்தான்… எனக்கு எதுவும் சாப்பிடத் தோன்றவில்லை.. நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். நீங்கள் மூவரும் அந்த ஹோட்டலில் நுழைந்ததைக் கண்டதும். உடனே நண்பன் என்னிடம் போனில் தகவல் சொல்ல… நான் விரைந்து வந்தேன்.. இம்முறை, சானியாவின் போன் நம்பரை வாங்கிவிட வேண்டும் என்ற முடிவுடன்தான் வந்தேன்” என்றார்.

மாலிக், இந்திய நாட்டுடன் அரசியல் வேறுபாடுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்தவர். என் மனம் குறுகிய வட்டத்தைவிட்டு வெளியே வந்து, விரிந்து பெரிதாகியிருந்தது. அதனால், நாடுகளிடையே இருக்கும் வேறுபாடுகளை சமாளித்து, மாலிக்கைத் திருமணம் செய்து கொள்ள மனதளவில் தயாரானேன்.

அடுத்த சில நாட்களில், ஹைதராபாத் பெண் ஒருத்தி தன்னை மாலிக் திருமணம் செய்து கொண்டார் என்று குற்றம் சாட்ட… எனது வீட்டைச் சுற்றி இருநூறு டிவி, பத்திரிகை செய்தியாளர்கள் முகாம் போட்டனர்.

வீட்டிலேயே நான் அடைந்து கிடந்தேன். ஜன்னல் மற்றும் அறை கதவுகளும் அடைக்கப்பட்டன. பத்து நாட்கள் நான் சூரிய ஒளியைப் பார்க்கவில்லை… அப்பா எங்கு போனாலும் அவர் பின்னால் செய்தியாளர்கள் கூட்டம்… பதட்டத்தில் அவர் உறைந்து போனார். உறவினர்கள் திருமணத்தை ஒத்தி வைக்கலாம் என்று ஆலோசனை கூறினார்கள். ஆனால் மாலிக்கோ, நான் சானியாவைத் திருமணம் செய்து கொள்ள வந்தேன்… திருமணம் முடிந்துதான் பாகிஸ்தான் திரும்புவேன்.. என்று தீர்மானமாகச் சொன்னார்.

2010- ஆம் ஆண்டு ஏப்ரல் 12 தேதி மாலிக் என்னை நிக்காஹ் (திருமணம்) செய்து கொள்ள வேண்டும். நானும் மணப்பெண் அலங்காரத்தில் வீட்டை விட்டு திருமணம் நடக்கவிருக்கும் ஹோட்டல் தாஜ் கிருஷ்ணா நோக்கி காரில் புறப்பட்டேன். என் காருக்குப் பின்னால் செய்தியாளர்களின் வாகனப் பேரணி. மெயின் கேட் வழியாகப் போனால் பல பிரச்னைகள் ஏற்படும் என்று நினைத்து ஹோட்டலின் பின் வழியில் நுழைந்து, ஹோட்டலின் சமையல் அரங்கு வழியாக அழைத்துச் செல்லப்பட்டேன். அநேகமாக சமையல்கட்டு வழியாக திருமண மண்டபத்திற்கு வந்த முதல் மணப்பெண் நானாகத்தான் இருப்பேன்” என்றார்.

– சுதந்திரன்

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» Video: நம் சானியா மிர்ஸா-விற்கா இந்த நிலைமை!
» ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா -
» 2 ஆண்டுக்கு பிறகு மறுபிரவேசம்: வெற்றியுடன் தொடங்கினார், சானியா
» சானியா திருமணம்: 23 வகை உணவுகளுடன் தடபுடல் விருந்து
» இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum