Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி
2 posters
Page 1 of 1
நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி
-
ஊக்கமருந்து பயன்படுத்தியதாகப் பிடிபட்டிருக்கும் மல்யுத்த
வீரர் நார்சிங், தனது உணவில் ஜூனியர் வீரர் ஒருவர் ஸ்டீராயிடை
கலந்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
டெல்லியில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் நடத்தப்
பட்ட சோதனையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த
மல்யுத்த வீரர் நார்சிங், தடைசெய்யப்பட்ட ஒருவகையான
ஸ்டீராய்ட் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியிருப்பது கண்டு
பிடிக்கப்பட்டது.
-
'தான் குற்றமற்றவன் , ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை...!' எனவும்
நார்சிங் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் சிபிஐ
விசாரணைக்கும் உத்தரவிட வேண்டுமென்றும் நார்சிங் வேண்டுகோள்
விடுத்திருந்தார்.
-
இந்த நிலையில் ,ஹரியானாவில் சோன்பேட் காவல் நிலையத்தில்
நார்சிங் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ''சோன்கபட் சாய் மையத்தில்
பயிற்சி எடுத்த போது, தனது உணவில் ஜூனியர் வீரர் ஒருவர் ஸ்டீராய்டை
கலந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
-
டெல்லியில் உள்ள சத்ரசால் மையத்தில் மல்யுத்த பயிற்சி எடுத்து வரும்
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் ஜூனியர் வீரர் அவர்
எனவும் நார்சிங் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
-
நார்சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ள வீரரின் பெயரை போலீஸ்
வெளியிடவில்லை. நார்சிங் குறிப்பிட்டுள்ள அந்த இளம் வீரர் ஒலிம்பிக்கில்
இரு முறை வெண்கலம் வென்றுள்ள, சுஷில்குமாரின் பயிற்சியாளரும்
மாமனாருமான சத்பால் சிங்கிடம், டெல்லி சத்ரசால் மைதானத்தில்
பயிற்சி எடுத்து வருகிறாராம். இதே மையத்தில்தான் சுஷில் குமாரும்
பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
-
அது மட்டுமல்ல, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்த மற்றொரு மல்யுத்த
வீரரான சந்தீப் சிங்கும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்திருந்தார்.
இவரும் நார்சிங்கும் சோன்பட் சாய் மையத்தில் ஒரே அறையில்
தங்கியிருப்பவர்கள். ஒரே அறையில் தங்கியிருந்த இரு வீரர்கள் ஒலிம்பிக்கில்
பங்கேற்க தகுதி பெற்றும், ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்திருப்பது
பெரும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.
-
Last edited by ayyasamy ram on Thu Jul 28, 2016 10:55 am; edited 1 time in total
Re: நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி
-
இது குறித்து சத்பால் சிங் கூறுகையில், ''இந்த விவகாரத்தில் நார்சிங்
போலீசில் புகார் அளித்திருப்பது நல்ல விஷயம். உண்மையை வெளிக்
கொண்டு வர உதவியாக இருக்கும். சத்ரசால் மைதானத்தில் பயிற்சி
எடுத்த எந்த வீரராவது இத்தகைய செயலை செய்திருந்தால் அவர்
கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
-
இங்கே 300 பேர் பயிற்சி எடுத்து வருகின்றனர். எனக்கு நார்சிங்
குறிப்பிட்டுள்ள அந்த வீரரின் முகம் ஞாபகம் இல்லை'' என பதில்
அளித்துள்ளார்.
-
நார்சிங்கின் உணவில் ஸ்டீராய்டை கலந்த இளம் வீரர் தற்போது
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஹெவி வெயிட் பிரிவில் போட்டியிடும்
மல்யுத்த வீரரின் சகோதரர் என்ற தகவலும் இருக்கிறது.
தற்போது 17 வயதே நிரம்பிய அந்த வீரர் பிரான்சில் நடைபெறவிருந்த
ஜூனியர் அளவிலான மல்யுத்த போட்டியில் பங்கேற்க கடந்த ஜூன்
மாதத்தில் சாய் மையத்தில், பயிற்சியில் இருந்திருக்கிறார்.
-
ஜூன் 5ம் தேதி சோன்பட் சாய் மையத்தில் வீரர் ஒருவர் மதிய
உணவில் எதையோ கலந்ததாகவும் அப்போது அவரை சமையல்காரர்
கையும் களவுமாக பிடித்ததாகவும் பின்னர் அந்த உணவு கொட்டப்பட்டது
என்றும் இந்திய மல்யுத்த சங்கத் தலைவர் பிரிஜ்புஷன் சரண் தற்போது
ஒப்புக் கொண்டுள்ளார்.
-
இப்போது சமையல்காரரை வைத்து அந்த வீரரை அடையாளம் காணும்
பணி நடந்து வருகிறது. அவர் பிடிபட்டதும் நார்சிங் அறைக்கு
எப்போதாவது சென்றுள்ளாரா என்பது குறித்து நார்சிங் முன்னிலையில்
விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள
சமையல் அறை சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகள் சோதிக்கப்
படவுள்ளன.
-
இதற்கிடையே ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள மல்யுத்த வீரர்
யோகேஷ்வர் தத், நார்சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் தளத்தில், ''நார்சிங் ஊக்க மருந்து விவகாரத்தில்
சிக்கியதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நிச்சயம் அவர் இத்தகைய
காரியத்தை செய்திருக்க மாட்டார்.
-
முழுமையாக விசாரணை செய்து உண்மை கண்டுபிடிக்கப்பட வேண்டும்''
என கூறியுள்ளார்.
-
Last edited by ayyasamy ram on Thu Jul 28, 2016 10:57 am; edited 1 time in total
Re: நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி
-
இது குறித்து நார்சிங் கூறுகையில், ''நான் மிகச்சிறப்பாகப் பயிற்சியில்
ஈடுபட்டு வருகிறேன். ஊக்க மருந்து எடுக்க வேண்டுமென்ற எந்த
அவசியமும் எனக்கு இல்லை. சாய் உணவகத்தில் தண்ணீரில், உணவில்
யார் வேண்டுமானாலும் எதையும் கலந்து விட முடியும்.
-
இந்த பாதுகாப்பற்ற நிலை குறித்து பல முறை மல்யுத்த சங்க
நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி விட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும்
இல்லை. இந்த விவகாரத்தில் எனக்கு நீதி வேண்டும்.
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும்.அதற்கு இந்திய ஒலிம்பிக்
சங்கம் உதவ வேண்டும் ''என்கிறார்.
-
நார்சிங் உடலில் கலந்திருப்பதாகச் சொல்லப்படும் மெத்தாடினினோன்
என்ற ஸ்டீராய்ட் இந்தியாவில் பிரபலமானது அல்ல. கடந்த ஜூலை
16 ம் தேதி வரை ஊக்க மருந்து பயன்படுத்தியதாக 46 வீரர்
வீராங்கனைகள் சிக்கியுள்ளனர். அதில் மெத்தாடினினோன் ரக
ஸ்டீராய்டை பயன்படுத்தியதாக யாரும் பிடிபடவில்லை. வெளிநாடுகளில்
பாடி லிஃப்டர், பவர் லிஃப்டர், வெயிட் லிஃப்டர் ஆகியோரிடையே இந்த ரக
ஸ்டீராய்டு வெகு பிரபலம். இந்தியாவைப் பொறுத்தவரை சில ஓட்டப்
பந்தய வீரர்கள் மெத்தாடினினோன் பயன்படுத்தி சிக்கியுள்ளனர்.
-
கடந்த 2015ம் ஆண்டு லாஸ்வேகாசில் நடந்த உலக சாம்பியன்ஷிப்
போட்டியில் வெண்கலம் வென்றதால், நார்சிங், கோட்டா அடிப்படையில்
ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
ஒலிம்பிக்கில் இரு முறை வெண்கலம் வென்றிருந்த சுஷில்குமார், டெல்லி
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம்
நார்சிங்கிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
-
இதையடுத்து நார்சிங் ரியோ ஒலிம்பிக்கிற்காக தீவிரமாகத் தயாராகி
வந்தார். தற்போது ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியிருப்பதால் ரியோ
ஒலிம்பிக்கில் 74 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் எந்த இந்திய வீரரும் கலந்து
கொள்ள முடியாத நிலை உள்ளது. சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விதி
விலக்களித்தால் மட்டுமே மாற்று இந்திய வீரர் பங்கேற்க முடியும். எனினும்
நார்சிங்கிற்கு பதிலாக பர்வீன் ராணாவை இந்திய மல்யுத்த சங்கம் மாற்று
வீரராக அறிவித்து ஒலிம்பிக் கவுன்சிலின் முடிவுக்காகக் காத்திருக்கிறது.
-
இந்த சோகத்திற்கிடையே நார்சிங்கின் உணவில் ஸ்டீராய்டை கலந்த
ஜூனியர் வீரர், சுஷில்குமாரின் மாமனாரும் பயிற்சியாளருமான சத்பால்
சிங்கிடம் பயிற்சி பெற்று வருபவர் என்பது மல்யுத்த வீரர்களிடையே பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
சினிமாவில்தான் இது போன்ற காட்சிகள் இடம்பெறும். இந்தியாவில்
நிஜத்திலும் நிகழ்ந்திருப்பது விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை
உண்டாக்கியுள்ளது.
-
நாடாளுமன்றத்தில் நார்சிங் விவகாரம்
-
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகேயுள்ள அக்காரா என்ற
கிராமம்தான் நார்சிங் யாதவின் சொந்த ஊர்.
இந்த கிராமமக்கள் நார்சிங்கிற்கு ஆதரவாக போராட்டத்தில்
குதித்துள்ளனர். வாரணாசியில் பிரதமர் மோடியின் அலுவலகத்தை
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
-
நார்சிங் விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
காங்கிரஸ் எம்பி ரஞ்சித் ரஞ்சன், இது குறித்து நாடாளுமன்றத்தில்
கேள்வி எழுப்பினார். '' நார்சிங் தவறு செய்தாரோ இல்லையோ
எனக்கு தெரியாது. ஆனால், அவர் கேட்பது போல இந்த விவகாரத்தில்
சிபிஐ விசாரணைக்கு உத்ததரவிட வேண்டும்'' என அவர் கேட்டுக்
கொண்டார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர்,
எஸ். எஸ். அலுவாலியா,'' உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் ''
என உறுதியளித்தார்.
-
--------------------
இது குறித்து நார்சிங் கூறுகையில், ''நான் மிகச்சிறப்பாகப் பயிற்சியில்
ஈடுபட்டு வருகிறேன். ஊக்க மருந்து எடுக்க வேண்டுமென்ற எந்த
அவசியமும் எனக்கு இல்லை. சாய் உணவகத்தில் தண்ணீரில், உணவில்
யார் வேண்டுமானாலும் எதையும் கலந்து விட முடியும்.
-
இந்த பாதுகாப்பற்ற நிலை குறித்து பல முறை மல்யுத்த சங்க
நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி விட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும்
இல்லை. இந்த விவகாரத்தில் எனக்கு நீதி வேண்டும்.
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும்.அதற்கு இந்திய ஒலிம்பிக்
சங்கம் உதவ வேண்டும் ''என்கிறார்.
-
நார்சிங் உடலில் கலந்திருப்பதாகச் சொல்லப்படும் மெத்தாடினினோன்
என்ற ஸ்டீராய்ட் இந்தியாவில் பிரபலமானது அல்ல. கடந்த ஜூலை
16 ம் தேதி வரை ஊக்க மருந்து பயன்படுத்தியதாக 46 வீரர்
வீராங்கனைகள் சிக்கியுள்ளனர். அதில் மெத்தாடினினோன் ரக
ஸ்டீராய்டை பயன்படுத்தியதாக யாரும் பிடிபடவில்லை. வெளிநாடுகளில்
பாடி லிஃப்டர், பவர் லிஃப்டர், வெயிட் லிஃப்டர் ஆகியோரிடையே இந்த ரக
ஸ்டீராய்டு வெகு பிரபலம். இந்தியாவைப் பொறுத்தவரை சில ஓட்டப்
பந்தய வீரர்கள் மெத்தாடினினோன் பயன்படுத்தி சிக்கியுள்ளனர்.
-
கடந்த 2015ம் ஆண்டு லாஸ்வேகாசில் நடந்த உலக சாம்பியன்ஷிப்
போட்டியில் வெண்கலம் வென்றதால், நார்சிங், கோட்டா அடிப்படையில்
ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
ஒலிம்பிக்கில் இரு முறை வெண்கலம் வென்றிருந்த சுஷில்குமார், டெல்லி
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம்
நார்சிங்கிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
-
இதையடுத்து நார்சிங் ரியோ ஒலிம்பிக்கிற்காக தீவிரமாகத் தயாராகி
வந்தார். தற்போது ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியிருப்பதால் ரியோ
ஒலிம்பிக்கில் 74 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் எந்த இந்திய வீரரும் கலந்து
கொள்ள முடியாத நிலை உள்ளது. சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விதி
விலக்களித்தால் மட்டுமே மாற்று இந்திய வீரர் பங்கேற்க முடியும். எனினும்
நார்சிங்கிற்கு பதிலாக பர்வீன் ராணாவை இந்திய மல்யுத்த சங்கம் மாற்று
வீரராக அறிவித்து ஒலிம்பிக் கவுன்சிலின் முடிவுக்காகக் காத்திருக்கிறது.
-
இந்த சோகத்திற்கிடையே நார்சிங்கின் உணவில் ஸ்டீராய்டை கலந்த
ஜூனியர் வீரர், சுஷில்குமாரின் மாமனாரும் பயிற்சியாளருமான சத்பால்
சிங்கிடம் பயிற்சி பெற்று வருபவர் என்பது மல்யுத்த வீரர்களிடையே பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
சினிமாவில்தான் இது போன்ற காட்சிகள் இடம்பெறும். இந்தியாவில்
நிஜத்திலும் நிகழ்ந்திருப்பது விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை
உண்டாக்கியுள்ளது.
-
நாடாளுமன்றத்தில் நார்சிங் விவகாரம்
-
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகேயுள்ள அக்காரா என்ற
கிராமம்தான் நார்சிங் யாதவின் சொந்த ஊர்.
இந்த கிராமமக்கள் நார்சிங்கிற்கு ஆதரவாக போராட்டத்தில்
குதித்துள்ளனர். வாரணாசியில் பிரதமர் மோடியின் அலுவலகத்தை
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
-
நார்சிங் விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
காங்கிரஸ் எம்பி ரஞ்சித் ரஞ்சன், இது குறித்து நாடாளுமன்றத்தில்
கேள்வி எழுப்பினார். '' நார்சிங் தவறு செய்தாரோ இல்லையோ
எனக்கு தெரியாது. ஆனால், அவர் கேட்பது போல இந்த விவகாரத்தில்
சிபிஐ விசாரணைக்கு உத்ததரவிட வேண்டும்'' என அவர் கேட்டுக்
கொண்டார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர்,
எஸ். எஸ். அலுவாலியா,'' உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் ''
என உறுதியளித்தார்.
-
--------------------
Re: நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
» இன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா! - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்
» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
» சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
» யானையும் பாணி பூரியும்
» இன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா! - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்
» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
» சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
» யானையும் பாணி பூரியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|